- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 30 March 2011

கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார் (1 கொரிந்தியர் 15:28)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28 ஆகும். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.


என்று வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுக்கிறிஸ்து சர்வல்லமையுள்ள தேவனாக இருந்தால் இவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க மாட்டார் என்று கூறும் யெகோவாவின் சாட்சிகள், அவர் யெகோவா தேவனுக்கு முழுமையாக் கீழ்பட்டவராக இருப்பதாகத் தர்க்கிக்கின்றனர். (60) எனினும் இவ்வசனமும் நாம் இதற்கு முன்னர் ஆராய்ந்த “கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார்“ எனு வசனத்தைப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய செயலை அடிப்படையாக் கொண்ட தாழ்வான நிலையாக உள்ளதே தவிர, அவரது தேவத்தன்மையின் தாழ்வைப் பற்றிய விபரணம் அல்ல. மனிதரை மீட்பதற்காகத் தம்மையே தாழ்த்தி செயற்பட்ட இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்திற்குத் தம்மைக் கீழ்படுத்தினார். “இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு தம்மைப் பிதாவுக்குக் கீழ்படுத்தி செயற்பட்டாரோ அதவிதமாக உலகின் முடிவிலும் தேவனுக்குக் கீழ்பட்டு செயல்படுவார் என்பதையே இவ்வசனம் அறியத் தருகிறது. (61). உண்மையில் மகிமையடைந்த நிலையிலும் இயேசுக்கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் செயற்படுபவராய் இருக்கின்றார்(62)


இயேசுக்கிறிஸ்து தாழ்வானவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் வசனங்கள் அனைத்தும், மனிதரை மீட்கும் அவரது செயல்களோடு சம்பந்தப்பட்டதாய் இருப்பதை நாம் அவதானிக்கலாம். மானிட மீட்பைப் பற்றிய தேவ திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயேசுக்கிறிஸ்து. மனிதரை மீட்டு இரட்சிப்பதற்காகத் தம்மைத் தாழ்த்தி செயல்பட்டார். எனினும் அவர் தம்மைத் தாழ்த்திச் செயற்பட்ட சந்தர்ப்பங்களிலும் முழுமையான தேவத்தன்மை உடையவராகவே இருந்தார். பிலிப்பியர் 2:6-7 இயேசுக்கிறிஸ்துவின் தற்காலிகமான தாழ்த்தப்பட்ட மானிட நிலையை அறியத் தருகையில், கொலோசேயர் 2:9 அவர் எப்போதும் முழுமையான தேவத்தன்மையை உடையராகவே இருந்தார் எனபதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே அவர் தம்மைத் தாழ்த்தியபோது கூறிய விடயங்களையும். அத்தாழ்மையின் நிலையைக் குறிக்கும் வசனங்களையும் ஆதாரமாக் கொண்டு, அவர் பிதாவாகிய தேவனைவிடத் தாழ்வானவர் என்றோ, தேவத் தன்மையற்றவர் என்றோ கருவது தவறாகும்.


References
(59) Anonymous, Reasoning with the Scriptures p 410
(60)  Anonymous, Let God be True p 104
(61) L. Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentaries, p 213
(62) C.Blomberg, 1 Corinthians: The NIV Application Commentary, p 298
(63) G.D. Fee, The First Epistle to the Corinthians : New International Commentary on the New Testament p 760. 


Wednesday 23 March 2011

கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(வேதப்புரட்டர்கள் பிதாவை விட இயேசு தாழ்வானவர் என்பதை நிரூபிப்பதற்காக உபயோகிக்கும் வசனங்களில் ஒன்று I கொரி. 11:3 ஆகும். கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால் தங்களின் போதனைக்கு ஏற்ற விதமாக துர்உபதேசங்களை பரப்பி வருகின்றனர். அப். பவுல் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆசிரியர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்)

