- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 29 June 2011

தமது வழியின் ஆதியாய் கொண்டிருந்தார் (நீதி. 8:22)


(நீதிமொழிகள் 8.22 அடைப்படையாக் கொண்டு இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என நிரூபிக்க வேதப்புரட்டர்கள் முற்படுகின்றனர். ஏரியஸ் தொடக்கி வைத்த வேதப்புரட்டு இன்று யெகோவா சாட்சிகளின் உபதேசங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவ்வசனம் உண்மையாக போதிப்பது என்ன? இக்கட்டுரை இதனை ஆராய்கின்றது)

இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும். இன்னுமொரு வசனம் நீதிமொழிகள் 8:22 ஆகும். இவ்வசனத்தில் கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின்ஆதியாகக் கொண்டிருந்தார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் நீதிமொழிகள் 8ம் அதிகாரம் ஞானம் பேசுவது போலவே எழுதப்பட்டுள்ளது. (நீதி. 8:1-4) எனவே 22ம் வசனமும் ஞானத்தின் கூற்றாகவே உள்ளது. இவ்வசனத்தில் ஆதியாகக்கொண்டிருந்தார்“ எனும் வாக்கியத்தை யெகோவாவின் சாட்சிகள் “ஆதியில் சிருஷ்டித்தார்“ எனும் அர்த்தத்திலேயே விளக்குகின்றனர். (60) இதன்படி. தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பாக. சகலவற்றையும் சிருஷ்டிப்பற்கும் முன்பாகத் தேவன் ஞானத்தை சிருஷ்டித்துள்ளார் என்றும் “தான் தேவனுடைய ஆரம்பப் படைப்பு என்று ஞானம் கூறுவதாகவும் இவ்வசனத்திற்கு அர்த்தம் கற்பித்துள்ளனர். மேலும், இவ்வசனத்தில் “இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டிருக்கிறார்“ என்றும் இதனால் அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர் (61)

இவ்வசனத்தில்  “கொண்டிருந்தார்“ (62) என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதத்தை (63)சிருஷ்டித்தார்(qanah)(64) என்றும் பெற்றார்(65) என்றும் மொழிபெயர்க்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை(66). பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இப்பதம் சிருஷ்டித்தார் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தேவன் சகலவற்றையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு ஞானத்தை சிருஷ்டித்தார் என்றால் ஆரம்பத்தில் அவர் ஞானமற்றவராக இருந்தார் என்று கூற வேண்டும். மேலும் பழைய ஏற்பாட்டில் 84 தடவைகள் இப்பதம் இடம்பெற்றிருந்தாலும் ஏழு இடங்களில் மட்டுமே இதை “சிருஷ்டித்தார்“ என்றும் மொழிபெயர்க்கக் கூடியதாகவுள்ளது. எனினும் இவ்விடங்களிலும், இப்பதம் கட்டாயமாக இவ்விதமாகத்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதில்லை(67) இவ்விடயங்களிலும் இதை “கொண்டிருந்தார்“ என்றும் மொழிபெயர்க்கலாம். சில வேத ஆராய்ச்சியாளர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டேன் (8.23) (68) “ஜெனிபிக்கப்பட்டேன்“ (8.24,26) என்று ஞானம் கூறுவதனால், ஞானம் சிருஷ்டிக்கப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்று கருதினாலும் (69) நீதிமொழிகள் கவிதை நடையில் எழுதப்பட்டிருப்பதை நாம் மறக்கலாகாது. (70) உண்மையில், “ஞானம்“ எப்போது எப்படி உருவானது என்பதைப் பற்றியல்ல, மாறாக அது ஆதியிலிருந்தே தேவனோடிருக்கிறது என்பதையே இவ்வசனங்கள் கவிதை நடையில் அறியத் தருகின்றன. (71) இவை உலகைச் சிருஷ்டிப்பதற்கும் முன்பு தேவனோடு ஞானமும் இருந்தது. (72) என்பதையும் “அவர் ஞானத்துடன் சகலவற்றையும் சிருஷ்டித்துள்ளார் (73) என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

நீதிமொழிகள் 8:22 இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டி ருப்பதாகக் கூறும் யெகோவாவின் சாட்சிகள் ஆதிச்சபைப் பிதாக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விபரணமாகவே நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தை வியாக்கியானம் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். (74) உண்மையில் கி.பி. 4ம் நூற்றாண்டில் இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலித்து அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதித்த ஏரியஸ் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பை ஆதாரமாக் கொண்டு, ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதால் அது உவமிக்கும் இயேசுக்கிறிஸ்துவும் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று கூறினார். பிழையான போதனை என்று அறிவிக்கப்பட்ட இந்த ஏரியஸ் என்பவரின் போதனைகளையே இன்று யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். (75)

கிறிஸ்தவ சபைத் தலைவர்களில் சிலர் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்துவே ஞானமாக உவமிக்கப்பட்டுள்ளார் என்று கருதியது உண்மையினும் (76) நீதிமொழிகள்  இத்தகைய உவமானத்துடன் எழுதப்படவில்லை. நீதிமொழிகள் 8ம் அதிகாரம் மட்டுமல்ல, முதல் 9 அதிகாரங்களிலும் பல இடங்களில் ஞானம் பேசுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. எனவே இவ்விடங்களில் எல்லாம் இயேசுக்கிறிஸ்துவே பேசுகிறார் என்றே கூறவேண்டும் அப்படியாயின் இயேசுக்கிறிஸ்துவை “தெருக்களில் சத்தமிடும் பெண்ணாகவும் (நீதி 1:20-21). விவேகம் என்பவருடன் ஏழு தூண்களுள் வீட்டில் வாழ்வதாகவும்“ விளக்க வேண்டும் (நீதி. 8:12, 9.1)(78) உண்மையில் இது ஒரு அர்த்தமற்ற விளக்கமாகும். மேலும் நீதிமொழிகளில் ஞானம்  பெண்பால் பதத்தாலேயே குறிக்கப்பட்டுள்ளது (79) எனவே இயேசுக்கிறிஸ்துவையும் ஒரு பெண்ணாகவே கருத வேண்டும். இது அர்த்தமற்ற அபத்தமான விளக்கமாகும் உண்மையில் தேவஞானமே நீதிமொழிகளில் ஒரு நபராக உவமிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வசனங்களை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விபரணமாக் கருதுவது தவறாகும்.

(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய : யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.  வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி)

Footnote & Reference

(60)  .இவர்களது வேதாகமத்தில் Jehovah himself produced me at the beginning of his way, the earliest of his way, the earliest of his achievements of long ago’ என்றுள்ளது

(61) Anonymous, Aid to Bible Understanding, p 918

(62) ஆங்கிலத்தில் King James Versions மற்றும் New International Version வேதாகமங்கள் இவ்விதமாகவே இப்பதத்தை மொழிபெயர்த்துள்ளன. 
(63) மூலமொழியில் கானா (qanah) எனும் எபிரேயப்பதம்

(64) Revised Standard Version மற்றும் New English Bible என்பன சிருஷ்டித்தார் என்று இப்பத் ததை மொழிபெயர்த்துள்ளன..

(65) New International Version அடிக்குறிப்பில் இம்மொழிபெயர்ப்பு உள்ளது

(66) R.E. Murphy, Proverbs : World Biblical Commentary p 48

(67) D. Kidner, Proverbs : Tyndale Old Testament Commentaries, p79

(68) மூலமொழியின்படி இவ்வசனத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டேன்“ என்பது நியமிக்கப்பட்டேன்“ என்றே உள்ளது

(69) Whybray, R.N. ‘Proverbs 8.22-31 and its Supposed Protypes’ pp. 504-542

(70) கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள வேதப் பகுதிகளை உரை நடைப் பகுதிகளை வியாக்கியானம் செய்வது போல விளக்கக் கூடாது.

(71) C.G. Martin, Proverbs : New International Bible Commentary, p664

(72) S.S. Buzzell, Proverbs : The Bible Knowledge Commentary OT p. 922

(73) J. Phillips Exploring Proverbs Volume one, pp 196-197

(74) Anonymous, Aid to Bible Understanding p918

(75) கி.பி. 325இல் Nicaea எனுமிடத்தில் கூடிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் ஏரியஸ்சின் போதனைகள் வேதப்புரட்டு என்று அறிவிக்கப்பட்டது. (L.Berkhof, The History of Christian Doctrines p 86)

(76) இதனால் இன்றைக்கும் சில கிறிஸ்தவர்கள் இவ்விதமான கருத்துடையவர்களாக இருக்கின்றனர். (Cf.W. Arnot, Studies in Proverbs : Laws from Heaven for Life on Earth, pp 150-152).

(77) இத்தகைய எழுத்து முறை “உயிருருவக அணி“ என்று அழைக்கப்படுகின்றது. அதாவது உயிரற்ற சடப்பொருட்களையும் பண்பு பெயரினால் அழைக்கப்படுபவற்றையும் உயிருள்ள நபர்களாக வர்ணித்து எழுதுவதற்கம் பேசுவதற்கும் உவமையணி உபயோகிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Personification என்று அழைக்கப்படுகின்றது.

(78) R.M. Bowan, Why You Should Believe in the Trinity, p 60

(79) K.T. Aitken, Proverbs : The Daily Study Bible, p 20.       

Monday 27 June 2011

தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் (வெளிப்படுத்தல் 3:14)


(இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கு வேதப்புரட்டர்களால் சுட்டிக்காட்டப்படும் வசனங்களில் இதுவும் ஒன்று. இவ்வசனம் நமக்குப் போதிப்பது என்ன? மூலமொழியில் இதற்கு எவ்வித அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன )

வெளிப்படுத்தல் 3:14 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயுமிருக்கிறவர்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை “தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருக்கிறவர்“ என்று வியாக்கியானம் பண்ணும் யெகோவாவின் சாட்சிகள். இவ்வாக்கியம், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதற்கான ஆதாரமாய் இருப்பதாகக் தர்க்கிக்கின்றனர்(31) இயேசுக்கிறிஸ்து தேவனால் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதனாலேயே, அவர் தேவனுடைய சிருஷ்டிகளின் ஆரம்பமாயிருப்பதாக இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் என்பது யெகோவா சாட்சியினரின் தர்க்கமாகும். (32) இவ்வாக்கியத்தில் “ஆதி“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் (arche) (33) “ஆரம்பிப்பவர்“ என்றல்ல மாறாக “ஆரம்பம்“ என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகிறனர்(34) அதாவது இயேசுக்கிறிஸ்து “முதலாவது சிருஷ்டிப்பாக“ இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும். 

