- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 27 October 2013

திருமறையை விளக்கும் முறை. அத்தியாயம் 6- உருவக மொழி


கடந்த ஐந்து அத்தியாயங்களில் வேதத்தை விளக்கஞ் செய்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப்பற்றி ஆராய்ந்தோம். அவை திருமறை முழுவதற்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதிகளே. ஆனால் திருமறையின் சில பகுதிகள் சாதாரண மொழியில் அமையாமல் உருவகங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற சிறப்பு வடிவில் அமைந்துள்ளன. இப்பகுதிகளை விளக்கஞ் செய்யும்போது நாம் சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்நூலின் எஞ்சிய பகுதியில் இவ்வுண்மைகளைக் குறித்து சிந்திப்போம்.

1. உருவகச் சொற்கள் (Metaphors)
உருவகம் என்பதைவிட உவமை (simile) என்பதே பொருளுக்கும் விளக்கத்திற்கும் பொருத்தமாயுள்ளது ஆனால் ஏழாம் அத்தியாயத்தில் உவமை வேறுவகையில் விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைப்போல ஒன்று இருக்கின்றது என்பது உவமை. ஆனால் ஒன்றை ஒன்றாகச் சொல்வது உருவகம். கர்த்தர் சூரியனைப் போல இருக்கிறார் என்பது உவமை. சூரியனாயிருக்கிறார் என்பது உருவகம்.

(அ) தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; (சங். 84:11) கர்த்தர் சூரியனைப் போன்று நமக்கு ஒளியாயிருக்கின்றார். வேறு வகையில்  அவர் கேடகத்தைப் போன்று நம்மைக் காப்பாற்றுகிறார்.

(ஆ) கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.(சங். 18:2)

(இ) அவர் சிங்கக் குட்டியைப் போன்றவர். – வெளி. 5:5

(ஈ) இயேசு தம்மை அப்பத்திற்கும் ஒளிக்கும் வாசலுக்கும் மேய்ப்பனுக்கும் திராட்சைச் செடிக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

(உ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். லூக். 9:60 நிலைபேறு வாழ்வைப் பெறாதவர். –மரித்தோர். (எபே.2:1)

(ஊ) முள்ளில் (தாற்றுக் கோலுக்கு எதிர்த்து) உதைப்பது கடினம். என்றும் பொருள்படும். அப். 26:14. முள்போன்ற மனசாட்சியை எதிர்த்து உதைப்பது கடினம் என்றும் பொருள்படும்.

(எ) இது என் சரீரம். இது என் இரத்தம் (மாற்கு 14:2,24) அவர் இந்த வார்த்தைகளை சொல்லிய போது அவருடைய சரீரம் பிட்கப்படவுமில்லை. அவருடைய இரத்தம் சிந்தப்படவுமில்லை. ஆகவே இந்த வசனங்கள் உருவகச் சொற்களாகும். அவற்றை சொல்லுக்குச் சொல் சரியாய் விளக்கஞ் செய்வது தவறு. இந்த அப்பம் என் உடலைப் போன்றது. இந்த ரசம் என் இரத்த்த்தைப் போன்றது என்பது அர்த்தமாகும்

அடையாளச் சொற்கள்
கருத்து
வசனங்கள்
நிலடுக்கம், புயல், கிரகணம் அரசியல் புரட்சிகள் யோவேல் 3:15 ஏசா. 13:10-13; எரே. 4:23,28; மத். 24:29
பனி, தூறல், நீர்க்கால்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், ஏசா.25:6; எரே. 4:23,28; ஓசி. 14:5
கோல் தண்டனை ஏசா 10:5, 14:29
விவாகம் தேவன் தன் மக்களோடு செய்யும் உடன்படிக்கை ஓசி. 2:19,20
விபச்சாரம், சோரம் சிலைவணக்கம், உடன்டிக்கையை மீறுதல் ஓசி. 2:2,5
காட்டு விலங்குகள் அல்லது பறவைகள் வல்லரசுக்கள் தானி. 7; சகரியா 1:18,19

சில அடையாளச் சொற்களுக்கு இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைக் கவனித்து சரியான கருத்தை அறிய வேண்டும்.


