53. பவுல் திருமணம்
முடிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் திருமணம் செய்திருந்தார் என்று சிலர்
சொல்கிறார்களே! இது பற்றிய விளக்கம் தேவை. (ஏ.ராயப்பன், திருச்சி, இந்தியா)
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும்போது அவர் அச்சமயம் தனி மனதராகவே இருந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. 1 கொரிந்தியர் 7 ஆம் அதிகாரம் 7ம் 8ம் வசனங்களில் திருமணம் முடித்தவர்களும் தம் துணையை இழந்தவர்களும் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என பவுல் கூறுவது அவர் அச்சமயம் தனிமனிதராகவே இருந்துள்ளதை அறியத் தருகின்றது. அத்தோடு 1 கொரிந்தியர் 9:5 இல், மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? எனும் பவுலின் கேள்வியும் அவர் மற்றைய அப்போஸ்தலர்களைப் போல மனைவியுடன் ஊழியப்பிரயாணங்களை மேற்கொள்ளவில்லை என்பதை அறியத் தருகின்றது.
பவுல் தனது ஊழிய காலத்தில் தனி மனிராக இருந்தபோதிலும், அவர் ஆரம்பத்தில் திருமணம் முடித்திருந்தார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலாவது பவுல் ஆரம்பத்தில் யூத ஆலோசனைச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தமையாகும். யூத ஆலோசனைச் சங்கத்தில் திருமணம் முடித்தவர்களே அங்கத்தினர்களாக இருந்தமையால் அச்சங்கத்தில் அங்கத்தினராக இருந்த பவுலும் திருமணம் முடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. இரண்டாவதாக பவுல் ஒரு பரிசேயனாகவும், யூதமதப் போதகராகவும் இருந்தமையாகும். யூதமதப் போதகர்கள் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பது அக்கால யூதமதமார்க்க சட்டமாயிருந்தது. தான் யூதமார்க்க சட்ட திட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு வாழ்ந்தாகப் பவுல் கூறுவதிலிருந்து அவர் அச்சட்ட திட்டங்களின்படி ஆரம்பத்தில் திருமணம் முடித்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. இது உண்மையின் பவுலின் மனைவிக்கு என்ன நடந்தது என்பத பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இதனால் ஒன்றில் பவுலின் மனைவி மரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இரட்சிக்கப்பட்ட பின்பு அவரை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் பின்னர் பவுல் மறுவிவாகம் செய்யாமல் தனிமனிதராகவே வாழ்ந்துள்ளார்.
I கொரிந்தியர் 7 அதிகாரம் 7-8
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.
8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.
8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்
5.
மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல,
மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும்
அதிகாரமில்லையா?
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment