- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 22 December 2013

இயேசுவின் பிறப்பைக் குறித்துக் கேள்விபட்டு வந்த வானசாஸ்திரிகளைப் பற்றி விளக்குவீர்களா?



இவர்கள் பாலஸ்தீனாவுக்கு கிழக்குப் பகுதியிலிருந்த பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என நம்பப்படுகின்றது. சாஸ்திரிகள் என்பதறகு மூலமொழியில் உள்ள பதம் ஆரம்பகாலத்தில் மேதியாவிலிருந்து ஆசாரியர்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டது. கனவுகளுக்கு விளக்கமளிக்கும் ஆற்றல் மிக்க இத்தகைய சாஸ்திரிகள் பாபிலோனிலும் இருந்துள்ளதை தானியேல் 1:202:24:75:7 வசனங்களின் மூலமாக அறிந்திடலாம்.
 
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஜோதிடர், மந்திரவாதிகள், வான சாஸ்திரிகள் என்போரும் இப்பதத்தின் மூலமாக அழைக்கப்பட்டனர். இயேசுகிறிஸ்துவை பார்க்க வந்த சாஸ்திரிகள் கிழக்கிலே அவருடைய நட்சத்ரத்தைக் கண்டு வந்தமையினால், அவர்கள் வானசாஸ்திரிகளாகவே இருந்திருக்க வேண்டும். இவர்கள்இயேசுகிறிஸ்துவிற்கு மூன்று பரிசில்களைக் கொண்டு வந்தமையால் (மத். 2:11) சாஸ்திரிகள் மூவர் வந்திருக்க வேண்டும் என பாரம்பரியம் கூறுகின்றது. அத்தோடு சங்கீதம் 68:29,31 ; 72:10-1, ஏசா 49:7; 60:1-6 என்னும் வசனங்கள் ராஜாக்கள் வந்து மேசியாவை வழிபடுவாடுவார்கள் என அறியத் தருவதால் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் ராஜாக்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. இந்த சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தின் மூலமே யூதருக்கு ராஜா பிறந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டனர். (மத். 2:2)
 
வேதாகமம் வானசாஸ்திரம் உட்பட சகல விதமான ஜோதிட சாஸ்திரங்களையும் வன்மையாக கண்டிப்பதனால் (ஏசா. 47:13-15, தானி. 1:20; 2:37; 5:7, எரே. 10:1-2) தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் இயேசுவின் பிறப்பினை அறிவித்திருக்க  மாட்டார். தான் தடைசெய்த சாஸ்திரத்தினூடாக தேவன் செயல்பட்டால் அவர் முரண்பாடுடையவராகி விடுவார். இயேசுவின் பிறப்பை முன்னிட்டு வானத்தில் ஒரு சிறப்பான நட்சத்திரத்தைத் தோன்றப் பண்ணியதுமட்டுமே தேவனுடைய செயலாகும். அந்நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள் தமது ஆராய்ச்சியின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டுள்ளனர். “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” (மத். 2:2) இதையே அறியத் தருகின்றது. தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் செயல்படவில்லையாயின் வானில் தாம் கண்ட நட்சரத்தித்தின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை சாஸ்திரிகள் எப்படி அறிந்துகொண்டனர் ன நாம் வினவலாம். அக்காலத்தில் பாரசீகப் பகுதிகளில் யூதர்களும் குடியிருந்தமையினால் அவர்களுடைய மார்க்க நூலின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை சாஸ்திரிகள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக எண்ணாகமம் 24:17இலுள்ள தீர்க்கதரிசனப் பகுதியின் மூலமே சாஸ்திரிகள் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை அறிந்திருப்பர். அத்தீர்க்கதரிசனத்தில் ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தாம் கண்ட நட்சத்திரத்தைப் பற்றி ஆராய்ந்த சாஸ்திரிகள், இத்தீர்க்த்தரிசனப் வார்த்தைகளை அடிப்படையாக்க் கொண்டே யூதரின் ராஜாவைத் தேடி எருசலேமுக்கு வந்திருக்க வேண்டும். 
 
தானியேல் 1:20
20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 
 
தானியேல் 2:2 
2. அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
 
தானியேல் 4:7 
7. அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள். 
 
 தானியேல் 5:7 
7. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். 
 
