- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 29 November 2010

சிருஷ்டிப்பு இடைவெளி

நூற்தலைப்பு ஆதியாகமம்

ஆசிரியர் – எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் – இலங்கை)


வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி



ஆதியாகம புத்தகத்தின் படைப்பு குறித்து பல விதமான சர்ச்சைகள் கிறிஸ்தவ உலகில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சிருஷ்டிப்பு இடைவெளி பற்றியது. இக்கட்டுரை பிரபலமாக இருக்கும் கருத்துக்களை (நேர் மற்றும் எதிர் கருத்துக்களை) வேதாகம சத்தியத்தில் ஆராய்கின்றது. 



பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்கள் பற்றிய இன்றைய கிறிஸ்தவ உலகில் இருக்கும் ஒரு சர்ச்சை இவ்விரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றியதாகும். சிருஷ்டிப்பின் கால இடைவெளியாகக் கருதப்படும் இவ்விரு வசனங்களுக்கிடையிலான கால இடைவெளி பற்றிய கருத்து, ஸ்கொட்லாந்துநாட்டைச் சேர்ந்த தோமஸ் சாள்மர் என்பவரினால் 1814 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ’இக்கருத்து இறையியல் காரணங்களுக்காக அல்ல. மாறாக அக்காலத்தைய புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புக்களின் நிமித்தம் உருவாக்கப்பட்ட ஒரு விளக்கமாகும்” (01) நாம் வாழும் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது எனும் அக்காலத்தைய விஞ்ஞான கண்டுபிடிப்புடன் ஒத்துப்போக வைப்பதற்காக, அதாவது பூமி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழையானதுயானது என்றே வேதாகமும் கூறுகின்றது என்பதைக் காண்பிப்பதற்காக தோமஸ் சாள்மர் ஆதியாகமம் முதல் அதிகாரத்தின் முதலிரு வசனங்களுக்குமிடையே நீண்டகால இடைவெளி இருக்கின்றது என்னும் புதிய விளக்கத்தை உருவாக்கி, அக்காலத்திலேயே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்ற மாற்றங்கள் பூமியில் ஏற்பட்டன என கூறினார். இவரது கருத்து 1876 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெம்பர் என்பார் எழுதிய ”புவியின் ஆரம்பகால யுகங்கள்” என்னும் தலைப்பிலான ஆங்கில நூலில் விரிவுபடுத்தப்பட்டன. அதன் பின்னர் 1917 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த ஸ்கோஃபீல்ட் வேதாகமக் குறிப்புகளில் இக்கருத்து சேர்க்கப்பட்டமையால், இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான ஒரு கருத்தாக மாறிவிட்டது.


நிறுத்தப்பட்ட வாகனம்

மிகுந்த அலுவல் காரணமாக மிக அவசரமாய் காரில் ஏறினார் ஒரு விசுவாசி. அவர் சேர வேண்டிய இடம் வந்த்து. காரை நிறுத்துவதற்கு இடம் தேடினார். ஆனால் இடமோ கிடைக்கவில்லை. எனவே No Parking என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் என்னது காரை நிறுத்தி, காரிலுள்ள Wiper இல் ஒரு காகிதத்தை செருகி வைத்துவிட்டு மிக வேகமாக கடந்து சென்றார்.
அந்தக் காகிதத்தில் நான் இந்தக் குடியிருப்பை பத்துமுறை சுற்றினேன். ஆனாலும் என் காரை நிறுத்துவதற்குப் போதிய இடம் கிடைக்கவில்லை. நான் ஒரு அவசர வேலையில் ஈடுபட்டிருக்கின்றேன். “எங்கள் குற்றங்களை மன்னியும்“ என்று எழுதப்பட்டிருந்தது.

திரும்பி வந்த விசுவாசி, காரில் தான் சொருகி வைத்திருந்த காகிதத்தின் கீழே ஏழுதப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து விரைந்து வந்தார்.

