- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 29 July 2014

வேதமும் விளக்கமும்- அப். பவுல் திருமணம் முடித்திருந்தாரா?

53. பவுல் திருமணம் முடிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் திருமணம் செய்திருந்தார் என்று சிலர் சொல்கிறார்களே! இது பற்றிய விளக்கம் தேவை. (ஏ.ராயப்பன், திருச்சி, இந்தியா)

பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களை வாசிக்கும்போது அவர் அச்சமயம் தனி மனதராகவே இருந்துள்ளார் என்பது தெளிவாகின்றது. 1 கொரிந்தியர் 7 ஆம்     அதிகாரம் 7ம் 8ம் வசனங்களில் திருமணம் முடித்தவர்களும் தம் துணையை இழந்தவர்களும் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என பவுல் கூறுவது அவர் அச்சமயம் தனிமனிதராகவே இருந்துள்ளதை அறியத் தருகின்றது. அத்தோடு 1 கொரிந்தியர் 9:5 இல், மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? எனும் பவுலின் கேள்வியும் அவர் மற்றைய அப்போஸ்தலர்களைப் போல மனைவியுடன் ஊழியப்பிரயாணங்களை மேற்கொள்ளவில்லை என்பதை அறியத் தருகின்றது.

பவுல் தனது ஊழிய காலத்தில் தனி மனிராக இருந்தபோதிலும், அவர் ஆரம்பத்தில் திருமணம் முடித்திருந்தார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலாவது பவுல் ஆரம்பத்தில் யூத ஆலோசனைச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக இருந்தமையாகும். யூத ஆலோசனைச் சங்கத்தில் திருமணம் முடித்தவர்களே அங்கத்தினர்களாக இருந்தமையால் அச்சங்கத்தில் அங்கத்தினராக இருந்த பவுலும் திருமணம் முடித்தவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. இரண்டாவதாக பவுல் ஒரு பரிசேயனாகவும், யூதமதப் போதகராகவும் இருந்தமையாகும். யூதமதப் போதகர்கள் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்பது அக்கால யூதமதமார்க்க சட்டமாயிருந்தது. தான் யூதமார்க்க சட்ட திட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டு வாழ்ந்தாகப் பவுல் கூறுவதிலிருந்து அவர் அச்சட்ட திட்டங்களின்படி ஆரம்பத்தில் திருமணம் முடித்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது. இது உண்மையின் பவுலின் மனைவிக்கு என்ன நடந்தது என்பத பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இதனால் ஒன்றில் பவுலின் மனைவி மரித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இரட்சிக்கப்பட்ட பின்பு அவரை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் பின்னர் பவுல் மறுவிவாகம் செய்யாமல் தனிமனிதராகவே வாழ்ந்துள்ளார்.

I கொரிந்தியர் 7 அதிகாரம் 7-8
7. எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது.

8. விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும்

5. மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?

Tuesday 22 July 2014

வேதமும் விளக்கமும்-வெளி. 7:4- பரலோகத்தில் 1,44,000 பேருக்கு மட்டும்தான் இடம் உள்ளதா?


52. வெளிப்படுத்தல் 7:4 இல் ”முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்”. என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியால் பரலோகத்தில் இத்தனை பேருக்கு மட்டும்தான் இடம் உள்ளதா? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)

வெளிப்படுத்தல் 7:4 இல் முத்திரைப் போடப்பட்டவ்கள் இஸ்ரவேல் மக்களாவர். இந்த இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர் இஸ்ரவேல் ஜாதியினரின் 12 கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவ்வதிகாரத்தின் 5 முதல் 8 வரையிலான வசனங்கள் அறியத் தருகின்றன. அதற்கடுத்த வசனத்தில், அதாவது 9ம் வசனத்தில் இவைகளுக்குப் பின்பு “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.” என யோவான் கூறுகின்றார். பரலோகத்தில் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்க்கும் அதிகமானோர் இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்​

5. யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

6. ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

7. சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

8. செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

Sunday 13 July 2014

தாலி கட்டி விவாகம் பண்ணுவதற்கு வேதாகமத்தில் ஆதாரங்கள் உள்ளதா?

51. தாலி கட்டி விவாகம் பண்ணுவதற்கு வேதாகமத்தில் ஆதாரங்கள் உள்ளதா? (எம்.பி. டேவிட், திருவேலூர், இந்தியா)


தாலிகட்டி விவாகம் பண்ணுவது இந்து மதத்தரது பழக்கவழக்கமாகும். திருமண வைபவங்களில் மணமகனும் மணமகளும் ஒன்றாக இணைந்ததிற்கு அடையாளமாக ஏதாவது ஒரு அடையாளச் செயல் இருக்கும். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மணமகன் மகளுக்கு தாலிகட்டும் முறையும் சிங்களவர் மத்தியில் இருவரது சுண்டுவிலல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அவற்றுக்கு நீர் வார்ப்பதும் பறங்கியர் மத்தியில் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தலும் உள்ளது. வேதாகம காலத்தில் மணமகன் தன் மேலாடையால் மணமகளைப் போர்த்தும் செயலே திருமணத்தில் தம்பதியினர் இணைவதற்கான அடையாளச் செயலாக இருந்தது. இது மணமகன் மணமகளைத் தன் பாதுகாப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அடையாளச் செயலாகும். வேதாகமக்கால மக்களது இம்முறையை நாம் கைக்கொள்வதில்லை. மாறாக நாம் வாழும் பிரதேசத்துக் கலாச்சார முறையின்படி திருமண வைபவங்களை நடத்துகிறோம். இத்தகைய விடயங்களில் கிறிஸ்தவர்களளாகிய நாம் பிறமததெய்வங்கள் மற்றும் பிறமத நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட வைபவ முறைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Wednesday 9 July 2014

வேதமும் விளக்கமும் - மத்.27:5, அப். 1:18 யூதாஸ் எப்படி மரித்தான்? நான்றுகொண்டா? குடல்சரிந்தா?


50. மத்தேயு 27:5 இல் யூதாஸ் நான்றுகொண்டு சொத்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போஸ்தலர் 1:18 இல் அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” என்று கூறப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கான காரணம் யாது? (எஸ். சரோஜா, கண்டி)





இவ்விரு வசனங்களிலும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. யூதாசின் மரணத்தைப் பற்றியே இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. மத்தேயு பாலஸ்தீனாவில் வாழ்ந்த யூதர்களுக்கே தன் சுவிஷேசத்தை எழுதியமையால், அப்பிரதேச மக்கள் அறிந்திருந்த யூதாசின் மரண சம்பவத்தை விபரமாக எழுதாமல், ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கே லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியமையால், அவர் யூதாஸின் மரணம் பற்றி பேதுரு கூறியவற்றை விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் யூதாஸ் தற்கொலை செய்வதற்காகக தூக்குப் போட்டுக் கொண்ட இடம் குத்துப்பாறைகளுடனான இடமாகும். அவன் தூக்குப் போட்டுக் கொண்ட சமயம், தூக்குக் கயிறு கட்டப்பட்டிருந்த மரத்தின் கிளை முறிந்தமையால் அவன் தலைகீழாக கீழே விழுந்தான். இதனால் அவனது வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. அப்போஸ்தலர் லூக்காவைப் போல மத்தேயு விபரமாக எழுதாமல் சுருக்கமாக ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எக் குறிப்பிட்டுள்ளார்.  

  மத்தேயு 27:5- அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
அப்போஸ்தலர் 1:18  - அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.