- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 23 January 2014

வேதமும் விளக்கமும்-மத்.10:5 இல் இயேசுகிறிஸ்து தன் சீடர்களை சமாரியர் பட்டணங்களுக்குப் போகவேண்டாம் என ஏன் கூறினார்?



மத்தேயு 10ஆம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து தனது 12 அப்போஸ்தலர்களையும் முதல் தடவையாக ஊழியத்திற்கு அனுப்பும் சம்பவமே குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சமயம் அவர் அவர்களிடத்தில்  நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என கூறினார். இயேசுகிறிஸ்து தனது ஊழியத்தின் இறுதியில் சீடர்களை உலகெங்கும்போய் சுவிஷேசத்தை அறிவிக்கச் சொன்னாலும் (மத். 28:19) முதலில் இஸ்ரவேல் மக்களிடமே அவர்களை அனுப்பினார். 


மத்தேயு 10:5

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

மத்தேயு. 28:19
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மேலதிக விபரங்களுக்கு

நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், ….. ,காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.(மத்தேயு 10:5-6)



Thursday 16 January 2014

ஆபிரகாம் தன் மகனைப் பலியிட முற்படும்போது தடுத்த ஆண்டவர் யெப்தா தன் மகளைப் பலியிட முற்படும்போது தடுத்திருக்கலாமே ஏன் தடுக்கவில்லை?

ஆபிரகாம் தன் மகனைப் பலியிட முற்படும்போது தடுத்த ஆண்டவர் யெப்தா தன் மகளைப் பலியிட முற்படும்போது தடுத்திருக்கலாமே? ஏன் தடுக்கவில்லை. 
 
ஆபிரகாமின் விசுவாசத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே தேவன் அவனது மகனைப் பலியிடும்படி கூறினார். ஆபிரகாம் ஈசாக்கின் மூலமாகத் தன் சந்த்தி விருத்தியடையும் எனும் தேவனது வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தான் ஈசாக்கைப் பலியிட்டாலும் தேவன் அவனை உயிரோடு எழுப்பி தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என நம்பி தன் மகனைப் பலியிடப் போனான். இது தேவனுடைய கட்டளையின்படியான செயல் என்பதனால் அவன் தன் மகனை பலியிட முற்பட்ட போது தேவன் அவனைத் தடுத்தார். ஆனால், யெப்தாவிடம் தேவன் இவ்விதமாகக் கூறவில்லை. அவனே தனது விருப்பத்தின்படி உணர்சிவசப்பட்டவனாக பொருத்தனை பண்ணி, கவலையோடு தன் மகளைப் பலியிட்டான். அம்மோனியரது ஆக்கிரமிப்பை முறியடிக்க தேவன் தன்னுடைய ஆவியை யெப்தாவிற்கு கொடுத்தபோதிலும் (நியாயதி. 11:29) அவன் தன் மீது வந்த ஆவியானவர் தனக்கு வெற்றியைக் கொடுப்பார் எனும் நிச்சியமற்றவனாக, தேவன் தனக்கு வெற்றியைக் கொடுத்தால் தான் திரும்பிவரும்போது தன்வீட்டு வாசற்படியிலிருந்து தனக்கு எதிர்கொண்டு வருவதைத் தேவனுக்கு சர்வாங்கப் பலியாக செலுத்துவதாக பொருத்தனைப் பண்ணி பின்னர் தனது மகளைப் பலியிட்டான். இவனது பொருத்தனையும் அதன் நிறைவேறுதலும் தேவனுடைய சித்தத்த்தன்படியானதாக இராதமையால் தேவன் அவனைத் தடுக்கவில்லை. தேவன் செய்யச் சொல்லாத்தை நாமாகவே விரும்பிச் செய்யும்போது அதை அவர் தடுப்பார் என நாம் எதிர்பார்க்கலாகாது. 
 
நியாயாதிபதிகள் - 11 அதிகாரம்
29. அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். 
 

Monday 6 January 2014

வேதமும் விளக்கமும்- மீகாள், மேராப், மிக்கோலாள் என்போரில் ஆதரியேலுக்குப் பிள்ளைகள் பெற்றவள் யார்?

