- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 31 August 2014

வேதமும் விளக்கமும்-இன்று நாம் ஏன் ஆலயத்திற்குள் செல்லும்போது பாதரட்சைகளை கழற்றுவதில்லை?

58. தேவன் மேசேயிக்கு தரிசனமான போது பாதரட்சைகளைக் கழற்றும்படி கூறப்பட்டது. அப்படியானால் இன்று நாம் ஏன் ஆலயத்திற்குள் செல்லும்போது பாதரட்சைகளை கழற்றுவதில்லை? (சில்வியா மினோலி, நாவலப்பிடிடிய, இலங்கை)

தேவன் தரிசனமளித்த இடம் பரிசுத்தமானது என்பதனாலேயே பாதரட்சைகளைக் கழற்றும்படி மோசேக்கு கூறப்பட்டது. இதேவிதமாக யோசுவா 5:15 இல் யோசுவாவுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. எஜமானின் முன்னிலையில் வேலைக்காரர்கள் பாதரட்சைகளைக் கழற்றி எஜமானுக்கு மரியாதை செலுத்தும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. அதேசமயம், பாதரட்சைகள் இல்லாமலிருப்பது ஒருவனை அடிமை எனக் காட்டும் அடையாளமாகவும் இருந்தது.  ஏனெ்னறால் அக்காலத்தில் அடிமைகள் பாதரட்சைகளை அணிவதில்லை. இதிலிருந்து, மோசே பாதரட்சைகளை கழற்றிய செயலானது அவன் தேவனுக்கு மரியாதை செய்யும் செயலாகவும் அவர் முன்பாக தான் ஒரு அடிமை என்பதை உணர்த்திடும் செயலாகவும் இருந்தது. நமது நாட்டில் பிறமத வழிபாட்டிடங்களில் மக்கள் பாதரட்சை இன்றியே ஆலயத்திற்குள் உட்செல்லுவதையே நாம் அவதானிக்கலாம். இது தெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது. அதிக குளிரான பிரதேசங்களில் வெறுங்காலுடன் தரையில் இருப்பது சிரமமானதாய் இருந்தமையால் ஐரோப்பிய கலாசாரத்தில் பாதரட்சையுடனேயே மக்கள் ஆலயத்திற்குள் சென்றனர். ஐரோப்பியர்களே கிறிஸ்தவத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமையால், அவர்களுடைய கலாசாரத்தின்படி நம்நாட்டு கிறிஸ்தவர்களும் பாதரட்சைகளுடன் ஆலயத்திற்குள் செல்கின்றனர். விசுவாசிகள் தரையில் அமரும் சபையில் மட்டுமே மக்கள் பாதரட்சைகளைக் கழற்றிவிட்டு உள்ளே செல்கின்றனர். சில பிரதேசங்களில் பாதரட்சைகளை கழற்றுவது ஒரு பாரம்பரிய செயலாக மாறிவிட்டது. அதாவது, பாதரட்சைகளை கழற்ற வேண்டும் என்பதற்காக கழற்றப்படுகின்றதே தவிர தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லைபலர் பாதரட்சைகளைக் கழற்றாமலேயே தேவனுக்கு மரியாதை செலுத்தும் மனநிலையில் ஆலயத்திற்குள் செல்கின்றனர். எனவே, இவ்விடயத்தில் கண்டிப்பான கட்டளைகள் எதுவும் இல்லை. தேவனுக்கு மரியாதையும் கனமும் செலுத்தும் மனநிலையே அவசியம்.
 
 
15. அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

Monday 25 August 2014

வேதமும் விளக்கமும் மத்தேயு 12:43-45 அசுத்த ஆவி மறுபடியும் அவனுக்குள் வருவது எப்படி சாத்தியம்?

57. மத்தேயு 12:43-45 இல் ஒருவனிலிருந்து வெளியேறும் அசுத்த ஆவி மறுபடியும் அவனுக்குள் வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது, இது எப்படிச் சாத்தியமாகும்? (ஐசக் பிரான்சிஸ், கண்டி, இலங்கை)