(அ) அறுப்பு – விசுவாசிகளைப் பரம களஞ்சியத்தில் சேர்ப்பதைக் குறிக்கும். மத். 13 அல்லது
அக்கிரமக்கார்ரை விசாரித்து நியாந் தீர்ப்பதைக் குறிக்கும். வெளி. 14:14,20

(ஆ) அக்கினி - தீமைகளைப் பட்சித்து எரிப்பதைக் குறிக்கும். நியாயத்தீர்ப்பு நரகம், இவைகளைக் குறிக்கும். (அல்லது
விசுவாசிகளைப் புடமிட்டுச் சுத்திகரிப்பதைக் குறிக்கும். 1 பேதுரு 1:7
(அல்லது)
பரிசுத்த ஆவியையும், ஆவியின் செயலையும் குறிக்கும். அப். 2:3

(இ) புளித்தமா – மறைமுகமாய்ப் பரவும் தீமையைக் குறிக்கலாம். மாற்கு 8:15, 1 கொரி. 5:8
மறைமுகமாகப் பரவும் நன்மையைக் குறிக்கலாம். மத். 13:33
ஆனால் புளித்தமா வேதமெங்கும் தீமையைத்தான் குறிக்கின்றது என சிலர் சாதிக்கின்றனர்.


3.    மனிதப் பண்பிலும் கடவுளை வர்ணித்தல்(Anthropomorphism)
கடவுளுக்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு எளிதில் விளங்கத்தக்கதாக கடவுளுக்கு மனிதப் பண்புகளும் இருக்கிறதுபோல அடிக்டிப் பேசுவதுண்டு
(அ)  இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை ஏசா. 59:1
(ஆ) உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங். 32:8
(இ) இவர்கள் என் நாசிக்கு அரோசகமான புகை (பு.தி)
(ஈ) உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. (சங். 89:13)


(உ) மனிதப் பண்புகள்
அ) தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதி 6:6)

ஆ) என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; (யாத். 32.10)

இ) அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். யாத். 32.14)

உ) சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். (1 சாமு 15.35)
ஆனால் இவ்வசனங்களைக் கீழ்காணும் வசனத்தோடு ஒப்பிட்டு வேதத்தின் மொத்த கருத்துக்கேற்ப விளக்கஞ் செய்யவும்.

ஊ) இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல 1 சாமு 15:23 (எண். 23.19 ஐயும் பார்க்க)
(அத்தியாயம 6 முற்றிற்று)
(வளரும்)

Thursday 24 October 2013

கர்த்தருக்குப் பரிசுத்தம்



உலக நாடுகள் முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ்கொண்டு வர வேண்டும் என்ற பெரும் வைராக்கியத்துடன் செயல்பட்டு ஒவ்வொரு நாடாக பிடித்து வெற்றி வாகை சூடியவர் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மகா அலெக்சாண்டர். மத்திய கிழக்குக்குள் படையுடன் சென்று பல நாடுகளை தம் வசமாக்கினான். காசா நகரைப்பிடித்து விட்டு எருசலேமைப் பிடிக்கும் நோக்குடன் எருசலேம் நோக்கி தன்னுடைய படையுடன முன்னேறினான். மகா அலெக்சாண்டர் எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான் என்ற தகவல் எருசலேமுக்கு எட்டியது. ஆனால் மகா அலெக்சாண்டரை எதிர்கொள்ளும் திறன் எருசலேமுக்கு இல்லை. எங்கும் அச்சமும் பீதியுமே நிலவியது.