 2 சாமுவேல் 21:8 இன்படி சவுலின் குமாரத்தியாகிய மீகாள் ஆதரியேல் என்பவனுக்கு 5 குமாரரைப் பெற்றுள்ளாள். ஆனால் 1 சாமுவேல் 18:19 இல்  ஆதரியேலின் மனைவி மீகாள் அல்ல. மாறாக சவுலின் இன்னொரு மகளாகிய மேராப் என்று உள்ளது அதேசமயம் ஆங்கில வேதாகமத்தில் 2 சாமுவேல் 21:8 இல்மேராப் என்றே உள்ளது. ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் 2 சாமுவேல் 21:8 இல் மிக்கோலாள் என்று போடப்பட்டுள்ளது. எனவே மீகாள், மேராப், மிக்கோலாள் என்போரில் ஆதரியேலுக்குப் பிள்ளைகள் பெற்றவள் யார்?
(பாஸ்டர் பி.ஜெயலீலன், பொள்ளாச்சி, இந்தியா)

2 சாமுவேல் 6ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்தில் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே 2 சாமுவேல் 21:8 இல் மீகாள் ஆதரியேல் என்பவனுக்கு 5 குமாரரைப் பெற்றாள் என குறிப்பிடப்பட்டுள்ளது நமக்கு குழப்பதை ஏற்படுத்தலாம். அதேசமயம் 1 சாமுவேல் 18:19 இல் ஆதரியேல் என்பவனுடைய மனைவி மீகாள் அல்ல மேராப் என்றே உள்ளது. உண்மையில் இவ்வசனம் கூறுகின்றபடி மேராப் என்பவளே ஆதரியேலின் மனைவி. அவளே ஆதரியேலுக்கு 5 குமார்ரைப் பெற்றாள். இவ்விடயம் ஆங்கில மொழிபெயர்ப்பில் 2 சாமுவேல் 21:8 இல் மேராப் என்பவள் ஆதரியேலுக்கு 5 குமாரனைப் பெற்றாள் என சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நம் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனத்தில் மேராப் என்பதற்குப் பதிலாக மீகாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது KJV ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வாங்கில மொழிபெயர்ப்பானது இவ்வசனத்தில் எபிரேய மூலப்பிரதிகளை அடிப்படையாக்க் கொண்டிராமல் அரமிக்மொழிபெயர்ப்பிலிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாக்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே 2 சாமுவேல் 21:8 மீகாள் அல்ல மேராப்பே ஆதரியேலுக்கு 5 குமாரரைப் பெற்றாள் என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும். மீகாளுக்கு 2 சாமுவேல் 6:23இன்படி பிள்ளைகள் இருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் மீகாளின் பெயரே மிக்கோலாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 II சாமுவேல் - 21 அதிகாரம்
 8. ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
 
 1 சாமுவேல் 18:19
19. சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
 
 எனது பின்குறிப்பு
திருவிவிலியத்தில் இது சரியாக மொழிபெயர்க்கப்பட்டள்ளது.  
 
 சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,
 

Wednesday 1 January 2014

ஆவிக்குரிய பரிசீலனை-1


1. இன்று நான் எல்லா மனிதருடனும் தாழ்மையாக நடந்தேனா? (தீத்து 3:2)  
ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

2. இன்று நான் ஏதாவது வீண் வார்த்தைகளை பேசினேனா? மத். 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. இன்று நான் யாருடனாவது சுயநலமாக செயற்பட்டேனா?  1கொரி. 13:4-5
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 1கொரி. 13:6

4. இன்று நான் வேறு ஒருவரின் தோல்வியில் சந்தோஷப்பட்டேனா?  
[அன்பு] அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

5. இன்று நான் இறைவனுடைய அரசையும் நேர்மையையும் தேடினேனா?  மத். 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்

6. இன்று நான் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தேனா? கொலோ 1:10
 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

7. இன்று நான் இறைவனின் அன்பை சந்தேகப்பட்டேனா? மல். 1:2
 நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.

8. இன்று நான் ஏதாவது ஒரு உலக காரியத்தில் பெருமைப்பட்டேனா? கலா 6:14
 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதி ருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்

9. இன்று நான் ஏதாவது செய்யக்கூடிய நன்மையை செய்யாமல் விட்டேன். கலா 6:9
 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

10. இன்று நான் ஏதாவது தீமையை வார்த்தையை பேசினேனா? எபே. 4:29
 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.


11. இன்று நான் பிரதிபலன் பார்த்து நன்மை செய்தேனா? மத். 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

12. இன்று நான் இரகசியத்தைக் காத்துக் கொண்டேனா? நீதி 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)