- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 21 July 2012

எழுதப்புதலின் விளைவு


எழுப்புதலின் சரித்திரத்தை நாம் படிக்கையில். அந்த எழுப்புதல்களைத் தொடர்ந்து மிஷனரி இயக்கங்கள் எழுந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட எழுப்புதலின் விளைவாக 19ம் நூற்றாண்டில் மிஷனரி இயக்கங்கள் உருவாகின. 

1885ம் ஆண்டு கிறேஸ், றொபட் என்ற இருவர் இந்தியாவில் மிஷனரிப் பிள்ளைகளாக வளர்ந்தனர். அமெரிக்காவில் மிஷனரி ஊழியத்தை குறித்து பெரிதான ஊக்கம் வரவேண்டுமென பாரத்தோடு ஜெபித்தார்கள். அங்குள்ள சபைகள் நிர்விசாரமான நிலையில் இருந்தன. தேவன் ஆயிரம் மிஷனரிகளை எழுப்ப வேண்டுமென ஜெபித்தனர். றொபட் தனது தரிசனத்தை பிரின்ஸ்டன் செமினரியிலுள்ள தன்னுடைய உடன் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் ஐந்து பேர சேர்ந்து மிஷனரி ஊழியத்திற்காக ஜெபித்தனர். 

டி.எல். மூடி அவர்கள் பேச்சாளராக வருவதற்கிருந்த கருத்தரங்கில் பங்குபற்றும்படி றொபர்டின் சகோதரர்கள் அவரை வற்புறுத்தினார்கள். றொபர்ட் மற்ற மாணவர்களுடன் தனது தரிசனத்தைப் பகிர்ந்து கொண்டு ஜெபகூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 5 பேராக தொடங்கிய ஜெபக்கூட்டம் 20 பேர்களைக் கொண்டதாக மாறியது. 

நடக்கவிருந்த கருத்தரங்கில் டி.எல். மூடி அருட்பணியைக் குறித்துப் பேசுவதாக இருக்கவில்லை. ஆனால் இரண்டு மாலைச் செய்திகளை அதற்கு ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதில் ஒன்றினை மாணவர்கள் நடத்தினர். பத்து நாடுகளைப் பற்றி அங்குள்ளவர்களுக்கு எடுத்துக் கூறினார். அநேக மாணவர்கள் அருட்பணி ஊழியத்தறிகுத் தங்களை அர்ப்பணித்தனர். அதில் ஒருவர் பின்னர் பிரபலமாகிய ஜோன். ஆர். மொட் என்பவராவார். இவர் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் “பரிசுத்தாவியானவர் வல்லமையோடு இந்த இடத்தில் செயற்படுகிறார். இன்று மதியம்வரை 80 இற்கும் அதிகமான மாணவர்கள் அந்நிய நாடுகளில் மிஷனரி ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்துள்ளனர். ஞாயிறு மாலையில் அது நூறாக மாறும் என நம்புகிறேன்“ என்று எழுதியுள்ளார். இதனை வாசிக்கும் நண்பனே! நீ வசிக்கும் இடம், சுற்றியுள்ள இடங்கள், தூரத்தே உள்ள இடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அனுப்பும்படி தேவன் மிஷனரிகளை எழுப்ப வேண்டுமென இன்று நீ ஜெபிக்கத் தொடங்குவாயா?  

ஜெபம்
“கர்த்தாவே, மிஷனரிப் பணிக்காக புறப்பட்டு செல்ல பலர் எழும்ப வேண்டுமென்ற வாஞ்சையுடன் ஜெபிக்க என்னை உமது ஜெப ஆவியினால் நிரப்பும். ஆமென் 



Saturday 7 July 2012

கிறிஸ்தவர்களும் திருட்டு சீடிக்களும்

ஒருவர் ஒரு பொருளைத் தயாரிக்கும்போது எந்தளவு பிரயாசத்தை செலுத்தியும் பணத்தை முடக்கியும் அதைத் தயாரிக்கிறார்கள் என நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? எனினும் அவை வெளிவரும்போது அதை திருடுவதற்கென ஒரு கூட்டம் இருப்பதை அறிவீர்களா?

