- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 26 April 2013

தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள்



நாம் இதுவரை குறிப்பிட்ட காரியங்களில் அநேகமானவை, துணை இல்லாமல் தனித்திருப்பவருக்கும் பொருந்தும். இருப்பினும், தனித்திருப் பவர்கள் பிரத்தியோகமான ஒரு நிலைவரத்தில் பிரத்தியேகமான சவால்களுடன் இருப்பதால், அவர்களுக்கென்று ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். இவை திருமணமானவர்களுக்கும் பிரயோஜன மானவையாயிருக்கும். 

ஒரு முக்கியமான அழைப்பு – தனித்திருப்பது தேவனிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ள (36 குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன) உன்னதான அழைப்பு. இதனை பவுல் மிகவும் உயர்வான மதிப்புக்குரியதாக வைத்திருந்தார்( 1 கொரி 7) தனித்திருப்பவர்கள், மனிதர் அனுபவிக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களில் ஒன்றான, பாலுறவில் நன்றாக ஈடுபடமுடியாது என்பது உண்மையானதாகும்.ரூத் டக்கர் என்பர், நற்செய்திப்பணி ஊழிய சுதந்திரம் தொடர்பான தனது புத்தகத்தில் திருமணமாகாத பெண் நற்செய்திப் பணியாளர்களின் பெரிதான ஊழியப் பணியைக் குறித்து தனியான அத்தியாயம் ஒன்றை எழுதியுள்ளார். இருப்பினும் இந்த திருமணமாகாத நற்செய்திப் பணிப்பாளர் முகங்கொடுத்த பிரதானமான அனுபவம் தனிமையும் சில வேளைகளில் மனச் சோர்வுமாகும் என அவர் குறிப்பிடுகின்றார். 

எனவே, தேவன் எமது வாழ்க்கைக்குத் தந்துள்ள சிறந்தவற்றை இழக்கின்றார்கள் என நாம் கூறக்கூடுமா? பவுல் 1 கொரிந்தியர் 7 இல் கூறுபவற்றை நாம் கருத்திற் கொண்டால் அப்படியாக்க் கருதமுடியாது. அவர் இவ்விடத்திலே, சிறப்பாக தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு (வசனம் 26) திருமணமாகாதவர்களை, திருமணம் செய்ய வேண்டாமென அறிவுறுத்துகிறார். இயேசு தருவதாக வாக்களித்த நிறைவான வாழ்வு (யோவான் 10:10) தனித்திருப்பவர்களுக்கும் நிச்சயமாய் கிடைக்கும். உண்மையில் இயேசு திருமணமாகாத தனியானவராகவே இருந்ததுடன், உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவராயும் இருந்தார். எனவேதான் அவர் எமக்கு மகிழ்ச்சியைத் தரும்போது எமது மகிழ்ச்சி பூரணமானதாயிருக்கும் என்று சொன்னார். (யோவான். 15:11) அவர் இந்தக் காரியத்தை, உலகிலுள்ள எந்த மனிதனும் அனுபவத்திராத பெரிய உபத்திரமான உலகத்தின் பாவங்களின் தண்டனையை தான் ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாகச் சொன்னது சுவரசியமானதாகும். எனவே, உலகத்தின் பார்வையில் இழப்புள்ளது என கருதப்படும் வேளையிலும் கிறிஸ்தவர்கள் நிறைவானவர்களாய் இருக்கக்கூடும்.

