- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 31 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 3

சங்கீதங்களின் உருவங்கள் என்னும் இத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க 


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்


சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்



பின்வரும் விடயங்கள் இவற்றில் ஆராயப்படும்
(அ) உயிருருவகவணி (Personification) 
(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy) 
(இ) பிரதியீட்டணி (Synecdoche)
(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole) 
(உ) புனையுருவணி (Apostrophe) 
(ஊ) வஞ்சிப்புகழ்ச்சியணி (Irony)
(எ) மனுவுருவகவணி (Anthropomorphism)
(ஏ) மிருகவுருவகவணி (Zoomorphism) 


(அ) உயிருருவகவணி (Personification)
கவிதைகளில் சில சந்தர்ப்பங்களில் சாதாரண விபரணங்களிலும்) உயிரற்ற பொருட்களையும் பண்புப் பெயரால் குறிப்பிடப்படுகின்றவைகளையும் உயிருள்ள ஜீவிகளாகவும் நபர்களாகவும் வர்ணித்து எழுதும்போது உபயோகிக்கப்படும் உருவகங்கள் உயிருருவகவணி (Personification) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு “மலர்கள் சிரித்தன“ “நிலவு பேசியது“ “தென்றல் தொட்டது“ என்று கூறும்போது உயிரற்ற பொருட்கள் உயிருள்ள நபர்களாக வர்ணிக்கப்படுகி்னறன. சங்கீதங்களில் “ஆறுகள் கைகொட்டுவதாகவும்“ பர்வதங்கள் பாடுவதாகவும் (சங். 98:8) மலைகள் துள்ளுவதாகவும் (சங். 114:4) ஏசாயா 42:12 இல் மலைகள் கம்பீரமாக முழங்குவதாகவும்“ “மரங்கள் கைகொட்டுவதாகவும்“ ஏசாயா 35:1 இல் “வானந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்வதாகவும்“ எரேமியா 46:10 இல் பட்டயம் வெறித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், வேதாகம ஆசிரியர்கள் உண்மைக்கு மாறான விதத்தில் எழுதியுள்ளதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் அவர்கள் உயிருவருவத்தின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள சூழல அவ்வாறு வர்ணித்துள்ளனர். 

வேதாமத்தில் உள்ள உயிருருவகங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்வது பிழையான உபதேசங்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதற்கு சிறந்த உதாரணம் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில்  “ஞானம்“ உயிருருவகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதிச்சபைப் பிதாக்கள் சொல்லர்த்தமாகக் வியாக்கியானம் செய்ததன் விளைவாக இயேசுக்கிறிஸ்துவின்  தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டு உபதேசம் உருவானது.. நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானம் கூப்பிடுவதாகவும், சத்தமிடுவதாகவும் (8:5-11) பேசுவதாகவும் (8:5-11) மனிதர்களை நேசிப்பதாகவும் (8:17-20) குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஆதிச்சபை பிதாக்கள் இவ்வசனத்தில் உயிருருவகத்தில் ஞானம் வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், இவ்வசனங்களை உண்மையான ஒரு மனிதனைப் பற்றிய விபரணமாக எடுத்து, இவை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய விவரணம் என்று கூறியமையால், பிற்காலத்தில் வேதப்புரட்டர்கள் இவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவைப் பற்றிய சில வேதப்புரட்டு உபதேசங்களை உருவாக்கியுள்ளனர். பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் நீதிமொழிகள் 8:22 இல் “ஞானம் சிருஷ்டிக்கப்பட்டுள் ளதாகக்“ குறிபபிடப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு (6) கி.பி. 4ம் “ஏரியஸ்“ என்பவர் இயேசுக்கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் என போதித்தார். இப்பிழையான போதகத்தின் செல்வாக்கு தற்காலத்தில் “யெகோவா சாட்சிகளுடைய“ உபதேசத்தில் உள்ளது(7). இதனால், வேதாகமத்தில் உயிருருவகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள  பகுதிகளை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதப்புரட்டு உபதேசங்கள் உருவாகுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. 




(ஆ) ஆகுப்பெயரணி (Metonymy)
 ஒரு வார்த்தைகக்குப் பதிலாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இன்னுமொரு வார்த்தையை உபயோகிக்கும் போது அது ஆகுப்பெயரணியாக (Metonymy) உள்ளது. உதாரணத்திற்கு கீரை விற்பவரை “கீரை“ என்று கூபபிடும்போது கீரை எனும் பதம் கீரையை அல்ல கீரை விற்பனை அழைக்கும் பதமாகவே உள்ளது. இதேவிதமாக லூக்கா 16:29 இல் அவர்களுக்கு “மோசேயும் தீர்க்கதரிசளும் உண்டு“ எனும் கூற்று, புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் மோசேயும் தீர்க்கதரிசிகளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவ்வாக்கியம் ஆகுபெயரணியாக, மோசேயும் ஏனைய தீர்க்கதரிசளும் மக்களோடு இருக்கிறார்கள் எனும் அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. இவ்வாக்கியம் ஆகுபெயரணியாக மோசேயும் ஏனைய தீர்க்கததரிசிகளும் எழுதிய வேதவாக்கியங்களை குறிப்பிடும் விபரணமாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது. சங்கீதப்புத்தகத்தில் “கை“ என்னும் பதம் செயலைக் குறிப்பிடுவதற்கும் (சங். 7:3) (8 ) “நாமம்“ என்னும் பதம் தேவனைக் குறிப்பிடுவதற்கும் (சங். 9:10) “வாய்“ என்னும் பதம் பேச்சைக் குறிப்பிடுவதற்கும் (சங். 5:9) ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. (9) நாம் இத்தகைய உருவக விபரணங்களைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், ஒன்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை அது எதைக் குறிப்பிடுகிறது என்பதைக் கருத்திற் கொள்ளாமல், குறிப்பிடட வசனத்தில் சங்கீதக்காரன் சொ்ல்லும் விடயத்தைத் தவறாகவே புரிந்து கொள்வோம். 

(இ) பிரதியீட்டணி (Synecdoche)
பொருளின் ஒரு பகுதிக்குப் பதிலாக அதை முழுமையாக அல்லது அதன் முழுமைக்குப் பதிலாக அதன்ஒ ர பகுதியைக் கறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள உருவகம் பிரதியீட்டணி (Synecdoche) என்று அழைக்கப்படுகின்றது. (10) அதாவது தனின். ஒரு பகுதியைக் குறிப்பிட முழு மனிதனைக் குறிப்பிட மனிதனின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிடும் முறை இதுவாகும். உதாரணத்திற்கு ஆதியாகமம் 42:38 இல்,  “நரைமயிர் பாதாளத்தில் இறங்குவதாக“ குறிப்பிடப்பட்டிருப்பது, நரை மயிர் மட்டும் பதாளதாதிற்கு செல்வதைப் பற்றி அல்ல, மாறாக, முழு மனிதனும் பாதாளத்திற்குச் செல்வதைக் குறிப்பிட அம்மனிதனின் ஒரு பகுதியை “நரைமயிர்“ மட்டும் இவ்வசனத்தில் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது(11) இதேபோல் நீதிமொழிகள் 1:15-16 இல் “கால்கள்“ ரோமர் 16:4 இல் “கழுத்து(12)“ சங்கீதம் 35:10 இல்“எலும்புகள்“ என்னும் பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் பிரதியீட்டணியாகவே உள்ளது. மேலும், சங்கீதங்களில் “ஆத்துமா” என்னும் பதம் பல இடங்களில் முழு மனிதனையும் குறிப்பிட்டும் பிரதியீட்டணியாகவே இருப்பதனால் மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் உபதேசங்களுக்கு இவ்வசனங்களை உபயோகிக்கும்போது, சங்கீதக்காரன் சொல்லும் விடயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. (13)பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு பிரதியீட்டணியில் ஒரு பகுதியைப் பற்றி கூறுவதற்கு அதை முழுமையாக்க குறிப்பிடுவது உண்டு. உதாரணத்திற்கு லூக்கா 2:1 இல் “உலகமெங்கும்“ என்பது முழு உலகத்தையும் அல்ல, அக்கால “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்பதைக் குறிக்கும் பிரதியீடடணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிக்கும் ரோம சக்கரவர்த்தி அக்காலத்தில் ரோம இராட்சியத்திலேயே குடித்தொகை கணிப்பீட்டைச் செய்தான். இதனால் புதிய ஆங்கில வேதாகமங்களில் இவவ்சனத்திலுளள பிரதியீட்டணி “ரோம சாம்ராட்சியம் எங்கும்“ என்று விளக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேவிதமாக யோசுவா 7:11 இல் “இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள்“ என்பது, இஸ்ரவேல் மக்களில் பாவம் செய்த ஆகான் என்னும் ஒருவனைக் குறிப்பிட (யோசு. 7:1) ஒரு பகுதியைக் குறிப்பிட அதன முழுமையை உபயோகிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. இதேவிதமாக சங்கீதங்களிலும் ஒரு பகுதியைக் குறிப்பிட அதன் முழுமையையும் முழுமையைக் குறிப்பிட அதன் ஒரு பகுதியையும் பிரதியீட்டணியாக உபயோகிக்கப்பட்டிருப்பதனால், நாம் இவற்றைக் கருத்திற் கொள்ளாது சங்கீதத்தின் வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது சங்கீதக்காரர்கள் சொல்லும் விடயங்களைச் சரியான விதத்தில் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும். 