ஆனால் இந்த சூழ்நிலைகளுக்கும் மத்தியில் அப்போது பிரதான ஆசாரியனாயிருந்த ஹெட்குவா எந்தவித அச்சமோ பதற்றமோ இன்றி எருசலேம் நகரிலும் சுற்றுவட்டாரத்திலிருந்த எல்லா ஆசாரியர்களையும் குறுகிய கால அவகாசத்திற்குள் ஆசாரிய உடையில் வரும்படி கூறி ஒன்று திரட்டினான். பிரதான ஆசாரியன் தலைமையின் கீழ் எல்லா ஆசாரியர்களும் மகா அலெக்சாண்டரை எதிர்கொண்டு சென்றனர். எவ்வித ஆயுதமுமின்றி வெள்ளங்கியில் ஆசாரிய உடையில் இராணுவத்தினரைப் போலவே சீராக நடந்து வருவதை தூரத்தில் வரும்போதே மகா அலெக்சாண்டர் கண்டான். அவர்கள் மார்ப்பிலிருநது 12 வகையான விலையேற்றப் பெற்ற வெவ்வேறு நிறத்தினால் கற்கள் சூரிய ஒளியில் பளிச்சிடுவதைக் கண்டான். இப்போது அருகில் வந்துவி்ட்டான். இருதரத்தாரும் நெருங்கிவிட்டனர். ஆயுதமின்றி வரும் ஆசாரியர்களைத் தாக்கும் எண்ணம் மகா அலெக்சாண்டருக்குத் தோன்றவில்லை. மகா அலெக்சாண்டரும் பிரதான ஆசாரியனும் நேருக்கு நேர் நின்றனர். குதிரைகள் குளம்பொலிகளோ இராணுவத்தினரின் சப்தமோ, போர்வாள்களின் குலுங்கல் சம்பமோயில்லை. எங்கும் நிசப்பதம் நிலவியது. 

மகா அலெக்சாண்டர் அவர்களை உற்று நோக்கினான். ஆசாரியர்கள் யாவரும் தங்கள் நெற்றியில் பசும்பொன்னினாலான ஒரு பட்டத்தை அணிந்திருந்தனர். அதில் முத்திரை வெட்டாக வெட்டி எழுதப்பட்டிப்பதை கூர்ந்து கவனித்தான். கர்த்தருக்குப் பரிசுத்தம். (Holiness to the Lord) என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டான். (யாத். 28:36) அந்த வார்த்தை அவனது இருதயத்தை வெகுவாய் அசைத்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் கர்த்தக்குப் பரிசுத்தமானால் அவர்கள் சார்த்திருக்கும் எருசலேம் நகரமும் கர்த்தருக்குப் பரிசுத்த நகரமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே அந்த பரிசுத்த நகரத்தை நான் பரிசுத்த குலைச்சலாக்க விரும்பவில்லை என்று அவன் நினைத்திருக்க வேண்டும். ஆசாரியர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு எருசலேம் நகருக்கு நான் வரவில்லை. நான் என் படையுடன் திரும்புகிறேன். நீங்கன் சமாதானத்தோடு நகருக்குச் செல்லுங்கள் எனக் கூறி வந்த வழியே திரும்பிப் போனான். ஆசாரியர்கள் கரங்களை உயர்த்தி தேவனை துதித்து மகிமைப்படுத்தினார்கள். 

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத். 14 

நன்றி: தேவனுடைய வார்த்தை, 2002 டிசம்பர்

Tuesday 15 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(2)

 

3.    ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)


(அ) சொல் ஒற்றுமை

(i)   ’கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.


(ii)   “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)


(iii)   என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் சங். 16:9, 30:11, 108:1 ஆகிய வசனங்களை அடிப்படையாகக் கொண்டு.. ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்தது” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவே மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ.

 

(ஆ) பொருள் ஒற்றுமை


(I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள்.
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

(ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும்.

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை.

 

4.    ஒத்த வரலாறுகள்.
சொல்லொத்த வாக்கியங்களும் பொருளொத்த வாக்கியங்களும் ஆங்காங்கு பொருளொத்த வரலாறுகள் உண்டு.


(அ) இறை மக்களின் வரலாற்றுக்களைக் காட்டும் ஒத்த வரலாறுகளும் பழைய ஏற்பாட்டிலிருக்கின்றன.
(i) இராஜாக்களின் இரு நூல்கள் (சாமுவேலின் இரு நூல்களும்) தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டன. அரசு முறையின் வரலாற்றைக் கூறுவதே இவ்வாகமங்களின் நோக்கம்)
அரச முறையின் துவக்கம்   – தாவீது
அரச முறையின் முடிவு       – நேபுகாத்நேச்சார்
அரசர்களின் துவக்கம்            – சாலோமோனின் மகிமை
அரசர்களின் முடிவு                – யோயாக்கீமின் சிறைவாசம்

யூதா நாட்டின் 19 அரசர்களுள் 8 அரசர்கள் மட்டும் “கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தனர்” இஸ்ரவேல் நாட்டின் 19 அரசர்கள் (9 அரசர்கள் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) எல்லோரும் “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தனர்)