அதில் போலீஸ் அதிகாரி இப்படியாக பதில் எழுதி வைத்திருந்தார்..
“இந்தக் குடியிருப்பை பத்து வருடங்களாக சுற்றி வருகிறேன். இந்த இடத்தில் உங்களுடைய காரை நிறுத்தியதற்கு நான் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் என் வேலை பறிபோகும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாதிரும்”


தெரிந்தும் தவறிழைப்பது குற்றம்!

அந்தக் குற்றத்தை நியாயப்படுத்த முயல்வது அதைவிட குற்றம்!

தண்டனையில்லாமல் அதிலிருந்து தப்பிக்க வழிதேடுவது மகா குற்றம்!


நன்றி : சத்தியவசனம் July - August 2010

Tuesday 16 November 2010

சிருஷ்டிப்பின் நாட்கள் (அதி 1)

நூற்தலைப்பு : ஆதியாகமம்
ஆசிரியர் : சகோ. எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை)
வெளியீடு : இலங்கை வேதாகம கல்லூரி
 
( 6 நாட்களில் சிருஷ்டிப்பு நிகழ்ந்ததா? அல்லது அது நீண்டகாலப்பகுதியில் நடைபெற்ற ஒன்றா? தேவனின் படைப்பு பரிணாமத்தை ஆதரிக்கின்றதா? இக்கட்டுரையில் ஆசிரியர் மூலமொழிப்பதமான யொம் குறிப்பது நீண்ட காலப்குதியையா அல்லது 24 மணித்தியாலங்கள் கொண்ட நாளையா என்பதனை ஆராய்ந்துள்ளார்)
 
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிருஷ்டிப்பின் நாட்கள் சொல்லர்த்தமான 24 மணித்தியால நாட்களா இல்லையென்றால் அவை நீண்டகாலப்பகுதியைக் குறிக்கின்றனவா என்பது இன்று பெரும் சர்ச்சைக்குரிய விடயமாயுள்ளது. சிருஷ்டிப்பின் நாட்கள் 24 மணித்தியாலங்கள் கொண்ட நாட்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆதியாகம சிருஷ்டிப்பு விபரணத்தில் நாட்கள் “உருவக அல்லது அடையாள மொழியாகவே உள்ளது“ (01) என கூறுகின்றனர். அதேசமயம் அவற்றைச் சொல்லர்த்தமான நாட்களாக ஏற்றுக் கொள்பவர்களில் சிலர் அவற்றை சிருஷ்டிப்பு நாட்களாக அல்ல மாறாக சிருஷ்டிப்பு வெளிப்படுத்தப்பட்ட நாட்களாக கருதுகின்றனர். அதாவது தேவன் உலகைப் படைத்த 6 நாட்களில் ஆதியாகமத்தை எழுதியவருக்கு வெளிப்படுத்தியுள்ளார். அந்நாட்களே ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்கள்(2) என்பதே இவர்களது தர்க்கமாகும். எனினும் 6 நிமிடங்களுக்குள் வாசித்துவிடக்கூடிய ஆதியாகமத்தின் முதல் அதிகார விடயங்களை வெளிப்படுத்த தேவனுக்கு 6 நாட்கள் என்பது அர்த்தமற்ற விளக்கமாகும். பூமியினதும் உயிரினங்களினதும் இன்றைய நிலை கோடிக்கணக்கான ஆண்டுகால புவியியல் மற்றும் உயிரியல் மாற்றத்தினால் ஏற்பட்டது எனும் பரிமாணமக் கோட்பாட்டை ஆதரிக்கும் இறையியலாளர்கள் சிருஷ்டிப்பின் நாட்களை இந்த மாற்றத்தின் படிமுறைகளைக் குறிக்கும் காலப்பகுதிகளாகக் கருதுகின்றனர். “சிருஷ்டிப்பின் நாட்கள் ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கான ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியின் ஆரம்பத்தைக் குறிக்கின்றன. (03) என கூறும் இவர்கள் “ஒவ்வொரு நாளிலும் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளவைகள் உருவாகத் தொடங்கி இன்றிருக்கும் நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்தன(04). அக்கோடிக்கணக்கான ஆண்டுகளே ஆதியாகமத்தில் நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன(05) என விளக்குகின்றனர். எனினும் இவ்விளக்கங்கள் பரிணாமக் கோட்பாட்டை ஆதியாகம விவரணத்திற்குள் விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட கருத்துக்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