பிரச்சினை என்னவெனில் நாம் வாழும் உலகம் பாலியலைக் கடவுளாகக் கணிப்பிடுகின்றது. இந்தக் கணிப்பீடு காரணமாக பாலியல் உறவுகளற்றவர்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளிலொன்றை இழந்தவர்கள் என்ற மனப்பாங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆராய்ச்சிகள் இம் மனப்பான்மை பிழையானது என உறுதிப்படுத்தியுள்ளன. பாலுறவைத் தவிர்த்துக் கொள்கிறவர்கள் சுகதேகியான நபர்கள் இருக்கலாம். 
பவுல், திருமணமாகாமல் தனிமையாயிருக்க மனிதரை அறிவுறுத்துவதற்கான காரணம், இப்படியானவர்கள் குடும்பத்தைப் பாராமரிக்க வேண்டிய சுமையில்லாமல் தேவனுக்கு ஊழியம் செய்யக் கூடிய பிரத்தியோக நிலையில் இருப்பதேயாகும் (1 கொரி. 7:32-35) என்னுடைய வீட்டிலுள்ள படிப்பறையில் எனக்கு விருப்பமான துறைகளில் பிரசித்தி பெற்ற 28 கிறிஸ்தவ தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். இவர்களில் 8 பேர் திருமணமாகாதோர் : ஏமி கார்மைக்கல், ஜோன் கிறிஸ்சோஸ்டம்,, ஹென்றியட்டா மியர்ஸ், சாது சுதந்தர்சிங், ஜோன் கிறிஸ்டோஸ்டம், சாது சுந்தர்சிங், ஜோன் சங், கோரி டென் பூம், சி.எஸ். லூயிஸ் தனது ஐம்பதாவது வயதின் பிற்பகுதியில் திருமணம் செய்து நான்கு வருடங்களில் தாரமிழந்தோர். இங்கு காணப்படும் திருமணமாகாதவருக்கும் திருமணமானவருக்கும் இடையேயான விகிதம் உலகத்தில் காணப்படும் விகிதத்திலும் அதிகமானதாகும். ரூத் டக்கர் தனது புத்தகத்தில், ஒரு ப்ப்டிஸ் நற்செய்திப் பணி அதிகாரி “சீனாவில் இரண்டு திருமணமான ஆண்களைவிட ஒரு பெண் அதிக பயனுள்ளவளாய் இருப்பாள்“ எனக் குறிப்பிட்டுள்ளதாக எழுதியுள்ளார். 



தீர்க்கப்படாத விருப்பங்கள்

திருமணமாகாதவர்களுக்கும் பாலியல் விருப்பங்கள் இருக்கும். இவை நிறைவேற மாட்டாது. அவர்கள் இவற்றைக் குறித்து என்ன செய்யக்கூடும்? எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்படியான சூழ்நிலைகளுக்குள்ளாகச் செல்வார்கள். நான் என்னுடைய வாழ்வின் இறுதி மூன்றிலொரு பகுதியில் உள்ளேன் என நம்புகின்றேன். நானும் எனது மனைவியும் எங்களில் இருவரில் ஒருவர் பரலோகத்திற்குப் போகும் நிலைமைக்கு எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். முப்பதாண்டு திருமண வாழ்க்கையின் பின்னர் இந்தக் கணம் உலகில் இருக்கப் போகின்றவர்களுக்கு மிகவும் கஷ்டமானதொரு அனுபவமாக இருக்கும் எனபது நிச்சியம். நாம் இருவரும் ஒரே நேரத்தில் மரிக்க விரும்புகின்றோம். ஆனால், அநேகமாக அப்படி நடக்க மாட்டாது. இணைந்து வாழ்ந்து பழக்கப்பட்ட பின்னர் தனித்து வாழும் வாழ்க்கைக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். இது மிகவும் கடினமானதென நாம் அறிவோம். ஆனாலும், தேவன் நம்மோடு நமது கடினமான அனுபவங்களோடுமிருந்தும் எமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தருவார் எனவும் நாம் அறிவோம். அன்புக்குரிய ஒருவரின் மரணத்தின் பிரிவின் மிகுதியிலும் கிறிஸ்தவ மகிழ்ச்சி தொடர்ந்தும் நிலைத்திருக்கும். 