(ii) நாளாகம நூல்கள் இரண்டும் மக்களின் வரலாற்றையோ அரசர்களின் வரலாற்றையோ குறிப்பிடுபவதில்லை. தேவாலயத்தின் வரலாற்றையே குறிப்பிடுகின்றன. இவைகள் ஆசாரியர்கள் மூலம் (ஒருவேளை ஆசாரியனும் வேதபாரகனுமாகிய எஸ்றாவின் மூலம்) எழுதப்பட்டிருக்கலாம். ஆகவே தேவாலயத்தைப் புறக்கணித்துப் பிரிந்துபோன இஸ்ரவேல் நாட்டு மக்களின் வரலாறுகள் நாளாகமத்தில் சேர்க்கப்படவில்லை
நாளாகமத்தின் தொடக்கம் – சாலமோன் கட்டின ஆலயம்
நாளகமத்தின் முடிவு – சுட்டெரிக்கப்பட்ட பழைய ஆலயத்திற்குப் பதிலாகப் புது ஆலயத்தைக் கட்ட கோரேஸ் பிறப்பித்த ஆணை

 

(ஆ) இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அறிவிக்கும் நற்செய்தி நூல்கள் நான்குண்டு முதல் மூன்று நற்செய்தி நூல்கள் ஒன்றுக்கொன்று மிகவும் ஒற்றுமை உடையனவாகும்.
    ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்ட வரலாறு இயேசுவின் மரணம், இயேசுவின் உயிர்தெழுதல் ஆகியவைகள் நற்செய்தி நூல்கள் நான்கிலும் கூறப்பட்டுள்ளன.
i.    மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும் தம் நற்செய்தி நூலில் இயேசு தம் சீடர்களைத் தமக்கு முன் போகும்படி துரிதப்படுத்தினதாகவும் பின்பு மக்களை அனுப்பி விட்டு தனியாக மலைமீது ஏறி ஜெபிக்கச் சென்றதாகவும் கூறுகின்றனர். (மத்.14:22,23) மாற்கு 6:45,46) ஆனால் காரணத்தைக் கூறவில்லை. யோவான் 6:15 இல் காரணத்தைக் கூறுகின்றார். சீடர்கள் பொதுமக்களின் புரட்சி செயலில் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி இயேசுவால் அனுப்பப்பட்டனர். எனவே அவர்களைத் துரிதப்படுத்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவானது என்பது யோவானது நற்செய்தி நூலில் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே நற்செய்தி நூலிலிருந்து ’ஏதாவது ஒரு பகுதியை நீங்கள் செய்திக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டால் மற்ற மூன்று நற்செய்தி நூல்களிலும் அதையொத்த வரலாறுகள் உண்டா என்று ஆராய்ந்து அப்படியிருக்கும் ஒத்த வரலாறுகளையெல்லாம் படித்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்.


ii.    சிலுவையில் இயேசு அருள்மொழிகள் ஏழு என்பது யாவருக்கும் தெரிந்ததாகும். ஆனால் எந்த நூலிலும் இந்த ஏழும் ஒருங்கே கூறப்படவில்லை. லூக்கா மூன்றையும் யோவான் வேறு மூன்றையும் குறிப்பிட்டுள்ளனர். “தேவனே தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்ற நான்காம் மொழியை அறிவிக்கின்றவர்கள் மத்தேயுவும் மாற்கும். இந்த ஒரு வார்த்தை மட்டும் இரண்டு நற்செய்தி நூல்களில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது.


iii.    உயிர்தெழுதலின் விளக்கங்கள் ஆங்காங்கு நற்செய்தி நூல்கள் நான்கிலும் சிதறிக் கிடக்கின்றன. கிறிஸ்து இயேசு தம்மை உயிருள்ளவராய் கண்பித்த வரலாறுகள் கீழ்க்காணுமாறு

மகதலேனா மரியாள் மாற்கு 16:9-11; யோவான் 20:11-18
மற்றப்பெண்கள் மத்தேயு 28:9-10
சீமோன் பேதுரு லூக்கா 24:33-35, 1 கொரிந்தியர் 15:5
எம்மாவூருக்கு செல்லும் சீடர் மாற்கு 16:12,13 லூக்கா 24:13-22
அப்போஸ்தலர் பத்து பேரும் வேறு சில சீடரும் மாற்கு 16:14, லூக்கா 24:13-22

மேற்கண்ட ஐந்தும் நிகழ்ச்சிகளும் இயேசு உயிர்த்தெழுந்த அன்றே நடந்தன.