(ஈ) உயர்வுநவிற்சியணி (Hyperbole)
ஒரு விடயத்தை முக்கியப்படுத்திக் கூறுவதற்கு மிகைப்படுத்திக் சொல்வதற்கு உபயோகிக்கப்படும் உருவகம் “உயர்வுநவிற்சசியணி“ (Hyperbole) என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய உருவகங்களை உருவக விவரணமாக விளக்காமல் சொல்லர்தமாக எடுத்தால், குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பொய்யாகவே இருக்கும். ஆனால், இது மக்களை வஞ்சிப்பதற்காகச் சொல்லப்படும் பொய் அல்ல. ஆனால், சொல்லப்படும் விடயத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் அதை முக்கியப்படுத்துவதற்காகவும் மிகைப்படுத்திச் சொல்லும் ஒரு முறை சாதாரண மொழிவழக்கில் உள்ளது. உதாரணத்திற்கு விபத்தில் அகப்பட்ட வாகனம் பாரிய அளவில் உடைந்துபோனதைப் பற்றி குறிப்பிட வாகனம் “சுக்குநூறாக உடைந்துவிட்டதாக“ கூறுவதும் மக்கள் படுகாயமடைந்து கிடப்பதைச் சுட்டிக் காட்ட அவர்கள் “இரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும்“ கூறும்போது இவற்றைச் சொல்லர்த்தமாக அல்ல உயர்வுநவிற்சியாகவே சொல்லுகிறோம். வேதாகம ஆசிரியர்களும் இத்தகைய உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு பெருந்திரளான மக்கள் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றிச் சென்றதை குறிப்பிட்ட பரிசேயர்கள் “இதோ உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே“ என்று கூறினார்கள்.(யோவான் 12:19) உண்மையில் உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் போய்விட்டார்கள் என்று சொல்லர்த்தமாக இக்கூற்றை வியாக்கியானம் செய்தால் அது பொய்யாகவே இருக்கும். இவ்வாறு கூறிய பரிசேயர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை. மேலும், அச்சமயம் எருசலேமைத் தவிர வேறுபிரதேசங்களில்  இருந்தவர்களில் எவரும் இயேசுக்கிறிஸ்துவின் பின்னால் செல்லவில்லை. அப்படியிருந்தும் பரிசேயர்கள் “உலகமே அவர் பின்சென்றது“ என்று கூறுவதற்குக் காரணம், பெருந்திரளான மக்கள் அவர் பின்னால் சென்றதேயாகும். இதேவிதமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமான காரியங்களை இயேசுக்கிறிஸ்து செய்தார் என்பதை அறியத் தரும்போது “அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் கொள்ளாது (யோவான் 21:25) என்று உயர்வுநவிற்சியணியில் தெரிவித்துள்ளார். 

சங்கீதங்களை எழுதியவர்களும் தாங்கள் சொல்வதை வலியுறுத்துவதற்கும் முக்கியப்படுத்துவதறகும் உயர்வுநவிற்சியணி என்னும் உருவகத்தை உபயோகித்துள்ளனர். உதாரணத்திற்கு, சங்கீதக்காரன் அதிகமாக அழுததைக் குறிப்பிட “என் கண்களிலிருந்து நீர்த்தரைகள் ஓடுகின்றன” (சங். 119:136) என்றும் “இராமுழுவதும் என் கண்ணீரால் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன் (சங். 6:6) என்றும் எழுதியுள்ளான். இதைப்போன்ற உயர்நவிற்சியணிகள் பல சங்கீதங்களில் உள்ளன. இவற்றை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்தால், சங்கீதக்காரன் சொல்வதை தவறாகவே புரிந்து கொள்வோம். சிலநேரங்களில் அவன் பொய் சொல்வதாக கூட நாம் நினைக்கலாம். ஆனால் உயர்வுநவிற்சியணி உபயோகிக்கப்படும்போது சொல்லப்படுவதை உருவகமாகவே நாம் எடுக்க வேண்டும். எனவே, உயர்வுநவிறசியணி என்னும் உருவகத்தை சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து வேதவசனங்களுக்கு பிழையான அர்த்தம் கற்பிக்க்க கூடாது. 
(அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

Footnote and References.
(6) மூலமொழியின்படி இவ்வசனத்தின் இறுதிப்பகுதி நாம் உபயோகிக்கும் தமிழ் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிரு்ப்பது போல, “ஆதியாய் கொண்டிருந்தார்” என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். 

(7) மேலதிக விளக்கத்திற்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு 
கிறிஸ்தவனின் பதில்கள் என்னும் நூலினை பார்க்கவும் (பக். 100-103)

(8 ) 1 சாமுவேல் 22:17 2சாமுவேல் 3:12, 14:19 என்னும் வசனங்களிலும், “கை“ என்னும் பதம் ஆகுப்பெயரணியாக உபயோகிக்கப்பட்டுள்ளது.

(9) உதாரணத்தி்ற்கு “யுத்தம்“ என்பதற்குப் பதிலாக பல இடங்களில் “பட்டயம்“ என்னும் பதத்தை வேதாகமம் ஆகுப்பெயரணியாக உபயோகித்துள்ளது. (யாத். 5:3, ஏசா 1:20, எரே. 14:12-13, 14:15-16)

(10) R.B. Zuck, Basic Bible Iterpretation p.151)

(11) பழைய ஏற்பாட்டில் பாதாளம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள “ஷியொல்“ என்னும் எபிரேயப் பதம் “புதைகுழி“ அல்லது கல்லறை“ என்னும் அர்த்தமுடையது

(12) ரோமர் 16:4 இல் பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் தன் பிராணனுக்காகத் “தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்“ என்று பவுல் குறிப்பிட்டு்ளளார். இவ்வசனத்தில் பிராணன் என்று மொழிபெயர்க்க்பபட்டுள்ள பதம் “ஆத்துமா“ எனும் அர்த்தமுடையது. எனவே, இவ்வசனத்தில் “ஆத்துமா“ என்னும் பதமும் முழுமனிதனைக் குறிக்கும் பிரதியீட்டணியாக உள்ளது. 

(13) கிறிஸ்தவ உலகில் ஆரம்பத்திலிருந்தே, மனிதன் இரண்டு பகுதிகளாகவா அல்லது மூன்று பகுதிகளாகவா இருக்கின்றான் எனனும் சர்ச்சை இருந்து வந்துள்ளது. சில கிறிஸ்தவர்கள் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் என்று மூன்று பகுதிளாக வேதாகமம் பிரித்து்ளதாகக் கூறுகின்றனர். எனையவர்கள் இதை மறுதலித்து, மனிதனை இரண்டு பகுதிகளாகவே பிரிக்க முடியும் என்று கருதுகி்ன்றனர். ஆனால் வேதாகமத்தில் மனிதனுடைய பல பகுதிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சில பதங்கள் முழு மனிதனையும் குறிப்பிடும் விதத்தில் பிரதியீட்டணியாகவே உபயோகிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வசனங்களை ஆதாரமாகக் கொ்ண்டு மனிதனை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிப்பது தவறாகும். வேதகமம் மனிதனைப் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அல்ல. முழுமையானவனாகவே பார்க்கிறது. 

Wednesday 25 May 2011

காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறான்றையும் தாமாய் செய்யமாட்டார்( யோவான் 5:19)



இயேசுக்கிறிஸ்துவின் சில கூற்றுக்கள் அவரது தேவத் தன்மையை முரண்படுத்தும் விதத்தில் இருப்பதை நாம் அவதானிக்கலாம். வேதபுரட்டர்கள் இத்தகைய கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை தறுதலித்து வருகின்றனர். யோவான் எழுதிய சுவிசேஷத்தில் காணப்படும் இத்தகைய கூற்றுக்களில் ஒன்று 5ம் அதிகாரத்தில் உள்ளது(1) இயேசுக்கிறிஸ்து தம்மைத் தேவனுக்குச் சமனாக்குகின்றார் என்னும் யூதர்களின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கும்போது “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்“ என்று 5ம் அதிகாரம் 19ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் வேதப்புரட்டர்கள் அவர் கூற்றில் “தாமாய் செய்யமாட்டார்“ என்னும் சொற்பிரயோகத்திற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து, இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது என்று தர்க்கித்து வருகின்றனர். எனினும் இவர்கள் வாதிடுகின்ற விதமாக, “இயேசுக்கிறிஸ்துவினால் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது“ என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல“ அதேபோல் இயேசுக்கிறிஸ்து பிதாவில் சார்ந்திருக்கும் அல்லது தங்கியிருக்கும் நிலையையே இவ்வசனம் அறியத் தருகிறது. (3) என்னும் சில வேத ஆராய்ச்சியாளர்களின் விளக்கமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. 

இயேசுக்கிறிஸ்து யோவான் 5:19 இல் சொல்லும் விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு இவ்வசனத்தை முழுமையாகப் பாரக்க வேண்டியது அவசியம். (4) வேதப்புரட்டர்கள் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியை கருத்திற் கொள்வதில்லை. இவ்வசனத்தின் இறுதிப் பகுதி “அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.“ என்று உள்ளது. அதாவது பிதா செய்பவற்றை குமாரனும் அதேவிதமாக செய்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும. உண்மையில் பிதா செய்பவைகளை தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் அறியத் தருகிறார். இது இருவரும் ஒரே தன்மையும் வல்லமையும் உடையவர்கள் என்பதை அறியத் தருகின்றது. இதனால்தான் இருவராலும் ஒரே காரியத்தைச் செய்யக் கூடியதாக உள்ளது. (5)

இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றில் “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ“ எனும் வாக்கியம் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள அந்நியோன்ய உறவைச் சுட்டிக் காட்டுகிறது. “இது இருவருக்கும் இடையில் எப்பொழுதும் இருக்கும் உறவாகும்“(6) உண்மையில் பிதா செய்கிறவைகளை குமாரனைத் தவிர வேறு எவராலும் பார்க்க முடியாது. (7). இயேசுக்கிறிஸ்துவினால் மட்டுமே பிதாவைப் பார்க்க முடியும் என்பதால் அவர்கள் இருவருக்கும் இடையிலுள்ள உறவு மிகவும் நெருக்கமானதும் அந்நியோன்ய சம்பந்தமானதுமாக உள்ளது. எனினும் பிதா செய்கிறவைகளைப் பார்த்து செய்யும் முறையைப் பற்றி இயேசுக்கிறிஸ்து இங்கு குறிப்பிடவில்லை. (8) என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம். (9) இது இருவருக்கும் இடையேயுள்ள அந்நியோன்னிய சம்பந்தமான உறவையே சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிதாவினால் செய்பவற்றைத் தன்னாலும் செய்ய முடியும் என்பதையே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பிதா செய்பவைகளைத் தாமும் செய்வதாக இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் குறி்ப்பிட்டாலும் “குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார்“ எனும் வாக்கியத்தின் மூலம் தாம் “தனித்து தன்னிச்சையாகச் செயற்படுவதில்லை“ என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது “அவர் பிதாவின் சித்தத்தை மீறி அதற்கெதிராகத் தனித்து செயற்படமாட்டார்“ என்பதே இயேசுக்கிறிஸ்துவினுடைய கூற்றின் அர்த்தமாகும். (11) இயேசுக்கிறிஸ்து  இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பிதாவின் சித்தத்தின்படியே செயல்பட்டு வந்தார். (யோவான் 6:38, 5:30) இதனாலேயே குமாரன் தாமாய் எதையும் செய்யமாட்டார் என்று அவர் கூறினார். “இயேசுக்கிறிஸ்து  செய்பவைகள், அவரும் பிதாவும் ஒன்றாகச் சேர்ந்து செய்பவைகள் ஆகும் (12). எனவே இங்கு ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணத்திற்கு எவ்வித இடமுமில்லை. எனவே, இயேசுக்கிறிஸ்து பிதாவின் சித்தத்திற்கு முரணாக எதுவும் செய்யாமல் இருப்பதனால் அவர் பிதாவை விடத் தாழ்வானவர் என்றோ, இல்லையென்றால் வல்லமை குறைந்தவர் என்றோ எண்ணுவது தவறாகும்

(இவ்வாக்கமானது சகோ வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக கல்லூரி)

Foot Note & Reference 
(1) ஏனைய சுவிசேஷங்களில் காணப்படும் இயேசுக்கிறிஸ்துவின் இத்தகைய கூற்றுக்களின் விளக்கங்களுக்கு ஆசிரியரின் யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்“ மறறும் இயேசுக்கிறிஸ்து இறைவனா? எனும் நூல்களைப் பார்க்கவும்

(2) 38 வருடங்களாக வியாதியோடிருந்தவனைக் குணப்படுத்திய இயேசுக்கிறிஸ்து அதை யூதர்கள் எதுவும் செய்யாத ஓய்வுநாளில் செய்தமையால் அவர்கள் அவரைக் கொலைசெய்ய முற்பட்டார்கள். இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்.“ என்று கூறினார். இதன் மூலம் ஓய்வு நாளில் செயல்படுவதற்கு, தேவனுக்குத் தடைகள் எதுவும் இல்லாதிருப்பது போலவே தமக்கும் எவ்வித தடையும் இல்லை என்பதை இயேசுக்கிறிஸ்து சுட்டிக் காட்டியுள்ளார். இதுவும் அவர் தம்மை தேவனுடைய சொந்தப் பிதாவாக குறிப்பிட்டதும், யூதர்களுக்கு அவர் தம்மைத் தேவனுக்குச் சமமானவராக்குவதாகத் தென்பட்டது. இதனால், நியாயப்பிரமாணத்தில் தேவனை நிந்திப்பதற்குக் கொடுக்கப்படும் தண்டனையான மரணதண்டனை கொடுப்பதற்கு யூதர்கள் வகை தேடினார்கள். (யோவா. 16-18) இதை அறிந்த இயேசுக்கிறிஸ்து தமது தேவத்துவதற்திற்கான ஆதாரங்களை சுட்டிக் காட்டுவதற்காகச் சொல்லும் விடயங்களில் ஆரம்ப வசனம் இதுவாகும். 

(3) G.L. Borchert, John 1-11: The New American Commentary, p 235; M.C. Tenny, The Expositor's Bible Commentary Volume 9, P. 64

(4) வேதப்புரட்டு உபதேசங்கள் கிறிஸ்தவ சபைக்குள் புகுவதற்கு முக்கிய காரணம் வேத வசனங்களின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு அவ்வசனங்களை முழுமையாக நோக்காமல், அவற்றின் ஒரு பகுதிக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து வியாக்கியானம் செய்வதாகும். 

(5) L. Moris, John : The New International Commentary on the New Testament, p. 313

(6) Ibid, p312

(7) தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை (யோவான் 1.18) அவர் மனுஷரில் ஒருவரும் கண்டிராத வரும் காணக்கூடாதவருமாய் இருக்கிறார் (1 தீமோ. 6:16)

(8) Schonfiled என்பாரின் ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பும் இயேசுக்கிறிஸ்துவின் இவ்வசனத்தை சரியான விதத்தில் மொழிபெயர்க்கவில்லை. 'What he does the son copies' எனும் மொழிபெயர்ப்பு மூலமொழியி்ன அர்த்தத்தை சரியான விதத்தில் ஆஙகிலத்தில் அறியத் தரவில்லை. 

(9) சில தேவ ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் ஒரு உவமை மறைந்திருக்கிறதாகக் கூறுகின்றனர். அதாவது, அக்காலத்தில் தகப்பனுடைய தொழிலை மகன் கற்றுக் கொள்ளும் முறை பற்றி இவ்வசனத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு்ளளதாக இவர்கள் கருதுகின்றனர். (C.H. Dood, A Hidden Parable in the Fourth Gospel' in More New Testament Studies pp 30-40) தகப்பன் செய்கின்றவற்றைப் பார்த்தும் தகப்பன் சொல்கின்றவற்றைக் கேட்டுமே அக்காலத்தில் பிள்ளைகள் தகப்பனின் தொழிலைக் கறறுக் கொண்டனர். ஆனால் இயேசு இப்படிப்பட்ட நிலையில் இருந்தார் என்று கூறுவது அவரது தேவத்துவத்தை மட்டுப்படுத்தும் விளக்கமாகவே உள்ளது.

(10) W. Barclay, John 1-7: The Daily Study Bible, p 188

(11) D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p 251

(12) E.A. Blum, John : The Bible Knowledge Commentary, p 290

Monday 23 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்


வேதாகமத்திலுள்ள உருவக விபரணங்கள் வித்தியாசமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டிருப்பதனால் ஒரு வசனத்தில் உள்ள அர்த்தத்தை இன்னுமொரு வசனத்திற்குக் கொடுப்பது தவறாகும். ஓசியா 6:4 இல் “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும் விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்துபோகிறதுஎன்று மக்களிடம் கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தில், காலை நேர மேகம்”“ “விடியற்காலைப் பனி“ என்பன மக்களுடைய பக்தியை வர்ணிக்கும் உருவக விபரணங்களாக உள்ளன. காலைநேர மேகமும் விடியற்காலைப் பனியும் சிறிதுநேரம் மட்டுமே இருப்பதனால், மக்களுடைய பக்தியும் சிறிது நேரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது என்பதை விளக்கும் விவரணங்களாக உள்ளன. இதனால் ஓசியா 14:5 இலும் பனி என்னும் உருவகம் இதே அர்த்தத்துடனேயே உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறாகும். இவ்வசனத்தில் தேவன் மக்களிடம் “நான் இஸ்ரவேலுக்குப் “பனியைப் போலிருப்பேன்”“ என்று  தெரிவித்துள்ளார். ஓசியா 6:4 இல் “பனி“ என்பது “இஸ்ரவேல் மக்களுடைய பக்தியை“ உருவகிக்கும் விபரணமாக இருந்தாலும் ஓசியா 14:5 இல் இது தேவனுடைய செயலொன்றை” வர்ணிக்கும் உருவகமாக உள்ளது. மேலும் ஓசியா 6:4 இல்  பனியின் சிறிது நேரம் மட்டும் இருக்கும் தன்மையே உருவக விவரணத்தின் அர்த்தமாக உள்ளது. ஆனால் ஓசியா 14:5 இல் “பசுமை“ அல்லது “ஈரலிப்புத்தன்மையே“ உருவக விபரணமாக உபயோகிக்கப்பட்டு்ளளது. அதாவது “மண்ணை ஈரமாக்கும் பனி, தாவரங்களுக்குச் செழிப்பைக் கொடுப்பது போல, தேவன் இஸ்ரவேலுக்கு ஆசிர்வாதமாக இருப்பார்” என்பதே இவ்வசனத்தில் “பனி“” என்னும் உருவகத்தின் அர்த்தமாக உள்ளது. இதனால் ஓசியா 14:5 இல் “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்“ என்று தெரிவித்துள்ளார். எனவே, ஒரேவிதமான உருவக விபரணங்கள், பல வசனங்களில் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அர்த்தம் வித்தியாசமானதாக இருப்பதனால், நாம் உருவக விபரணம் இடம்பெறும் வசனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்து, அவ்வசனங்களுக்கு ஏற்ற அர்த்தத்தின்படி உருவகங்களை வியாக்கியானம் செய்யவேண்டும். இல்லையென்றால் வேத வசனங்களின் அர்த்தத்தை நாம் பிழையான விதத்தில் புரிந்து கொள்வோம். உதாரணத்திற்கு வேதாகமத்தில் “புளித்தமா“ என்பது பாவத்திறகும் தீமைக்குமான உருவகமாக (1 கொரி. 5:6-8) அல்லது பிழையான போதனைக்கான விவரணமாக (கலா. 5:8-9, மத். 16:6, 16:11-12, மாற். 8:15) இருந்தாலும் மத்தேயு 13:33லும் லூக்கா 13:21லும் இவ்விபரணம் தேவனுடைய இராட்சியத்தையே குறிக்கின்றது. எனவே, வேதாகமத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு உருவகத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது எனக் கருதி, அவ்வுருவகம் இடம்பெறும் சகல வசனங்களையும் ஒரே அர்த்தத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாது. ஒவ்வொரு உருவகத்தையும் அது இடம்பெறும் வசனத்தையும் வேதப்பகுதியையும் கருத்தாய் ஆராய்ந்து பார்த்து அது எதற்கான உருவகம்? என்பதையும் எவ்வர்த்தத்துடனான உருவகம் என்பதையும் நாம் அறிந்த கொள்ள வேண்டும்”

வேதாகமத்திலுள்ள உருவக விவரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு, குறிப்பிட்ட உருவகம் இடம்பெறும் வசனத்தையும் அவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதியையும் ஆராய்ந்து பார்ப்பது ஒரேயொரு வழியாக உள்ளது. இதைத் தவிர வேறு வழிகளில் வேதாகமத்திலுள்ள உருக விபரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்துகொள்ள முடியாதிருப்பதனால் வேறு முறைகளைக் கையாளுவது தவறானதாகும். சிலர் வேதாகம உருவகங்களுக்குத் தங்களுடைய கற்கனையினால் அர்த்தம் கற்பித்து , வேத வசனங்களின் அர்த்தங்களை குழப்பி, பிழையான விளககங்களைக் கொடுத்து வருகின்றனர். வேதாகமத்தில் உபயோகி்கப்பட்டுள்ள உருவக விபரணங்கள் வேதாகமம் எழுதப்பட்ட பிரதேசத்திலிருந்த பொருட்கள், காட்சிகள், சம்பவங்கள் என்பவற்றிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு “கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறார்“(சங். 23:1) என்று ஆரம்பமாகும் பாடலை, சங்கீதக்காரன் தன்னுடைய பிரதேசத்திலுள்ள மேய்ப்பர்களின் தன்மையையும் பணிகளையும் கருத்திற்கொண்டே எழுதியுள்ளான். இதனால் பாலஸ்தீனப் பிரதேசத்து மேய்ப்பர்களின் தன்மையையும், பணிகளையும் பற்றி அறியாத நிலையில் 23ம் சங்கீதத்தைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மேய்ப்பர்களைப் பற்றி அறியாத நிலையில் நாம் நம்நாட்டு மேய்ப்பர்களை அடிப்படையாகக் கொண்டு 23ம் சங்கீதத்தை முழுமையாகவும் சரியான விதத்திலும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருப்போம். எனவே வேதாகமக் காலத்தின் சூழலை அறியாதவர்களாக நாம் நம்முடைய கற்பனைகளையும் நாம் வாழும் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு வேதாகமத்திலுள்ள உருவகம் விபரணங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கக் கூடாது.

