- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 23 November 2014

வேதமும் விளக்கமும் - வெளிப்படுத்தல் 12:1 இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ?

வெளிப்படுத்தல் 12:1 இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ? (ஆர். சரொஜா.  ஆனமடுவ இலங்கை
 
வெளிப்படுத்தல் 12ஆம் அதிகாரத்தில் வரும் பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. இப்பெண் மரியாள் என சிலர் கூறுகின்றனர். கர்ப்பவதியாயிருக்கும் இப்பெண் பெற்றெடுத்த பிள்ளை இயேசுகிறிஸ்துவாக 5ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் அவள் மரியாள் என்பது இவர்களது கருத்தாக உள்ளது. எனினும் இப்பெண்ணைப் பற்றிய விவரணம் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு அல்ல, மாறாக இஸ்ரவேல் ராஜ்யத்திற்கே பொருத்தமானதாய் உள்ளது. ஆதி. 37:9-10 இல் யோசேப்பு கண்ட சொப்பனத்தில், சூரியன் சந்திரன் பதினொரு நட்சத்திரங்கள் என்பன இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஆரம்ப கர்த்தாக்களைக் குறிக்கும் விவரணமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தல் 12:1 இலுள்ள பெண் இஸ்ரவேல் இராஜ்யம் என்று கருதப்படுகின்றது. இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் மக்களது வம்சத்தில் வந்தபடியால், இஸ்ரவேலைக்கு குறிக்கும் வெளிப்படுத்தல் 12:1 இலுள்ள பெண் பெற்றெடுத்கும் ஆண்குழந்தை இயேசுகிறிஸ்து என்பதும் இதன்படி சரியான விள்கமாகவே இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ராஜ்யம் கரப்பவேதனைப்படும் பெண்ணாக உமிக்கப்பட்டிருப்பதும் (ஏசாயா. 54:5, 66:7,  எரேமியா. 3:6-10மீகா 4:10, 5:2-3) வெளிப்படுத்தல் 12:1-2 கர்ப்பவதியாக சித்தரிக்கப்பட்ட்டிருக்கும் பெண் இஸ்ரவேல் ராஜ்யத்தையே குறிக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. 
 
 
வெளிப்படுத்தல் 12:1  
1. அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 
 
 
வெளிப்படுத்தல் 12:5
5. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும், எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
ஏசாயா. 54:5,
5. உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 
 
ஏசாயா 66:7,, 
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 
 
 
எரேமியா. 3:6-10,
 
6. யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.

7. அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

8. சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

9. பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

10. இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 
 
 
மீகா 4:10,
10. சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன் வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். 
 
 
மீகா  5:2-3)
2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

3. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். 

Saturday 15 November 2014

வேதமும் விளக்கமும். சங்கீதம் 129:6 இல் வீட்டின்மேல் முளைக்கும் புல் என குறிப்பிடப்பட்டுள்ள புல் எது?

68. சங்கீதம் 129:6 இல் வீட்டின்மேல் முளைக்கும் புல் என குறிப்பிடப்பட்டுள்ள புல் எது(ஆர். மோகன், கொழும்பு – 06)








இவ்வசனத்தை விளங்கிக் கொள்வதற்கு வேதாகம காலத்தில் வீடுகளின் கூரைகள் எத்தகையவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அக்காலத்தில் வீடுகளுக்கு கூரைபோடும்போது முதலில் ஓரளவு இடைவெளியில் இருபக்கச் சுவரின்மீதும் மரப்பாரலைகள் வைக்கப்படும். அதன் பின்னர் மரக்கிளைகள், புதர்களாக வளரும் செடிகள், நாணற்புற்கள் என்பவற்றில் ஏதாவதொன்றினால் பரப்பாராலைகள் இணைக்கப்படும். கடைசியில் இதன் மீது மண்ணும் சிறுகற்களும் சேர்கப்பட்ட கலவை போடப்பட்டு கல் உருளையின் மூலம் இறுக வைக்கப்படும். மண்ணில் புற்களின் விதைகள் இருப்பதனால், அவை முளைவிட்டு வளரத் தொடங்கும். இத்தகைய புற்களே வீட்டின் மேல் முளைக்கும் புல் என வேதாகமத்தில் குறிப்பிப்பட்டுள்ளது. அக்காலத்தில் வீட்டுக் கூரைகள் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டமையால் அவற்றில் முளைக்கும் புற்கள் விரைவில் அழிந்துவிடும். கூரையில் வளரும் புற்களின் இத்தகு தன்மையைக் கருத்திற் கொண்டே சங்கீதம் 129:6 இல் சிறிதுகாலம் மட்டும் இருப்பவர்களுக்கான உருவகமாக வீட்டின் மேல் முளைக்கும் புல் குறிப்பிப்பட்டுள்ளது. 
 
 
6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம். 

Saturday 8 November 2014

வேதமும் விளக்கமும் - சங்கீதம் 75:8 கலங்கிப் பொங்குகிற மதுபானம் விளக்கம் என்ன?

சங்கீதம் 75:8 இல் கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். என்றுள்ளது இதன் அர்த்தம் என்ன? (கே. ராமலிங்கம், செங்கல்பட்டு, இந்தியா)
 
தேவனுடைய கடுமையான நியாத்தீர்ப்புக்கான உருவகமாக மதுப்பானப் பாத்திரம் வேதாகமத்தின் சில வசனங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 14:10 இல் இவ்விரணம் நமக்கு புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது. அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். என்று அவ்வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. துன்மார்க்கர் தேவனுடைய தண்டனையாகிய உக்கிரமான மதுவைக் குடித்து அதினால் வாதிக்கப்படுவார்கள் என்பதே சங்கீதம் 75:8 இன் விளக்கமாகும். இத்தகைய விபரணத்தை யோபு 21:20 ஏசாயா 51:17 எரேமியா 25:15போன்ற வசனங்களிலும் நாம் அவதானிக்கலாம். 
 
அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 
 
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான். 
 
 எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.
 
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, 

Thursday 6 November 2014

:வேதமும் விளக்கமும் - இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

66. இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? (ஏ. ராயப்பன், திருவரம்பூர், இந்தியா) 




அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை' (அப். 4:12) இல் நாம் வாசிக்கலாம். இயேசுகிறிஸ்துவும் யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.அறிவித்துள்ளார். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரட்சிப்படைய வேறுவழிகள் ஏதுவும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

Monday 3 November 2014

வேதமும் விளக்கமும் மத்.2:3 இலும் அப்.12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா?

65. மத்தேயு 2:3 இலும் அப்போஸ்தலர் 12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா? (ஆர் தேவராஜ், கட்டுகஸ்தோட்டை) 
மத்தேயு 2ஆம் அதிகாரத்தில் வரும் ஏரோது ராஜா மகா ஏரோது என அழைக்கப்படுபவனாவான். இவன் கி.மு. 37 முதல் கி.மு. 4 வரை பலஸ்தீனாவை ஆட்சி செய்தவனாவான். அப்போஸ்தலர் 12:1 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோது, மகா ஏரோதுவினுடைய பேரனான முதலாம் ஏரோது அகரிப்பாவாகும். 
 
 
மத்தேயு
2 அதிகாரம் 3. 
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 
 
 
அப்போஸ்தலர்
12 அதிகாரம் 1.
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;