அப்போஸ்தலர் பதினொருவரும்
(தோமாவுடன்)
யோவான் 20:26,31
1 கொரிந்தியர் 15:5
கலிலேயா கடல் ஓரமாயுள்ள எழுவர்
யோவான் 2:11-25
500 பேருக்கு அதிகமான சகோதரர் மாற்கு 16:15-18,
1 கொரிந்தியர் 1:6
ஆண்டவருடைய சகோதரன் யாக்கோபு
1 கொரிந்தியர்15:7, லூக்கா 24:44-53
பரமேறுதல் அப்போஸ்தலர் 1:3-12, மாற்கு 16:19-20


(இ) பவுல் அடியார் குணப்படுத்தல் மூன்றுமுறை நடபடிகளின் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. (அப். 9:1-22; 22:11-16;26:1-20) நடபடிகளின் நூலையும் பவுல் இயற்றிய நிருபங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கவும்

 

5.    வேதநூலின் முழுக்கருத்து
திருமறையின் மொத்தக் கருத்துக்கு முரண்படுகின்ற முறையில் நாம் எந்த வாக்கியத்தையும் விளக்கம் செய்யக்கூடாது. உதாரணமாக சில வசனங்கள் கடவுளுக்கு உடலுறுப்புகள் இருக்கின்ற வண்ணமாகப் பேசுகின்றன. “தேவன் ஆவியாயிருக்கின்றார்” என்ற வசனத்திற்கொத்த (யோவான் 4:24) விதமாய் நாம் இந்தப் பகுதிகளை விளக்கஞ் செய்தல் வேண்டும்

நான்காம் விதி நமக்கு கற்றுத் தருவது
திருமறையின் முழுக்கருத்திற்கேற்றவாறு வேதத்தின் எந்தப் பகுதியை வியாக்கியனம் செய்தல் வேண்டும்

(அத்த்தியாயம் 5 முற்றிற்று)

(வளரும்)

Monday 7 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(1)


விதி 4 திருமறையின் முழுக்கருத்திற்கு இசைவந்தவாறு வசனத்தை விளக்கஞ் செய்தல் வேண்டும். வேதமே வேதத்திற்கு விளக்கவுரையாகும். 

1. புதிய ஏற்பாட்டு வசனங்கள் பலவற்றைப் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கம் செய்யதல் வேண்டும்

(அ) “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
பழைய ஏற்பாட்டுக் காலத்து பலிகளுக்கும் தேவாட்டுக் குட்டிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்க எபிரேயர் நிருபத்தைப் பயன்படுத்தவும், தேவாட்டுக் குட்டி என்றால் என்ன? யார்? ஏன்? என்று விளங்கிக் கொள்ள முடியாது. 

(ஆ) “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்” 1 பேதுரு 1:19
தேவாட்டுக்குட்டி பற்றிய குறிப்புகளை முந்திய பகுதியில் காண்க. மீட்பு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? என்பதை அறிய பழைய ஏற்பாட்டைப் பார்க்க வேண்டும். 
I. இழந்துபோன காணியாட்சிகளை மீட்கலாம். – லேவி. 25:25-27
II. விற்ற வீட்டை மீட்கலாம். லேவி. 25:29
III. விலைப்பட்டுப்போன அடிமையை மீட்கலாம்
ரூத் என்ற பெண்ணிற்கு நெருங்கிய உறவுக்காரனான போவாஸ் அவளுக்கு செய்த பெரிய உதவியை எடுத்துக்கூறி ஆத்தும மீட்டபின் அருமையை விளக்கிக் காட்டலாம். 