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல மாறாக அவர் மகிமையடைந்து பரலோகத்திற்கு சென்ற பின்பும் தேவனைவிடத் தாழ்வானவராகவே இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகளின் போதனையாகும். இதை நிரூபிப்பதற்காக இவர்கள் சுட்டிக் காட்டும் வேதவசனம் I கொரி. 11:3 ஆகும் கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால், இந்நிருபத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அவர் மகிமையடைந்த நிலையிலும் தேவனைவிட தாழ்வானவராக இருப்பதற்கான ஆதாரமாய் இருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர்(49). “ இயேசுக்கிறிஸ்து எப்போதும் தாழ்வானவராகவே இருப்பதாகவே வேதம் கூறுகிறது.(50) என்பதே இவர்களது கருத்தாகும். எனினும் நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து அவர் பிதாவின் வலது பரிசத்தில் வீற்றிருப்பதாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் தேவனுக்கு சமமானவராகவே இருக்கிறார் என்பதை மறுக்க முடியாதுள்ளது.
I கொரி. 11:3 இயேசுக்கிறிஸ்து தேவனைவிட தாழ்வானவர் என்று கூறவில்லை. இவ்வசனத்தில் “கிறிஸ்துவுக்குத் தேவன் தலைவராயிருக்கிறார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும். இது தேவனுக்கும் இயேசுக்கிறிஸ்துவிற்கும் இடையிலான உயர்வுதாழ்வு பற்றிய விபரணம் அல்ல. ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் தேவனினதும் இயேசுக்கிறிஸ்துவினதும் செயற்பாடுகள் பற்றியல்ல. மாறாக சபையில் ஆணும் பெண்ணும் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றியே விளக்கப்பட்டுள்ளது. இதனால் “இயேசுக்கிறிஸ்துவையும் தேவனையும் பற்றிய குறிப்பு இதற்கான உதாரணமாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (52) 3ம் வசனத்தில் “தலை“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் (kephale) (53) உருவக விபரணமாய் இருக்கும்போது “அதிகாரம்“ அல்லது “ஆரம்பம்“  எனும் இரு அர்த்தங்களைத் தரும்.  எனவே தலையாயிருப்பவர் அதிகாரமுடையவராக அல்லது மற்றவரது ஆரம்பமாக இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது. (55) எனினும் இவ்வசனம் இடம் பெறும் பகுதியில் வழிபாட்டின் போது ஆணும் பெண்ணும் செயற்பட வேண்டிய விதம் பற்றியே விளக்கப்பட்டுள்ளமையால் அதிகாரம் எனும் அர்த்தமே பொருத்தமுடையதாக உள்ளது(56) உண்மையில். இயேசுக்கிறிஸ்து தேவனின் அதிகாரத்துக்குக் கீழாக செயற்படுவது போல சபையில் பெண்கள் ஆணினுடைய தலைமைத்துவத்திற்கு கீழாகச் செயற்பட வேண்டும் என்பதையே இப்பகுதியில் அப்..பவுல் விளக்கியுள்ளார்.
சபையில் ஆணினுடைய தலைமையின் கீழாகச் செயற்படும் பெண் ஆணைவிடத் தாழ்வானவள் என்று வேதம் கூறவில்லை. ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்பது வேத்த்தின் தெளிவான போதனையாகும். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதோடு (ஆதி. 1:26-28) கிறிஸ்துவுக்குள் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (கலா. 3:28) எனவே, பெண் பெண்ணுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் அவள் ஆணுக்குச் சம்மானவளகவே இருக்கிறாள். அதேபோலவே. இயேசுக்கிறிஸ்து தேவனுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் தேவனுக்குச் சம்மானவராகவே இருக்கிறார். “இயேசுக்கிறிஸ்து தேவன் தலையாயிருப்பது அவரது தேவத்துவத்திலும் தேவதன்மையிலும் அல்ல. மாறாக அவரது செயல்களினாலாகும். (57). இது செயற்பாட்டு ரீதியிலான தலைமையே தவிர மேன்மையான தன்மை அல்ல“(58). நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் இருந்த காலத்திலும் அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். அப்படியிருந்தும் இயேசுக்கிறிஸ்து தம்மை பிதாவிற்குக் கீழ்படுத்திச் செயற்பட்டார். இதனடிப்படையிலேயெ இயேசுக்கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். இது தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கான ஆதாரம் அல்ல.