வேதவசனங்களில் சாதாரண உருவவிபரணங்கள் மட்டுமல்ல, சில சிறப்பான உருவகங்களும் உபயோகிக்ப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்திற் கொள்ளாமல் வேதவசனங்களை வியாக்கியானம் செய்யும்போதும், வேதவசனங்களையும் பிழையான விதத்திலேயே நாம் விளங்கிக் கொள்வோம். எனவே, வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வித்தியாசமான உருவக விபரணங்கள் எவை என்று இப்போது பார்ப்போம். சங்கீதங்களிலும் இத்தகைய உருவகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
       (இன்னும் வரும்) 

Thursday 19 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள்


நூல் : - சங்கீதங்களின் சத்தியங்கள்
ஆசிரியர் : - சகோ. வசந்தகுமார்
வெளியீடு : -  இலங்கை வேதாகமக் கல்லூரி


இஸ்ரவேல் மக்களுடைய பாடல் புத்தகத்திலுள்ள சங்கீதங்கள் மூலமொழியில் கவிதை நடையிலேயே எழுதப்பட்டுள்ளமையால் இவற்றில் பலதரப்பட்ட உருவக விபரணங்கள் உள்ளன. இதனால் சங்கீதங்களை வாசிக்கும்போது அவற்றில் உபயோகிக்கப்ட்டுள்ள உருக விபரணங்களைக் கருத்திற்கொள்ளாவிட்டால் அவற்றை நாம் பிழையான வித்ததிலேயே விளங்கிக் கொள்வோம். உண்மையில் சங்கீதங்களில் மட்டுமல்ல, வேதாகமத்தின் ஏனைய பகுதிகளிலும் பலதரப்பட்ட உருவகங்கள் உள்ளன. சிலர் உருவக விபரணங்களுக்கும் சொல்லர்த்தமான விளக்கம் கொடுப்பதனால், வேதாகமத்தை முரண்படுத்தும் குழப்பமான பல உபதேசங்கள் உருவாகியுள்ளன. உதாரணத்திற்கு “மோர்மன் (Mormon) என்று அழைக்கப்படும். வேதப்புரட்டுக் குழுவினர் தேவனுக்கு மானிட அவயவங்கள் இருப்பதாக உருவகிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, தேவன் ஆவியாய் இருக்கின்றார். (யோவா. 4:24) என்னும வேதாகம சத்தியத்தை முரண்படுத்துகிறவர்களாக பரலோகத்தில் தேவன் மாம்ச சரீரத்துடன் உருவத்துடனும் இருக்கிறார்  என்று போதித்து வருகின்றனர். (1) இதுபோல் கடைசி இராப்போசனத்தின் போது இயேசுக்கிறிஸ்து அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் உவமிக்கும் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரோமன் கத்தோலிக்க சபையினர் சொல்லர்த்தமாக வியாக்கியானம் செய்து, திருவிருந்தின்போது ஆசீர்வதிக்கப்படும் அப்பமும் இரசமும் இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகவும் இரத்தமாகவும் மாற்றமடைகின்றது என்று போதிக்கின்றனர். (2) மறுபுறத்தில் சில கிறிஸ்தவ இறையியலாளர்கள் வேதாகமத்தில் சொல்லர்த்தமாக சொல்லப்பட்டவைகளை உருவக விபரணங்களாக வியாக்கியானம் செய்து வேதாகமத்தின் சில உபதேசங்களை மறுதலித்து வருகின்றனர். உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, உயிர்தெழுதல் என்பவற்றை மறுதலிப்பவர்கள் வேதாகமத்தில் இவற்றைப் பற்றி சொல்லப்பட்டவைகள் உருவக விபரணங்களாக இருப்பதாக கூறி இவை வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள விதமாக சொ்ல்லர்தமாக நடைபெற்ற சம்பவங்கள் அல்ல என்று கூறி வருகின்றனர்(3). இதைப்போலவே வேதவசனங்களில் மறைபொருள் அர்த்தங்கள் இருப்பதாக கருதுபவர்களும் சரித்திர சம்பவங்களை ஆவிக்குரிய அர்த்தங்கள் கொண்ட கதைகளாக மாற்றி அவை நிஜமாக நடைபெற்ற சம்பவங்களாக இருக்கும் உண்மையை மறுதலி்த்து வருகின்றனர். இதனால் வேதாகமத்தில் உருவக விவரணங்களைச் சரியான விதத்தில் இனங்கண்டு வேதாகம வசனங்களை வியாக்கியானம் செய்யும்போது மட்டுமே அவற்றைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியும். 

Monday 16 May 2011

தேவசித்தத்தின் அம்சங்கள்


(1) தேவனுடைய அநாதிச் சித்தம்
(2) தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்
(3) தேவனுடைய அறிவிக்கப்பட்ட சித்தம்

கிறிஸ்தவ வாழ்வு தேவனுடைய சித்தத்தின்படி அமைத்துக் கொள்ளப்பட வேண்டிய வாழ்வாகும்; நம்முடைய தனிப்பட்ட, சமுதாய, உத்தியோக குடும்ப வாழ்வுக்கான தேவசித்தம் என்ன என்பதை அறிந்து கொண்ட நாம் கடைசியாக, தேவனுடைய சித்தத்தின் அம்சங்களையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது தேவ சித்தத்தைப் பற்றிய இன்றைய கிறிஸ்தவ உலகில் நிலவும் சில தப்பபிப்பிராயங்களை நீக்கி, தேவசித்தம் என்றால் என்ன என்பதை அறிந்திட நமக்கு உதவிடும். இறையியலாளர்கள் தேவசித்தத்தை பல்வேறு வகைகளாக பிரிப்பது வழமை. அவற்றுள் முக்கியமான மூன்று அம்சங்களை ஆராய்வோம். 

(1) தேவனுடைய அநாதிச் சித்தம்
தேவனுடைய சித்தத்தின் ஒரு அம்சம் அவருடைய அநாதிச் சித்தமாகும். இது அவருடைய அநாதித் தீர்மானம் என்றும் இரகசிய சித்தம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட சித்தம என்றும் முன்குறிக்கப்பட்ட சித்தம் என்றும் பலவாறாக அழைக்கப்படுகி்றது. இது உலகத் தோற்றத்திற்கு முன் தேவன் எடுத்த தீர்மானமாகும். இவ்வாறு தேவனால் தீர்மானிக்கப்பட்டவை நிச்சியமாய் நிறைவேறியே தீரும். அவற்றை எதிர்க்கவோ, மாற்றவோ திரிபடையச் செய்யவோ யாராலும் முடியாது. (தானி. 4l35ஏசா 14:27, 46:10-11, யோபு 23:13) இந்த அநாதிச் சித்தத்தை தேவன் நேரடியாக, இல்லையென்றால் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக நிறைவேற்றுவார். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனுடைய அநாதிச் சித்தத்தின்படியானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான்  தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு என்றும் (அப் 2:23) உலகத் தோற்றத்தி்ற்கு முன்பு குறிக்கப்பட்டிருந்தவராயிருந்தார் (1 பேதுரு 1:20) என்றும் பேதுரு கூறினார். ”தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்”. என அறிகிறோம் (ரோமர் 8:29) அதேபோல் சிலர் பிறப்பற்கு முன்பாகவே அவர்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் தேவன் முன்குறித்திருக்கிறார். உதாரணமாக எரேமியா தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்படும் முன்பே தேவன் அவரைப் பரிசுத்தம் பண்ணி ஜாதிகளுக்கு தீரக்கதரிசியாக கட்டளையிட்டிருந்தார். (எரே. 1:5) அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வாழ்விலும் நாம் இதை அவதானிக்கலாம். (கலா. 1:15) எனவே, தேவன் நம்முடைய வாழ்விலும் சில காரியங்களை முன்குறித்திருந்தால், அவைகள் நிச்சயமாய் ஒரு நாள் நடந்தே தீரும். ஏனென்றால் தேவனுடைய அநாதிச் சித்தம் ஒருநாளும் மாற்றமடையாது எப்படியும் அது நிறைவேறும். 

(2) தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்
நம் வாழ்வின் எல்லா அம்சங்களையும் தேவன் முன்குறிக்கவில்லை. சில காரியங்களை அவர் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கிறார். இது அவருடைய அனுமதிக்கு்ம் சித்தம் என அழைக்கப்படுகின்றது. சில சமயங்களில் தேவன் தான் விரும்பாததையும் அனுமதிக்கின்றார். உலகின் பாவம் இவ்வாறு அவர் அனுமதித்ததொன்றேயாகும். எனினும், இத்தகைய ஒரு காரியத்தை தேவன் அறியாதிருந்தார் என்றோ, இது அவருடைய அநாதிச் சித்தத்தை மாற்விடும் என்றோ சொல்லமுடியாது. அவர் தமது சித்தத்தின் ஆலோசனைக்கத்தக்கதாக எல்லாவற்றிறையும் நடப்பிக்கின்றவர். (எபே. 1:12) அதோடு தேவன் அனுமதிப்பவைகள் அவர் அங்கீகரிப்பவைகளாகவும் இருப்பதில்லை. 

சவுல் இஸ்ரவேலின் ராஜாவாகிய சம்பவம் தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்திற்கு சிறந்த உதாரணமாயுள்ளது. 1 சாமுவேல் 8 ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது, அக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் அரச ஆட்சியின் கீழ் இருப்பது தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை என்பதை அறிந்திடலாம். மக்கள் தமக்கு ராஜா வேண்டுமெனும் பிடிவாதத்துடன் இருந்தமையினால், அவர்களது கோரிக்கை எத்தகைய விளைவுகளை கொண்டு வரு்ம் என்பதை அறிவித்ததோடு, தான் விரும்பாத நிலையிலும், தேவன் அவர்களுக்கு ஒரு ராஜாவைக் கொடுத்தார். அவர் கோபத்திலேயே இதை செய்தார். (ஓசி 13:11) இதனால் அரச ஆட்சி முறையினால் ஏற்பட்ட துயரகரமான விளைவுகளை இஸ்ரவேல் மக்கள் அனுபவிக்க வேண்டியவர்களாயிருந்தனர். 