(இ) நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு…” 1 பேதுரு 1:13
யாத். 12:11 யைப் பார்க்கவும் 'நீங்கள் உங்கள் அரைவாசிகளில் கச்சை கட்டிக் கொண்டு…” மீட்கப்பட்ட இஸ்ரவேலர் கச்சை கட்டிக் கொண்டு கானானுகுச் செல்லப் புறப்பட்டபோதுபோல மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மனதைக் கட்டிக்கொண்டு பரம கானானுக்குச் செல்ல புறப்பட்டுப் போகவேண்டும். 
பழைய ஏற்பாடு நமக்குத் தேவையில்லை என்று வாதிடுவர். ஏமாந்து போகாதீர்கள். பழைய ஏற்பாட்டைக் கருத்தாய்ப் படிக்காதவர்கள் புதிய ஏற்பாட்டின் சிறந்த கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாது. 


2. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் ஒருசில வசங்களை ஆங்காங்கு பொறுக்கி எடுத்துப் போதிப்பவர்கள் தவறான கருத்துக்களையும் கூறநேரிடும். எல்லா வசனங்களையும் ஆராய்ந்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து வேதத்தின் மொத்தக் கருத்து யாது என்று அறிதல் இன்றியமையாததாகும்.

(அ) அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்(யோவான். 12:34) 
கிறிஸ்து என்றென்றைக்கும் நிலைத்திருப்பார் என்ற வசனங்களை (ஏசா. 9:7; தானி. 7:14) அறிந்து கொண்டார்கள். ஆனால் மனித குமாரன் உயர்த்தப்பட வேண்டும்(அதாவது சிலுவை மரத்தில் அறையப்பட வேண்டும்) என்று கூறுகிற வசனங்களை (ஏசா. 53:4-6:12, தானி. 9:26) அவர்கள் கவனிக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இந்தக் கருத்துக்கள் இயேசுகிறிஸ்துவில் நிறைவேறின. இயேசுவின் விரோதிகள் மாத்திரமல்ல. அவருடைய அன்பான சீடர்களும் இவ்வசங்களைப் புரிந்து கொள்ளாமல் தத்தளித்தனர் 

(ஆ) கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வருவார் (யோவான் 7:41, 7:52 ஐயும் பார்க்க)
மீகா. 5:2 ஐப் படித்தவர்கள் ஏசா 9:1 ஐ (மத். 4:15,16) கவனிக்கவில்லை போலும் அவர் பெத்தலேகேமிலிருந்துதான் வந்தார். இது சரியே. ஆனால் அவர் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார். (ஏசா. 9:1) என்று வேதம் கூறுகின்றது. 


3. ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)

(அ) சொல் ஒற்றுமை
(i) கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.

(ii) “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)

(iii) என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்த்து” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவோ மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ. 

(ஆ) பொருள் ஒற்றுமை
 (I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள். 

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

 (ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும். 

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை

(வளரும்)

Thursday 3 October 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(2)


3. முரண்பாடாய் தோன்றும் பகுதிகள்

நூலின் நோக்கத்தை அல்லது ஒரு பகுதியின் நோக்கத்தை அறிந்தால், ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் வசனங்களைப் பற்றிய முரண் தீரும்.

உதாரணமாக
(அ) ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். (ரோமர் 3:28)

ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. (யாக்கோபு 2:24)

இவ்விரண்டையும் ஒத்துப் பார்க்கையில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றது. ஆனால் இண்டு நிருபங்களின் வெவ்வேறான நோக்கங்களைக் கவனிக்குங்கால் பொருத்தமில்லாத முரண்பாடு நீங்கும். நியாயப்பிரணமானத்திற்கேற்ற கிரியைகளினால் எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லை.விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப் படுகின்றான் என்பது ரோமர் நிருபத்தின் கருத்து. 

நற்கிரியைகளை விளைவிக்காத, பரிசுத்தத்திற்கும் ஏதுவாயிராத வெற்று விசுவாசத்தால் எந்த மனிதனும் நீதிமானக்கப்படுவதில்லை. இப்பேர்ப்பட்ட விசுவாசம் உண்மையானதுமன்று. இரட்சிப்புக்கேதுவானதுமன்று என்பது என்பது யாக்கோபு நிருபத்தின் கருத்து. 