Footnote & Reference
(49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140
(50) Anonymous, Should You Believe in the Trinity? p. 20
(51) என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28) எனும் கட்டுரையை பார்க்கவும்
(52) ,இதனாலேயே 3ம் வசனத்தின் இறுதிப்பகுதியில் தேவனையும் இயேசுக்கிறிஸ்துவையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (C.Blomberg 1 Corinthians: The NIV Application Commentary p 209)
(53) கெஃபாலே (keohale) எனும் கிரேக்க பதமாகும்.
(54) J. Fitzmyer, ‘Another Look at ;Kephale in 1 Corinthians: 11:3 pp503-511)
(55) இவ்வசனம் சபையில் பெண்களின் நிலை மற்றும் அவர்களது ஊழியப்பணிகள் பற்றி நிர்ணயிக்கும் வசனங்களில் ஒன்றாக இருப்பதனால், வேத ஆராய்ச்சியாளர்கள் தலை என்ற பதத்தை அப்.பவுல் என்ன அர்த்தத்தில் உபயோகித்துள்ளார் என்பது பற்றி கருத்து முரண்பாடுடையவர்களாய் இருக்கின்றனர்.பெண்கள் சபையின் ஊழியப் பணிகளில் ஈடுபடலாம். அவர்களும் சபையின் தலைமைத்துவ பதவிகளில் எனும் கருத்துடைய தேவஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் தலை எனும் பதம் அதிகாரம் எனும் அர்த்த்த்தில் அல்ல. மாறாக ஆரம்பம் எனும் அர்த்தத்திலேயே உள்ளது என்று கூறுகின்றனர். இவர்களது கருத்தின்படி பெண்ணுக்கு ஆண் தலையாயிருக்கிறான் எனும்போது  பெண்ணுக்கு ஆண் ஆரம்பமாயிருக்கிறான். அதாவது ஆணிலிருந்து பெண் உருவாக்கப்பட்டுள்ளாள் என்றே அப்.பவுல் குறிப்பிட்டுள்ளார். (S.Bedale, The Meaning of ‘Kephale’ in the Pauline Epistles’ pp 211-215; G.D. Fee, The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament pp 501-505) ஆனால் இவ்வாதத்தின்படி கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார் என்று கூறும்போது “இயேசுக்கிறிஸ்து தேவனிலிருந்து வந்தவர். அவர் தேவனால் உருவாக்கப்பட்டவர். எனும பிழையான அர்த்தத்தையே கொடுக்கும் இதனால் இவ்வசனத்தில் தலை என்பதை ஆரம்பம் என்று கருதுபவர்கள் இயேசுக்க்கிறிஸ்துவின் மானிடப்பிறப்பை பற்றிய விபரமாக இதை விளக்குகின்றனர் (Ibid, p.505) ஆனால் இவ்வசனம் இடம்பெறும் பகுதி சபையின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆணினதும் பெண்ணினதும் நிலைமை பற்றிய விபரணமாருப்பதால் அதாவது சபையின் செயறபாடு ஆண் பெண்ணுக்கு மேலானவனாக இருப்பது பற்றிய விளக்கமாயிருப்பதால் இவ்வசனத்தில் தலை என்பது அதிகாரம் என்னும் அர்த்தத்திலேயே  உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (C, Blomberg, I Corinthians : The NIV Application Commentary pp 208-209)

(56) சபை வாழ்வில் ஆணிணுடைய தலைமைத்துவத்தின் கீழ் பெண் இருப்பதனால் அதை வெளிப்படையாக் காட்டும் அடையாளமாகப் பெண்கள் தங்கள் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். என்று இப்பகுதியில் விளக்கியுள்ளார். (1 கொரி. 11:3-15) எனினும் இவ்வடைளம் கொரிந்து பிரதேசக் கலாசாரத்தில் உயர்ந்தவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் இருப்பதைக் காட்டுவதாக இருந்துபோல் ஏனைய பிரதேசங்களில் இராதமையால் சகல பிரதேசங்களிலும் சபைகளில் கைக்கொள்ள வேண்டிய முறை இதுவல்ல என்பதையும் 16ம் வசனத்தில் பவுல் சுட்டிக் காட்டியுள்ளார்.