இவ்வசனத்தில் “ஆதி“ எனறு மொழிபெயர்க்கப்பட்டள்ள பதத்தை “ஆரம்பம்“ என்றும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மையாயினும் (35) இதற்கு “ஆரம்பிப்பவர்“  “ஆரம்ப ஸ்தானம்“ “தோற்றுவாய்“ “முதல் காரணம்“(36) என பல அர்த்தங்களும் உள்ளன.(37) வெளிப்படுத்தல் 3:14 இல் இப்பதம் “முதல்காரணம்“ எனும் அர்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (38) எனவே இப்பதம் சிருஷ்டிப்புக்குக் காரணர் யார் என்பதையே அறியத்தருகிறது. (39) உண்மையில், இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிப்பின் காரணராய். சிருஷ்டிப்பை ஆரம்பித்தவராய் இருப்பதையே இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது (40) கி.பி 4ம் நூற்றாண்டிலிருந்து இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலி்த்து அவரை சிருஷ்டிக்கப்பட்டவராகக் கருதும் வேதப்புரட்டர்கள் இப்பதத்தை “ஆரம்பம்“ என்று மொழிபெயர்த்து இயேசுக்கிறிஸ்துவின் ஆரம்பத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்று வாதிட்டு வந்துள்ளபோதிலும(41) இப்பதம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது. ஏனென்றால் வெளிப்படுத்தல் புத்தகத்தின் ஏனைய வசனங்களில் இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (42) எனவே இதை முரண்படுத்தும் விதத்தில் வெளிப்படுத்தல் 3:14 இல் அவர் நித்தியமற்றவர், சிருஷ்டிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. மேலும் வெளிப்படுத்தல் 5:13 இல் தேவனும் இயேசுக்கிறிஸ்துவும் வழிபாட்டுக்கு உரியவர்களாகவும் (43) ஏனைய சிருஷ்டிகள் அனைத்தும் இவர்களை வழிபடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதும் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. (44) அத்தோடு, வெளிப்படுத்தல் 19:10 இல் சிருஷ்டிக்கபட்டவைகளை வழிபடுவது தடைசெய்யப்பட்டிருப்பதும் வெளிப்படுத்தல் 5:13 இல் சிருஷ்டிக்கப்பட்டவைகள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதும், அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல வழிபாட்டுக்கு உரிய தெய்வம் என்பதற்கான உறுதியான ஆதாரமாய் உள்ளது. 

(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் எழுதிய யொகோவாசின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி)

Footnote and References
(31) Let God be True, p 200

(32) Anonymous, Should You Believe in the Trinity p. 14

(33) மூலமொழியில் “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதம் 

(34) Anonymous, Should You Believe in the Trinity p. 14

(35) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்தை செயற்பாட்டுவினையில் (passive voice) மொழிபெயர்த்தாலே இத்தகைய அர்த்தம் வரும்

(36) “அர்க்கே“ (arche) எனும் பதம் செய்வினையில் (active voice) இத்தகைய அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

(37) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 260

(38) W.F. Arndt & F.W. Gingrich, A Greek-English Lexicon of the New Testament and other Early Literature, p112

(39) S. Zodhiates, The Complete Word Study Dictionay, P 261

(40) “அர்க்கே“ (arche) எனும் கிரேக்க பதத்திலிருந்தே “ஆர்க்கிடெக்“ (architect) அதாவது “கட்டிட கலைஞர்“ எனும் பதம் உருவாயுள்ளது. இயேசுக்கிறிஸ்து சகலவற்றையும் சிருஷ்டித்த கலைஞராயிருப்பதையே இதுவும் சுட்டிக் காட்டுகிறது, (யோவான். 1:3, கொலோ. 1:16, எபி. 1:2) 

(41) கி.பி. 4ம் நூற்றாண்டில் ஏரியசும் அதன் பின்னர் அவரைப் பின்பிற்றியவர்களும் இவ்விதமாகவே வசனத்தை வியாக்கியானம் செய்தனர். 

(42) வெளிப்படுத்தல் 1:18 இல் தாம் “சதாகாலங்களிலும் உயிரோடிருப்பதாக“ இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போதுமே இருப்பவர் என்பதே இவ்வாக்கியத்தின் அர்த்தமாகும் வெளிப்படுத்தல் 1:17 இலும் 22:13 இலும் “அல்பாவும் ஒமேகாவும்“ (கிரேக்க அரிச்சுவடியில் முதலும் கடைசியுமான எழுத்துக்கள்) எனும் விபரணத்து்டன் சேர்த்து இயேசுக்கிறிஸ்து  “ஆதியும் அந்தமுமாகவும்“இ “முந்தினவரும் பிந்தினவருமாகவும்“ இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுக்கிறிஸ்து நித்தியமானவர் என்பதையே அறியத் தருகிறது. (R.L. Thomas, Revelation 1-7 : An Exegetical Commentary, p.111) பழைய ஏற்பாட்டில் தேவன் நித்தியமானவர் என்பதைக் குறிக்கும் விவரணமே வெளிப்படுத்தலில் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.

(43) யெகோவா சாட்சிகள் இதையும் மறுதலித்து, இயேசுக்கிறிஸ்து மரியாதைக்குரியவராய் இருப்பதாகவும், தேவனு வழிபாட்டுக்குரியவராக இருப்பதாகவும் கூறுகின்றனர். 

(44)  வெளிப்படுத்தல் 5:13 இல் அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.“ என்று யோவான் தான் கண்ட தரிசனத்தை எழுதியுள்ளார். இவ்வசனத்தில் தேவனும் இயேசுகிறிஸ்துவும் சமமான நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இருவரையும் சகல சிருஷ்டிகளும் வழிபடுகின்றன. எனவே இவர்களிருவரும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அல்லர் என்பது தெளிவாகின்றத. இவ்வசனத்தில் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவர் தேவன் என்பதையும் ஆட்டுக்குட்டியானவர் இயேசுகிறிஸ்து என்பதையும் புத்தக விடயங்கள் அறியத் தருகின்றன. 




Saturday 25 June 2011

ஜெபத்தின் மூலம் வழிநடத்தல்



கண்பார்வையற்றிருந்த பிரபல பாடலாசிரியை ஃபென்னி க்ரொஸ்பி, முழங்காற்படியிட்டு ஜெபிக்காமல் எந்த ஒரு பாடலையும் எழுதத் துணிவதில்லை

ஒரு தடவை இசையமைப்பாளரால் அனுப்பப்பட்டிருந்த ராகத்திற்கு ஏற்றபடி உடனடியாக ஒரு பாடலை எழுத வேண்டியிருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி எவ்வளவு முயன்றும் அவளால் குறிப்பிட்ட ராகத்திற்கு ஏற்ற பாடலை எழுத முடியாமல் போய்விட்டது. அப்போதுதான் தான் ஜெபிக்காமல் பாடலை எழுதத் தொடங்கியதை உணர்ந்த ஃபென்னி க்ரொஸ்பி ஜெபித்துவிட்டு மறுபடியும் பாடலை எழுதத் தொடங்கினாள். 

அன்று அவள் எழுதிய பாடல் இயேசுவே என்னை சிலுவையினருகில் வைத்துக் கொள்ளும்“. (Jesus keep me near the cross) என ஆரம்பிக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாகும். 

1874 இல் ஃபென்னி க்ரொஸ்பி ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குத் தேவையான பணத்தில் 5 டொலர்கள் குறைவாய் இருந்தது, எவரிடமும் போய்க் கேட்பதற்கும் நேரம் இருக்கவில்லை. உடனே அவள் பணத்திற்காக ஜெபித்துவிட்டு, தனது அடுத்த பாடலை எழுத் தொடங்கினாள். அச்சமயம் அவள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. 

வாசற்கவைத் திறந்தபோது “தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக“ எனும் வாழ்த்துக்களுடன் ஒரு மனிதன் அவளது கைகை குழுக்கிவிட்டுச் சென்றான். அம்மனிதன் அவளது கையை குலுக்கும்போது அவளது கையில் 5 டொலர்கள் வைத்திருந்தான். உடனே முழங்கால்படியிட்டுத் தனக்குத் தேவையான 5 டொலர்கள் கிடைத்ததற்காக நன்றி செலுத்தி ஜெபித்த ஃபென்னி க்ரொஸ்பி, தனது அடுத்த பாடலை எழுதத் தொடங்கினாள். அதுவும் உலகப் பிரசித்தப் பெற்ற ஒரு பாடலாயிற்று. “சகல வழிகளிலும் என் இரட்சகர் என்னை நடத்துகிறார்“ என ஆரம்பமாகும் பாடலே அதுவாகும். (All the way my saviour leads me)

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரேமியா 33:3) எனும் தேவனது வாக்குத்தத்தம் என்றும் மாறாதது. என்பதற்கு  ஃபென்னி க்ரொஸ்பியின் வாழ்வு சிறந்த விபரணமாய் உள்ளதோடு, நமக்கும் தேவ வழிநடத்துதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையைக் காண்பிக்கிறது. 


Friday 24 June 2011

கிறிஸ்தவ பணியின் அடிப்படை


சீன உள்நாட்டு மிஷனரி சங்கத்தின் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் (1832-1905) ஒரு தடவை கிறிஸ்தவ பணிக்காகத் தம்மை அர்ப்பணித்த வாலிபர்களுக்கு ஒரு நேர்முகப் பரீட்சையை நடத்தினார். நேர்முகப் பரீட்சைக்கு வந்தவர்களிடம் நடைமுறை ரீதியான பல தரப்பட்ட கேள்விகளைக் கேட்ட ஹட்சன் டெய்லர், எல்லோரிடமும் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டார். 

“வெளிநாட்டுக்கு மிஷனரியாகச் செல்லவேண்டும் எனும் வாஞ்சை உங்களுக்கு ஏற்படுவதற்கான காரணம் யாது?“ என்பதே ஹட்சன் டெய்லர் அனைவரிடமும் கேட்ட முக்கியமான கேள்வியாகும். 

“எல்லோருக்கும் சுவசேஷசம் அறிவிக்கப்பட வேண்டும் என்று இயேசுக்கிறிஸ்து கட்டளையிட்டுள்ளார்.“ என்பது ஒருவனது பதிலாகவிருந்தது. இன்னுமொருவன் இயேசுக்கிறிஸ்துவை அறியாமல் இலட்சக்கணக்கானோர் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்“ என்றான். எல்லோருடைய பதில்களும் இவற்றைப் போலவே இருந்தன.

ஹட்சன் டெய்லர் கடைசியில் அவர்கள் அனைவரிடமும் “உங்களுடைய நோக்கங்கள் அனைத்தும் நல்லவைகளே. ஆனால், நீங்கள் உபத்திரங்களுக்கு முகங்கொடுக்கம்போது, அவை உங்களில் உறுதியாய் இராது. குறிப்பாக, உங்கள் கிறிஸ்தவ சாட்சியினிமித்தம் நீங்கள் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தால், மிஷனரிப்பணியில் ஈடுபட வேண்டும் எனும் உங்கள் வாஞ்சை இல்லாமல் போய்விடும. மரணத்தின் பிடியிலும் மிஷனரியாகப் பணிபுரிய உங்களைத் தூண்டும் ஒரே ஒரு நோக்கம் கிறிஸ்துவின் அன்பு மட்டுமே கிறிஸ்துவின் அன்பு உங்களை ஏவும்போது எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அவருக்காகப் பணியாற்ற முடியும்“ என்றார். 

கிறிஸ்துவின் அன்பே கிறிஸ்தவப் பணியின் அடிப்படையாய் உள்ளது. பலவிதமான இக்கட்டுகளக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் இறைபணியாற்றிய பவுல் “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது (2 கொரி. 5:14) என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே கிறிஸ்தவ பணியின் அடிப்படையாய் உள்ளது என்பதை ஹட்சன் டெய்லர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். உண்மையில், கிறிஸ்துவின் அன்பை விட்டு மனிதனை எதனாலும் பிரிக்க முடியாது. இதனால், எத்தகைய உபத்திரத்திலும் அவருக்காகப் பணிபுரியக்கூடியதாய் உள்ளது. (ரோமர் 8:35-37)

சபைப்பிதா ஒகஸ்டீன் இவ்வுண்மையை அறியத்தந்தமையால் “எந்த காரியத்தையும் உமக்காகச் செய்யும் போது, அது சிரமமானதொன்றாய்த் தென்படாத அளவுக்கு உமது அன்பைத் தந்தருளும்“ என்று ஜெபித்தார. கிறிஸ்தவர்களாகிய நமது ஜெபமும் இதைப்போலவே இருக்க வேண்டும்.  