 இயேசுகிறிஸ்து யூதர்கள் மத்தியில் வல்லமையான செயல்களைச் செய்தும் அவர்கள் அவரை மேசியாகவாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிசாசுக்கள் துரத்தப்பட்டன. வியாதியஸ்தர் குணமடைந்தனர்,  தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டது. மத்தேயு 12ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பரிசேயருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கங்கள், கருத்து முரண்பாடுகள் பற்றி நாம் வாசிக்கலாம்.  இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்கள் அவர் மேசியா என்பதற்கான அடையாளங்களாயிருந்தன. அப்படியிருந்தும் அவரக்ள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது செயல்களைத் தவறாகப் புரிந்து கொண்ட பரிசேயர்கள் அவர் மீது பல விதமான குற்றச் சாட்டுக்களைக் கொண்டுவந்தனர். அவர் ஓய்வுநாள் கட்டளைகளையும் முன்னோரின் பாரம்பரியங்களையும் மீறுகிறவர் என்றும், பிசாசுக்களைின் தலைவனைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறவர் என்றும் கூறினர். யூதர்களுடைய இத்தகைய தன்மையை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காகவே மத்தேயு 12:43-45 இலுள்ள விபரணம் சொல்லப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தில் 22ம் வசனத்திலிருந்து வாசிக்கும்போது இயேசுகிறிஸ்து தான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுக்களைத் துரத்துவதை அறியத் தருவதோடு, பிசாசைத் துரத்துவதற்குத் தேவவல்லமை அவசியம் என்பதை 43-45 வரையிலான வசனங்களில் கூறுகின்றார். ஒரு மனிதனிலிருந்து அசுத்த ஆவி துரத்தப்பட்டும் அம்மனிதன் தேவவல்லமையைப் பெறாதவனாய் இருந்தால், அவனுக்குள் மறுபடியுமாய் அசுத்தஆவி வரும் என்பதை இயேசுகிறிஸ்து அறியத் தருகிறார். ஒருதரம் தேவவல்லமையினால் அசுத்த ஆவி துரத்தப்பட்டமையினால் அதுமறுமுறை வரும்போது, தன்னைத் துரத்தமுடியாத அதிகபலத்தோடு இருப்பதற்காக மேலதிக ஆவிகளையும் கூட்டிக் கொண்டு வருகின்றது. எனவே ஒரு மனிதிலிருந்து அசுதத ஆவி துரத்தப்பட்டப்பின் அவ் ஆவி மறுபடியும் வராதபடிக்கு அம்மனிதனில் தேவவல்லமை இருக்க வேண்டும். தேவனருளும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலேயே அசுத்தஆவிகள் மறுமடியும் வராமல் தடுக்க முடியும். 
 
 
மத்தேயு 12:43-45  
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

44. நான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப் போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு,

45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.
 

Friday 15 August 2014

வேதமும் விளக்கமும் - வெளிப்படுத்தல் 3:8 ல் விளக்கம் என்ன?

56. வெளிப்படுத்தல் 3:8 ல் இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.இதன் அர்த்தம் என்ன? (ஜே. சரோஜா, பதுளை, இலங்கை)
 
 
வேதாகம காலத்தில் மக்கள் தம் வீட்டு வாசல் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பர். வீட்டில் எவரும் இல்லாத சமயத்திலும் இரவு நேரத்திலும் மட்டுமே வாசற்கதவு மூடப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் வாசல் கதவு திறந்திருப்பது, வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களோடு பேசுவதற்காக வீட்டுக்குச் செல்லலாம் என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அடையாளமாய் இருந்தது. எனவே இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். எனத் தேவன் கூறுவது அவரிடம் எந்நேரமும் போகலாம். அவர் நம்மைச் சந்திப்பதற்கு எந்நேரமும் போகலாம் அவர் நம்சை் சந்திப்பதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவராய் இருக்கின்றார் என்பதையே அறியத் தருகின்றார். 

Sunday 10 August 2014

:வேதமும் விளக்கமும்- ரோமர் நிருபத்தை எழுதியது யார்? (ரோமர் 16:22)- தெர்தியு, அப். பவுலா?


55. ரோமர் 16:22 இல் இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகின்றேன் என்று எழுதியிருக்கின்றதே. ஆனால் நிருபத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக உள்ளதே. இதைப் பவுல் எழுதவில்லையா? (என் அந்தோனிப்பிச்சை, மூக்கையூர், இந்தியா)
 
பவுலினுடைய நிருபங்களில் அநேகமானவை அவர் சொல்லச் சொல்ல அவருடைய உதவியாளர்கள் எழுதியவைகளாகும். அவ்வகையில் ரோமருக்கு பவுல் எழுதும் நிருபத்தை அவர் சொல்லச் சொல்ல தெர்தியு என்பவர் எழுதியேதோடு ரோமர் 16:22  இல் தனது வாழ்த்துதல்களையும் தெரிவித்துள்ளார். 

Wednesday 6 August 2014

வேதமும் விளக்கமும்-உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே ... சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்?

54.  உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே எல்லாக் கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கும்போது சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்? (நவமணி ஆபேல்,நெய்வேலி, இந்தியா)

அக்காலத்தில் சிமியோன் கோத்திரத்தினர் தனியானதொரு கோத்திரமாக கருதப்படவில்லை. யோசுவா 19:1-19 இல் இக்கோத்திரத்தார் யூதா கோத்திரத்தோடு சேர்க்கப்பட்டுள்ளதை அறியத் தருகின்றது. அதேசமயம் யோசேப்பின் இருகுமாரரான எப்பிராயும் மனாசே என்போருடைய வம்சத்தினரும் தனிக்கோத்திரங்களாக கருதப்படாமையினால், மொத்தம் 12 கோத்திரங்கள் எனும் கணிப்பீட்டில் பிற்காலத்தில் யூதா கோத்திரத்தோடு இணையப்போகும் சிமியோன் கோத்திரம் அக்காலத்தில் தனியான கோத்திரமாகக் கருதப்படவில்லை. எனவே மோசே அக்கோத்திரத்தை தனியாக ஆசீர்வதிக்கவில்லை. எனினும் அவர்கள் யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.