- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 30 October 2014

வேதமும் விளக்கமும் - அப்.1:6இன் படி அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா?

64. அப்போஸ்தலர் 1:6 இல் ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று சீடர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கின்றனர். அக்காலத்தில் இஸ்ரவேல் நாடு இஸ்ரவேலுக்கு சொந்தமில்லையா? (எச்.டி. ராணி, வேதப்பட்டி, இந்தியா)  
அக்காலத்தில் பாலஸ்தீனா ரோம ராஜ்யத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது. இயேசுகிறிஸ்து பிறந்தபோது ஏரோது ராஜாவும் அதன்பின்பு அவனது பிள்ளைகளும் ரோமர்களுக்காகவே பாலஸ்தீனாவை ஆண்டனர். ரோம அரசின் ஆளுனராகவே பிலாத்து பணியாற்றினான். தேவனால் அனுப்பப்படும் மேசியா தம்மை ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் எனும் நம்பிக்கை அக்காலத்து யூதர்கள் மத்தியில் இருந்தது. இதனால்தான் இயேசுகிறிஸ்து பரமேறிச் செல்வதற்கு முன்பு சீடர்கள் இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திருப்பிக் கொடுப்பீர் எனக் கேட்டனர். 

Saturday 11 October 2014

வேதமும் விளக்கமும் -சங்கீதம் 19:4-6, சங்கீதம் 104:19 இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது தானே!

63. சங்கீதம் 19:4-6, இல் சூரியன் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் ஓடுவதாகவும் சங்கீதம் 104:19 இல் சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது உண்மை நிலைக்கு மாறுபட்டதாக உள்ளது. இதன் விளக்கத்தைத் தரவும்(கே. சுந்தரம், சேலம், இந்தியா)


வேதாகம ஆசிரியர்கள் தாங்கள் வாழும் உலகைப் பற்றி எழுதும்போது மானிட கண்களுக்குத் தென்படும் விதமாகவே காட்சிகளை வர்ணித்துள்ளனர். இதனால் அவர்கள் தம் கண்களுக்குத் தென்பட்ட விதமாக சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பற்றி வேதாகமத்தில் எழுதியுள்ளனர். சங்கீதப் புத்தகம் மூலமொழியில் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளமையால் சூரியன் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை ஓடுவதாகவும் தீவிரித்து செல்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து வேதாகம ஆசிரியர்கள் புவிச் சுற்றுகையை அறியாதவர்களாக தவறான முறையில் சூரியனைப் பற்றி எழுதியுள்ளதாக நாம் கருதலாகாது. ஏனென்றால் இன்றைய 21ம் நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாமும் இதேவிதமாக, நம் கண்களுக்குத் தென்படும் வண்ணம் இயற்கைக் காட்சிகளை வர்ணிப்போம். பூமி தன்னைத் தானே சுற்றுவதனாலேயே இரவும் பகலும் மாறி மாறி வருகின்றது  என்பதை நாம் நன்கறிந்திருந்தாலும், காலையில் எழுந்த்தும் ஆகா என்ன அருமையான புவிச்சுற்றுகை என்று சொல்ல மாட்டோம்மாறாக என்ன அருமையான சூரியோதயம் என்றே சொல்வோம். சூரியன் உதித்து மறைந்தல் எனும் சொற்பிரயோகத்தை இன்று நாம் எவ்விதமாக உபயோகிக்கின்றோமோ அதேவிதமாகவே வேதாகம ஆசிரியர்களும் உபயோகித்துள்ளனர்
 
 
4. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
 
5. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
 
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். 

6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. 

Friday 3 October 2014

வேதமும் விளக்கமும்-மாற்கு 10:39 இல் நான் குடிக்கும் ... நீங்கள் குடிப்பீர்கள். விளக்கம் என்ன?

62. மாற்கு 10:39 இல் நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள் என்று இயேசுகிறிஸ்து எதைப் பற்றி கூறுகின்றார்? (வி.சரோஜா, ஆனமடுவ, இலங்கை) 


இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு கூறிய விடயமே மத்தேயு 10:39 இல் உள்ளது. இது அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன்னர் சொல்லப்பட்டது. இவ்வசனத்தில், தான் அடையப்போகும் பாடுகளையும் மரணத்தையுமே இயேசுகிறிஸ்து நான் குடிக்கும் பாத்திரம் நான் பெறும் ஸ்நானம் என்று கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவைப் போலவே அவருடைய சீடர்களும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதைப் பற்றிய தீரக்கதரிசனமாக இவ்வசனம் உள்ளது. இத்தீரக்க்தரிசனத்தின்படியே சீடர்களுக்கு நடைபெற்றதைப் பிற்கால சரித்திரம் நமக்கு அறித் தருகின்றது.