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

Tuesday 21 June 2011

மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்


இவ்வுலகிலே மூடநம்பிக்கைகளுக்கும், வீண்பிரயாசங்களுக்கும் மலிவில்லை. பண்டைய காலம் தொட்டு இன்றுவரை மந்திரம், பில்லிசூனியம், மாயவித்தை என்பவற்றிலே மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரயாசங்களை வீணாக்கி பணங்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் வளரச்சிகளும் இல்லை. இதனால் நோய்களும் விரோதங்களும் சமாதானமின்மையும் மரணமுமே நேரிடுகின்றன. இதையறியாமல் இதனை இன்பமாகவும், தமது வாழ்வின் ஆதாரமாகவும் நினைத்து இதற்கு அடிமையாவோர் ஏராளமாகவுள்ளனர்..


அசுத்த ஆவிகளுடன் தொடர்புட்ட இந்த செயல்களினால் இதனை செய்பவர்கள் அந்த அசுத்த ஆவிகளுக்கே அடிமையாகின்றனர். வாழ்வின் ஆயுளையே இதற்காக செலவிடுகின்றனர். உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் ஏன் “இயேசுக்கிறிஸ்து“ என்பதை விசுவாசித்து, ஏற்றுக்கொள்ள, அந்த ஆவிகள் தடை செய்கின்றன.

இரட்சிக்கப்படும் முன் இரட்சிக்கப்பட்ட பின்

மந்திரவாதி தேவஊழியன்

இடம் -  மத்துறட்ட ஓசன்னா சபை

பெயர் - பாலச்சந்திரன் பாலசந்திரன்



மந்திரம், மாயவித்தை, வசியம்

இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில் இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல. கிறிஸ்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்றதான தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று



வசியம்

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.

3. சர்வ வசியம்

இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1. சாதாரண தரம் 2. உயர்தரம்



சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி  ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.



அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில் அசுத்த  ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.



ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.

தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் - முனி, காளி,

செத்த ஆவிகளை ஏவி விடுதல் –

மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்

நாய் – கடிக்கும்படி

மாடு – முட்டும்படி

பாம்பு – கொத்தும்படி

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?

1. பணவிரயம்

2. ஏமாற்றம்

3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு



மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்

கேள்வி :- செத்த ஆவியை எப்படி வசியம் செய்வது?

பதில் : ஒரு வீட்டிலே (இந்துக்களின்) ஒருவர் மரித்து அவரது கிரியைகள் முடிந்த பின்பு 8ம் நாளிலே ஆவிகளை வரவழைப்பர். அந்த ஆவிகளிடம் அந்நபர் எவ்வாறு இறந்தார்? எனக் கேட்பார்கள். அது எவ்வாறெனின் மந்திரம் செய்பவர் தனது உதவியாளருடன் இறந்தவர் வீட்டில் பிரவேசித்து இறந்தவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து, செத்தவரின் ஆவியை மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் அழைக்க வேண்டும். அப்போது குடும்பத் தலைவனின் மண்டையோடு எரித்த சாம்பலை தட்டிலே கொட்டி அதில் பெயர் எழுதி மந்திரம் உச்சரிப்பர். அதனிடம் கேள்விகள் கேட்பார்கள். ஆவி பதிலளிக்கும். இங்கு இறந்தவரின் ஆவியல்ல, அந்நேரத்தில் 33 கோடி தெய்வ ஆவிகளுள் ஒன்று வருகிறது. வீட்டார் நீ யார், என கேள்வி கேட்கையில் அது இறந்தவரின் பெயரைக் கூறும். எனவே மேற்குறிப்பிட்ட முறையின் மூலமாகவே இறந்த ஆவிகளை வசியம் செய்ய இயலும்.



கேள்வி  :- ஏவல் பிசாசு என்றால் என்ன?

பதில் :- ஆவிகளை மனுஷர் ஏவிவிடுதல், அதாவது எதிராளிகளின் குடும்பங்களை பிரிக்கும் எண்ணமாக ஆவிகளை ஏவி விடுதலைக் குறிக்கும். முரடனாக இருப்பவனுடன் மோத முடியாவிட்டால் நாய்கள், மாடுகள் என்பவற்றை ஏவி விடுதல், செத்த ஆவிகளை ஏவுதல், மற்றும் தெய்வ ஆவிகளான காட்டேரி, முனி, காளி என்பவைகளை வசியம் செய்து ஏவி விடுதல்



கேள்வி :- ஆவிகளை ஏவியபின் பிரதி உபகாரம் செலுத்த வேண்டுமா?

ஆம் ஏனெனில் கோழிகளை அநேகமாக இவ்வாறு இரத்தப்பலியாக செலுத்தி பிரதிஉபகாரம் செய்யவார்கள். பிழையான முறையிலே செய்தால் ஆவி ஆபத்தினை விளைவிக்கும். ஆதலால் செய்கின்ற பிரதியுபகாரத்தினை அந்த ஆவியை திருப்திப்படுத்தும் வண்ணம் நேர்த்தியாக இரத்தப் பலியாக செலுத்தலாம்.



கேள்வி :- செத்த ஆவியை எழும்பி வர வசியம் செய்கையில் அதற்கு உருவம் ஒன்று இருக்குமா?

பதில் :- இல்லை. ஆனால் அந்த ஆவியானது வசியம் செய்யும் வீட்டுக்கு யாரேனும் வந்திருந்தால் அவரக்ள் மூலம் அல்லது வேறு நபர்கள் மூலம் வெளிப்பட்டு பேசும்.



கேள்வி :- செய்வினை செய்யப்பட்டால் செய்யப்பட்ட நபர் அதை எடுக்க முடியுமா?

பதில் :- ஆம். யாருக்கு செய்வினை செய்யப்பட்டதோ, அவர்கள் செய்வினை செய்தவரிடம் வந்து , அவரிடம் விடயத்தினை கூறுகையில் அவர் வேறு ஆவிகளைக் கொண்டு, அந்த செய்வினையினை நீக்கிப் போட முடியும்.



கேள்வி – இயற்கையுடன் தொடர்பான மந்திரம் செய்ய முடியுமா?

முடியும். இயற்கையுடன் தொடர்ப்படுத்தி மந்திரம் செய்யும்போது தேவைக்கேற்ப பிரகாரம் செய்ய முடியும். இப்படி செய்வது குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே நிலைத்திருக்கும். தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் குறித்த கால அளவு முடிவடையும் போது மீண்டும் மீண்டும் அதனை புதுப்பித்து செயற்படுத்த முடியும். அவை அநேகமாக தொழில் போன்ற காரியங்களில் கையாளப்படுகின்றது.



கேள்வி :- நோய் ஏற்பட என்ன வசியம் செய்ய வேண்டும்.

பதில் :- இது ஏவல் வசியம் எனப்டும். ஒருவருக்கு நோய் ஏற்பட்ட வசியம் செய்ய வேண்டுமாயின் அவரது காலடி மண்ணை எடுத்து, அவரது பெயரை உச்சரித்து சந்தனக் கட்டையினால் ஒ உருவம் செய்ய வேண்டும். ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் பெண் உருவமும். பெண்ணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் ஆண் உருவமும் பின்னர் மாவினால் உருவம் ஒன்று செய்து, ஊசி, முட்டை என்பவற்றுடன் வைத்து ஊசியினால் முட்டையை குத்தும்போது யாருக்கு எதிராக வசியம் செய்யப்பட்டதோ அந்நபருக்கு அதே நேரம் உடலின் பகுதியில் குத்துக்கள்(வேதனை) ஏற்படும்.



கேள்வி :- அதிகமாக இரவு நேரம் மந்திரங்களை செய்வது என்பதைப் பார்க்கையில் மந்திரம் நேரம் என்பற்றுக்கு இடையில் தொடர்பேதும் உள்ளதா?

பதில் :- நேரம் என்பது முக்கியமில்லை. இரவு நேரங்களில் மந்திரங்களைச் செயக் காரணம் என்னவெனில் ஆட்களின் நடமாட்டமானது இரவு நேரங்களில் இல்லை என்பதனால் அமைதியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு மந்திரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என வேறுபாடு கிடையாது. எந்நேரமும் மந்திரம் செய்யலாம்.



கேள்வி:-உறுதியான சில விசுவாசிகள் அசுத்த ஆவிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது ஏன்?

பதில் :- உறுதியான விசுவாசிகள் என கணிப்பிடும் முறை தவறு. இரட்சிக்கப்பட்ட நீண்ட காலமாக இருந்தாலும், அவரது வாழ்க்கையில் மறைமுகமான பாவங்கள் காணப்படலாம். எனவே, இந்த இரகசிய பாவங்களில் அந்நபர் தொடர்ந்து ஈடுபடுகின்றபோது அசுத்த ஆவியின் இலக்கிற்கு ஆளாக வேண்டி ஏற்படும். உண்மையான விசுவாசிகளிடம் ஆவி செல்லாது

                                                                       (அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? (மத்தேயு 19:17)



இயேசுக்கிறிஸ்து தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும் அதற்கு அவர்: “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் தேவனை விடத் தாழ்வானவர் என்று யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர். (34) எனினும் இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம் (மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார். அதாவது, நீ என்னை இவ்வாறு   அழைப்பதற்கான காரணம் யாது என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால் “அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை(35) தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்கா யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார் (36)

இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது(37) எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது (38)

(இவ்வாக்கமானது சகோ.வசந்தகுமார் எழுதிய யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதி்ல்கள் எனும் நூலிலிருநது பெறப்பட்டதாகும் வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)

Footnote and References 
(34) Anonymous, Ad to Bile Understanding i.676 ; Anonymous, Should you Believe in he Trinity p 17
(35) L. Morris, The gospel According to Mathew, p 490)
(36) N. Geldenhuys, The Gospel of Luke: The New International Commentary on the New Testament p 458
(37) J.Bodine & M.Bodine, Witnessing to the Witnesses, pp 41-42
(38) J.D. Grassmick, Mark: the Bible Knowledge Commentary p 150


'

Friday 17 June 2011

ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர் பகுதி 2(இறுதிப்பகுதி)

இதன் முதற்பகுதியை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

மரணத்தின் பின்பு மானிட ஆத்துமாவும் அழிந்து போகும் எனும் தங்களது உபதேசத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னுமொரு வசனம் எசேக்கியேல் 18:4 ஆகும். இவ்வசனத்தில் “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மரணத்தின் பின்னர் மனிதனின் எந்த ஒரு பகுதியையும் வாழ்வதில்லை என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர் (34) ஆனால் மானிட சரீரம் மரித்தாலும் அவனில் ஆவிக்குரிய பகுதி அழியாமல் இருக்கும் எனும் உண்மையை இவ்வசனங்கள் முரண்படுத்தவில்லை. ஏனென்றால் எசேக்கியயேலினுடைய காலத்தில் மக்கள் தங்கள் மூதாதையரின் பாவம் தங்களையும் பாதிப்பதாக எண்ணினர். (35) இது யாத்திராகமம் 20:5 ஐ அடிப்படையாகக் கொண்ட அவர்களது நம்பிக்கையாக இருந்தது (36) எசேக்கியேல் 18ம் அதிகாரத்தில் 2ம், 3ம் வசனங்களில் இதைப்பற்றி இஸ்ரவேலில் சொல்லப்பட்டு வந்த பழமொழி இனிமேல் சொல்லப்படுவது இல்லை என்ற தீர்க்கதரிசியின் மூலம் அறிவிக்கும் தேவன் (எசே. 18:2-3) (17) இனிமேல் பெற்றோர்களின் பாவத்திற்காக பிள்ளைகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காக “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்“. (எசே. 18:4)  

இவ்வசனத்தில் ஆத்துமா என்பது முழு மனிதனையுமே குறிக்கின்றது. எனவே, பாவம் செய்கிற மனிதனே அதன் தண்டனையான மரணத்தை அனுபவிப்பான். அவனது பெற்றோரின் பாவத்துக்கு அவன் உத்தரவாதமுடையவனல்ல என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். உண்மையில் “சரீரப்பிரகாரமாக மரணத்தைப் பற்றியே இவ்வசனம் கூறுகிறது. (38) பாவம் செய்கின்றவன் மரணமடைவான் என்பதே இவ்வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இவ்வசனம் மரணத்தின் பின் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதிக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றியே எதுவும் கூறவில்லை

நாம் ஏற்கனவே பார்த்தப்படி புதிய ஏற்பாட்டிலே மத்தேயு 10:28 மரணத்தின் பின் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதை நேரடியாக அறியத் தருகிறது. மேலும், லாசருவையும் ஐசுவரியவானையுத் பற்றி இயேசுக்கிறிஸ்து குறிப்பிடும்போது மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மனிதர்கள் இருப்பதை அறியத் தந்துள்ளார். (லூக்கா 16:22-28) யெகோவாவின் சாட்சிகள் இதை உருவக விபரணமாக ஒரு உவமையாக கருதுவதோடு, இதை எவ்விதத்திலும் சொல்லர்த்தமான சம்பவமாக விளக்க முடியாது என்று கூறுகின்றனர். இதை சொல்லர்த்தமாக விளக்கினால் தேவனுடைய மக்கள் அனைவரும் எப்படி ஆபிரகாம் எனும் ஒரு மனிதனுடைய மடியில் இருக்க முடியும்? என்றும், மனிதர் வேதனைப்படும் அளவுக்கு அக்கினி ஜூவாலை இருக்கும். இடத்தில் தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட விரல் நுனியின் தண்ணீர் எப்படி ஆவியாகமல் இருக்க முடியும்? என்றும் இந்த ஒரு துளி நீர் எப்படி ஒரு மனிதனுடைய தாகத்தைத் தீர்க்ககூடியதாய் இருக்கும்? என்றும் கேட்கின்றனர். (40) ஆனால் இயேசுக்கிறிஸ்து மரணத்தின் பின்பான நிலையை சொல்லர்த்தமாகவே இவ்வசனங்களில் விளக்கியுள்ளார். (41) யெகோவாவின் சாட்சிகள் கூறுவுதுபோல, ஒரு துளி நீர் தாகத்தைத் தணிக்கும் என்றோ, அக்கினி ஜூவாலையுள்ள இடத்தில் ஒரு துளி நீர் ஆவியாகாமல் இருந்தது என்றோ இயேசுக்கிறிஸ்து கூறவில்லை. ஐசுவரியவானின் வார்த்தைகள் அவனது வேதனையின் புலம்பலாகவே இருக்கின்றன. மேலும் இவ்வுவமையில் ஆபிரகாம் யெகோவா தேவனையும் ஐசுவரியவான்- பரிசேயனையும் லாசரு -இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களையும் மரணம் என்பது இவ்விரு சாராரும் இவ்வுலகில் இருக்கும்போது அவர்களது நிலையில் ஏற்படும் மாற்றத்தையும் யெகோவாவின் சாட்சிகள் கூறுவது(42)  உவமையில் சொல்லப்படாத விடயங்களையெல்லாம் அதற்குள் புகுத்தும் பிழையான வேதவியாக்கியானமாகவே உள்ளது. உண்மையில் மரணத்தின் பின்பும் மனிதர்கள் உணர்வுள்ள நிலையில் இருப்பார்கள் என்பதையும் அச்சமயம் அவர்களால் தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் இயேசுக்கிறிஸ்து இவ்வுவமையின் மூலம் அறிவித்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் மரணத்தின் பி்னர் சரீரமும் ஆத்துமாவும் அழிந்து போகிறது என்று கூறுவது வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது.

மரணத்தின் போது மனிதன் உணர்வுள்ளவானாகவே இருப்பான் என்பதை இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது தம்மோடு சேர்த்துச் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவனுக்கு கூறிய வாரத்தைகளும் அறியத் தருகின்றன. “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்“ எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள், தான் இயேசுக்கிறிஸ்துவுடன் இருப்பதை அறிந்திடக்கூடிய விதத்திலேயே அவன் பரதீசில் இருப்பான் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. இதனால் யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வசனத்தை “இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்“ என்று மாற்றியுள்ளனர். (43) இதன் மூலம், கள்ளன் அன்றைய தினம் பரதீசிலிருப்பதைப் பற்றியல்ல மாறாக, அவன் எதிர்காலத்தில் பரதீசிலிருப்பதைப் பற்றி அன்றைய தினம் இயேசுக்கிறிஸ்து அவனுக்குக் கூறுவதாக யெகோவாவின் சாட்சிகள் விளக்ககின்றனர். (44) இவர்கள் தங்கள் உபதேசமே சரியானது என்பதை நிரூபிப்பதற்காக வேதவசனங்களையே மாற்றியுள்ளமையால் இவர்களின் போதனைகள் உண்மையானவைகள் அல்ல. 

மரணத்தின் பின்னர் மனிதனின் சடப்பொருள் பகுதியான சரீரம் அழிந்திட ஆவிக்குரிய பகுதி தேவனிடம் செல்வதாக பழைய ஏற்பாடு அறியத் தருகிறது. (ஆதி. 3:19, பிர. 3:20, 12:7) பழைய ஏற்பாட்டில் துன்மார்க்கரின் ஆத்துமா எங்க செல்லும் என்பது பற்றிய முழுமையான வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் மரித்தவர்கள் “பாதாளத்தில் இறங்குவதாகக்“ குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதி. 37:35, 42:29, 44:31, எண் 16:30, யோபு 17:13-16, 24:19-20, சங். 31:17) ஆனால், புதிய ஏற்பாட்டில் நீதிமான்களினதும் துன்மார்க்கரினதும் ஆத்துமாக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதையும், இவ்விரு இடங்களுக்கு இடையில் பாரிய பிளவு இருப்பதையும் அறிந்து கொள்கிறோம். (லூக். 16:22-23) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்பது மரித்தோரின் சரீரங்கள் செல்லும் இடமாக இருக்கையில் புதிய ஏற்பாட்டில் பாதாளம் என்பது (46) மரித்த துன்மார்க்கர் செல்லும் இடத்தைக் குறிக்கிறது(47) இதற்குக் காரணம் தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் மூலமொழியில் வித்தியாசமான அர்த்தம்தரும் இருவேறுபட்ட வார்த்தைகளை “பாதாளம்“ என்று ஒரே வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதேயாகும். வெளிப்படுத்தல் 20:14 இல் பாதாளம் (ஹேதீஸ்) அக்கினிக் கடலில் தள்ளப்படுவதனால் அங்கு துன்மாரக்கர் மட்டுமே இருப்பது தெளிவாகின்றது. (48) மரித்த நீதிமான்கள் செல்லும் “ஆபிரகாமின் மடி் என்பது பரதீசுக்கு யூதர்கள் கொடுத்திருந்த பெயராகும். (49) மரணத்தின் பின்பு நீதிமான்களும் துன்மார்க்கரும் செல்லும் இடம் பற்றி வேதாகமம் அறியத் தருவதனால், மரணத்தோடு மானிட ஆத்துமா அழிந்து போகிறது எனும் யெகோவாவின் சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணானது என்பது தெளிவாகின்றது. மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் என்பதே வேதம் போதிக்கும் சத்தியம். 

Footnote and Refernace 
 (34)  Anonymous, Reasoning from the Scriptures, p 169

(35) பபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன யூதர்க்ளுக்கே எசேக்கியேல் தீரக்கதரிசனம் உரைத்தார். பாபிலோனிலிருந்த யூதர்கள் தங்கள் மூதாதையருடைய பாவத்துக்கான தண்டனையாகவே சிறையிருப்பு இருப்பதாக கருதினார்கள். (R.H. Alexander, Ezekiel p 823) 

(36) உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்’ என்பது என்று தேவன் அறிவித்தள்ளார். ஒருவனுடைய பாவத்திற்காக அவனது பிள்ளையை தேவன் தண்டிப்பார் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. ஏனென்றால் உபாகமம் 24:16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்“ என்று தேவன் தெரிவித்துள்ளார். உண்மையில் “ஒருவனது பாவம் அவன் பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே யாத்திராகமம் 20:5 அர்த்தமாகும் (F.B. Huey, Exodus Bible Commentary p 87) 
பெற்றோரின் பாவவாழ்க்கைப் பிள்ளைகளும் பின்பற்றுவதால் அவர்களும் தண்டிக்கப்படுகின்றனர்“ என்பதை இவ்வசனம் அறியத்தருகிறது. (W.C. Kaiser, Exodus Expositor;s Bible Commentary vol. p 423)

37) இவ்விரு வசனங்களிலும் பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச் சொல்லுகிறது என்ன? இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

(40) Anonymous, Reasoning from the Scriptures, p 174-175

(41) இயேசுக்கிறிஸ்துவின்  உவமைகள் கற்பனைக் கதைகள் அல்ல. அவை இயேசுக்கிறிஸ்துவினுடைய காலத்தைய யூதசமுதாயத்தில் வழமையாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட விபரணங்களாகவே உள்ளன. “அக்காலத்தைய கிரேக்கர்கள் தரக்கரீதியான விளக்கங்களின் மூலம் போதிக்கும் முறையை உபயோகிக்கையில், யூதர்கள் மானிட வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை விவரணங்களாக்கிப் போதித்தனர்.“ (W.Barclay, And Jesus Said: The parables of Jesus, pp 3-4) இயேசு கிறிஸ்துவின் உவமைகள் இவ்வாறு மானிட வாழ்வுச் சம்பவங்ளை அடிப்படையாகக் கொண்ட போதனைகளாகும். இதனால் “அவர் சொல்லிய உவமைகள் அவர் வாழ்ந்த சமுகத்தைப் பிரதிபலிப்பனவாய் உள்ளன. (D.Wenham, The Parables of Jesus : Pictures of Revolution p. 13)

(42)   Anonymous, Reasoning from the Scriptures, p 175

(43) Ibid pp 287-288 ஆங்கிலத்தில் அரைப்புள்ளியை மாற்றியதன் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் தங்களது கருத்தை இவ்வசனத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது ‘I tell you the truth, today you will be with me in paradise’ என்பதில் truth என்பதற்கு அடுத்துள்ள அரைப்புள்ளியை today என்பதற்குப் பிறகு இடுவதன் மூலம் அதாவது ‘I tell you the truth today, you will be with me in paradise’ என்று மாற்றுவதன் மூலம் தங்களது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தை மாற்றியுள்ளனர். 