Thursday 4 November 2010

நட்சத்திர மீன்!


images ஒரு மாலை நேரத்தில் தாத்தாவும், பேத்தியும் கடற்கரையோரம் நடந்து சென்றார்கள். சற்று தூரத்தில் ஒரு இளைஞன் அலையோரத்தில் நின்று, பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருந்தான். அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தாத்தாவுக்கும் பேத்திக்கும் புரியவில்லை. எனவே, நெருங்கிச் சென்று பார்த்தார்கள். அந்த இளைஞன் கரையில் ஒதுங்கிய நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அண்ணே? என்று இளைஞனிடம் கேட்டாள் சிறுமி.
பாப்பா, அலையடிக்கும்போது நிறைய நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கித் தத்தளிக்கின்றன. இப்படியே விட்டால் இவை செத்துப் போய்விடும். நாளடைவில் இந்த இனம் அழிந்து போய்விடும். அதனால்தான் ஒவ்வொன்றாக எடுத்து மீண்டும் கடலில் வீசிக் கொண்டிருக்கிறேன்.
தாத்தா கேட்டார்: ஆனால் தம்பி, இந்த ஒரு கடற்கரைதான் இருக்கிறதா? உலகம் முழுவதும் நிறைய கடற்கரைகள் இருக்கிறதே? அங்கெல்லாம் இதுபோன்ற நட்சத்திர மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருக்குமே? இப்படி ஒன்றிரண்டு நட்சத்திர மீன்களைக் காப்பாற்றுவதால் பெரிதாக என்ன பயன் கிடைத்துவிடும்?
இளைஞன் மற்றொரு நட்சத்திர மீனை எடுத்து கடலில் வீசியெறிந்தபடியே சொன்னான். நீங்கள் சொல்வது உண்மைதான் தாத்தா, எத்தனையோ நட்சத்திர மீன்கள் கரையொதுங்கலாம், செத்துப்போகலாம். ஆனால், இப்போது நான் கடலுக்குள் வீசியெறிந்த ஒரு மீன் பிழைத்துக் கொள்ளும் அல்லவா? அதுதான் மிகவும் முக்கியம். என்னால் முடிந்த அளவு நட்சத்திர மீன்களைக் காப்பாற்றுவதுதான் எனக்குத் திருப்தியளிக்கிறது என்ற இளைஞன் அடுத்த நட்சத்திர மீனை எடுத்து கடலில் வீசியெறிந்தபடியே சொன்னான்.
தாத்தா, பேத்தியை நோக்கிச் சொன்னார்: "அவர் சொல்வது சரிதான் பாப்பா, இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பயன்தரும் செயல்களை நிறையச் செய்ய முடியும். தேவனுடைய சத்தியத்தை மற்றவர்களுக்கு சொல்வதின் மூலம் நம்மால் முடிந்த அளவு, நம் சக்திக்கு உட்பட்ட நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு செய்கிறோம். அவர்களுடைய இக்கட்டான நிலைமையில் நாம் கூறுகிற சத்தியத்தின் மூலம் அந்த நபரோ அல்லது ஒரு குடும்பமோ இரட்சிக்கப்படலாம். இரட்சிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் சத்தியத்தை பறைசாற்றுவதின் மூலம் அநேகர் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட முடியும். இதற்கு காரணமாயிருந்த உங்களை தேவன் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார்.
சிறுவர்களே! மற்றவர்களுடைய தேவையில் தேவவழிநடத்துதலின்படி நீங்கள் உதவும்போது, அந்த காரியம் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். சிறு தேவையானாலும் உங்கால் முடிந்தவற்றை மற்றவருக்கு சந்தோஷமாக செய்யுங்கள். அவை உங்கள் வாழ்வில் பெரும் பலனை கொடுக்கும்.