தேவனுடைய அனுமதிக்கும் சித்தத்தைப் பற்றி பிலேயாமின் கதையும் அறியத் தருகிறது. (எண். 22:24) இஸ்ரவேலை சபிக்கும்படி மக்கள் அவனிடம் கேட்டபோது அவன் தேவனிடம் இதுபற்றிக் கேட்டான். தேவன் போகவேண்டாம் என்று சொன்னார். எனவே அவன் தான் வரவில்லை. என கூறினான். (22:9-12) பின்னர் அவனை அழைத்தவர்கள் அவனுக்கு அதிக பணம் தருவதாக கூறினர். பண ஆசை காரணமாக அவர்களோடு போகவிரும்பிய பிலேயாம் இரண்டாந்தரம் தேவனிடம் அனுமதி கேட்டபோது, போகும்படி சொன்னார் (22:18-20) தேவனுடைய சித்தம் பிலேயாம் போகக் கூடாது என்பதுதான் ஆனால் இரண்டாம் தரம் கேட்டபோது தேவன் அனுமதித்தார். எனினு்ம், பிலேயாமினுடைய வழி தேவனுக்கு மாறுபாடாயிருந்ததினால் கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு எதிராக புறப்பட்டு வநதார். (22:32-33) மட்டுமல்ல அவன் சென்ற நோக்கமும் நிறைவேறாமல் போய்விட்டது (22.16-24, 24.1-9)

தேவனுடைய அனுமதிக்கும் சித்தம் அவரது விருப்பத்துக்கு முரணானதாகையால் அது மனிதருக்கு நன்மை பயக்கும் ஒன்றாய் இராது. தேவ சித்தத்தை அறியாது இஸ்ரவேலர் ராஜாவைக் கேட்டதினால் ராஜாவாக சவுல் வந்ததினால் ஏறபட்ட துயரங்களை அவர்கள் அனுபவித்தனர். அதேபோல் தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிந்ததும் அதற்கு முரணான காரியத்தைப் பிலேயாம் கேட்டான். தேவன் அதை அனுமதித்தாலும் அவன் ஆபத்துக்களை சந்திக்க வேண்டியவனாயிருந்தான். எனவே, தேவனுக்கு சித்தமில்லாத காரியங்களை நாம் அவரிடம் கேட்கக்கூடாது. அவர் கொடுக்காத கொடுக்க விரும்பாதத்தை நாம் கேட்க்கூடாது. அவர் கொடுக்காத, கொடுக்க விரும்பாததைத் தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டே இருந்தால் சில சமயங்களில் அதை அவர் நமக்கு தந்து விடலாம். ஆனாலும் அதனால் வரக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். எனவே தேவன் அனுமதிக்கும் காரியத்தை அல்ல. அவர் நமக்கு, விரும்பிக் கொடுக்கும் காரியத்தையே நாம் நாடவேண்டும். 

(3) தேவனுடைய அறிவிக்கப்பட்ட சித்தம்
தேவனுடைய அனுமதிக்கும் சித்தம் அவரது அங்கீகாரமற்றவை என்பதனால் நாம் அவருடைய அறிவிக்கப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தின்படி நடக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். அறிவிக்கப்பட்ட சித்தம் என்பது தேவனுடைய வார்த்தையான திருமறையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தமாயிருக்கும். தேவனுடைய அநாதிச் சித்தத்தின் இரகசியங்களை நம்மால் முழுமையாக அறியமுடியாதிருப்பதனால் அதை அறிய முயற்சிக்காமல், நமக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேவசித்தத்தை அறிந்து அதன்படி வாழவேண்டும்.“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படி யெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்“ (உப 29:29) எனவே தேவனால் அறிவிக்கப்பட்ட அவருடைய வார்த்தையின்படி நாம் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வுக்கான தேவசித்தம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

கிறிஸ்தவர்களாகிய  நாம் தேவசித்தத்தினபடி வாழ்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.“  என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்(யோசுவா 1:8) உண்மையில் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.“ (சங்கீதம் 1:2) “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.“ (சங்கீதம் 119:1) எனவே, தேவசித்தத்தின்படியான பாக்கியமான வாழ்வை அனுபவிக்க, தேவவாரத்தையின் அறிவுறுத்தல்களின்படி நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம். 

(இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய கிறிஸ்தவ வாழ்வில் தேவசித்தம் எனும் நூலிருந்து பெறப்பட்டதாகும்)

Reference 
(1) Chosen by God by R.C. Sproul
(2) God's Will and the Christian by R.C. Sproul
(3) Systematic Theology by Louis Berkhof
(4) Christian Theology by Millard J. Erickson
(5) The Sovereignty of God by Arthur W. Park
(6) The Attributes of God by Arthur W. Pink 

Wednesday 11 May 2011

இயேசுவை அறிவிக்கும் பணி



நவீன மிஷனரிப் பணியின் தந்தையாகக் கருதப்படும் வில்லியம் கேரி (1761-1834) இந்திய மொழிகள் பலவற்றில் வேதாகமம் மொழிபெயர்க்கப்படுவதற்கு காரணமாய் இருந்தவராவார். 

1761 இல் இங்கிலாந்திலுள்ள வறிய குடும்பமொன்றில் பிறந்த வில்லியம் கேரி ஆரம்பத்தில் சப்பாத்து தயாரிக்கும் ஒரு தொழிலாளியாகவே இருந்தார். அவர தனது வேலை ஸ்தலத்தில் உலகப் படமொன்றைத் தொங்கவிட்டடிருந்த தோடு, உலக நாடுகளின் இரட்சிப்புக்காக ஜெபித்தும் வந்தார். இதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் எனும் மனப்பாரம் அவருக்கு ஏற்பட்டது. 

1785 இல் மூல்ட்டன் எனுமிடத்திலிருந்த ஒரு சிறிய பப்டிஸ்ட் சபையில் பணியாளராகிய வில்லியம் கேரி 1786 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இறைபணியாளர் கூட்டத்தில், இயேசுக்கிறிஸ்துவை அறியாத நாடுகளில் அவரைப் பற்றி அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.
சகல நாடுகளுக்கும் சுவிஷேசத்தை அறிவிக்க வேண்டும் எனும் கட்டளை முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமானது எனும் கருத்து கிறிஸ்தவ உலகில் நிலவிய அக்காலத்தில் ஒரு வயது முதிர்ந்த இறைபணியிலாளர் வில்லியம் கேரியிடம் “இளம் வாலிபனே உட்காரு. புறஜாதியாரை இரட்சிக்கத் தேவன் விரும்பும்போது அவர் நமது உதவியின்றியே அக்காரியத்தைச் செய்வார்” என்று கூறினார்.

வயது முதிர்ந்த இறைபணியாளரின் பதில், வெளிநாட்டு மிஷனரிப் பணியில் வில்லியம் கேரிக்கு இருந்த ஆர்வத்தை குறைத்து விடவில்லை.  1791 இல் அவர் வெளிநாட்மு மிஷனரிப் பணியின் அவசியத்தை ம்களக்கு உணர்ததுவதற்காக ஒரு நூலை எழுதியதோடு, 1793 இல் தானே ஒரு மிஷனரியாக இந்தியாவிற்கு வந்து இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தார். 

வயது முதிர்ந்த இறைபணியாளரின் வார்த்தைகளைக் கேட்டு வில்லியம் கேரி் தேவன் தனது உதவியில்லாமல் புறஜாதியாரை இரட்சிப்புக்குள் கொண்டு வருவார் என நினைத்துப் பேசாமல் இருந்திருந்தால் பலர் இயேசுக்கிறிஸ்துவிடம் வருவதற்கு வழியில்லாமல் போயிருக்கும். எனவே, நாமும் வில்லியம் கேரியைப் போல இயேசுக்கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு அவரைப் பற்றி அறிவிக்க முன்வர வேண்டும். இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தாலே அவர்கள் அவரிடம் வருவார்கள். (ரோமர் 10:14) நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 
  



Monday 9 May 2011

இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு


(வரும் மே மாதம் 14ம் திகதி இஸ்ரேலிய சுதந்திர தினமாகும். அதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது)

இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு

1. ஜனாதிபதி

2. நெஸட் The Knesset (பாராளுமன்றம்)

3. அரசாங்கம்

4. நீதித்துறை

5. தேர்தல்கள்

6. 1948 – 2011 வரை இஸ்ரேலின் பிரதமர்களும் ஜனாதிபதிகளும்



இஸ்ரேல் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியுள்ள நாடாகும். அரசாங்கமானது பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டதாக இயங்குவதோடு சுயாதீன நீதித்துறையும் காணப்படுகின்றது. 



1. ஜனாதிபதி

  • அரச தலைவர் கட்சி அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர். இவரது பணிகள் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளக்குகிறது. அவரது பணிகளாவன
  • பாராளுமன்றத்தில் Knessetமுதல் அமர்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தல்
  • வெளிநாட்டு தூதர்களின் நியமனங்களை ஏற்றுக் கொள்ளுதல்
  • பாராளுமன்றத்தில் அங்கீக்ரிக்கப்படும் உடன்படிக்கைகளில் (ஒப்பந்தங்களில்) கையழுத்திடல்
  • நீதிபதிகள், வங்கி ஆளுநர், இஸ்ரேலிய வெளிநாட்டு தூதுவர்கள் போன்றவர்களுக்கு நியமனம் வழங்குதல் (தகுதி வாய்ந்த ஆளுநர் குழுவின் சிபாரிசுளுக்கு உட்னபட்டே இந்நியமனங்கள் வழங்கப்படும்)
  • குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் குற்றங்களுக்கான தண்டனைகளை குறைத்தல் (இதுவும் நீதி அமைச்சின் சிபாரிசின் அடிப்படையிலானதாகவே இருக்கும்)
  • இவற்றை விட மேலதிகமாக பொதுப்பணி சார்ந்த சில செயற்பாடுகளும் இவரால் மேற்கொள்ளப்படும் பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும். ஒருவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பணியாற்ற முடியும். 


ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யடுபவர் தேசத்திற்கு அவரது பங்களிப்பு மற்றும் அவரது அந்தஸ்து என்பவற்றுக்கு ஏற்பவே தெரிவு செய்யப்படுவார். 



2. நெஸ்ட் (The Knesset  பாராளுமன்றம்)



இஸ்ரேல் அரசுப் பிரதிநிதிகள் சபையாகும். இது 120 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபையாகும். என்ற haknesset hageclolah பத்த்திலிருந்து Knesset  என்னும் பதம் வந்துள்ளது. இதன் பொருள் மகா சபை என்பதாகும். 

தேர்தலை அடுத்து புதிய பாராளுமன்றம் செய்ல்பட ஆரம்பிக்கும். முதல் அமர்வின்போது ஜனாதிபதியின் சம்பிரதாய பூர்வமான உரை இடம்பெறும். அதனை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் சத்தியாபிரமாணம் செய்து கொள்வர். சபாநாயகரும் தெரிவு செய்யப்படுவார். இஸ்ரேலின் முதலாவது பாராளுமன்றமானது ஜனவரி 25, 1949 இல் தெரிவு செய்யப்பட்டது. பெப்ரவரி 14 1949 அதன் முதலாவது அமர்வு இடம்பெற்றது. 