 மத்தேயு. 2:11
 11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
 
சங்கீதம் 68:29,31
29. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.

31. பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
 
 சங்கீதம் 72
10. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11. சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
 
 
மத்தேயு. 2:2
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். 
 
 
 ஏசா. 47:13-15
 13. உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.

14. இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

15. உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
 
 எண்ணாகமம் 24:17 
17. அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
 

Tuesday 17 December 2013

உள்ளான மாற்றத்தின் அவசியம்


இந்தியாவில் பணியாற்றிய ஒரு மிஷனரி இஸ்லாமிய மனிதனொருவனைத் தன் சமையற்காரனாக வைத்திருந்தார். ஒருநாள் அவன் மிஷனரியிடம் “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன். எனவே எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.” என்றான். எனவே, மிஷனரியும் ஒருநாள் அவனது தலையில் சிறிது தண்ணீரை ஊற்றி, “இனிமேல் நீ அப்துல்லா அல்ல, இன்றிலிருந்து நீ தாவீது” என்றார். 

ஞானஸ்நானம் முடிவடைந்த பின்னர் மிஷனரி தன் சயைற்காரனிடம் ”நீ ஒரு காரணத்தை மறந்துவிடக்கூடாது. கிறிஸ்தவனான நீ வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்ச்சி சாப்பிடக்கூடாது. மீன் மட்டுமே சாப்பிட வேண்டும்.” என்று கூறினார்.

சில வாரங்களின் பின்னர் ஒருநாள், சமையற்காரின் உறவினர்கள் அவனைப் பார்க்க வந்தனர். அத்தினம் ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. எனினும், தன் உறினர்களைச் சிறப்பான முறையில் உபசரிக்க விரும்பிய அம்மனிதன், மிஷனரியின் அறிவுறுத்தலையும் மீற ஆட்டிறைச்சிக் கறி சமைக்கத் தொடங்கினான்.

ஆட்டிறைச்சிக் கறி மணப்பதை அறிந்து கொண்ட மிஷனரி, சமையற்காரனைக் கூப்பிட்டு, “தாவீது வெள்ளிக்கிழமையில் ஆட்டிறைச்சி சமையக்கூடாது. மீன் மட்டுமே சமைக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன தானே” என்று கேட்டார். சமையற்காரனும், “நான் ஆட்டிறைச்சியல்ல மீன் தான் சமைக்கிறேன்” என்றான். 

மிஷனரியோ “தாவீது, உன்னால் என்னை ஏமாற்ற முடியாது. நீ ஆட்டிறைச்சிதான் சமைக்கிறாய்” என்றார். ஆனால் சமையற்காரனோ மறுபடியுமாக, “நான் ஆட்டிறைச்சி சமைக்கவில்லை மீன் கறியே சமைக்கிறேன்” என்றான். 

இருவருக்கும் இதுபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று. கடைசியாக சமையற்காரன் “நீங்கள் மட்டுமே ஞானி என நினைக்கவேண்டாம். சில வாரங்களுக்கு முன்னர் நீங்கள் என் தலையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு, நீ இனி மேல் அப்துல்லா அல்ல தாவீது என்று கூறினீர்கள். அதே விதமாக, நானும் ஆட்டிறைச்சியின் மீது சிறிது தண்ணீரை ஊற்றிவிட்டு நீ இனிமேல் ஆட்டிறைச்சியல்ல, மீன்” என்று கூறினேன் எனத் தெரிவித்தான்.

வெளிப்படையான பெயர் மாற்றம் வெறும் சடங்காச்சார செயல் என்பன மனிதனில் உண்மையான மாற்றத்தினை ஏற்பாடுத்தாது. மனிதன் தன் பாங்களிலிருந்து மனந்திரும்பி, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். உள்ளான மாற்றமே ஒருவனை உண்மையான கிறிஸ்தவனாக்கும என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 


நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள். 