(57) G.B. Wilson I Corinthians : A Digest of Reformed Comment , p.115
(58) R.M. Bowman, Why You Should Believe in the Trinity, p81

 
Footnote & Reference குறித்த எனது சுருக்க விளக்கங்கள்
இக்கட்டுரையில் இலக்கமிடப்பட்டு உ-ம் (49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140 என இருப்பவை Citation ஆகும்
ஆய்வுக்கட்Lரைகள் Citation உடன் எழுதப்படுவது வழமையாகும். குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்களை மீண்டுமாக ஆய்வுக்கு உட்படுத்தாமல் அதனை மேற்கோளாக பயன்படுத்த இம்முறை உபயோகிக்கப்படுகிறது. அதிக Citation உடன் எழுதப்படுபவை அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக விளங்கும். ஒரு ஆசிரியர் தான் அக்கருத்தை எங்கிருந்து பெற்றார் என துல்லியமாக இவ்வண்ணக்கரு சுட்டிக்காட்டும். ஆனால் Reference பாவித்த முழு நூல்களையும குறிப்பிடுவதால் குறிப்பாக எந்நூலிலிருந்து இக்கருத்தினை பெற்றார் என்பதை துல்லியமாக காட்டுவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்டபடி (49) கருத்தை நிருபிக்க R. Rhodes ஆசிரியர் எழுதிய Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, நூலில் பக்கம் 140 இலிருந்து அக்கருத்து பெறப்பட்டுள்ளது.
Ibid , - used in formal writing to refer to a book or article that has already been mentioned
ஒரு நூலை மேற்கோளாக காட்டியபின் அதை தொடர்ந்து இன்னுமொரு முறை அதே நூல் மேற்கோள் காட்ட வேண்டிஏற்படின் அதன்போது இம்முறை உபயோகிக்கப்படுகிறது. இதன்போது முழு விபரத்தையும் கொடுக்காமல் Ibid என இட்டு பக்க இலக்கம் மட்டும் குறிப்பிடப்படும்.
Ibid, p.505 என குறிப்பிடப்படுவது The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament என்ற நுலின் 505 ஆம் பக்கத்தையாகும்.
Anonymous, ஆசிரியரின் பெயர் இன்னதென்று குறிப்பிடப்பிடாதுவிட்டால் ஆசிரியர் பெயருக்குரிய இடத்தில் Anonymous என இடப்படும். யெகோவா சாட்சிகளின் எந்த வெளியீடுகளிலும் ஆசியர்களின் பெயர்கள் இடம்பெறுவதில்லை (1942 இலிருந்து Nathan Homer Knoor காலத்திலிருந்து) 
Footnote 55
கட்டுரைக்கு மேலதிகமாக எழுதப்படும் விளக்கங்களாகும். இது அக்கட்டுரையை மேலுமாக ஆய்வு செய்வதற்காகவோ அன்றேல் மாற்றுக்கருத்தை சொல்லுவதற்காகவோ உபயோகிக்கப்படலாம். அநேகமாக ஆய்வு செய்வற்குரிய குறிப்புகள் இப்பகுதியில் வழங்கப்படும். ஆய்வு செய்து படிக்கும் வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (கொலோசெயர் 1.15)

நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்

ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்

வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(இயேசு தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதை நிரூபிப்பதற்கு வேதப்புரட்டர்கள் அதிகமாக பாவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.   கொலே 1.15 தொடரந்து வரும் வசனங்கள் இதன் அர்த்தத்தை சரியாக எமக்கு விளக்குகின்றது. முந்தினபேறானவர்  ஏனைய வேதவசங்களில் எவ்விதம் கையாளப்பட்டுள்ளது என்பதையும் ஆசிரியர்  விளக்குகிறார்)


இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிகர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் பிரதான வேதவசனம் கொலோ. 1.15 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யெகோவா சாட்சிகள் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்று கூறுகின்றனர்(12). இதில “முந்தினபேறுமானவர்“ என்னும் வார்த்தை “முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்னும் அர்த்தமுடையது என்பதே இவர்களது தர்க்கமாகும்(13). இதனால், இயேசுக்கிறிஸ்து “யெகோவா குடும்பத்தின் மூத்தபிள்ளை(14) என்று இவர்கள் கூறுகின்றனர். ஆங்கில வேதாகமத்தில் firstborn என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் இவர்களது தர்க்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. எனினும் மூலமொழியில் இப்பதம் (Prototokos) “காலத்தில் முந்தினவர்“ என்றும் “தரத்தால் உயர்ந்தவர்“ என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதிப்பவர்கள் (16) “காலத்தால் முந்தினவர்“ என்னும் அர்த்தத்திலேயே இப்பதத்தை விளக்குகின்றனர். ஆனால் கொலோசெயர் 1.15 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்து “காலத்தால் முந்தியவர்“ எனும் அர்த்தம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து “சபைக்குத் தலைவராகவும் “எல்லாவற்றிலும் முதல்வராகவும்“ இருப்பதாக அவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் (கொலோ. 1.18) “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ எனும் சொற்பிரயோகம் இயேசுக்கிறிஸ்து “சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றுக்கும் மேலானவராக இருக்கிறார்“ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரமாய் உள்ளது(18) மேலும், சகலமும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்துவரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிருஷ்டிக்கராகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது தெளிவாகின்றது(19) உண்மையில் இயேசுக்கிறிஸ்து “முதற்தரமானவர்“ என்பதையே கொலோசெயர் 1:15 அறியத் தருகிறது. (20)

யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக  கொலோசெயர் 1:15  தொடர்ந்து வரும் வசனங்களில் “சகல“ எனும் பதத்திற்கு முன் ஏனைய (Other) என்னும் பதத்தினை புகுத்தியுள்ளனர். இதன்படி இவ்வசனங்கள் “அவருக்குள் (ஏனைய)சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான (ஏனைய)சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், (ஏனைய)சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் (ஏனைய) எல்லாவற்றிற்கும் முந்தினவர், (ஏனைய)எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (21) இயேசுக்கிறிஸ்துவைத் தவிர ஏனையவை அனைத்தும் அவரால் சிருஷ்ட்டிக்கப்பட்டவை என்றும், இயேசுக்கிறிஸ்துவோ தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். ஆனால். ஒரு உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வாறு வேதவசனங்களை மாற்றுவது முழுமையான வேதபுரட்டாகும். “ஏனைய“ என்னும் பதம் மூலமொழியில் இல்லாதபோதிலும், மூலமொழியின் சரியான அர்த்தத்தை தருவதற்காக இப்பதத்தை தாங்கள் சேர்த்துள்ளதாக இவர்கள் கூறினாலும்(22) இவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தருவதற்குப் பதிலாக, தங்களது உபதேசத்தினையே வேதத்திற்குள் புகுத்தியுள்ளனர். உண்மையில் “இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகக் காண்பிப்பதற்காகவே மூலமொழியில் இல்லாத இப்பதம் இவ்வசனத்தில் புகுத்தப்பட்டுள்ளது. (23) இதன் மூலம் “சிருஷ்டிகராகிய இயேசுக்கிறிஸ்துவை இவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவராக மாற்றியுள்ளனர். (24)

யெகோவாவின் சாட்சிகள் தங்களது தர்க்கத்திற்கு ஆதாரமாய் பழைய ஏற்பாட்டில் இப்பதம் உபயோகிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டுவது வழமை. எனினும் பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பெயர்ப்பிலும், இப்பதமானது “முன்னுரிமையையும் உயர்தரத்தையும் குறிக்கும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது(25) ஆனால் பழைய ஏற்பாட்டில் “பார்வோனின் முதற்பேறானவன்“ பார்வோனின் முதற்பிள்ளையாக இருப்பதனால் இயேசுக்கிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும்போது, அவர் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ அவர் “தேவனுடைய முதலாவது பிள்ளை“ எனும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் தர்கிக்கின்றனர் (26) எனினும் கொலோசெயர் 1:15 இல் நாம் அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம், இயேசுக்கிறிஸ்து “தேவனுடைய முதற்பேறானவர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படாதிருப்பதாகும். அதாவது “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் (முதற்பேறானவர்)  என்றே இவ்வசனம் உள்ளது. யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இவ்வசனத்தில் “பிறப்பித்தல்“ அல்லது “சிருஷ்டித்தல்“ எனும் அர்த்தத்துடனேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தால் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய பிள்ளையாக அல்ல. மாறாக சிருஷ்டிக்கப்பட்டவற்றின் பிள்ளையாக இருப்பதாகவே கருதவேண்டும்(27) எனவே இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது.