12 கமிட்டிகளுக்கூடாக பாராளுமன்றம் செயற்படுகின்றது. 

1. பாராளுமன்ற (சபை) கமிட்டி

2. வெளிவிவகார பாதுகாப்பு கமிட்டி

3. நீதி கமிட்டி

4. பொருளாதார கமிட்டி

5. உள்விவகார, சூழல் கமிட்டி

6. கல்வி, கலாசார கமிட்டி

7. தொழிலாளர் நலன்புரி கமிட்டி

8. அரசியலமைப்பு சட்டம், நீதித்துறை கமிட்டி

9. குடியரசு கமிட்டி

10. அரச கட்டுப்பாட்டு கமிட்டி

11. போதை பாவனைக்கெதிரான செயற்பாட்டுக் கமிட்டி

12. பெண்கள் முன்னேற்ற செயற்பாட்டுக் கமிட்டி

அரசாங்க கொள்கை, செயற்பாடுகள். சட்ட மசோதாக்கள் மீதான விவாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளின்போது இடம்பெறும். விவாதங்கள் யாவும் எபிரேய மொழியில் நடைபெறும். உறுப்பினர்கள் அரபி மொழியிலும் பேசலாம். இரண்டுமே உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன. 

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராலோ அல்லது பல உறுப்பினர் கொண்ட குழுவாகவோ அல்லது முழு அரசு பிரதிநிதிகளோ அல்லது அமைச்சரோ யாதாயினும் ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தால் அம்மசோதா நீதித்துறை அமைச்சுக்கு அதன் சட்டப்பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு அனுப்ப்ப்படும். அதுபோல் நிதியமைச்சு மற்றும் இது சம்பந்தமான குறிப்புகளைப் பெறும்பொருட்டு அரசின் ஏனைய அமைச்சுகளுக்கும் அனுப்ப்ப்படும். இவற்றினால் இம்மசோதா அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெறப்படும். 

பாராளுமன்ற ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. உரிய காலத்திற்கு முன் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு

3. அரசாங்கம் (The Government) 
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொணடதாக அரசாங்கம் விளங்குகின்றது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை கையாளுகின்றது. அரசின் ஆயுட்காலம் 4 வருடங்கள் கொள்கை திட்டமிடலில் பரந்த அதிகாரத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. பிரதர் இராஜனாமா செய்யும் பட்சத்தில் அல்லது நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடையும் பட்சத்தில் நான்கு வருட ஆயுட்காலம் குறுக இடமுண்டு. தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் பிரதமர் தனது அமைச்சர்களின் பட்டியலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்பிக்க வேண்டும். அமைச்சர்கள் தமது கடமைகள் குறித்து பிரதமருக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 18 இதற்கு அதிகமாகவோ 8 இற்கு குறைவாகவோ இருக்க முடியாது. 6 பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படலாம். யாவரும் நெஸ்ட் உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும்.

வழக்கமாக பாராளுமன்ற வாராந்தம் கூடுகிறது. தேவை ஏற்படின் தேவையைப் பொறுத்து கூடலாம். பாராளுமன்றத்தில் போதுமான ஆசனங்கள் பெறமுடியாத கட்சிகள் கூட்டணி கூட்டணி அமைத்து ஆட்சயமைக்கலாம். தேர்தல் முடிந்து புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை பழைய அமைச்சர்கள் பிரதமர் தமது பொறுப்புகளில் இருக்கலாம். பிரதமர் ஒருவர் இராஜினாமா செய்யும் பட்சத்தில் அல்லது நம்பிக்கையில்லத பிரேரணையில் தோல்வியடையும் பட்சத்தில் அரசாங்கம் தனது உறுப்பினர் ஒருவரை பதில் பிரதமராக நியமிக்கலாம் இவருக்கு பிரதமருக்குரிய சகல அதிகாரங்களும் இருக்கும். ஆனால் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் இல்லை. 

4. நீதித்துறை
சுயாதீனமான நீதித்துறை இஸ்ரேலில் உள்ளது. இந்த சுயாதீனமானது சட்டம் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் யாவரும் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்டுவர். ஆரம்ப நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் சிவில் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும. திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, ஜீவனாம்சம் போன்றவற்றை விசாரிக்க அவற்றுக்கென விசேட நீதிமன்றங்கள் உள்ளன. ரபீனிக்கல் நீதிமன்றம், ஷரியா (முஸ்லிம் நீதிமன்றம்) ட்ரூஸ் நீதிமன்றம் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம். 

அதியுயர் நீதிமன்றம் (Supreme Court) எருசேலேமில் உள்ளது. அரசுக்கு அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிரான எந்தவொரு முறைபாட்டையும் விசாரிப்பதும் இதன் பணிகளில் ஒன்று. இதன் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும். அதேவேளை பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தவொரு சட்ட மசோதா மீதாக  அவற்றை தீர்மானிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்திற்கு உண்டு. 

5. தேர்தல்கள்
பாராளுமன்றத்திற்கும் பிரதம மந்திரிக்குமான வாக்கொடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டும். ஒன்று தாம் விரும்பும் கட்சிக்கும் மற்றையது பிரதம மந்திரிக்கும் ஆகும். தேர்தல் தினம் விஷேட விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். வாக்களிக்க செல்லும் வாக்களாருக்கு இலவச போக்குவரத்து சேவை நடத்தப்படும். இராணுவனத்தினர் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் வாக்களிக்கவென விசேட ஒழுங்குகள் செய்யப்படும். பாராளுமற்றத்தில் ஆசனங்களை கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கலாக உயர் நிதிமன்ற நீதியரசர் தலைமையில் மத்திய தேர்தல் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இக்கமிட்டியே தேர்தல்களை நடத்தும. பிராந்திய மட்டத்திலான தேர்தல் கமிட்டி உள்ளுர் தேர்தல் கமிட்டிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும். தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க முடியும். 

(அ) நெஸட் தேர்தல்
மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். 120 ஆசனங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆசனங்களை கைப்பற்றலாம். இஸ்ரேலின் பிரதான இரு கட்சிகள் லிகுட் (Likud) கட்சி தொழிற்கட்சி கட்சி (Labour) இவையே. இது வரை மாறி மாறி அரசாங்கத்தை அமைத்து வருகின்றன. தேர்தலில் போட்டியிட முனையும் எந்தவொரு வேட்பாளரும் அவர் எந்த ஒர உத்தியோகம் பார்ப்பவராக இருந்தாலும் தேர்தல் நடைபெற 100 நாட்களுக்கு முன்பதாக தமது பதவிகளை இராஜினாமா செய்து விட வேண்டும். வேட்பாளருக்கான வயதெல்லை 21 இற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். 

(ஆ) பிரதம மந்திரிக்கான தேர்தல்
மக்கள் தமது இரண்டாவது வாக்கை தாம் பிரதமராக தெரிவு யெயப்போகும் வேட்பாளருக்கு அளிக்கலாம். நெஸட்டில் குறைந்த்து 10 ஆசனங்களை கொண்டிருக்கும் எந்தவொரு கட்சியும் தேர்தலுக்கு முன்பாகவே பிரதம மந்திரி பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும். இவர்களில் யாராயினும் ஒருவருக்கே மக்கள் தமது வாக்குகள அளித்து பிரதமராக தெரிவு செய்ய வேண்டும்.  அதிக வாக்குகளை (50% இற்கும் அதிகமான வாக்குகள்) பெறுபவர் பிரதமாராகத் தெரிவு செய்யப்படுவார். நடைபெறும் தேர்தலில் யாரும் வெற்றி பெறமுடியாமல் போனால் இருவாரங்களில் பின்னர் அதிக வாக்க்களை பெற்றிருக்கும் முதலிரண்டு வேட்பாளர்களிடையே மீண்டும் ஒரு தேர்தல் வைக்கப்படும். தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளராவது மரணமடையும் பட்சத்தில் அல்லது சுகவீனமாகி தேர்தலில் பங்குபற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தேர்தல் நடைபெற 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் சார்ந்த கட்சி இன்னொரு வேட்பாளரை அவருக்கு பதிலாக நியமனம் செய்யலாம். நடைபெற்ற தேர்தல் வெற்றி பெற்ற யாராயினும் ஒரு வேட்பாளர் இராஜனாமா செய்யும் பட்சத்தில் அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும் வேட்பாளர் அவரது இடத்தில் நியமிக்கப்படலாம். 

பிரதமர் பதவிக்கான தேர்தல் மட்டும் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள்
பாராளுமன்றம் பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பட்சத்தில் (இதற்கு 80 உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை) அல்லது
பிரதமரின் நடத்தையில் குற்றமிழைத்தவராக நிரூபிக்கப்படும் பட்சத்தல் அல்லது
தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்கள் தனது அரசாங்கத்தை அமைக்க தவறும் பட்சத்தில் குறைந்த்து 8 அமைச்சர்களையாவது நியமிக்க முடியாது போகும் பட்சத்தில் அல்லது
பிரமர் மரணமடைந்து அல்லது தனது பணிகளை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் 

1948 இலிருந்து இன்றுவரை இஸ்ரவேலின் பிரதமர்கள், ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள்
6.1 பிரதமர்கள்
இவை தொடர்பான விபரங்களுக்கு விக்கிபீடியாவின் இந்த இணையப்பக்கத்தைப் பார்வையிடுங்கள்

6.2 ஜனாதிபதிகள்
இவை தொடர்பான விபரங்களுக்கு விக்கிபீடியாவின் இந்த இணையப்பக்கத்தைப் பார்வையிடுங்கள்

(நன்றி : இவ்வாக்கமானது சகோ. ஏ.சி. கிறிஸ்டோபர் எழுதிய இஸ்ராயேல் சரித்திரம் எனும் நூலிலிருந்து எழுத்தாளப்பட்டுள்ளது) வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி 
பிரதமர்கள், ஜனாதிபதிகள் தொடர்பான தகவல்கள் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

Thursday 5 May 2011

மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம் (2)

பகுதி 1 ஐ வாசிக்க இங்கே அழுத்துங்கள்

கேள்வி :- குறிப்பிட்ட மரங்களில் தான் அசுத்த ஆவிகள் இருக்கும் என்பது உண்மையா?
பதில் :- பொய். ஏனெனில் அசுத்த ஆவிகளானது எல்லா இடங்களிலும் இருக்கும். குறிப்பாக புளியமரம், நாவல் மரம், வேம்பு மரம், என்பவற்றிலே இருக்கும் எனக் கூறுவது பொய். அநேகமாக சுடுகாடு, அந்நிய மதவழிபாட்டுகள் உள்ள ஸ்தானம் போன்ற இடங்களில் கட்டாயம் இருக்கும் எனலாம்.