கிறிஸ்தவனொருவன் உளவியல் ரீதியில் வளர்ச்சியடையாத ஒருவரைத் திருமணம் செய்து உளரீதியாக கடினமானதொரு திருமணவாழ்க்கைக்கூடாக மரணம் தம்மை பிரிக்கும் வரையில் வாழவேண்டிய சந்தர்ப்பங்களை நாம் சந்திக்கக்கூடும். இது கடினமானதாகும். எனினும் தேவன் தேவையான பலத்தைக் கொடுப்பார். திருமணமானவர்களில் சிலருக்கு உளரீதியான அல்லது சரீர ரீதியான பிரச்சினைகள் காரணமாக ஆரோக்கியமான பாலியல் உறவுகளில் ஈடுபட முடியாதுள்ளது. இப்படியான பிரச்சினைகள் தீரக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் சிலவேளைகளில் சில பிரச்சினைகள் குணமாக்கப்பட போவதில்லை. 


தேவன் சிலரை இப்படியான அனுபவத்திற்குள் அனுமதிப்பது சாதாரண நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டதாகும். ஆனால், அவர் பிரச்சினைகளை விட பெரிதானவர். அத்துடன் இப்படியான அனுபவங்களை அனுபவிப்பவர்களுக்கு தனது பிள்ளைகளுக்கு கொடுக்கும் பரிபூரண வாழ்க்கையை அவர் கொடுக்கிறார். 



பரிசுத்த அவா

அப்படியானால் தனிமையாயிருப்பின் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக பாலியல் உறவின் அனுபவத்தின் நிறைவு பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான் இவர்களுக்கு வேதாகமத்தின் கட்டுப்பாடுகளில் ஒன்றான, “பரிசுத்த அவாவை“ யோசனையாக முன்வைக்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள், தேவன் தமக்கென்று தருகின்ற ஆசீர்வாதங்களை சுவைத்தவர்கள். இருப்பினும், அவர்களுக்கு இப்பொழுது தாம் அனுபவிக்கும் காரியங்கள் முழுமையின் ஒரு முன்னுகர்வே என அறிவார்கள். எனவே அவர்கள் உலகத்தில் ஏமாற்றங்களை அனுவித்து நிறைவுக்காக ஏங்குவார்கள். பவுல் இதனை ரோமர் 8:18-25 இல் விபரிக்கின்றார். சங்கீதங்களில் விசுவாசிகள் தேவனுக்காக தவிப்பதையும் (சங். 42:1) தாகம் கொள்வதையும் (63:1) காண்கிறோம். இத்தாகமானது நாம் பரலோகம் செல்லும்வரை தீர்க்கப்பட மாட்டாத ஒன்றாகும். உன்னதப்பாட்டுக்கள், ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கிடையேயான அன்பு, திருமணத்தின் மூலமாக முழு நிறைவடைவதைச் சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை இதே தத்துவத்தைப் பயன்படுத்துகின்றது.


தனிமையாய் இருப்பவர்களும் இவ்விடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களும் தங்களது அசாதாரணமான நிலைவரம் காரணமாக ஆழ்ந்த அழுத்தங்களை எதிர்கொள்வார்கள். பாலியல் ரீதியான சமுதாயத்தி டமிருந்தும் அழுத்தங்கள் உண்டு. அக்கறையுள்ள உறவினர்களிடமிந்தும், நண்பர்களிடமிருந்தும், இவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவர்வத்தினால் அழுத்தங்கள் உண்டு. இதன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக கூர்மையான கேள்விகளைக் கேட்ட வண்ணமாயிருப்பார்கள். தங்களிடத்தே காணப்படும் காதலுணர்வு, பாலுணர்வு காரணமாக அவர்களுக்கு அழுத்தங்கள் உண்டு. இவை இல்லையென மறுக்க முடியாது. ஆனால், அவர்கள் தங்களது ஆசைகளை பரிசுத்த அவாவாவக மாற்றக் கூடும். தேவன் எமக்கு முழுமையைத் திட்டமிட்டு வைத்துள்ளார். இது பரலோகத்திலேயே முழுமையை அடையும். இதற்கிடையில் அவர் எமக்குத் திருமணத்தை பாலிய வயதிலோ, பிந்திய வயதிலோ தரக்கூடும். அல்லது அவர் எம்மை தனிமைக்கு அழைக்கக் கூடும். இவர்கள் தேவன் தமக்குத் திட்டமிட்டுள்ள முழுமையாக்காக அவருடனிருந்து பரிசுத்தமாயிருப்பதன் மூலம் தேவன் தங்களுடைய வாழ்க்கைக்கா வைத்துள்ள அழகிய திட்டத்தை அழிக்காமல் காத்துக் கொள்ளலாம். 