Tuesday 2 November 2010

பரியாசம்

சில இளம் பெண்கள் நன்றாகக் குடித்துவிட்டு தங்கள் தோழி ஒருத்தியை அழைத்துச்செல்ல அவள் இல்லத்திற்கு ஒரு காரில் சென்றனர். இந்தப்பெண்ணின் தாய் தன் மகளுடன் கார் வரை வந்தார். அவர்கள் எல்லோருமே மிகவும் குடித்து போதையில் இருப்பதைக்கண்டு மிகவும் வருந்தினார்கள். ஆனால், மகளோ தன் தோழிகளுடன் காரில் செல்லவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். அப்போது பக்தியுள்ள அந்தத்தாய் தன் மகளைப் பார்த்து ""அன்பு மகளே தேவனோடுகூட செல், அவர் உன்னைப் பாதுகாப்பார்" என்றார். ஆனால் துன்மார்க்கம் நிறைந்த அந்த இளம் பெண்ணோ தாயையும், தேவனையும் பரியாசம் செய்து ""காரில் இடமே இல்லை, வேண்டுமானால் கடவுள் காரின் பின்பகுதியில் சாமான்கள் வைக்கும் டிக்கியில் அமர்ந்து கொண்டு வரட்டும்"" என்று கேலியாக பேசினாள். பின்பு அந்தக்காரை ஓட்டிக்கொண்டு அவளுடைய குடிகாரத்தோழிகள் வேகமாக சென்றுவிட்டனர். 


சில மணி நேரத்திற்குப்பிறகு செய்தி வந்தது. அந்தப் பெண்கள் சென்ற கார் கொடிய விபத்தில் சிக்கி நொறுங்கிபோய்விட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் மரித்துவிட்டனர். அந்த கார் என்ன வகையான கார் என்பதைக்கூட கண்டுக்கொள்ள முடியாதபடி முற்றிலும் சிதைந்துவிட்டது. ஆனால், ஆச்சரியபடத்தக்க வகையில் காரின் டிக்கிப் பகுதிமட்டும் எந்த சேதமும் இல்லாமல் நன்றாக இருந்தது! விபத்தை புலன் விசாரணை செய்த போலீசார் அப்பளமாக நொறுங்கிப்போன காரின் டிக்கிப்பகுதி மட்டும் எந்தவிதமான சேதமும் இன்றி இருந்ததைக் குறித்து மிகவும் வியப்புற்றனர். அது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த டிக்கியில் ஒரு கூடைக்குள் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் கூட உடையாமல் எந்த பாதிப்பும் இன்றி அப்படியே இருந்தன!வாலிபபிள்ளைகளே, நம்முடைய வார்த்தைகளில் நாம் கவனமாயிருக்கவேண்டும். இதைத்தான் வசனமும் சொல்கிறது

"மோசம் போகாதிருங்கள்; தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

வெற்றியின் இரகசியம்!

தாவீது கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்தான். தாவீது தேவன் பேரில் கொண்டிருந்த வைராக்கியமும் அர்ப்பணிப்பும், ராஜாவாக அவன் நடத்திய அரிய செயல்பாடுகளும் வேதத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது. அந்நாட்களில் இருந்த பெரும் பராக்கிரமசாலிகளை சவால்விட்டுப் போருக்கு அழைத்த ராட்சதனாகிய கோலியாத்தை தாவீது வீழ்த்தினான். அவன் அபிஷேகத்தில் நிறைந்திருந்ததினால் அவன் இசைக்கருவியை இசைத்தபோது , அசுத்த ஆவிகள் அலறி ஓடின. கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவனாக அவன் இருந்தான்.