கேள்வி :- பெண்ணுக்கும் பேய்க்கும் தொடர்பு உண்டா?
பதில் :- தொடர்பு உள்ளது என்று கூற முடியாது. அதாவது அதிகமாக பேய்கள் பெண்களைத் தாக்குவதற்கான காரணம் பெண்கள் பயந்த சுபாவமுடையவர்களாக இருக்கின்றமையேயாகும். இதனால் “பேய்“ என இரவில் யாராவது கூறினால் பெண்கள் மருண்டு விடுவார்கள். பெண்களிடம் தீட்டு காரியம் காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் தான் ஆவிகள் இலகுவில் பெண்களைத் தாக்குகின்றன.


கேள்வி :- மந்திரவாதி ஒருவர் மற்றொரு மந்திரவாதிக்கு எதிராக மந்திரம் செய்தால் அது பலிக்குமா?
விடை :- பலிக்காது, ஒவ்வொரு மந்திரவாதியும் தனக்கென ஒரு ஆவியை தெரிந்தெடுத்திருப்பான். அது அவனைப் பாதுகாக்கும். ஆகையால், அவர்களுக்கு விரோதமாக ஏதேனும் செய்யும்போது அவ் ஆவிகள் உடனே தடை பண்ணும்.


கேள்வி :- ஒருவர் செய்த மந்திரத்திற்கு எதிராக இன்னுமொருவர் மந்திரம் செய்யும்போது ஆவிகளுக்குள் பிளவு ஏற்படாதா?
பதில்-:- மந்திரங்களை செய்யும்போது எல்லோரும் ஆவிகளைப் பயன்டுத்தி செய்வதனால் ஒருவர் மந்திரம் செய்துவிடும் போது இன்னுமொருவர் அதை நீக்குவதற்கு மந்திரம் செய்வது வழமை. இப்படி மந்திரம் செய்யப்பட்டாலும் இரண்டு ஆவிகளுக்குள்ளும் விரோதங்கள் ஏற்பாடாது. மாறாக பஸ்பரத்துடன் செயற்படும் இந்த ஆவிகள் பரஸ்பரத்துடன் செயற்படுவதனால் முன்பு அனுப்பிய ஆவி பின்பு அனுப்பட்ட ஆவிக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு போய்விடும். எப்படி இருந்தாலும் அந்த குறிப்பிட நபர் மீது ஒரு ஆவி இருந்து கொண்டே இருக்கும். அப்படியானால் மந்திரத்தை மந்திரத்தினால் முற்றாக எடுக்க முடியுமா என்று கேட்டால் அதை முற்றாக எடுக்க முடியாது. என்றே பதில் கூறலாம். மாறாக அதற்குள்ளே மாறிமாறி வெட்டுவார்கள். அதாவது ஏவிய ஆவிகள் அதற்கள்ளேயே சுற்றி சுற்றி நிற்குமே தவிர முற்று முழுதாக வெளியே வராது. எனவே ஒருவர் மந்திரத்திற்குட்பட்டால் அவருக்குள் ஆவிகளின் செல்வாக்கு காணப்படும். அப்படி ஆவிகளின் செல்வாக்களுக்கு உட்பட்டவருக்கு அதில் இருந்து விடுதலையாவதற்கு ஒரே வழி இயேசுக்கிறிஸ்து மாத்திரமே


கேள்வி :- மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
பதில் - மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என கூறமுடியாது. மாறாக மந்திரங்கள் செய்யும்போது சில குறிப்பிட்ட வர்ணத்தை தெரிந்து எடுத்துச் செய்வார்கள். இப்படிச் செய்யும்போது வர்ணத்தாக்கம் ஏற்படலாம்.


கேள்வி :- இறைச்சிக்கும் பேய்க்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?
பதில் :- இறைச்சிக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூற முடியாது. மாறாக மக்கள் இறைச்சிக்கும் பேயக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்பி இறைச்சியைக் கொண்டு போனால் ஆவிகள் அடிக்கும் என பயப்படும்போது இந்தப் பயத்தைப் பயன்படுத்தி ஆவிகள் தாக்குமே தவிர இறைச்சிக்கும் பேய்க்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் பயம்தான்.

கேள்வி :- ஆற்றங்கரையை நாடிப்போவதன் காரணம் என்ன?
பதில் :- தனிப்பட்ட இடங்களில் போய் இந்த மந்திரங்கள் செய்யலாம் என்பதால்
.

கேள்வி :- அமாவாசை நாள் மந்திரத்திற்கு முக்கிய நாளாக கருதப்படுவது ஏன்?
பதில் :- அமாவாசை நாளை முக்கிய நாளாகக் கருத்தக் காரணம் அந்த நாளில் ஆரம்பித்தால் ஏதாவது விஷேசமாக நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் இதைச் செய்கிறார்களே தவிர மற்றப்படி விசேஷம் ஒன்றுமில்லை. இந்த நாள் விசேஷமான நாள் இதில் காரியம் செய்தால் பலிக்கும் என்று கருதி விரதம் இருந்து செய்கிறார்கள் அதுவும் நடக்கிறது. அது அவர்களுடைய நம்பிக்கையேயன்றி நாளில் ஒன்றுமில்லை

கேள்வி – மந்திரத்திற்கு சக்தி இருக்கிறதா?
பதில் – ஆம் மந்திரத்திற்கு சக்தி இருக்கிறது தேங்காயையோ அல்லது தேசிக்காயையோ அல்லது வேறு எதையாவது மந்திரம் செய்யும்போது அது சுற்றும் என்றார். (அப்படி செய்தீர்களா என கேட்டபோது) பாதுகாப்பிற்காக தேங்காய்களை ஓதி வைக்கும்போது அவை யாரேனும் வரும்போது கதைப்பது போல் செயற்படும்.

கேள்வி :- ஒரே நேரத்தில் ஒரே ஆவியை பலரும் அழைத்தால் என்ன நடக்கும்?
பதில் :- ஒரே பெயரில் பல ஆவிகள் இருக்கின்றன. உதாரணமாக காளியின் பெயரில் 108 ஆவி இருக்கிறது. இந்த 108 ஆவிகளுக்கும் இன்னும் 108 ஆவி இருக்கிறது. ஆகவே ஒரே நேரத்தில் பலர் ஒரே ஆவியைக் கூப்பிட்டால் இவற்றில் ஏதாவது ஒன்று போகுமே தவிர ஒரு தடுமாற்றம் வராது.

கேள்வி :- மைபார்க்கிறது என்றால் என்ன?
பதில் :- பூவரசம் இலை என்ற ஒரு இலை இருக்கிறது. இதை அரைத்து சுண்ணாம்போடு கலந்து கண்ணாடியில் வைத்து அந்தப் பகுதியை மட்டும் பாரக்கும்போது தெரியும். அதாவது ஒரு சில காரியங்களைச் சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர் சிந்திக்கிறது நடப்பது போல் தெரியும். இதை வைத்துத்தான் கூறுவார்கள். ஒருவருடைய பொருளை யாராவது எடுத்துக் கொணடு போய்விட்டார் என்றால் எடுத்தவர் இவராகத்தான் இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர்கள் சிந்தித்த உருவம் போனால், எடுத்தவர் இவர்தான் என்று கூறுவார்கள். அவர் சிந்தித்த உருவமும் சிந்தித்த நபரும் சரியாக தென்பட்டால் அவர்தான் திருடியது என்று கூறுவார்கள் ஆகவே மைபார்ப்பது என்பது சிந்தித்துச் சொல்லும் ஒரு காரியமாகும். எண்ணெயை பூசிவிட்டுப் பார்க்கலாம்.

கேள்வி :- அசுத்த ஆவி பிடித்திருப்பரின் பெயரைக் கேட்கலாமா?
பதில் :- கேட்கவேண்டியதில்லை. கேட்டும் பிரயோஜனம் இல்லை. காரணம் கேட்டாலும் அவை உண்மையைச் சொல்லப் போவதில்லை. எனவே கேட்கத் தேவையில்லை.

கேள்வி :- ஊழியக்காரர்கள் அசுத்த ஆவியை துரத்தும்போது என்ன செய்ய வேண்டும்?
ஊழியக்காரர்களாகிய நாம் ஆவிகளைத் துரத்தும்போது அது அங்கிருந்து புறப்பட்டு எமது வீட்டை நோக்கியே வரும் என்பதை மறந்து போகாமல் முதலாவது எமது வீட்டை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். பின்பு அசுத்த ஆவிகளைத் துரத்த போவது நன்று

கேள்வி :- இரட்சிக்கப்பட்ட பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படுமா? 
பதில் - ஏற்படுமென்று கூறுவதற்கில்லை. காரணம் நான் மந்திரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய மந்திரம் பலிக்கவில்லை. நான் மந்திரத்திற்கு பயன்படுத்திய தெய்வம் என்னை துன்புறுத்தியதால் அத்தெய்வத்தை நான் அடித்தேன். ஆனாலும் அது ஒன்றும் செய்யவில்லை. இதற்குக் காரணம் எனக்காக யாரே ஜெபம் செய்தபடியால் என்று பின்பு அறிந்து கொண்டேன். இதற்கு பின்பு என்னை சிலர் கொல்ல முற்பட்டனர். அந்த நேரம் வெளியே போக முடியாமல் உள்ளே இருந்தேன். அந்த நேரம் எனக்கு சுவிஷேசம் சொன்னவர் என்னைச் சந்தித்து எனக்காக ஜெபம் செய்தார். இதற்குப் பின்பு எல்லா மந்திரக் காரியங்களையும் சுட்டெரித்தேன். நான் மந்திரத்தை விட்டு வெளியேறிய பின்பு ஆவிகள் கனவில் தோன்றி எனக்கு உதவி செய்வதாக கூறியது. ஆனாலும் என்னை பெலப்படுத்தியவர்கள் அவ்வாறு செய்யவிடவில்லை. இதற்கு பின்பு கொழும்பில் இருந்து மந்திரிக்க வந்தார்கள். எனது மனது தளர்வது போல் இருந்த்து. அந்த நேரமும் என்னை பெலப்படுத்தியவர்கள் மூலம் அதை விட்டுவிட்டேன். நான் ஊழியத்திற்கு போன பின்பு தேவன் செய்த அற்புதத்தால் முழுமையாக அவருக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். இதற்கு பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படவில்லை என்று சாட்சி பகர்ந்தார். ஆக இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சிறிது தாக்கம் இருந்துள்ளது என்று அவருடைய கூற்றின் மூலம் புலப்படுகின்றது. இதே நேரத்தில் இந்தியாவில் பிரபல மந்திரவாதியாக இருந்து இரட்சிக்கப்பட்ட தொட்டண்ணாவின் சாட்சியைக் கவனித்தால் அவரும் தனக்கு இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் ஆவியின் செயற்பாடு அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தான் இரட்சிக்கப்பட்ட பின்பு மீண்டும் மந்திரம் செய்யப் போகக் காரணம் தன்னை யாரும் கவனிக்காமையே என்றும் கூறியுள்ளார். இவை இரண்டும் இவருடைய சாட்சியுடன் ஒத்துப் போகிறது. அதாவது இவரை யாராவது பெலப்படுத்தாவிட்டால் இவரும் மந்திரம் செய்யப் போயிருப்பார் என்பது இவருடைய கூற்றில் இருந்து தெரிய வருகிறது. எனவே ஆவியிலிருந்து விடுபட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் இனி அசுத்த ஆவிக்ள கிரியை செய்யாது என்று இருக்காமல் அவற்றுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கேள்வி :- இப்போது உங்களுக்கு அசுத்த ஆவி பிடித்திருப்பதை இனங் காண முடியுமா?
பதில் :- இரட்சிக்கப்பட்ட பின்பு நான் அசுத்த ஆவிகள் குறித்து இவைதான் என்று இனம் காண முற்படவில்லை. அதேவேளை ஊகிக்கவும் முடியாது என்பது என் கருத்து