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்




Thursday 18 April 2013

பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; (மத். 11:12)

தேவனுடைய ராட்சியத்தைப் பற்றி இயேசுகிறிஸ்து அறிவித்தவைகளில் நம்மால் புரிந்துகொள்வதற்கு சிரமமாயிருக்கும் விடயங்களில் ஒன்று அவ்விராட்சியம் “பலவந்தம் பண்ணப்படுகின்றது.” என்று அவர் குறிப்பிட்டமையாகும். இதைப் பற்றி இயேசு மத்தேயு 11:12 இல் பின்வருமாறு கூறியுள்ளார். “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.“ இயேசு கிறிஸ்து இக்கூற்றின் மூலம் என்ன சொல்ல முற்படுகின்றார் என்பதை அறிந்து கொள்வதில் நமக்குள்ள சிரமத்தை விட, இக்கூற்றை எவ்விதம் மொழிபெயர்ப்பது என்பதில் உள்ள சிக்கல்கள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம், மூலமொழியில் இக்கூற்றிலுள்ள இருசொற்பிரயோகங்களை. கிரேக்க மொழி இலக்கணத்தின்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதில் வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருப்பதேயாகும்.

கிரேக்க மொழி இலக்கணத்தின் இயேசுவின் கூற்றில் “பலவந்தம் பண்ணப்படுகின்றது” என்பதில் பயஸ்டாய் (biazetai) எனும் வினைச்சொல், “மிடில்வொய்ஸ்சில்” அல்லது செயற்பாட்டு வினையில் மொழிபெயர்க்கப்படலாம். இதன்படி இச்சொற்பிரயோகம் மிடில்வொய்சில் “வல்லமையோடு வருகின்றது” (1) என்றும் செயற்பாட்டுவினையில், “வன்முறைக்கு உள்ளாகின்றது(2) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். அதேபோல, “பலந்தம் பண்ணுகின்றவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்” எனும் வாக்கியத்தில் “பலவந்தம் பண்ணுகிறவர்கள்“ எனும் பெயர்ச்சொல்லானது, நேரிடையாகவும் எதிரிடையாகவும்,  உபயோகிக்கப்படலாம். இதன்படி “வல்லமையான மக்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள்” என்றும் அல்லது எதிரிடையான அர்த்தத்தில் “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவார்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம்(3) இவ்வித்தியாசனமான மொழிபெயர்ப்புகளை அடிப்படையாய்க் கொண்டு இயேசுவினுடைய கூற்றின் அர்த்தமும் வேறுபடுகின்றது.