இவையெல்லாம் தாவீதுக்கு எப்படி சாத்தியமாயிற்று? கர்த்தருடைய வார்த்தையில் அவன் பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு ராட்சதனோடு போராடுவது எப்படி என்று யாரும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அவன் எல்லோருக்கும் இளையவனாக அவன் குடும்பத்தில் இருந்தபடியால் அவனுடைய சகோதர்களே அவனை சரிவர மதிக்கவில்லை.ஆடு மேய்க்கும் சிறியவனாக அவன் வெளிகளில் இருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது. காலை முதல் மாலை வரை அவன் செய்ததெல்லாம் புல்வெளிகளில் அலைந்து திரிந்து தன் மந்தையின் ஆடுகளை மேய்த்து வந்ததுதான். எனினும் இப்படிப்பட்ட சுவாரசியம் அற்ற மேய்ப்பனின் பணியிலேயே தேவன் அவனுக்கு பல உன்னதமான அனுபவங்களைத் தந்தார். இதை அவனைச் சுற்றிலும் இருந்த எவரும் அறிந்துகொள்ளவில்லை.

தாவீது தன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். எனவே தன் எல்லாத் தேவைகளுக்கும் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தான். தாவீது கர்த்தரில் களிகூர்ந்து கொண்டிருந்தான். ஒரு முறை ஒரு சிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. கர்த்தர் அவனோடே இருந்து அதைக்கொன்றுபோட அவனுக்குப் பெலன் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் வனாந்தரத்தில் தனியே விட்டுவிடப்பட்டுள்ளோம் என்றும் குறைகூறித் திரிகின்றோம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் தேவன் நம்மை உருவாக்கி கூர்மைப்படுத்தி நம் திறமைகளை சிறப்பாக்கி அவர் பேரில் உள்ள நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார். நீங்கள் கடந்துசெல்லும் துன்பம் துயரம் நிறைந்த போராட்ட வாழ்க்கை மட்டும்தான் பிறர் கண்களுக்குத் தெரியும். ஆனால் கர்த்தர் உங்கள் வாழ்வில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் எப்படி அவர் உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் யாரும் தெரிந்துகொள்வதில்லை.

தாவீது சிங்கத்தைக் கிழித்துப்போட்டபோது கை தட்டி ஆரவாரம் செய்து அவனைப் புகழ அங்கே யாரும் இருக்கவில்லை. ஆனால் பின்பு தேவன் அவனுடைய அனுபவத்தை பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேலரைக் காக்கப் பயன்படுத்தினார். தாவீது கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் வீழ்த்திய போது, அனைவரும் அதிசயித்தனர்.பல சந்தர்ப்பங்களில் தேவன் நம் வாழ்க்கையில் ஆழமான பல காரியங்களை இரகசியமாக நிறைவேற்றுகிறார். தனிமையில் நீங்கள் சிந்தும் கண்ணீர், தனிப்பட்ட முறையில் வனாந்திர வாழ்வில் நீங்கள் அனுபவிக்கும் அற்புதங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட விடுதலைகள் இவை அனைத்தையும் கர்த்தர் பயன்படுத்தி உங்கள் முன்நிறுத்தி நீங்கள் ஏராளமானோருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை உயர்த்துவார். உங்கள் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் தேவனுடைய கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. இன்று வனாந்திர அனுபவத்தில் நீங்கள் இருப்பதை எண்ணி சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தரை விசுவாசியுங்கள். ஆண்டவரை நேசியுங்கள். தேவனில் களிகூருங்கள். உறுதியாய் இருங்கள்.

இருளில் ஒளி

ஒளி இருக்கும் இடத்திற்கு இருள் வருவதில்லை. இதைப்பற்றிய கதை ஒன்று உண்டு. இருட்டு ஒரு முறை ஆண்டவரிடம் சென்று புகார் செய்தது. ஆண்டவரே, இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வந்து வம்பு செய்து கொண்டேயிருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னைத் துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் நான் மிகவும் தொல்லைப்பட்டு விட்டேன். பொழுது விடிந்தால் அது என்னைக் கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது? என்னைத் துன்புறுத்துவதற்காக அது இரவு பகலாகச் சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்.ஆண்டவர் சூரியனை வரவழைத்துச் சொன்னார்:


"நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய்? எதுவானாலும் என்னிடம் சொல்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதையும் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே! எங்கே இருட்டு? அதை என் முன்னால் வரச் சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதைப் பார்த்து விடுகிறேன்.சரியென்று ஆண்டவர் இருட்டை அழைத்தார். ஆனால், இருட்டால் ஒளியிருக்கும் இடத்திற்கு வரமுடியவில்லை. எப்படி வரமுடியும்? ஒளியே இருட்டைத் தேடிச் சென்றாலும், இருட்டு மிக மிகத் தொலைவாக ஓடிச்சென்றது.