Monday 9 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 10–தீர்க்கதரிசனம் - II(இறுதிப்பகுதி)


1. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்க சில விதிகள்

(அ) இறைவாக்கினர் தங்கள் தீரக்கதரிசன தூதுகளை அறிவித்த சூழ்நிலைகளை ஆராய்ந்தறிய வேண்டும்

(ஆ) பொதுவாக தீர்க்கதரிகள் பயன்படுத்துகின்ற உருவகங்ள் ஒப்பனைகள் ஆகிய இவைகளின் கருத்து விளக்கம் ஆகியவை என்னதென்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

(இ) ஒரு தீர்க்கதரிசி கூறும் செய்தியை அதற்கு ஒத்த தீர்க்கதரிசன பகுதிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உதாரணம்
கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையாயுமாயிருக்கும். (ஏசா. 4:2)
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை (ஏசா. 11:1)
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளை (எரே. 23:6; 33:15,16)
இதோ கிளை எனப்பட்ட என் தாசன் (சக. 3:8)
இதோ ஒரு புருஷன், அவருடைய நாம்ம் (சக. 6:12)

(ஈ) புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவேறிய சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும்.

(உ) புதிய ஏற்பாட்டுப் பணியாளர்கள் (இயேசு கிறிஸ்து, பேதுரு, யாக்கோபு, பவுல்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளைக் கவனிக்க் வேண்டும். 

இக்கடைசி விதி மிகவும் முக்கியமானது. புதிய ஏற்பாட்டு அடியாளர்கள் (தேவாவியின் ஏவுதலால் பேசியவர்கள் என்பதை மறவாதீர்கள்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் பகுதிகளை மேற்கோளாகப் பயன்படுத்யபோது அந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவச் திருச்சபையிலும் அந்தத் திருச்சபையின் வரலாற்றிலும் அனுபவத்திலும் நிறைவேறி வருகின்றதாகக் கூறினர் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். 

உதாரணமாக
யோவேல் 2:28-29 பெந்தகோஸ்தே நாளில் நிறைவேறியதாகப் பேதுரு கூறுகின்றார். (அப். 2:16-17)
ஆமோஸ் 8:11,12 விழுந்துபோன தாவீதின் கூடாரம் எங்கும் நிறுவப்பட்டு வருகின்ற திருச்சபையின் மூலம் மறுபடியும்…. செவ்வாயாக நிறுத்தப்பட்டு வருகிறதாக யாக்கோபு கூறினார். (அப். 15:16,17)
யாத். 19:5,6) இறைமக்களாகிய “இஸ்ரவேலரைப் பற்றிக் கூறப்பட்டதெல்லாம் பேதுரு 2:9 இறைமக்களாகிய திருச்பைக்கு பொருத்தமானது என்று பேதுரு கூறப்பட்டுள்ளன. (ரோமர் 9:25)


2. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்கும் முறைகள்

(அ) ஆன்மீகப் பொருள் காணும்முறை (Spiritualizing Method)
(i) சொல்லுக்கு சொல் அப்படியே பொருள் படுத்துவது சரியான முறையன்று என்பர் சிலர். மேலே நாம் கண்ட இக்கருத்தை உறுதிப்படுத்துகின்ற சில எடுத்துக்காட்டுக்களை முன்பே பார்த்தோம் யாக்கோபு, பேதுரு, பவுல் முதலிய அருளுரைத் தொண்டர்கள் தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. 

(ii) யூத இனத்தைப் பொறுத்தவரை நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இனி எதுவும் கிடையாதாம். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டதாம்.! எனவே இஸ்ரவேலரைக் குறித்த தீர்க்கதரிசனங்களுக்கு ஆன்மீக விளக்கம் அளிப்பதே சரி என்று சிலர் எண்ணுகின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் புத்துயர் பெற்றுப் பகைவரின் நடுவில் செழித்து ஓங்கியிருப்பது இக்கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. 

(iii) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வளம் நிறைந்த ஆட்சியைப் பற்றிய தீர்க்கதரிசனப்ப பகுதிகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியையும் அப்பொழுது திருச்சபை அனுபவிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே குறிக்கின்றன. என்று சிலர் கருதுகின்றனர். 