இயேசுவின் கூற்றில் “பலவந்தம் பண்ணப்படுகின்றது” எனும் சொற்பிரயோகத்தை “வல்லமையோடு வருகின்றது” எனும் அர்த்தத்தில் வியாக்கியானம் செய்பவர்கள் இயேசுவின் ஊழியத்தில் தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வந்ததைப் பற்றிய விபரணமாக இவ்வாக்கியத்தைக் கருதுகின்றனர்(4) இவ்வாக்கியத்திலுள்ள வினைச்சொல்லை செயற்பாட்டு வினையாக எடுத்து இயேசுவின் சொற்பிரயோகத்தை “வன்முறைக்கு உள்ளாகின்றது” என விளக்குபவர்கள், தேவராட்சியத்திற்கு ஏற்படும் எதிர்ப்புகளையும் உபத்திரங்களையும் பற்றிய விவரணமாக இதைக் கருதுகின்றனர்(5) எனினும் “புதிய ஏற்பாட்டில், இவ்வசனத்திலும் லூக்கா 16:16 லும் மட்டும் இடம் பெறும் “பயஸீட்டாய்” (biazetai) எனும் கிரேக்க வினைச்சொல் அக்கால கிரேக்க இலக்கியங்களில் மிடில்வொய்சிலேயே பொதுவாக உபயோகிக்கப்பட்டுள்ளது(6) எனவே, தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு வந்ததைப் பற்றிய விவரணமாகவே இயேசுவின கூற்று உள்ளது. இயேசுவினுடைய ஊழியத்தில் “தேவராட்சியம் வல்லமையோடு முன்னேறிச் செல்கின்றது” என்பதே இயேசுவினுடைய கூற்றின் அர்த்தமாய் உள்ளது“(7)

இயேசுவின் கூற்றிலுள்ள சிக்கலான இரண்டாவது சொற்பிரயோகம், அதாவது, “பலந்தம் பண்ணுகின்றவர்கள் அதைப் பிடித்துக் கொள்வார்கள்” என்பதில் பலந்தம் பண்ணுகின்றவர்கள் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள (biastes) எனும் பெயர்ச்சொல்லை நேரிடையான அர்த்தத்தில் விளக்கும் வேத ஆராய்ச்சியாளர்கள் “தைரியத்துடனும் திடற்சங்கற்பத்துடனும் தேவராட்சியத்தைத் தமதாக்கிக் கொள்ளும் வலிமை பொருந்தியவர்களையே இயேசு பலவந்தம் பண்ணுகின்றவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்” என விளக்குகின்றனர். ஆனால், “பயஸ்டெஸ்” (biastes) எனும் பதம் மூலமொழியில் எப்போதும் எதிரிடையான அர்த்தத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது.(8) எனவே, இயேசுவின் கூற்றிலும் இதை எதிரிடையான அர்த்தத்தில், “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவார்கள்“ என்றே மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால், இப்பதத்தை வழமைக்கு மாறான அர்த்தத்தில் இயேசு உபயோகித்திருந்தால் அவர் சொல்ல முற்படுவதை நாம் சரியாக விளங்கிக் கொள்வதற்காக அவர் அது பற்றி நிச்சியம் குறிப்பிட்டிருப்பார்.
இயேசுவின் கூற்றிலுள்ள இரண்டாவது சொற்பிரயோகம் “வன்முறையாளர்கள் அதை சூறையாடுவர்கள்” எனும் எதிரிடையான அர்த்த்த்தில் உள்ளமையால் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இயேசுவின் கூற்றிலுள்ள முதலாவது சிக்கலான சொற்பிரயோகம் செயற்பாட்டுவினையில், எதிரிடையான அர்த்த்தில் “வன்முறைக்கு உள்ளாகின்றது“ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும் எனத் தர்க்கிக்கின்றனர்.(9) இதன்படி தேவனுடைய ராட்சியத்திற்கு யோவான் ஸ்நானகனுடைய காலம் முதல் ஏற்பாட்டு வரும் எதிர்ப்பையும் தீயவர்கள் தேவராட்சியத்தை அழிக்க முற்படுவதையும் பற்றியே இயேசு மத்தேயு 11:2 இல் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதப்படுகின்றது.(10) எனினும் இயேசுவின் கூற்றில் இரண்டாவது சொற்பிரயோகம் எதிரிடையான அர்த்தத்தில் உள்ளமையால், முதல் சொற்பிரயோகமும் அவ்விதம் எதிரிடையான கருத்திலேயே உள்ளது எனக் கூறுவது நியாயமான ஒரு தர்க்கம் அல்ல. இயேசுவின் கூற்றிலுள்ள முதலாவது சொற்பிரயோகம் நேரிடையான அர்த்தத்துடன் தேவனுடைய ராட்சியம் வல்லமையோடு பரவிச் செல்வதைப் பற்றி அறியத்தருகையில், இரண்டாவது சொற்பிரயோகம் தேவராட்சியத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளையும் உபத்திரவங்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.