ஒளி என்பது உண்மை. நம்முடைய ஆண்டவரே ஒளியானவர். இந்த ஒளியானவரை தெய்வமாக கொண்டிருப்போரை எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அவர் நமக்கு சிலுவையில் ஜெயத்தை சுதந்தரித்திருக்கிறார்.

Monday 1 November 2010

கிறிஸ்தவ வாழ்வின் தன்மை


கலிபோர்னியாவிலுள்ள வேதாகமக் கலாசாலை ஒன்றில் “நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள்“ என்னும் வசனத்தை ஆராய்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். உப்பின் சகல தன்மைகளையும் ஆராய்ந்து அது எப்படி கிறிஸ்தவனுடைய வாழ்வுக்கு உவமானமாய் அமையும் என அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.

தீடிரென சீனநாட்டவரான ஒரு மாணவி “உப்பு தாகத்தை ஏற்படுத்தும் இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்“ என்று கூறினாள். “நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள்“ அப்படியானால் நாம் உலக மக்களுக்கு தாகத்தை ஏற்படுத்துபவர்களாகயிருக்க வேண்டும்“ என்றான். ஒரு மாணவன அவளைப் பரிகசிக்கும் நோக்குடன்.
அச்சீனப் பெண்ணோ உடனடியாக, “மக்களுக்கு கிறிஸ்துவின்மேல் தாகம் ஏற்படும் வண்ணம் நாம் உலகிற்கு உப்பாயிருக்க வேண்டும்“ என்றாள் உறுதியுடன். அதாவது கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையை நாம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் வாழவேண்டும்

இயேசுக்கிறிஸ்துவிற்கான சாட்சிகளாகவே கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் இருக்கின்றனர். (அப் 1:8) சகல மக்களுக்கும் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க வேண்டியது கிறிஸ்தவர்களாகிய நமது கடமையாக உள்ளது. (மத் 28:19) 

இதனால் எமது வாழ்க்கை மற்றவர்கள் இயேசுக்கிறிஸ்துவண்டை வருவதற்கு ஏதுவான முறையில் இருக்க வேண்டும். நம்மைப் பார்ப்பவர்கள் இயேசுக்கிறிஸ்துவண்டை வர ஆசைப்பட வேண்டும். 

(இவ்வாக்கமானது சகோ. எம். எஸ். வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

நற்பலன்

தமது பரம எஜமானனுக்குத் தொண்டு செய்துவந்த சாது சுந்தர் சிங் பட்ட கஷ்டங்கள். பல தரம் உண்ணத் தகுந்த உணவு கிடடாததால் காட்டில் விளையும் கனி கிழங்குகளையே புசித்து தன் பசியின் அகோரத்தைத் தணித்துக்கொண்டார். கல் நெஞ்சரான ஊரார் இராத்தங்க இடங்கொடாமல் அவரை விரட்டினதால் அடிக்கடி மரத்தடியிலேயோ இருண்ட கெபியிலேயோ படுத்து நித்திரை செய்தேன் என்றும் சாது சுந்தர் சிங் கூறியிருக்கிறார். இக்கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த நாடுகளில் விசேஷ அபாயங்கள் நிறைந்திருந்தன. 