(ஆ) சொல்லுக்குச் சொல் பொருள்காணும் முறை (Literalist Method) 

(i) கூடுமானவரை எங்குமே சொல்லுக்குச் சொல் சரியாய் அல்லது எழுத்துப்படி விளக்கஞ் செய்வதே சரி என்பர் சிலர். 
தேவாலாயம் மீண்டும் எருசலேம் நகரத்தில் (எசேக்கியேலின் சிற்பத் திட்டப்படி 40-49 அதிகாரங்கள்) கட்டப்படுமாம். மீண்டும் அவ்வாலயத்தில் பலிகள் செலுத்தப்படுமாம். (எசே. 45-46 அதி) ஆனால் பலிகள் மீண்டும் செலுத்தப்படுவது எபிரேயர் நிருபத்தின் கருத்துரைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. எனவே இவ்வதிகங்களைச் சொல்லுக்குச் சொல் விளங்கஞ் செய்யக்கூடாது. 

(ii) திருச்சபை உயர எடுத்துக் கொள்ளப்பட்டபின் ஆண்டவர் மீண்டும் யூத இனத்தை மேலும் மேலும் ஆசீர்வதித்து இந்த இனத்தைக் கொண்டு முழு உலகையும் ஆயிரம் ஆண்டுகளாக அரசாள்வாராம்
ஆயிரம் ஆண்டு ஆண்டவர் அரசாட்சி இல்லை என்று சாதிக்கும் சிலர். உலகத்தின் முடிவு காலத்தில் ஏராளமான யூதர்கள் குணப்படுவார்கள் என்றும் (ரோமர் 11:26) நற்செய்தியின் பயனாக உலகெங்கும் ஒரு பெரிய அசைவு ஏற்படும் என்றும், திருச்சபை மிகவும் வளரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மத். 24:12; 2 தீமோ. 3:1 ஆகிய வசனங்கள்  இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு அளக்கின்றனவா?

மேற்கொண்ட விளக்கங்களை நாம் முன்னரே கற்றுக் கொண்ட திருமுறை விளக்க விதிமுறைகளைக் கொண்டு ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டும். 

ஒன்றுமட்டும் திண்ணம்: தந்தை தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கின்ற காலங்களையும் வேளைகளையும் அறிக்கிற உங்களுக்கு அடுத்தல்ல (அப். 1:7) ஆகவே கிறிஸ்து வரும் நாளையோ காலத்தையோ குறிப்பிட்டுத் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற எல்லாக் கள்ளப் போதகர்களிடமும் எச்சரிக்கையாயிரப்பார்களாக. 


3. தீர்க்கதரிசனத்தின் முடிவு கிறிஸ்துவே

கிறிஸ்து நியாயப்பிரமாணங்களை எல்லாம் தமக்குள் நிறைவேற்றி முடித்த்துபோலவே தீர்க்க தரிசனங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்துவிட்டார். 
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியே தீர்க்தரிசனத்தின் ஆவியாயிருக்கின்றது. (வெளி. 19:10) அதாவது தீர்க்கதரசனத்தின் மையப்பொருள்கிறிஸ்துவை முன்னறிவிப்பதாயாகும். “ மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.(லூக். 24:25-27) தீர்க்கதரிசிகள் … தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். (1பேதுரு 1:10,11) என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிளஷறவைகளும் அவைகளே (யோவான். 5:39, அப். 3:18,24; 10:43; ரோமர் 1:4; ரோமர் 3:2) 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத். 5:17)

ஆமென்

(முற்றிற்று)

Tuesday 3 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 9–தீர்க்கதரிசனம் - I

 

1. தீர்க்கதரிசனத்தின் தன்மை

தீர்க்கதரிசனம் என்ற சொல் தீர்க்கதரிசியின் முழு ஊழியத்தையும் குறிக்கின்ற ஒரு சொல்லன்று. தீர்க்கதரிசனமாய் தரிசிக்கின்றவன் அல்லது வருவதை உணரும் ஞானி ஒரு தீர்க்கதரியாவான். ஆயினும் இச்சொல் எபிரேய மூலமொழியில் “நபி” என்பதற்கோ கிரேக்க மொழி மூலமொழியில் Prophet என்பதற்கோ சனமான சொல்லுமன்று. தேவனிடமிருந்து செய்திகளைக் கேட்டு அறிந்து மக்களுக்குத் தூது கொடுப்பவன் என்பதுதான் மூலமொழியின் சரியான பொருளாகும். எனவே, தீர்க்கதரிசியின் ஊழியம் இருவகைப்படும்.