குறிப்புகள்
(1) புதிய சர்வதேச புதிய (NIV) ஆங்கில வேதாகமத்தில் இவ்விதமாக இவ்வாக்கியம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  Kigdom of heaven has been forcefully advancing

(2) ஜேம்ஸ் அரசனின் பதிப்பு (KJV) ஆங்கில மொழிபெயர்ப்பில் இவ்வர்த்தத்துடன் The Kingdom of heaven suffereth violence என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(3) Donald A. Hagner, Matthew 1-13 in Word Biblical Commentary p. 306

(4) G.E. Ladd, The presence of the Future: The Eschatology of Biblical Realism. Grand Rapids: Eerdmans Publishing Company, 1974, pp-159-164

(5) R.T. France, Mathew in Tyndale New Testament Commentaries, p. 195

(6) D.A. Carson, Mathew in The Expositor’s Bible Commentary, p.266

(7) W. Bauer, F.W. Arndt, F.W. Gingrich and F.W. Danker, Greek-English Lexicon of the New Testament, Chicago : University of Chicago Press, 1979, pp. 140-141

(8) இப்பதம் பெயர்ச்சொல்லாகப் புதிய ஏற்பாட்டில் இவ்விடத்தில் மட்டுமே இடம்பெறுவதோடு ஆதிக் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மூன்று தடவைகள் மட்டுமே மனிதர்களைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இடங்களிலும் இப்பதம் எதிரிடையான அர்த்தத்திலேயே உள்ளது. (Bauer, Amdt, Gingrich and Danker, Greek-English Lexicon of the New Testament, p. 141)

(9) Donald A. Hagner, Mathew 1-13 in Word Biblical Commentary, pp. 306-307

(10) Ibid, p. 307 Robert H. Mounce, Mathew in New International Biblical Commentary, p. 104: R.T. France, Mathew in The Tyndale New Testament Commentaries p. 195.
    

நன்றி - சத்தியவசனம் சஞ்சிகை
கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்.

Sunday 7 April 2013

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு (மத். 5:29-30)




இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் கடுமையான உபதேசமாகவும் அதேசமயம் அர்த்தமற்ற அறிவுரையாகவும் இன்று அநேகரால் கருத்தப்படுவது இடறல் உண்டாக்கும் அவயவங்களைச் சரீரத்திலிருந்து அகற்றும்படி அவர் கூறிய ஆலோசனையாகும்.  மத்தேயு 5:29-30 ல் “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.“ என்று இயேசு குறிப்பிட்டுள்ளார். இன்று அநேகர் இயேசுவின் இந்த வார்த்தைகளை சொல்லர்த்தமாக விளக்குவதாலேயே இவற்றைக் கடுமையாகவும் அறிவீனமானவையாகவும் கருதப்படுவதற்கு காரணமாயிருக்கின்றது.  எனவே, இயேசுவின் இக்கூற்று சொல்லர்த்தமாக சொல்லப்படவில்லை என்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். “இது சொல்லர்த்தமான சரீர சிகிச்சை அல்ல, மாறாக, ஆவிக்குரிய சிகிச்சை முறையாகும். (1)