(44)  Anonymous, Reasoning from the Scriptures, p 287

(45) பாதளம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ஷியொல்“ எனும் எபிரேயப் பதம் பழைய ஏற்பாட்டில் 65 தடவைகள் இடம்பெறுவதோடு, “கல்லறை“ “குழி“ “நரகம்“ “பாதளம்“ என்று பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

(46) மூலமொழியில் “ஹேதீஸ்“ எனும் கிரேக்க பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. சில தமிழ் வேதாகமங்களில் இதை “ஆதீசு“ என்று எழுதியுள்ளனர். 

(47) தமிழ்வேதாகமத்தில் பாதளம் என்பது பழைய ஏற்பாட்டில் ஒரு அர்த்தத்திலும் இருப்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். 

(48) ஹேதீஸ்சில் இருக்கும் துன்மார்க்கரின் ஆத்துமாக்கள், சரீரத்தோடு மறுபடியுமாகச் சேர்க்கப்பட்டு (இதுவே உயிர்த்தெழுதுல்) அவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் (இதுவே இரண்டாம் மரணம்) .இது இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் நடைபெறும் என்று வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் கூறுகிறது.

(49) J.Blanchard, Whatever Happened to Hell? P 38

Tuesday 14 June 2011

ஆத்துமா இல்லாமல் அழிந்திடும் மாந்தர்


நூல் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் – சகோ. வசந்தகுமார்
வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி

முன்னுரை
மானிடவாழ்வின் இறுதிநிலை பற்றி யெகோவா சாட்சிகள் போதிக்கும் விடயங்களும் வேதாகம உபதேசத்தை முரண்படுத்தும் வேதப்புரட்டாகவே உள்ளது. மரணத்தோடு மானிட வாழ்வு முற்றுப்பெறுவதாகக் கூறும் இவர்கள், மனிதனில் ஆத்துமா என்ற அழைக்கப்படும் அழியாத நித்திய ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கின்றனர். (1) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவதுபோல ஆத்துமாவும் அழிந்துபோகிறது (2) என்று போதிக்கும் இவர்கள் மரணத்தின் பின்பும் மனிதன் உணர்வுடன் இருப்பதையும், துன்மார்க்கர்கள் உயிர்தெழுந்து நித்திய காலமாக நரகத்தில் துயரப்படுவார்கள் என்பதையும் மறுதலிக்கின்றனர். மேலும் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார்கள் என்று கூறும் இவர்கள் தங்களில் 144000 பேர் பரலோகத்திலும் ஏனையவர்கள் பூமியிலும் நித்திய காலமாக வாழ்வார்கள் என்றும் விளக்குகின்றனர். மானிட வாழ்வின் இறுதிநிலை பற்றிய யெகோவாவின் சாட்சிகளின் இத்தகைய வேதப்புரட்டு உபதேசங்கள் இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.


மானிட ஆத்துமாவைப் பற்றிய யெகோவா சாட்சிகளின் உபதேசம் வேதத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது. ஏனென்றால், இவர்கள் மானிட ஆத்துமாவின் அழியத் தன்மையை மறுதலிக்கும் வேதப்புரட்டர்களாய் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை மானிட உயிரே வேதாகமத்தில் ஆத்துமா என்று அழைக்கப்படுகின்றது. (3) தேவன் முதல் மனிதனான ஆதாமை சிருஷ்டித்தபோது  அவன் “ஜீவிக்கிற ஜீவாத்துமாவானான்“ (ஆதி. 2:7) என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால், “ஆத்துமா என்பது மனிதனுடைய உயிர் என்று யெகோவா சாட்சிகள் கருதுகின்றனர்.(4) இயேசுவிற்கு கூட அழியாத ஆத்துமா இருக்கவில்லை என்று  கூறும் இவர்கள் அவர் மரித்தபோது, அவரது ஆத்துமாவும் மரித்தது என்று வாதிடுகின்றனர். (5) மனிதன் மரிக்கும்போது அவனது சரீரம் அழிவது போலவே அவனது ஆத்துமாவும் அழிந்து போகிறது(6) எனும் இவர்களது போதனை, சரீர மரணத்தின் பின்பும் மானிட ஆத்துமா உணர்வுடன் நித்திய காலமாய் இருக்கும் எனும் வேதாகம உபதேசத்திற்கு எதிரானதாகவே உள்ளது. மரணத்தின் பின்பு ஆத்துமாவுக்கு உணர்வுள்ள வாழ்வு இல்லை என்பதே இவர்களது போதனையாக உள்ளது(7) 

திரித்துவ உபதேசத்தைப் போலவே, மானிட ஆத்துமாவின் அழியத்தன்மை பற்றிய போதனையும் சாத்தானால் உருவாக்கபட்டது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றன. விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் நீங்கள் சாவீர்கள் என்று தேவன் கூறியிருந்தார். ஆனால் சாத்தானோ அதைப் புசித்தால் மரணம் சம்பவிக்காது என்று சொல்லியும், அதைப் புசித்த ஆதாமும் ஏவாளும் பிற்காலத்தில் மரணமடைந்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள் (ஆதி. 3) மானிட ஆத்துமா சாகாது என்னும் பொய்யைச் சாத்தான் இவ்விதமாகக் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவந்துள்ளான் என்று கூறுகின்றனர். (8) இதைப் போலவே நரகம் பற்றிய கிறிஸ்தவப் போதனையும் சாத்தானால் உருவாக்கப்பட்டது என்பதே யெகோவா சாட்சிகளின் கருத்தாகும் (9) இவர்களைப் பொறுத்தவரை கல்லறையே வேதத்தில் நரகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (10)

உண்மையில்  ஆத்துமா என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு “உயிர்“ எனும் அர்த்தம் மட்டுமே உள்ளது என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுவது பெருந்தவறாகும். இவர்கள் கூறுவதுபோல ஆதியாகமம் 2 :7 .இல் ஆத்துமா எனும் பதம் மானிட உயிரையே குறிக்கின்றது என்பது உண்மையென்றாலும் வேதாகமத்தில் இப்பதம் பலவிதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூலமொழியில் ஆத்துமா என்பதற்கு “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதமும் புதிய ஏற்பாட்டில் “சூகே“ (psuche) என்னும் கிரேக்க பதமும் உபயோகிக்கப்பட்டுள்ளது. இவை மனிதனின் ஆவிக்குரிய பகுதியின் (Spiritual part) (11) பல்வேறு அம்சங்களையும் குறிக்கும் பதங்களாகும். பழைய ஏற்பாட்டில் மனிதனின் ஆவிக்குரிய பகுதி “உள்ளான மனிதன்“ (inner self) என்றும் சடப்பொருள் பகுதி “வெளித்தோற்றம்” (outer appearance) என்று கருதப்படுவதோடு (12) 754 தடவைகள் உள்ளான மனிதனைக் குறிப்பிட “நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயப் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது. (13) எனினும் இவற்றில் 110 தடவைகள் மட்டுமே இப்பதத்தை “ஆத்துமா“ என்று மொழிபெயர்க்கலாம் (14) இதனால் தான் தற்கால ஆங்கில வேதாகமங்களில் இப்பதம் ஆத்துமா என்று மட்டுமல்ல உயிர்/ஜீவன் (Life) சுயம்(self) இதயம்(Heart) நபர்(being)  என பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (15) இதேவிதமாக பதிய ஏற்பாட்டிலும் “சைக்கி“ எனும் பதம் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் இடம் பெற்றாலும் 19 தடவைகள் மட்டுமே ஆத்துமா என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (16) ஆனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தை தழுவிய மொழிபெயர்ப்பாய் இருப்பதனால் (17) பழைய ஏற்பாட்டில் 400 இறகும் அதிகமான தடவைகளும் புதிய ஏற்பாட்டில் 39 தடவைகளும் ஆத்துமா என்னும் பதம் உள்ளது. இப்பதம் சில இடங்களில் மானிட உயிரை அல்லது முழு மனிதனையும் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய இடங்களில் உள்ளான மனிதனின் பல்வேறு அம்சங்களையும் குறிக்கின்றன. (18) ஆதியாகமம் 2:7 இல் மண்ணினால் தாம் செய்த மானிட சரீரத்திற்குள் தேவன் ஜீவசுவாசத்தை ஊதியபோது அவன் “ஜீவாத்துமாவானான்“ எனும் வாக்கியம் மூலமொழியின்படி தேவனுடைய சுவாசம் மனிதனுக்கு உயிரைக் கொடுத்தது.” என்றே கூறுகிறது (19) மூலமொழியில் “ஜீவாத்துமா” எனும் பதமே ஆதியாகமம் 1:20, 2:19, 9:9 இல் ஏனைய உயிரினங்களின் ஜீவனைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளமை இதை உறுதிப்படுத்துகி்னறது. (20)

ஆதியாகமம் 2:7 நெப்ஃபெஃஷ்” (nephesh) எனும் எபிரேயபதம் மானிட உயிரையே குறித்தாலும், இது மனிதனில் அழியாத ஆவிக்குரிய பகுதி இருப்பதை மறுதலிக்கவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தபடி, மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் உயிரை மட்டும் குறிக்கும் பதம் அல்ல. (21) மனிதனின் ஆவிக்குரிய பகுதியே அதாவது உள்ளான மனிதனே வேதத்தில் பொதுவாக ஆவி/ஆத்துமா எனும் பதத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது (22) அக்காலத்தைய யூதர்களும் கிரேக்கர்களும் சரீரத்திலிருந்து ஆத்துமா  பிரிவடைவதையே மரணமாகக்க் கருதினார்கள்.(23) மானிட சரீரம் மரித்த பின்பும் அதாவது சரீரத்தை விட்டு பிரிந்த பின்பும் ஆத்துமா அழியாமல் இருக்கும் என்று மத்தேயு 10:28 இல் இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார்.  ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் எனும் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருவனது சரீரம் மரித்தாலும் அவனது ஆத்துமா அழியாது என்பதை அறியத்தருகிறது. “மரணத்தின் பின்பும் உயிரோடிருக்கும் மானிடப் பகுதியையே இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் ஆத்துமா என்று குறிப்பிட்டுள்ளார். (24) மரணத்தின் பின்னர் மானிட ஆத்துமாக்கள் உயிருடன் இருப்பதினால்தான் வெளிப்படுத்தல் 6:9-10 இல் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை யோவான் பலிபீடத்தின் கீழ் கண்டது மட்டுமல்ல அவை தேவனோடு பேசுவதையும் கேட்டார்(25) இவ்விரு வசனங்களும் யெகோவா சாட்சிகளின் உபதேசத்திற்கு முரணாக, மானிட சரீரம் மரித்த பின்பும், ஆத்துமா உயிரு்டனும் சுய உணர்வுடனும் இருக்கும் என்பதை அறியத் தருகி்ன்றன. 

மரணத்தின் பின்னர் உணர்வுள்ள நிலையில் மானிட ஆத்துமா இருக்காது எனும் தங்களது கருத்தை நிரூபிப்பதற்கு யெகோவா சாட்சிகள் சங்கீதம் 146:4, பிரசங்கி 9:5, எசேக்கியேல் 18:4 எனும் வசனங்களைச் சுட்டிக் காட்டுவது வழமை. சங்கீதம் 146:6 இல் “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின் பின் மனிதனுடைய யோசனைகள் அழிந்து போவதினால் அவன் உணர்வுள்ளவாய் இருக்க மாட்டான் என்று யெகொவா சாட்சிகள் கூறுகின்றனர். (26) ஆனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித சிந்தனையும் அற்றவனாக இருப்பான் என்று கூறவில்லை. ஏனென்றால் இங்கு “யோசனைகள்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மனிதனுடைய “திட்டங்கள்“ “நோக்கங்கள்“ எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள்“ என்பவற்றையே குறிக்கின்றது (27) இரு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூலொன்றில் இவ்வித அர்த்தத்துடனான கூற்றை நாம் அவதானிக்கலாம். (28) எனவே, “மனிதன் மரிக்கும்போது அவன் போட்டிருந்த திட்டங்களும் அழிந்து போகின்றன“(29) என்று இவ்வசனம் கூறுகிறதே தவிர அவன் உணர்வற்றவனாக இருப்பான் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. 