கேள்வி :- ஜாதகத்தைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
அதாவது ஜாதகம் எழுதியிருக்கின்றபடி நடக்கும் அல்லது நடக்கிறது என்று கூறுகிறார்களே,இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அது அப்படியல்ல. அந்த நாளில் நடக்குமென்று அவர்கள் நம்புகிறபடியால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அசுத்த ஆவி கிரியை செய்து அவர்களைத் தாக்குகின்றதே தவிர ஜாதகப்படி நடப்பது என்று கூறமுடியாது. என்ற கூறியது மட்டுமல்ல. இன்னுமொரு உதாரணக் கதையையும் கூறினார். அதாவது ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கண்டம் இருப்பதாக அவருடைய ஜாதகத்தில் எழுதியிருந்தாகவும் அதேவேளையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மந்திரம் செய்தால் பிழைக்க வைக்க முடியும் என்றும் எழுதியிருந்தது. இதை அறிந்த நபர் அந்த நாளும் அந்த நேரமும் வரும்போது பயத்தாலேயே வியாதி உற்றதாகவும், பின்பு தான் அந்த நேரத்திற்குப் போய் அவருக்கு மந்திரம் செய்து அதை எடுத்துப் போட்டதாக கூறிய பின்பு அவருக்கு சுகம் கிடைத்ததாகவும் மக்களின் நம்பிக்கைத் தான் இதற்குக் காரணம் என்று கூறினார். மேலும் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் சரியான நேரம் கொடுக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் கொடுக்கின்ற நேரத்தை வைத்துத்தான் என்ன நட்சத்திரம் என்ன கண்டம் என்று பார்த்துத்தான் எழுதிக் கொடுப்பார்கள். அதை உண்மையென மக்கள் நம்புகின்றமையால் சாத்தான் அவர்களின் நம்பிக்கையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகின்றான் என்று கூறினார். இவர் ஜாதக விடயத்தில் கூறவந்த முக்கிய விடயம் என்றவென்றால் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் அவசியம். இந்தச் சரியான நேரம் யாராலும் கொடுக்க முடியாததால் எழுதப்படும் ஜாதகம் பொய்யாகும்.

கேள்வி :- மந்திரவாதிகள் மத்தியில் எப்படி சுவிசேஷத்தை கூறுவது?
இக்கேள்விக்கான பதில் அவருடைய சுவிசேஷ ஊழியத்துடன் தொடர்பு பட்ட அனுபவமான பதிலாக இருந்தது மந்திரவாதிகள் மத்தியிலே சுவிசேஷத்தினை .கூறுவதென்பது இலகுவான செயலல்ல. அதற்கு பிரதான காரியங்கள் ஐந்து தேவை. அவையாவன
1. பரிசுத்த ஆவியானவர் உதவி
2. பரிசுத்தமான வாழ்க்கை
3. ஜெபம்
4. உபவாசம்
5. விசுவாசம்


உண்மை விடயம்
மந்திரவாதி ஒருவரின் மனைவி வியாதிப்பட்டிருந்தாள். அதை குடும்பத்துடன் ஜெபத்துடன் உபவாசத்துடனே அங்கு சென்றபோது எதிரே தென்பட்டவன் அந்த மந்திரவாதிதான். தேவஆவியானவரின் பெலத்துடன் சென்றமையினால் வந்த விடயத்தை கூறியபோது அவர் ஜெபிக்கும்படி அனுமதி கொடுத்தார். ஜெபிக்கப்பட்டது. அந்த சகோதரி விடுதலை அடைந்தார். நாளடைவில் அந்த குடும்பம் இரட்சிக்கப்பட்டு பின்பு தலைவர் மந்திரவாதியும் இரட்சிக்கப்பட்டார். எனவே மேற்குறிப்பிட்ட காரியங்களை கருத்திலெடுத்து செயற்படும்போது பெரிய காரியங்களை கர்த்தர் செய்வார்

முடிவுரை. 
இவ்வுலகில் எத்தனை ஆயிரம் மந்திரங்கள், பில்லி சூனியம் மாயவித்தைகள், இருந்தாலும் அத்தனையும் வீண்பிரயாசங்களாகும. ஏன்? மந்திரங்கள் பில்லி சூனியம், மாயவித்தை செய்யப்பட்டவர்களை ஒரு நொடிப்பொழுதில் இயேசுவின் வல்லமையானது விடுதலையாக்கி இயசுவின் இரத்தமானது சுத்திகரிக்கின்றதாயிருக்கின்றது. அந்த வல்லமைகள் இயேசுவின் சர்வ வல்லமைக்கு முன்பாக நிற்க முடியாது. உண்மையாகவே இந்த செய்முறை வேலையானது பிரயோஜனமாகவுள்ளது. எதிர்கால ஊழிய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் என விசுவசிக்கிறேன். மக்களின் அறியாமையெனும் இருளை நீக்கி இயேசு கிறிஸ்துவின் ஆச்சரியமான ஒளிக்குள் அழைத்து வருவதற்கு இது பெரிதும் உறுதுணையாகும்.

மந்திரம், சூனியம் எல்லாம் மன்னவன் முன் நில்லாது
அசுத்த ஆவியின் கட்டுகளெல்லாம்
அருமை இரட்சகர் நாமத்தால் உடையும்
அறியாமை இருள் நீக்குவோம்
இயேசு எனும் ஒளி வீசுவோம்
மந்திரங்கள் மாயை
இயேசுவின் மாண்பு மிகு நாமமே உண்மை

Wednesday 4 May 2011

கிறிஸ்தவத்தை அழிப்பவனின் முடிவு


18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல பிரஞ்சு தத்துவ ஞானி வொல்ட்டயர் கிறிஸ்தவத்தை உலகிலிருந்து முற்றாக அழிப்பதற்கு பலவிதத்திலும் முயற்சி செய்தவனாவான். வேதாகமத்திற்கும் தேவனுக்குமெதிராக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ள வொல்ட்டயர், “கிறிஸ்தவம் வளர்வதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்தன. ஆனால் 50 வருடங்களுக்குள் அதை ஒரே ஒரு பிரெஞ்சு மனிதனால் எவ்வாறு அழிக்க முடியும் என்பதை நான் காட்டுகிறேன் எனக் கூறினான்.


வேதாகமத்தை பூமியிலிராதபடி ஒழிக்க தான் தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்றுவிடும் எனும் எண்ணத்தில் “இன்னும் நூறு ஆண்டுகளில் கிறிஸ்தவம் பூண்டோடு அழிந்துவிடும்“ எனப் பெருமிதங் கொண்டான் வொல்ட்டயர்.


கிறிஸ்தவத்தை அழிக்க முயன்ற வொல்ட்டயர். கடைசியில் தன்னைத் தானே அழித்துக் கொண்டான். பிரபல தத்துவ ஞானியாக இருந்த அவன், தன் வாழ்வின் இறுதிப் பகுதியில் விரக்தியடைந்த நிலையில் “நான் பிறவாதிருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும்“ எனக் கூறியதோடு மரணப் படுக்கையிலிருக்கும்போது தனக்கு சிகிச்சையளித்த வைத்தியரிடம் “நான் தற்போது மனிதர்களினாலும் தேவனாலும் கைவிடப்பட்டுள்ளேன். உம்மால் எனக்கு ஆறு மாத காலம் வாழ்வைக் கொடுக்க முடியுமென்றால் நான் எவ்வளவு பெறுமதியானவனோ அதில் பாதியை உமக்குத் தருகிறேன்“ என்றான். ஆனால் வைத்தியரோ “உம்மால் ஆறு கிழமைகள் கூட உயிர்வாழ முடியாது“ என்று தெரிவித்தார். அதைக் கேட்ட வொல்ட்டயர் “அப்படியானால் நான் நரகத்திற்குத்தான் போவேன். நீயும் என்னோடு வருவாய்“ என்று கூறியதோடு சிறிது நேரத்துக்குள்ளாக மரணமடைந்தான்.


கிறிஸ்தவத்தையும் வேதாகமத்தையும் அழிக்கப் பாடுபட்ட வொல்ட்டயர் கடைசியில் தன் வாழ்வையே அழித்துக் கொண்டான். ஆனால் அவன் அழிக்க முயன்ற கிறிஸ்தவமோ வளர்ந்து கொண்டே வந்துள்ளது. வொல்ட்டயர் மரித்து 20 வருடங்களின் பின்னர் அவனது வீட்டை ஜெனீவா வேதாகமச் சங்கம் விலை கொடுத்து வாங்கியதோடு அதை வேதாகமத்தை அச்சிட்டு வெளியிடும் அச்சகமாக்கியது. பிற்காலத்தில் அவ்வீடு பிரித்தானிய வெளிநாட்டு வேதாகமச் சங்கத்தின் பாரீஸ் தலைமையகமாகியது.


வொல்ட்டயர் அழிக்க முற்பட்ட வேதாகமம் இன்று உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக உள்ளது. ஆனால் 6 தொகுதிகள் கொண்ட வொல்ட்டயரின் எழுத்துக்களை ஒரு டொலர் கொடுத்தும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. கிறிஸ்தவத்தை அழிக்க முற்படுவது தற்கொலை செய்வதற்கு சமமானது என்பதற்கு வொல்ட்டயரின் வாழ்வு உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு உதாரணமாய் உள்ளது.


வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (Matt 24:35 Ps 102:26; Isa 51:6; Mark 13:31; Heb 1:11;)

(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)