ஆகையால் சாது சுந்தர் சிங் இரவில் இளைப்பாறச் சென்ற இடங்களில் ஒரு காட்டு மிருகமோ, பாம்போ தம்மோடு தங்கியிருந்ததைக் கண்டு திடுக்கிட்ட சமயங்கள் அநேகம். தோரியோ என்ற தாலுக்காவின் ஒரு கிராமத்தில் சுந்தர் கழித்த காலமெல்லாம் பக்கத்திலிருந்த காடுதான் அவர் உறங்குமிடமாயிற்று. அக்கிராமத்தார் அவரை அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.

ஓர் இரவு மனஞ்சோர்ந்து தேகம் களைப்புற்றவராய் சுந்தர் இருண்ட கெபிக்குள் நுழைந்து தன்னுடைய போர்வையை விரித்தபோது தன் பக்கத்தில் அயர்ந்து தூங்கின பெரிய சிவிங்கியொன்றைக் கண்டார். திகில் கொண்டெழுந்து அம்மிருகத்தின் வாயினின்று தப்புவித்த இயேசுவின் திருவடிகளைப் போற்றிக்கொண்டு சென்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரோடு இருந்தததினால் துஷ்டமிருகமொன்றும் அவருக்குத் தீங்கு செய்ததில்லை.மற்றொரு தரம் ஊராரால் துரத்துண்டு தனியே தியானம் பண்ணும்படி ஒரு பாறையின்மேல் உட்கார்ந்தார். பாறையின் அருகிலிருந்த குகைக்குள்ளிருந்து தம்மைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கருஞ்சிறுத்தையைப் நித்திரையில் ஆழ்ந்திருந்த சுந்தர் கவனிக்கவில்லை. பிறகு தாமிருந்த அபாய நிலைமையையறிந்து பயங்கொண்டபோதிலும் இதுவரை தம்மைக் காத்துவந்த தெய்வத்தின் துணையில் சார்ந்து அமைதலாய் எழுந்து கிராமத்திற்குச் சென்றார்.
இந்த அதிசயக் தகவலைக் கேட்ட ஊரார். தம்மில் பலரைக்கொன்று தின்ற இந்த துஷ்டமிருகத்திற்கு இரையாகாது தப்பின இவர் ஒரு புண்ணிய புருஷர்போலும்! இவர் சொல்லும் நன்மொழியை நாம் கேட்பதும் தகுதியே என்று நினைத்து, சுந்தரை நயந்து அவருக்குச் செவிகொடுத்தார்கள். இதைக்கண்ட சுந்தர் தேவனைத் துதித்து மனத்திடன் கொண்டார்.
·

காயீனின் அடையாளம்

நூல் : ஆதியாகமம்


ஆசிரியர் : சகோ. எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் –இலங்கை)

வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

ஆதியாகமப் புத்தகத்தில் நாம் ஆய்வு செய்ய வேண்டிய அடுத்த சர்ச்சைக்குரிய பகுதியும் காயீனுடைய வாழ்வோடேயே தொடர்புள்ளது. தான் செலுத்திய காணிக்கையை நிராகரித்த தேவன் தன் சகோதரனுடைய காணிக்கையை ஏற்றுக் கொண்டமையினால் ஆத்திரமடைந்த காயீன் (ஆதி 4:2-5) தன் சகோதரனை தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று கொன்று விடுகிறான். (ஆதி 4:8) மனிதக் கொலை பாரதூரமான குற்றம் என்பதனால் தேவன் காயீனைச் சபிக்கின்றார் (ஆதி 4:11-12). அதேசமயம் தேவன் தனக்குக் கொடுத்த தண்டனையைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாதென்று தேவனிடம் முறையிட்டதோடு (ஆதி 4:13) தன்னைக் கண்டுபிடிக்கின்ற எவனும் தன்னைக் கொன்று போடுவான் என்று புலம்புகின்றான். (ஆதி 4.14) இதனால் தேவன் யாரும் கொன்றுவிடாதபடி அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். இதுபற்றி ஆதியாகமம் 4:15 Gen 4:15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காயீனின் அடையாளம் பற்றிய இவ்வசனம் மூன்று விதமான சர்ச்சைகளை உருவாக்கி விட்டுள்ளது.