பிரசங்கி 9:5 இல் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால், மரணத்தின் பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகிவிடுவான் என்று யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (30) ஆனால் இவ்வசனத்தில் “மரித்தவனுக்கு இவ்வுலக அனுபவங்கள் எதுவும் இருக்காது“ (31) என்பதையே பிரசங்கி சுட்டிக்காட்டுகிறார். ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் உயிரோடிருப்பவனுக்கும் மரித்தவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டைச் சுட்டிக் காட்டும் பிரசங்கி, இவ்வசனத்தின் ஆரம்பப்பகுதியில், உயிரோடிருக்கிறவன் அறிந்திருக்கும் விடயத்தை மரித்தவனால் அறியமுடியாது என்று கூறுவதோடு, உயிரோடிருக்கிறவன் தனக்கும் ஒருநாள் மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்திருக்கிறான் என்றும், மரித்தவனுக்கு இவ்வித அறிவு இல்லை என்று கூறுகிறாரே தவிர யெகோவாவின் சாட்சிகள் சாட்சிகள் கூறுவது போல், மரி்த்தவனுக்கு எவ்வித உணர்வும் இல்லை என்று கூறவில்லை. மேலும், “மரணத்தை விட உயிரோடிருப்பதே மேலானது எனும் தர்க்கத்திற்கு ஒரு ஆதாரமாகவே இவ்விடயத்தை பிரசங்கி இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். (32) எனவே, இவ்வசனத்தை மரணத்தின் பின்பான மானிட வாழ்வு பற்றிய உபதேசமாகக் முடியாது. மேலும், புதிய ஏற்பாட்டிலேயே மரணத்தின் பின்பான வாழ்வு பற்றிய முழுமையான வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டுள்ளமையால், இத்தகைய வெளிப்படுத்தல் அற்ற காலத்தில் பிரசங்கி கூறியதை ஆதாரமாகக் கொண்டு மரணத்தின்பின் மனிதன் எவ்வித உணர்வும் அற்றவனாகவே இருப்பான் என்று கூறுவது தவறாகும் (33)
(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Foot note and References
(1) Anonymous, Let God be True, p. 69
(2) Ibid pp 74-75
(3) A. Hoekema, The Four Major Cults p.265
(4) Anonymous, Let Your Name be Sanctified, p. 44
(5) Anonymous, Let God be True, p. 200;
(6) Anonymous, Reasoning from the Scriptures, pp 383-384
(7) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 88
(8) Anonymous, Reasoning from the scriptures, pp 101; Anonymous, Let God be True p. 75 
(9) Anonymous, Reasoning from the scriptures, pp 175; Anonymous, Let God be True p. 68
(10) Anonymous, You can Live Forever in Paradise on Earth. p. 83
ஆனால் நரகம் என்பது தேவனை நிராகரிப்பவர்கள் நித்தியகாலமாய் வேதனைப்படும் என்பதை மத்தேயு 8:11-12, 13:42, 13:50, லூக்கா 13:28, 16:19-31, வெளிப்படுத்தல் 14:9-11, 9:20 போன்ற வசனங்கள் அறியத் தருகின்றன. 
(11) வேதாகமப் போதனையின்படி மனிதனில் சடப்பொருள் பகுதி, ஆவிக்குரிய பகுதி என்று இரு பகுதிகள் உள்ளன. சடப்பொருள் பகுதியில் மானிட சரீரத்தின் மாமிசம், எலும்பு, இரத்தம் போன்றவை உள்ளன. ஆவிக்குரிய பகுதியில் ஆவி, ஆத்துமா, மனம், சிந்தை போன்றவை உள்ளன. இவற்றில் சடப்பொருள் பகுதி சரீரம் என்றும் ஆவிக்குரிய பகுதி ஆவி/ஆத்துமா என்றும் அழைக்கப்படுகின்றது
(12) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 238 
(13) H.W. Wolff, Anthropology of the Old Testament, pp 10-25
(14) இது NIV ஆங்கில மொழிபெயர்ப்பின்படியான கணிப்பீடு KJV மொழிபெயர்ப்பில் 28 வித்தியாசமான வார்த்தைகள் இப்பதத்திற்கு உபயோகிக்கப்பட்டிருந்தாலும் 419 தடவைகள் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் KJV  மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் 400 இற்கும் அதிகமான தடவைகள் ஆத்துமா எனும் பதமே உள்ளது
(15) W.E. Vine, M.F. Unger & W. White ed. Vine’s Expository Dictionary of Biblical Words, p. 237
(16)  உண்மையில் “சூகே“ எனும் கிரேக்க பதிய ஏற்பாட்டில் 11 விதமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டுள்ளது. (Ibid pp. 588, 569)
(17) நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டபோது ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமமே உபயோகத்தில் இருந்தமையால், தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும்போது மூலமொழிக்கும் ஜேம்ஸ் அரசனது ஆங்கில மொழிபெயர்ப்பிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்ததால் தமிழ்மொழிபெயர்ப்புக் குழு ஜேம்ஸ் அரசனது ஆங்கிலமொழிபெயர்ப்பையே (KJV) பின்பற்ற வேண்டும் என சென்னை வேதாகமச் சங்கம் நிபந்தனை விதித்திருந்தது. இதனால் நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமம் ஜேம்ஸ் அரசனது ஆங்கில வேதாகமத்தின் தழுவலாகவே உள்ளது. (மேலதிக விபரங்களுக்கு ஆசிரியரின் புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு எனும் நுலினை பார்க்கவும்)
(18) W.F. Arndt & G.F. Wilbur, A Greek-English Lexicon of the New Testament and other Early Christian Literature, pp 674-675, 893-894, F. Brown, S.R. Driver, and C.A. Briggs, A Hebrew English Lexicon of the Old testament, pp 659-661, 924-925
(19) W.W.Wiersbe, Be Basic : An Old Testament Study – Genesis 1-11, p 167
(20) G.J. Wenham, Genesis 1-15: World Biblical Commentary Vol, p. 60
(21) F.Brown, S.R. Driver & C.A. Briggs, A Hebrew and English Lexicon of the Old Testament p 659
(22) வேதத்தில் ஆவியும் ஆத்துமாவும் ஒத்தக்கருத்துள்ள சொற்களாக உபயோகிக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்திற்கு மரணத்தின்போது சரீரத்தைவிட்டு ஆவி பிரிவடைந்து செல்வதாக பிரசங்கி 12:7   கூறுகையில் ஆதியாகமம் 35:18 இல் ஆத்துமா பிரிவடைந்தது செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் மரித்தவர்கள் ஒன்றில் “ஆத்துமாக்கள்“ என்றோ (வெளி 6:9) அல்லது ஆவிகள் என்றோ (எபி. 12:23, 1 பேதுரு 3:19) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர் அதேபோல் யோவான் 12:27 இல் இயேசுகிறிஸ்து தனது ஆத்துமா கலங்குவதாகக் கூறுகையில் இதை அவர் ஆவியில் கலங்கியதாக யோவான் குறிப்பிட்டுள்ளார். (யோவான் 13:21) இதைவிதமாக மனிதனும் ஒன்றில் “சரீரமும் ஆவியும்“ என்று (1 கொரி. 5:5) அல்லது “சரீரமும் ஆத்துமாவும்“ (மத் 10:28) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். 
(W.Grudem, Systematic Theology An Introduction to Biblical Doctrine, pp 473-477)
(23) R.Gundry, The Use of the Testament in St. Mathew’s Gospel, p 197
(24) L. Morris, The Gospel According to Mathew: The Pillar New Testament Commentary, p 262
(25) யோவான் இதைப்பற்றி எழுதும்போது  அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.“ என்று குறிப்பிட்டுள்ளார். 
(26) Anonymous, Reasoning from the Scriptures, p 383
(27) L. Harris, ed, Theological Word Book of the Old Testament Vol. 2, p 1056
(28) ‘Today he may be high in honour, but tomorrow there will be no trace of him, because he will have returned to the dust and all his schemes come to nothing’ (1 Maccabess 2:63)
(29) W.A. VanGemeren, Psalms, Expositor’s Bible Commentary Val 5, p 865
(30) Anonymous, Reasoning from the Scriptures, p 169
(31) M.A. Eaton, Ecclesiastes : Tyndale Old Testament Commentaries, p 126 
(32) R.Murphy & E.Huwiler, Proverbs, Ecclesiastes Songs of Songs : New International Biblical Commentary p. 208
(33) வேதாகம உபதேசங்கள் புதிய ஏற்பாட்டிலேயே முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் பகுதியளவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் முழுமையான விளக்கங்களுடன் உள்ளன. எனவே பழைய ஏற்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். புதிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே பழைய ஏற் பாட்டை வியாக்கியானம் செய்வதற்கான அடிப்படை விதிமுறையாகும் இதிலிருந்து பழைய ஏற்பாடு தவறானது என்று நாம் கருதலாகாது. தேவன் தம்மைப் பற்றி மக்களுக்கு வெளிப்படுத்தும்போது ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்தாமல் பகுதி பகுதியாகவே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் ஆரம்பமான தேவனது வெளிப்படுத்தல் புதிய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமான வெளிப்படுத்தலிலேயே நிறைவு பெற்றது. எனவே, முழு வேதாகமத்தையும் அடிப்படையாக்க் கொண்டே ஒரு உபதேசம் உருவாக்கப்பட வேண்டும் வேதாகமத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலை மட்டும் அடிப்படையாக்க் கொண்டு ஒரு உபதேசத்தை உருவாக்குவது தவறாகும். தேவன் படிப்படையாகவே தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதே எபிரேயர் 1:1-2 அறியத் தருகிறது. “1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்“ என்னும் வசனத்தில் பங்குபங்காகவும்“ என்பது மூலமொழியின்படி “பகுதி பகுதியாக“ அல்லது “கொஞ்சமாக கொஞ்சமாக என்றும் வகைவகையாக என்பது வித்தியாசமான முறைகளில் என்றும் பொருள்படும். 