 

(அ) இறைவாக்குறைத்தல் (forth-telling)

தீர்க்கதரிசிகள் இறைவனின் தூதுவராக அவரிடமிருந்து செய்திகளை மக்களுக்கு அறிவிப்பவர்கள். ஆரோன் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டான். (யாத். 7:1) எப்படி? அவன் மோசேயின் சார்பில் மக்களுக்கு தேவதூதை அறிவித்தவன். மோசே திக்கித் திக்கி பேசுகிறவாயிருந்தபடியால் கடவுள் அவன் சகோதரனாகிய ஆரோனை அவனுக்குத் தீர்க்கதரியாகக் கொடுத்தார். ஆரோன் தன் சொந்த வார்த்தைகளைக் கூறாமல் மோசேயின் மூலம் தனக்குக் கற்பிக்கப்பட்ட தேவ தூதுகளை மட்டும் உரைக்க வேண்டும். உண்மையான இறைவாக்கினர் இறைவன் கூறுவதைக் கேட்டு அப்படியே மக்களுக்கு அறிவிப்பார்கள்.

சாமுவேலின் காலம் முதற்கொண்டு இறைவாக்கினர் பலர் எழும்பலாயினர். இளம் வயதிலேயே சாமுவேலை இப்பணிக்கு அழைத்த இறைவன் அவரை ஏலிக்கும் தனது வாக்கை அறிவிக்கப் பயன்படுத்தினார். (1 சாமு. 3:11-14) பின்பு சாமுவேல் இறைவாக்கினர் குழு ஒன்றை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்தார். (1 சாமு. 19:20) தீர்க்கதரிசியின் புத்திரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் மறைநூற் பள்ளி போன்ற ஒரு கூட்டமைப்பை நிறுவி, தங்கள் ஆசிரியருடன் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர் என்று தெரிகின்றது. (2 இராஜா 4:1,38; 6:12)

இறைபயமுடைய அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் இறைவாக்கினர் பெரிதும் மதிக்கப்பட்டனர். தேவ சித்தம் இன்னதென்று அறிந்து தங்களுக்கு அறிவிக்கும்படி அரசர்கள் இறைவாக்கினர்களிடம் கேட்டு வந்தார்கள். இதற்கு மாறாக இறைபயமற்ற தீய அரசகர்கள், மெய்யான இறைவாக்கினரைச் சற்றும் பொருட்டபடுத்தாமல் பொய்த் தீர்க்கதரிசிகளை அழைத்து அவர்களுடைய பொய் வாக்குகளால் தங்களைத் தேற்றிக் கொண்டிருந்தனர். (1 இரா. 22:8; எரே. 14:14; 23:21) இறைவாக்கினருள் சிலர் இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்தனர். அவை பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிலவேளைகளில் தேவன் தமது செய்தியை இறைவாக்கினருக்கு நேராக வெளிப்ப்டுதுவார் வேறு சில வேளைகளில் கனவுகளின் மூலமாயும் காட்சிகளின் மூலமாயும் வெளிப்படுத்துவார். உண்மையான இறைவாக்கினர் தெய்வீக அதிகாரம் பெற்றவர்களாய் “கர்த்தர் சொல்கிறார்” எனத் தூதுரைப்பார்கள். ஆசாரியர் அரசர் மட்டுமல்ல. இறைவாக்கினரும் தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள். (1 இரா. 19:16) கடவுள் பணிக்கெனப் பிரித்தெடுக்கப்பட்டதற்கு இந்த அபிஷேகம் அடையாளமாகும்.

(ஆ) வரும் பொருளுரைத்தல்

இறைவாக்கினருடைய பணி இரு வகைப்படும். தேவ தூதுரைப்பது அல்லது இறைவாக்கைக் கூறுவது ஒன்றாகும். இந்த இரண்டாவது பணிக்கு மட்டுமே தீரக்கதரிசி என்ற சொல் பொருந்தும் இறைவாக்கினர் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைக் கடிந்துரைத்து, மக்கள் மனந்திரும்பி கடவுளுக்குக் கீழ்ப்படிய அறைகூவி அழைப்பர். மிகத் துணிவோடு இப்பணிகளை ஆற்றியதன் காரணமாகச் சில வேளைகளில் இன்னல்களையும் அவர்கள் அனுபவித்தனர். (எரே. 38:4-6) வருவன உரைக்கும்போது இறைமக்கள் நாடு கடத்தப்படுதல், சிறையிருப்புக்குத் தப்பித் தாயகம் திரும்புதல், யூதமக்கள் உலகெங்கும் சிதறியிருத்தல், மீண்டும் தாயகம் திரும்புதல், கிறிஸ்துவின் பாடுகள், மரணம், முடிவில்லா அரசு ஆகிய இவைகளைப்பற்றி முக்கியமாகத் தூதுரைத்தார்கள்.