பழைய ஏற்பாட்டில், முதலாவது பிறந்தவர்களே முதற்பேறானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனும் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கத்திலும் எந்தவித உண்மையும் இல்லை. உதாரணத்திற்கு தாவீது குடும்பத்தின் கடைசி பிள்ளையாக இருந்தாலும் சங்கீதம் 89.:27ல் அவன் முதற்பேறானவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதேபோல். எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது மகனாக இருந்தபோதிலும் (ஆதி 41:50-51) எரேமியா 31:9 இல் அவனும் ”முதற்பேறானவன்“ என்று அழைக்கப்பட்டுள்ளான். (28) மேலும் இஸ்மவேல் பிறந்து 13 வருடங்களின் பின்னர் பிறந்த ஈசாக்கு ஆபிரகாமின் முதற்பேறானவனாக இருப்பதும் இப்பதத்தின் அர்த்தத்தை நமக்கு அறியத் தருவதாய் உள்ளது. “வேதாகமக் காலத்தில், முதற்பேறானவன் எனும் பதம் முதலாவதாக பிறந்தவன் எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக இப்பதம் முன்னுரிமையையும் முதன்மையான இடத்தையும் முதற்தரத்தையும் குறிக்கும் சொல்லாகவே இருந்தது. (29) எனவே இயேசுக்கிறிஸ்து முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று வேதம் கூறவில்லை. அவர் சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றையும் விட மேலானவராகவும், சகலவற்றிற்கும் முதல்வராகவும் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. மேலும், யெகோவின் சாட்சிகள் தர்க்கிப்பதுபோல் இவ்வசனம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. ஏனென்றால் அடுத்த அதிகாரத்தில் ““தேவத்துவத்தின் பூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது“ எனும் வாக்கியத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (கொலோ. 2:9) (30)





Footnote & References

(12). Anonymous, Reasoning from the Scriptures p. 408 ஆங்கில வேதாகமத்தில் Firstborn of all creation என்று இவ்வாக்கியம் உள்ளது.

(13) Anonymous, Aid to Bible Understanding p 918

(14) Anonymous, Reasoning from the Scriptures, p.408

(15) கிரேக்கத்தில் prototokos எனும் பதமே “முந்தினபேறுமானவர் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(16) நான்காம் நூற்றாண்டில் ஏரியஸ் எனும் வேதப் புரட்டின் இவ்விதமாகவே போதித்தான். இயேசுக்கிறிஸ்து பிதாவை விடத் தாழ்வானவர். பிதாவின் தன்மையற்றவர். பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்பதே இவனது உபதேசமாய் இரந்த்து. (R.E. Olson, The Story of Christian Thelogy, pp 141-150) உண்மையில் 4ம் நூற்றாண்டில் வேதப் புரட்டாக்க் கருதப்பட்டஏரியஸின் கருத்துக்களையே இன்று யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கின்றனர்.

(17) C. Vaughan, Colossians, Philemon : Bible Study Commentary, p38

(18) கொலோசேயர் 1:18, ரோமர் 8:29 எபிரேயர் 1:6 போன்ற வசனங்களிலும் இயேசுக்கிறிஸ்து இவ்விதமாக்க் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(19) M.J. Erickson, Christian Theology, p697

(20) R.L. Reymond, Jesus, Divine Messiah : The New Testament Witness, p247

(21) New World Translation

(22) New World Translation, Forword, p6

(23) B.M. Metzger, The Jehovah’s Witnesses and Jesus Christ p70

(24) W. Martin, The Kingdom of Cults, p96

(25) P.T.O;Brien, Colossians, Philemon : World Bible Study Commentary, p44

(26) ) Anonymous, Reasoning from the Scriptures, p.408

(27) R. Rhodes, , Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses P. 130

(28) தமிழில் இதனை சிரேஷ்டப்புத்திரன் என்று மொழிபெயர்த்துள்ளனர்

(29) L. Ryken, J.C. Wilhoit & T. Longman III, ed., Dictionary of Biblical Imagery, pp 289-290