Sunday 12 June 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 4 (இறுதிப்பகுதி)


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்
சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்
சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 3 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்

உ) புனையுருவணி (Apostrophe)
இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து அதனோடு பேசுவதற்காக உபயோகிக்கப்படும் உருவகம் “புனையருவணி (Apostrophe) என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தான் எழுதுவதற்கு எவராவது மறுப்பு தெரிவித்தால் அதற்கும் பதிலளிப்பதற்காக அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வுருவகத்தை 1 கொரிந்தியர் 15:36-37 உபயோகித்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.  பவுல் இவ்வசனங்களில்  கற்பனையில் ஒரு எதிரியை உருவாக்கி அவனோடு பேசுகிறார் (15)

சங்கீதங்களில் உயிரற்ற சடப்பொருளோடு பேசுவதற்கும் இவ்வுருவகம் உபயோகிக்கப்பட்டுள்ளது. இச்சந்தரப்பங்களில் உயிரற்ற் பொருட்கள் ஒரு நபராக உவமிக்கப்பட்டு, சங்கீதக்காரர்கள் ஒரு நபரோடு பேசுவது போல் பொருட்களுடன் பேசுகிறார்கள் (16) உதாரணத்திற்கு சங்கீதம் 68.16 இல் “உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே ஏன் துள்ளுகிறீர்கள்? என்று சங்கீதக்காரன் கேட்கிறான். சங்கீதம் 114.5-7 சங்கீதக்காரன் கடலுடனும் நதியுடனும் பூமியுடனும் பேசுகிறான். (17) இதேவிதமாக எரேமியா பட்டயத்தடனும் (எரே. 47:6) (18) பேசியுள்ளார். எனவே, இத்தகைய உருவக விபரணங்களை சொல்லர்த்தமாக எடுத்து ஆசிரியர்கள் பைத்தியக்காரத்தனமாக கற்பனைக் கதாபாத்திரங்களடனும் உயிரற்ற பொருட்களுடனும் பேசியுள்ளார்கள் என்று நாம் கருதலாகாது. இது அக்கால இலக்கியங்களில் உபயோகிக்கப்படும் உருவக விவரணத்தின்படியான பேச்சாகவே உள்ளது என்பதை நாம் கருத்திற் கொண்டு இத்தகைய வேதவசனங்களை புரிந்து கொள்ள வேண்டும். 

(ஊ) வஞ்சிப்புகழ்ச்சி (Irony)
உருவக விபரணங்களில் ஒருவனைப் புகழும் வார்த்தைகளில் அவனை இகழ்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “வஞ்சிப் புகழ்ச்சியணி (Irony) என்று அழைக்கப்படுகின்றது. இதனைப் பேச்சுவழக்கில் வார்த்தைகள் உசசரிக்கப்படும் முறையைக் கொண்டு இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். உதாரணத்திற்கு பொய் பேசும் ஒருவனைப் பார்த்து, “இவன் அரிச்சந்திரனுடைய பரம்பரையில் வந்தவன்“ எனறு கூறும்போது இவ்வார்த்தைகள் அவனைப் புகழ்வதாக இருந்தாலும், இவை அவனைப் பரிகசிக்கும் வார்த்தைகளாகவே உள்ளன. இதேவிதமாக வேதாகமத்திலும் புகழும் வார்த்தைகளில் இகழும் கூற்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு தாவீது நடனமாடியதைப் பரிகசிக்கும் அவனுடைய மனைவி, “இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார்“ (2 சாமு 6:20) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணி யாகவே உள்ளது(19) இதேவிதமாக 1 ராஜாக்கள் 18:27 இல் எலியா பாகால் தெய்வத்தை எள்ளிநகையாடினான். (20) மேலும், தங்களை ஞானிகளாகக் கருதி யோபுவுக்கு ஆறுதல் அளிப்பதற்காக வந்தவர்களின் வார்த்தைகள் எவ்வித ஆறுதலையும் தராதமையால் யோபு அவர்களிடம் “ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.“ (யோபு 12:2) என்று கூறியது வஞ்சிப்புகழ்ச்சியணியாகவே உள்ளது. உண்மையில், உருவகவிவரணத்தை இனங்காணாவிட்டால் இகழப்படுபவர் புகழ்பாடுவதாகத் தவறான எண்ணமுடையவர்களாகவே நாம் இருப்போம். 


(எ) மனுவுருவகவணி(Anthroponmorphism) 
வேதாகமத்தில் தேவனையும் அவருடைய தன்மை மற்றும் செயல்களையும் மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவருக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். எபிரேய மொழிவழக்கில் உள்ள இத்தகைய உருவக விபரணம் மனுவுருவகவணி (Anthroponmorphism) என்று அழைக்கப்படுகிறது. கண்களால் காணமுடியாத ஆவியான தேவனை மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக அவரை இவ்வாறு வர்ணிப்பது எபிரேய மொழிமரபாகும். வேதாகமத்தில் தேவன் மனுவுருவக மொழியில் வர்ணிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் தேவனை அறிந்து கொள்வதற்கு  நமக்கு உதவுகின்றன. உதாரணத்திற்கு “அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன. (2 நாளா. 16:9) என்னும் விபரணம் தேவனுக்குப் பல கண்கள் இருப்பதாகவும், அவை மட்டும் தனியாக பூமியெங்கும் செல்வதாகவும் கூறவில்லை. மாறாக அவர் பூமியில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் அவதானிப்பவராக இருக்கிறார் என்பதையே அறியத் தருகின்றன. இதேவிதமாக தேவனையும் அவருடைய செயல்களையும் நாம் இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக அவருக்கு முகம் (சங். 10:11, எரே 16:17, 2 நாளா 7:16), காதுகள் (சங். 10:17, தானி. 9:18) நாசி (சங். 18:15, யாத். 15:8) வாய் (ஏசா 34:16, மீகா 4:4) கரங்கள் (உபா 11:2, யாத் 33:23, ஏசா. 50:2), முதுகு (ஏசா. 38:17, எரே 18:17), இதயம் ஆத்துமாவும் (ஆதி. 6:6, 2 நாளா. 7:16) பாதங்கள் (யாத் 24:10, ஏசா 60:13) இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விவரணங்களை வியாக்கியானம் செய்து தேவனுக்கு மானிட உருவமும் சரீரமும் நாம் கருதலாகாது. 

(ஏ)  மிருகவுருவகவணி (Zoomorphism)
வேதாகமத்தில் தேவனை வர்ணிக்கும் இன்னுமொரு உருவகமும் உள்ளது. இது “மிருகவுருவகவணி“ (Zoomorphism) என்று அழைக்க்ப்படுகிறது. தேவனுடைய தன்மையை அல்லது அவர் மனிதர்களோடு நடந்துகொள்கின்ற முறையை விளக்குவதற்காக மிருகங்கள் அல்லது பறவைகளின் தன்மை அல்லது அவயவம் அவருக்கு இருப்பதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து தேவன் சிறகுகளுடனும் செட்டைகளுடனும் இருப்பதாக கருதலாகாது. இவ்வசனத்தில் தேவன் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிக்கிறார். என்பதை விளக்குவதற்காக தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகளைத் தன்னுடைய செட்டைகளில் மறைத்து வைத்து அவற்றைப் பாதுகாக்கும் முறை உதாரணமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

சங்கீதங்களை சரியான விதத்தில் விளங்கிக் கொள்வதற்கு அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள உருவக விபரணங்களை சரியான விதத்தில் இனங்கண்டு, அவற்றின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, அவை இடம்பெறும் வேத வசனங்களின் அர்த்தத்தைப் பிழையான விதத்தில் வியாக்கியானம் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 



FootNote and References
(14) T.N. Sterrett, How to Understand Your Bible, p 90
(15)  1 கொரிந்தியர் 15:35-36 இல் “ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய  உயிர்க்கமாட்டாதே“ என்று தர்க்கத்தை பவுல் ஆரம்பித்துள்ளார்
(16) R.B. Zuck, Basic Bible Interpretation p. 152
(17) சங்கீதம் 114:5-7 இல் கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப் போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறத ற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
(18) எரேமியா 47:6 இல் “ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு“ என்று எரேமியா பட்டயத்துடன் பேசுகிறார். 
(19) வேதாகமகாலத்து மக்களின் ஆடைகளைப் பற்றிய அறிவற்ற நிலையில், சில கிறிஸ்தவர்கள் தாவீது நிர்வாணமாக நடனமாடியதாகக் கருதுகின்றனர். ஆனால் இங்கு உள்ளாடைகளை அல்ல, மேல் வஸ்திரத்தைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. 
1 ராஜாக்கள் 18:27 இல் “மத்தியானவேளையிலே எலியா அவாகளைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும்” என்றான்.

Monday 6 June 2011

காயீனின் மனைவி


நூல் தலைப்பு – ஆதியாகமம்
நூலாசிரியர் – சகோ. வசந்தகுமார்
வெளியீடு – இலங்கை வேதாகமக் கல்லூரி

(ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பர்களினதும் வேதத்தை எதிர்ப்பவர்களினதும் கேள்விகளில் ஒன்றுதான் காயீனின் மனைவி பற்றியது. ஆபேலின் மரணத்திற்கு பின் சேத் பிறந்தாக வேதாகமத்தில் குறிப்பு உண்டு. அப்படியாயின் காயீனின்  மனைவி எங்கிருந்து வந்தாள். இதற்கு பல்வேறு இறையியல் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது)

ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பவர்களின் உள்ளத்தில் “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்?“ எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களிலும் ஆதாம் ஏவாள் எனுமிருவர் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் இருவருமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட முதல் மனிதர்கள். (ஆதி. 1:26-27, 21-23) இவர்களுக்கு முன்பு உலகில் மனிதர் எவரும் இருந்ததில்லை. ஆதியாகமம் நான்காம் அதிகாரத்தில் இவர்களுக்கு காயீன் ஆபேல் எனும் இரு பிள்ளைகள் பிறக்கின்றனர். (ஆதி 4:1-2) இதன்படி அச்சமயம் ஆதாம், ஏவாள், காயீன் எனும் மூவர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் 4ம் அதிகாரம் 17ம் வசனத்தில் “காயீன் தன் மனைவியை அறிந்தான்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காயீனின் மனைவி சடுதியாக எங்கிருந்து வந்தாள் என்ற கேள்வி எழுவது இயற்கையே. எனினும் இவ்வதிகாரத்தின் 14ம் வசனத்தில் “என்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் என்னைக் கொன்று போடுவான்“ என காயீன் கூறுவதிலிருந்து, அச்சமயம் வேறு மனிதர்களும் உலகில் இருந்துள்ளனர் என்பதை அறிந்து கொண்டால் காயீனின் மனைவி அவர்களில் ஒருத்தி என்பது தெளிவாகும். 