பிறர்படும் கஷ்டத்தப் பிரயாசத்தை திருடி பிரதி (Copy) பண்ணி வி்ற்பனை செய்வது திருட்டாகும். தாம் பிரயாசப்படாமல் கஷ்டப்படாமல் இதில் ஈடுபடுவது சோம்பேறித்தனமான ஒரு பாவமாகும். இதனால் உரியவர்களுக்கு சேரவேண்டிய நன்மை, புகழ் என்பன பிறரினால் களவாடப்படுகின்றன. தயாரிப்பவரின் பணம் வீண் விரயமாகின்றது இதை குறுக்குவழியில் சம்பாதிப்பவர்கள் புரிந்து கொள்வதேயில்லை. உதாரணமாக ஒரு உடல்பலவீனமுள்ள ஒருவர் தனது குறைபாடுகளின் மத்தியிலும் பொருட்களை உற்பத்தி செய்கிறார் என்றால் அதனால் அவருக்கு சேரவேண்டிய ஆசீர்வாதம், இலாபம், செல்வம் அனைத்தும் பிறரால் சுரண்டப்படும்போது அவரது நிலை என்னவாகும்? அவருடைய உற்பத்தியை திருட்டுத்தனமாக சந்தைப்படுத்துபவர்கள் வீட்டிலே சாபம்தானே குடியிருக்கும்.

உண்மையில் திருட்டு சீடிக்களை தயாரிப்பது ஒரு பெரிய குற்றம். அதை வாங்குவதன் ஊடாக அத்திருட்டுக்கு உடந்தையாவது ஒரு சாபம். தாமறியாமலேயே இன்று அநேக கிறிஸ்தவர்கள் சாபத்தை வருவித்துக் கொள்கின்றனர். வேதாகமத்தில் “களவு செய்யாதிருப்பாயாக (யாத். 20:5) என்ற கட்டரைளயைக் காண்கிறோம். பிறருக்கு சொந்தமான பணம், புகழ் மற்றும் அவர்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை களவாய் எடுத்துக் கொள்ளக் கூடாது என இக்கற்பனை கூறுகிறது. நாம் பிறருக்குரியதை இச்சிப்பது ஒரு பாவமேயாகும்.

இன்று ஒரு சில விசுவாசிகளும். ஊழியர்களும் திருட்டு சீடிக்களை வாங்கிச் செல்வதினால் இதை கிறிஸ்தவ மக்களிடையே ஒழிக்க முடியவில்லை என சில வற்பனை உற்பத்தி செய்யும் நபர்கள் கவலைப்படுகின்றனர். திருட்டு எவ்விதத்தில் இருந்தாலும் அதனை நாம் எவ்வகையில் நியாயப்படுத்தி விட முடியாது. திருட்டு சீடிக்களை விற்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரோமர் 12:7 கூறுகிறது. “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.“ “கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்“ (2 கொரி 8:21) ஆகவே அனைத்து கிறிஸ்தவர்களும் விசுவாசிகளும் சிந்தித்து இத்தகைய திருட்டுக்கு உடந்தையாகாமல் இருக்க முற்பட வேண்டும். ஏனென்றால் திருட்டு செயல்களுக்கு தண்டனை உண்டு. சிலது தேவனால் காலதாமதமாக தண்டிக்கப்படும். இன்று பணநோட்டுக்களை அச்சடித்து விற்பனை செய்வதனால் அது சட்ட விரோதம் என கூறும் அரசாங்கம் அவர்களைக் கைது செய்து தண்டனை கொடுக்கும். அதேபோலதான் இத் திருட்டுக்கு தேவனால் கொடுக்கப்படும் தண்டனை ஒரு சாபமாகத் தானே இருக்கும்? துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது (நீதி. 3:33)

திருட்டு பொருட்களை வாங்குபவர்கள் இருக்கும்வரை திருடர்கள் பெருகத்தான் செய்வார்கள். எனவே, ஒருபோதும் போலிக்கு இடமளிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கும் போலி பொருட்களுக்கும் சம்பந்தம் வேண்டாம். ஆசீர்வாதமான வாழ்க்கை வேண்டுமானால், ஆசீர்வதமான முறைமைகளைப் பின்பற்றுங்கள். ஆசீர்வாத முறைமையைப் பின்பற்றுவதானது ஆசீர்வாதத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும். சரி, அன்பார்ந்த கிறிஸ்தவ நண்பர்களே இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

சார்ல்ஸ் ஸ்டீபன் அசரியா