 

2. தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்

ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்றோ அல்லது அது ஒரே ஒருமுறை தான் நிறைவேறும் என்றோ நாம் எண்ண வேண்டியதில்லை. பல தீர்க்கதரிசனப் பகுதிகளில் இரண்டு உட்கருத்துக்களும் உண்டு. அவையாவன

(1) உடனடி நிகழ்ச்சி (Immediate Referece)

(2) வெகுகாலத்திற்குப் பின் நடக்கும் நிகழ்ச்சி (Ultimate Reference)

ஆகியவையாகும்.

எனவே இத்தகைய தீர்க்கதரிசனங்கள் பகுதி பகுதியாகவோ (Partial Fulfilmet) முழுவதுமாகவோ (Complete fulfillment) ஆகிய இரு நிலைகளில் நிறைவேறும்.

எடுத்துக்காட்டுகள்

(அ) “உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும்” (ஆதி. 15:5)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல் யாதெனில் யூத ஜாதி பெருகினது (யாத். 32:13; உபா. 1:10,1)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல் விசுவாசிகளின் கூட்டம்.

நம்மெல்லோருக்கும் தகப்பனானான். (ரொமர். 4:16-17)

“தேவனுடைய இஸ்ரவேலருக்கும்” (உண்மையான இஸ்ரவேலராகிய இறை மக்கள் மேலும் ((R.C.V) கலா. 6:16; 3:8-9

(ஆ) “ சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. (ஆதி. 49:9-12)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். தாவீதரசன் முதல் சிகேத்திய அரசன் முடிய “ ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது;” (1 நாளா. 5:2)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல் யாதெனில் “அவர் (இயேசு கிறிஸ்து) யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; (லூக். 1:32, 33)

(இ) “அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். (2 சாமு. 7:13-15)

(i) உடனடியாக நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். – சாலமோனும் அவன் வழிவந்த அரசரும்

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல். ; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் … அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக். 1:32,33)

‘நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். (2 சாமு. 7:14) இது ஓரளவுக்கு மட்டுமே சாலமோனுக்குப் பொருந்தும் ஆனால் இயேசுவுக்கோ பொருந்தாது.

 

(ஈ) மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வசனங்கள் சில எருசலேம் நகரின் அழிவையும் (கி.பி. 70ஆம் ஆண்டு) சில உலகின் முடிவையும் காட்டுகின்றன. சில வார்த்தைகள் இரண்டையும் குறிப்பிக்கலாம்

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதிகள் நிறைவேறுதல். கி.பி. 70 ஆம் ஆண்டின் நிகழ்ச்சி

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல். உலகத்தின் முடிவு. மத். 24:34 அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தும் மத். 24:28 பிணம் எங்கேயோ…”

உயிரற்று பிணம் போன்ற யூத மதம் கிடந்த எருசலேமைச் சுற்றி கழுகுகள் போன்ற ரோமப் படைகள் கூடின. (ரோமப் படையின் அடையாளச் சின்னம் ஒரு குழுகுதான்)

இப்போது உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் கிறிஸ்தவ சபைகளை விழுங்கக் கழுகுகள் (உலக ஆசை கொண்ட பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்க்கும் அரசுக்கள்) வரக்கூடும்

முடிவில் உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் அரசுகளையும் சமுதாயப் பண்பாடுகளையும் மதங்களையும் விழுங்க்க் கழுகுகள் (சங்கார் தூதர்கள்) வரக்கூடும்.

3. தீர்க்கதரிசன உருவகச் சொற்கள்

(6 ஆம் அதிகாரம் “அடையாளச் சொற்கள்” என்ற 2ஆம் பிரிவைப் பார்க்க)

 

உருவகச் சொற்கள்

கருத்து

சூரியன் (யோவான் 2:10,31) சந்திரன் நட்சத்திரங்கள் லீபனோன் கேதுருக்கள் (ஏசா 2:13, எசேக். 3:13)

 

வல்லரசுக்கள்

தர்ஷீன் கப்பல்கள் (ஏசா. 2:16)

செல்வம் மிக்க வணிகர்கள்

 

நில நடுக்கம், சூரியன், சந்திரன், இருளடைதல், நட்சத்திரம் விழுதல்

 

அரசியல் புரட்சி, உலக முடிவு

பனி, தூறல், மழை, தண்ணீர், ஆறுகள் (ஏசா. 44:3, ஓசியா 14:5, யோவான் 4:10, 7:38)

 

தூய ஆவியினால் வரும் ஆசீர்வாதங்கள்

மோவாப், அம்மோன் ஏதோம், பாபிலோன்

 

இறைமக்களை (திருச்சபையைச் சூழ்ந்திருக்கும் பகைவர்கள்)

தாவீதின் கொம்பு(சங். 135:17, லூக். 1:75)

நற்செய்தியினால் வரும் இரட்சிப்பு அல்லது கர்த்தராகிய இயேசு

 

தாவீதரசன் (எரே. 30:9; எசே. 34:24; ஓசே. 3:35; அப். 13:34)

 

மேசியா இயேசு கிறிஸ்து

எருசலேம் (சீயோன் (ஏசா 52:1-9); 60:1-14;கலா. 4:26; எபி. 12:22

 

திருச்சபை அல்லது கடவுளின் அருள் நிறை ஆட்சி

தாவீது சாலொமோன் வளமிக்க ஆட்சி (1 இரா. 4:25; மீகா. 4:4; சகரியா 3:10

 

மேசியாவின் ஆட்சி (ஆயிரமாண்டு அரசாட்சி எனப் பலர் கூறுவர்)

 

தீர்க்கதரிசிகளின் மொழிநடை:

(அ) வெகு கலாத்திற்குப் பின் நிகழவிருப்பனவற்றை தங்கள் காலத்தில் ஏற்கனவே நிகழந்திருப்பதாக நினைத்து எழுதுகிறார்கள்
உதாரணமாக “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (ஏசா. 9:6) ‘அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், … பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்’ (ஏசா. 53:3,4) முதலியன இந்த இறந்தகால வினைச் சொற்கள் எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருப்பனவற்றைக் குறிக்கின்றன.


(ஆ) காலத்தால்  ஒன்றுக்கொன்று வெகு தொலைவிலிருக்கும் ஒரே நிகழ்ச்சிகள் ஒரே வசனத்தில் அல்லது ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
உதாரணமாக “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் ..” (ஏசா. 61:2)
அனுகிரக ஆண்டின் துவத்கத்திற்கும் நீதியைச் சரிக்கட்டும் நாளுக்குமிடையில் ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் தீர்க்தரிசியோ இண்டையும் ஒரே வசனத்தில் கூறியிருக்கிறார். இயேசு நாசரேத்து ஜெபாலயத்தில் இந்தப் பகுதியை மேற்கோளாகப் பயன்படுத்தியபோது நாம் அனுக்கரக ஆண்டை வெளிப்படுத்த அனுப்பப்பட்டதாக மட்டும் கூறிவிட்டு நீதியைச் சரிகட்டும் நாளைக் கூறாமல் விட்டுவிட்டார். ஏனெனில் அது பின்னால் நடக்கப் போகிற ஒரு செயலாக இருந்ததினால்தான்

(இ) சில இடங்களில் வருங்கால நிகழ்ச்சிகளை தீர்க்கதரிசனமாக ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
நான் மனுமக்கள் யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:30,31) இந்த வசனங்கள் 2,000 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறவில்லை.
தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சக. 9:9) என்பது கிறிஸ்துவின் தாழ்மையும் “யுத்தவில்லும் இல்லாமற் போகும்”. என்பது அவருடைய அளுகையும் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சக. 9:10) என்பது கிறிஸ்துவின் உயர்வையும் குறிக்கின்றது. கிறிஸ்துவின் தாழ்வும் உயர்வும் மரணப்பாடுகளும் இரண்டாம் வருகையும் முடிவில்லா ஆட்சியும் ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)