ஆதியாகமம் நான்காம் அதிகாரம் வரை ஆதாம். ஏவாள், காயீன், ஆபேல் என்போரைப் பற்றி எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் ஆபேல் என்போரைப் பற்றி எழுதியுள்ள மோசே 5ம் அதிகாரத்தில் முதல் மனிதனான ஆதாமின் வம்சவரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஆதி 5:1-4) 930 வருடங்கள் வாழ்ந்த ஆதாம் பல ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றதாக இவ்வம்சவரலாறு அட்டவணை அறியத் தருகிறது. (ஆதி. 5:4-5) ஆதாமுக்கு பல ஆண்பிள்ளைகளும் பல பெண்பிள்ளைகளும இருந்தபோதிலும் வேதசரிததிரத்திற்கு அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவசியப்படாததினாலேயே அவர்களைப் பற்றிய விடயங்கள் வேதாகமத்தில் குறி்பபிடப்படவில்லை. இவர்களே ஆதியாகமம் 4:14 இல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவர்களாவர். அக்காலத்தில் முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் என்போரும் அவர்களுடைய பிள்ளைகள் மட்டுமே உலகில் இருந்தமையால் அவர்கள் தங்களுக்குள்ளாக மணம் முடிக்க வேண்டியிருந்தது. தேவ அறிவுறுத்தலின்படி ஆதாமின் வம்சம் விருத்தியடைவதற்கு (ஆதி. 1:28) ஆதாமின் மகனும் மகளும் மணமுடிப்பதைவிட அக்காலத்தில் வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை(01) உண்மையில் அக்காலத்தில் திருமணங்கள் அனைத்தும் சகோதர சகோதரித் திருமணமாகவே இருந்தது (02) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த ஆபிரகாமின் மனைவி கூட அவனது ஒன்றுவிட்ட சகோதரியாகவே இருந்தாள். (ஆதி 20:12) “மோசேயின் காலத்திலும் எகிப்திய அரசரகள் கூட தங்களது சகோதரிகளையே மணம் முடித்தனர்.(01)

ஆதாமையும் ஏவாளையும் தனிப்பட்ட நபர்களாக கருதாத நவீன இறையியலாளர்கள், காயீனின் மனைவி அவனுடைய சொந்த சகோதரி எனும் உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. “ஆதாம்“ எனும் எபிரேய வார்த்தையி்ன் அர்த்தம் “மனிதன்“ என்பதால் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டிருககும் “ஆதாம்“ என்பது ஒரு குறிப்பிட்ட மனிதனின் பெயரை அல்ல. மாறாக அது மனுகுலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான பதம் (03) என்பதே அவர்களது விளக்கமாகும். இதன்படி ஆரம்பத்தில் ஆதாம் எனும் ஒரு மனிதன் அல்ல. பல மனிதர்கள் இருந்துள்ளனர். எனவே காயீனின் மனைவி அவனுடைய சொந்தச் சகோதரியாக இருக்க வேண்டியதில்லை எனக் கூறலாம். ஆனால் புதிய ஏற்பாடு ஆதாமை தனிப்பட்ட மனிதனாகவே குறிப்பிட்டுள்ளமையினால் இவ்விடயத்தில் நவீன இறையிலாளர்களின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ரோமர் 5ம் அதிகாரத்தில் பல தடவைகள் பவுல் ஆதாமை “ஒருவன்“ எனக் குறிப்பிட்டுள்ளார். (ரோமர் 5:12-21) இவ்வதிகாரத்தில் 15ம், 17ம் வசனங்களில் ஒரு மனிதனாகிய ஆதாமும் இன்னுமொரு மனிதனாகிய கிறிஸ்துவும் ஒப்பிடப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளார்கள். ஆதாம் தனிப்பட்ட ஒரு மனிதன் அல்ல என்றால் இயேசுகிறிஸ்துவும் தனிப்பட்ட மனிதன் அல்ல எனறே கூற வேண்டும். ஏனென்றால் ஆதாம் எனும் ஒரு மனிதனுடைய பாவம் காரணமாக மனுக்குலததுக்கு ஏற்பட்ட கேட்டிலிருந்து இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதர் மூலம் மனுக்குலத்துக்கு கிட்டும மீட்பைப் பற்றியே ரோமர் 5:12-21 இல் விளக்கப்பட்டுள்ளது. எனவே இயேசு கிறிஸ்து தனிப்பட்ட நபர் என்பதினால் அவரைப் போலவே ஒரு மனிதன் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதாமும் ஒரு தனிப்பட்ட ஒரு மனிதன். உண்மையில் “ஆதாம் ஒரு மனுக்குலம் மட்டுமல்ல. மாறாக தனிப்பட்ட ஒரு மனிதன் என்பதே பவுலின் நம்பிக்கையாகவும் ரோமர் 5:12-21 இலுள்ள தர்க்கத்திற்கான ஆதாரமாயுமுள்ளது. (04) 1 கொரிந்தியர் 15:21,22, 45 இலும் இதேவிதமாக ஆதாமும் இயேசுக்கிறிஸ்துவைப் போல தனிப்பட்ட நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

ஆதாமிற்கு முன்பும் மனிதர்கள் உலகில் இருந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர் (05) இத்தகைய கருத்துடைய வேதவியாக்கியானிகள் காயீனின் மனைவி ஆதாமுக்கு முன்பிருந்த மனிதர்களுடைய வம்சத்தில வந்த ஒரு பெண் என்றே கருதுகின்றனர். ஆனால் வேதாகமம் ஆதாமைத் தனிப்பட்ட ஒரு மனிதனாகவும் (ரோமர் 5:12-21) உலகின் முதல் மனிதனாகவுமே அறிமுக்ப்படுத்துகின்றது. ஆதியாகமம் 1:1 இலுள்ள ஆதியிலே எனும் வார்த்தை மூலமொழியில் “வானங்களும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட காலத்தையே குறிக்கிறது (06) அதற்கு முன்பு தேவனைத் தவிர வேறெதும் இருக்கவில்லை. ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் ஆறு நாட்களும் சிருஷ்டித்தவைகள் நிரற்படுத்தப்பட்டள்ளன. ஆறாவது நாளே மனிதன் சிருஷ்்டிக்கப்பட்டுள்ளான். ஆதி. 1:26-31) அதற்கு முன் மனிதர் எவரும் இருக்கவில்லை. ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்படட மனிதனுடைய பெயரே ஆதாம் உலக மாந்தர் அனைவரும் அந்த ஆதாமின் வம்சத்தினர் ஆதாமே உலகின் முதலாவது மனிதன் என்பதை 1 கொரிந்தியர் 15:45, 47 அறியத் தருகிறது. 

உலக மாந்தர் அனைவரும் ஆதாம் எனும் ஒரு மனிதனில் இருந்து வந்தவர்கள் எனும் உண்மையை அப். 17:26 அறியத் தருகிறது. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; எனும் உண்மையை இவ்வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலமொழியின் படி இவ்வசனம் ஆங்கில வேதாகமத்தில் சரியான முறையில் “ஒரு மனிதனில் இருந்து மானிட ஜாதிகள் அனைத்தும் உருவாகி (07) என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது சகல மனிதர்களும் ஒரு மனிதனாகிய ஆதாமிலிருந்து வந்தவர்கள்.(08 ) என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். அந்த ஒரு ஆதாமிலிருந்து வந்தவர்கள் நோவாவின் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவரும் உலகலாளவிய ஜலப்பிரளயத்தில் மரித்தனர். (ஆதி. 6:13, 7:21) அதன் பின்னர் நோவாவின் பிள்ளைகள் மூலமே மனிதர்கள் பூமியெங்கும் பரவினார்கள். (ஆதி. 9:18-19) எனவே, ஆரம்பத்தில் ஆதாமை் தவிர வேறு மனிதர்கள் இருந்தார்கள் என்பதற்கு வேறு எவ்வித ஆதாரமும் இல்லை. எல்லோரும் ஆதாமிலிருந்து வந்துள்ளமையால் ஆதாமின் ஆண்பிள்ளைகள், மணமுடிப்பதற்கு நம் சகோதரிகளைத் தவிர வேறு பெண்கள் உலகில் இருக்கவில்லை. 

மோசேயின் காலம் வரை சகோதரிகளைத் திருமணமுடிப்பது சமுதாயத்தால் அங்கீகரிககப்பட்ட முறையாகவே இருந்தது. ஆனால் சீனாய் மலையில் தேவன் மோசேயின் மூலமாகவே கொடுத்த நியாயப்பிரமாணம் சகோதர சகோதரி திருமணத்தை முற்றாகத் தடை செய்துள்ளது. ஒருவன் தன் சொந்த சகோதரியை மட்டுமல்ல ஒன்றுவிட்ட சகோதரியை மணம் முடிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. லேவியராகமம் 18:9 இல் “உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது“ எனக் கட்டளையிடப்பட்டுள்ளது. லேவியராகமம் 18 அம் அதிகாரத்தில் “நிர்வாணமாக்குதல்“ எனும் பதமானது தாம்பத்திய உறவுக்கான சொல்லாகவே உள்ளது.(09) லேவியராகமம் 18 :8-9 இன் கட்டளைகள் உபாகமம் 27:20,22 இல் மறுபடியுமாகக் கொடுக்கப்பட்ட போது நிர்வாணமாக்குதல் என்பதற்குப் பதிலாக “சயனித்தல்“ எனும் வாரத்தை உபயோகிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது. ஆங்கில வேதாகமத்தில் இப்பதம் “பாலுறவு“ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் லேவியராகமம் 18:9 இல் “வீட்டில் பிறந்தவள் ஒருவனது சொந்த தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்தவவளாவாள். புறத்தில் பிறந்தவள் தகப்பன் அல்லது தாய் தனது திருமண உறவுக்கு வெளியில் பெற்ற பிள்ளையாகும் (10) இத்தகைய சகோதரர்களுக்கிடையிலான திருமணத்தை தடைசெய்துள்ள நியாணப்பிரமாணம் “உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி. உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி“(லேவி. 18:11) தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் (உபா 27:22) எனக் கூறுகிறது. 

ஒருவன் தன் சகோதரியை மணமுடிப்பபதைத் தேவன் தடை செய்திருப்பதனால் அவர் சிருஷ்டித்த முதல் மனிதனாகிய ஆதாமின் பிள்ளைகள் தம் சகோதரிகளை மணமுடிக்கத் தேவன் எவ்வாறு அனுமதிக்கலாம் என கேட்கலாம். உண்மையில் “மனித இனம் விருததியடைவதற்கு சகோதரர்களுகு்கிடையிலான திருமணம் அவசியமாயிருந்த காலம் வரை மட்டுமே தேவன் அத்தகைய திருமணங்களை அனுமதித்திருந்தார்.(11) அதே சமயம் ஆரம்பகால மனிதர்களின் “ஜீன்கள்“ (அதாவது மானிட பரம்பரை அலகு) எவ்விதப் பாதிப்புக்கும் உட்படாதவையாக இருந்தமையால் இரத்த உறவு முறைகளில் உ்ளளவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல மானிட “ஜீன்கள்“ பாதிக்கப்படத் தொடங்கியமையால் உறவினர்களுக்கிடையிலான பிறக்கும் பிள்ளைகளும் பாதிப்படையத் தொடங்கின.  (02) இன்றைய மருத்துவ ஆராய்ச்சிகள் “உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் ஒன்றில் அங்கவீனர்களாக இல்லையென்றால் வியாதியுடையவர்களாக இல்லையென்றால் புத்தி பேதலித்தவர்களாக இருப்பார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளர். (12) “இன்று இரத்த உறவு முறையில் திருமண முடிப்பவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளின் “ஜீன்கள் (மானிடப் பரம்பரை அலகு) பாதிக்க்பபட்டவர்களாகவும், தீங்கு விளைவிப்பவையாகவும் உள்ளன. (13)எனவே உறவினர்களுக்கிடையிலான திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் பாதிக்கத் தொடங்கும்வரை இத்தகைய திருமணங்களை அனுமதித்திருந்த தேவன் அதன்பின்னர் மனித இனத்தின் நன்மை கருதி, உறவினர்களை் திருமணம் முடிப்பதைத் தடை செய்துள்ளார். 



References 
1. Hard Saying Old Testament by Walter C. Kaiser
2. The Genesis Record  A Scientific & Devotional Commentary by Henry M. Morris
3. Man is Revolt by Emil Brunner
4. Christian Theology by Millard J. Erickson 
5. Understanding the Bible by John Stott
6. in the Beginning : Genesis 1-3 by E.J. Young
7. New International Version of the English Bible
8. The interpretation of the Act of the Apostles by R.C.H. Len ski
9. Leviticus in the Expositors Bible Commentaries by Laird Harris 
10. Leviticus in the Tyndale OT Commentaries by R.K. Harrison   
11. Genesis Vol1. in the Bible Student Commentaries by G,CH Aalders
12. The Bible has the Answers by Henry M. Morris
13. Genesis : An Expositional Commentary by James M. Boices