இயேசுவின் இக்கூற்றை சரீரப்பிரகாரமாக விளங்கிக் கொண்டு சில கிறிஸ்தவர்கள் தம் சரீர அவயவங்களைக் காயப்படுத்தியுள்ளனர்.(2) உண்மையில், இயேசு சொல்லர்த்தமாக அல்ல. மாறாக, நம் சரீரத்தில் நமக்கு இடறல் உண்டாக்கும் அவயவத்துடன் நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். அதாவது சரீரத்தின் ஒரு அவயவம் பாவமான காரியத்தைச் செய்ய விரும்பும்போது, அதன் விருப்பதற்திற்கும் தூண்டுதலுக்கும் இணைங்காது அவ்விருப்பத்திற்கு எதிராகச் செயற்படும்படி இயேசு கூறியுள்ளார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது அவளோடு விபசாரம் செய்வது எனக் கூறியபோதே இயேசு பார்ப்பது அவளோடு விபசாரம் செய்வது எனக் கூறியபோதே இயேசு இடறலுண்டாக்கும் கண்ணையும் கையையும் தறித்துப் தறித்துப் போடும்படி கூறினார். (மத். 5:29-30) எனவே, கண்ணாவது இச்சையோடு பார்ப்பதை விரும்பினால் அதன் விருப்பத்திற்கு இடம் கொடுக்காதிருக்க வேண்டும்.(3) என்பதே இயேசுவின் போதனையாகும். கண்ணின் மீது பரிதாப்பட்டு அதன் விருப்பப்படி செயல்பட இடங்கொடாமல் அதனோடு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். “பாவம் செய்யும் அவயவத்தைச் சரீரத்திலிருந்து அகற்றுவதைப் பற்றியல்ல மாறாக, அவ்வவயவம் செய்யும் செய்யும் பாவத்தைச் செய்யாதிருக்கும்படியே இயேசு அறிவுறுத்தியுள்ளார்(4) அதாவது “கண் இடறலுண்டாக்கினால், கண்ணை இழந்தவன் போல, அதாவது இச்சையைத் தூண்டும் காட்சியைப் பாரக்காதவனாக இருக்க வேண்டும்.(5) 

இச்சையான பார்வையின் மூலம் உருவாக்கும் பாலியல் பாவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இடறல் உண்டாக்கும் கண்ணைப் பற்றி மட்டுமல்ல இடறல் உண்டாக்கும் கையைப் பற்றியும் இயேசு குறிப்பிட்டுள்ளார். கைக்கும் விபசாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது எனும் கேள்விக்கு சில வேத ஆராய்சியாளர்கள் “கை“ எனும் பதமானது இங்கு ஆணின் பாலுறப்பைக் குறிக்கும் இன்சொல்லணியாக(6) இருப்பதாக விளக்கியுள்ளனர்(7)எனினும் இச்சையான பார்வை இருதயத்தில் விபசாரத்தை நடப்பிப்பது மட்டுமல்ல இச்சையை ஏற்படுத்திய பெண்ணோடு தவறாக நடந்து கொள்ள்ளவும் தூண்டும் என்பதனால் அதற்’கு உதவிடும் அவயவமான கையைப் பற்றியும் இயேசு குறிப்பிட்டுள்ளார். அதாவது அப்பெண்ணைத் தொடுவதற்கு கையே உபயோகிக்கப்படுவதனாலயே இயேசு கையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கண்ணையும் கையையும் பற்றி கூறும்போது இயேசு “வலது“ கண் “வலது“ கை எனக் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம் யூதர்களுடைய மொழிவழக்கில் வலது முக்கியமானதையும் பெறுமதியானதையும் குறிக்கும் விபரணமாக இருந்தமையேயாகும்(8) பாவத்தைத் தூண்டும் அவயவம் நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அதனோடு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு சுட்டிக் காட்டியுள்ளார். 

இயேசுவின் இவ்வார்த்தைகள் மத். 18:8-9லும், மாற்கு 9:43-47 லும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், மத்தேயு 5ம் அதிகாரத்தில் ஒருவனுக்கு அவனுடைய சரீர அவயவம் ஏற்படுத்தும் இடறலைப் பற்றி கூறுகையில், ஏனைய இரு பகுதிகளிலும் மற்றவருக்கு ஏற்படுத்தப்படும் இடறலைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் இக்கூற்று இடம்பெறும் வசனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்களை வாசிக்கும்போது அதை அறிந்திடலாம் (மத். 18:6-10, மாற். 9:42-47) எனவே நாம் நமக்கு இடறல் ஏற்படுத்தும் அவயவத்துடன் மட்டுமல்ல மற்றவர்களுக்கு இடறலை ஏற்படுத்தும் நம் சரீர அவயவங்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். (9) மேலும் மத்தேயு 5ம் அதிகாரத்தில் 'இடறல்' பாலியல் பாவத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்தேயு 18லும் மாற்கு 9லும் இயேசுவின் கூற்று இடறலைப் பற்றிய பொதுவான போதனையாயுள்ளது. “இயேசுவின் கூற்றானது ஒன்றில் சுவிஷேச நூலாசிரியர்களினால் வித்தியாசமான சந்தர்ப்பங்களுக்கான பிரயோகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது இயேசுவே வித்தியாசமான சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கக் கூடிய விதமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறியிருக்கலாம்.(10) என தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுவின் கூற்றானது நமது வாழ்விலும் இடறலை ஏற்படுத்தும் நமது சரீர அவயவங்களின் எந்தவொரு செயலையம் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும் என்பதையும் அவற்றுக்கெதிராக நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறியத்தருகின்றது. 


குறிப்புகள்
(1) Walter W. Wessel, The Expositor’s Bible Commentary: Mark. P708

(2) ஆதிசபை பிதாக்களில் ஒவருவரான ஒரிகன் (185-254) என்பார் இயேசுவின் இவ்வார்த்தைகளை சொல்லர்த்தமாக விளக்கியதோடு தன் சரீரத்தை வெகுவாய் துன்புறுத்தியுள்ளார. (John D. Woodbridge, Great Leaders of the Christian Church. Chicago: Moody Press, 1988, p.56) இதனால் கி.பி. 325ல் நைசீயா எனும் இடத்தில் கூடிய கிறிஸ்தவத்  திருச்சபையின் ஆலோசனைச் சங்க்க் கூட்டம் இத்தகைய சரீர வேதனைகள் தவறானவை என்பதை அறிவித்த்து. 

(3) பாலியல் பாவங்களைப் பொறுத்தவரையில் கண்களே ஒருவனைத் தவறான வழியில் இட்டு செல்வதை வேதம் பலதடவைகள் சுட்டிக் காட்டியுள்ளது. (எண். 15:39, நீதி. 21:4, எசே. 6:9இ 18:12இ 20:8, பிர. 11:9) 

(4) Walter W. Wessel, The Expositor’s Bible Commentary: Mark. P 708

(5) John R.W. Stott, The Message of the Sermon on the Mount. P. 89

(6) பாலியல் சம்பந்தமன விடயங்களை நேரடியாக்க் கூறுவதற்கு முடியாதிருப்பதனால் அவற்றை வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்படும் உருவகமே இச்சொல்லணியாகும். 

(7) S.T. Lachs ‘Some Textual Observations on the Sermon on the mount p. 89

(8)

(9)  சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு 1 கொரிந்தியர் 12:12-2 இல் உள்ளது போல சபை அங்கத்தினர்களையே அவயவம் எனக் குறிப்பிட்டுள்ளதாக கருதுகின்றனர். இதன்படி இடறல் உண்டாக்கும் அவயவத்தைத் தறித்துப் போடுவதானது ஒழுக்க நடவடிக்கைக்காகப் பாவம் சயெயும் விசுவாசியைச் சபையிலிருந்து வெளியில் போடுவதைப் பற்றியதாக்க் கருதப்படுகின்றது. எனினும், பவுலைப் போ சரீரம் எனும் வார்த்தையை இயேசு இங்கு சபையைக் குறிக்கும் உருவகமாக்க் குறிப்பிடவில்லை. அவர் ஒரு மனிதனுடைய சொந்தச் சரீரத்தைப் பற்றியே விளக்கியுள்ளார். (D.A. Carson, The Exposilors Bible Commentary: Matthew, p. 399)

(10) Donald A. Hagner, World Bibleical Commentary, Mathew, p.119 

நன்றி - சத்தியவசனம் சஞ்சிகை
கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார்.