(ஆ) நாளைக் கவனிக்கின்றவன் ஆண்டவருக்கென்று கவனிக்கின்றான். (ரோமர் 14:6)
நாட்களைப் பார்க்கிறீர்களே.. கலா. 4:10

ரோமர் நிருபத்தின் கருத்துப்படி யூத இனத்தில் வளரக்கப்பட்ட சில கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழாம் நாளைக் கொண்டு மோசேயின் மூலம் விலக்கப்ட்ட சில உணவுகளை உண்ணாதிருந்தனர். மன ஐயங்களைப் பற்றி வாதாடாமல் ஒருவரையொருவர் சேர்த்துக்கொள்ள (சபையின் ஐக்கியத்தில் சேர்த்துக்கொள்ள) இந்நிருபம் அனுமதிக்கின்றது. 

கலாத்தியர் நிருபம் இரட்சிக்கப்படுவதற்கு ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சில உணவு பொருட்களை விலக்கி வைக்க வேண்டுமென்றும் அல்லது சைவமாயிருக்க வேண்டும் என்றும் போதிக்கும் கள்ள போதகர்களை இடித்துரைத்த்து. (கொலோ. 2:21; 1 தீமோ 4:3 ஐயும் பார்க்க) மறுபடியும் அடிமைத் தனத்தின் நுகத்துக்குட்படாதிருக்க ஏவுகின்றது. 

ஆகவே, உண்மையான விசுவாசிகள் சிலர் சைவமாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் மரக்கறிகளை மட்டும் சாப்பிடவேண்டும் என்று அவர்கள் போதிக்கலாகாது. ஏழாம் நாள் சபையார் (Seventh Day Adventists) நாட்களைப் பார்ப்பதிலும் உணவை விலக்குவதிலும் பழைய அடிமைத்தனத்தின் நுகத்தில் நம் அனைவரையும் பிணைத்து விடப் பார்க்கின்றனர். 

எச்சரிக்கை ரோமர். 14:6 இந்து திருநாட்களையும் திருமணத்திற்கேற்ற நாட்களையும் பார்க்கிறதற்கு வேதத்தில் எந்த ஒரு வசனமும் அனுமதி அளிப்பதில்லை. நாளைக் கவனக்கிறவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்றே கவனிக்கிறான் என்பதையே வலியுறுத்துவதைக் கவனிக்கவும். 


(இ) நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் (மத். 19:16-17) 'அப்படியே செய். அப்பொழுது பிழைப்பாய்..” (லூக். 10:25,28)

'இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்(அப். 16:30,31)

நம்மிடையே கேள்வி கேட்கின்ற ஒரு சிலருக்கு நாம் நியாயப்பிரமாணத்தையும் கற்பனையையும் எடுத்துக் கூறவேண்டும் வேறு சிலருக்கு நாம் கிறிஸ்துவையும் விசுவாச வழியையும் காட்ட வேண்டும் பணக்கார வாலிபனும்(மத். 19:16) சட்ட வல்லுநனாகிய வேதபாரகனும் (லூக். 10:25) நொறுங்குண்ட இருதயளமுள்ளவர்களாய் வராமல் தாங்கள் ’புண்ணியவான்கள் என்றும் (மத். 19:20, லூக். 10:29) தாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள என்றும்…. (மத். 19:16,20) நினைத்தவர்காய் வந்தனர். 

இப்படிப்பட்டவர்களுடன் பேசும்போது ஆயத்தமின்றி உடனுக்குடன் இயேசுகிறிஸ்துவை விசுவாசி எனக் கூறுவதில் பயனில்லை. அவ்வாறு செய்வது பன்றிகள் முன் முத்துக்களைப் போடுவதைப் போன்றது. நியாயப்பிரணமாணத்தைக் கடைப்பிடிக்கத் தன்னால் முடியவே முடியாது என்றும் தான் பரிதாபத்திற்குரியவன் என்றும் உணரும் மனிதனே ஆண்டவராகிய இயேசுவை நோக்கி… “ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கதறிக் கூப்பிடுவான்” எனக் கதறி கூப்பிடுவான். அஞ்சி கடலில் மூழ்கப் போகிறவனோ இயேசுவை நோக்கி இரு கைகளையும் நீட்டி “இயேசுவே என்னைக் காப்பாற்றும்” என்று அலறுவான். (மத். 14:30) நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொள்ளச் சென்ற சிறைச்சாலைக்காரன் இயேசுவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள ஆயத்தாயிருந்தான். அவன் அற்புதமான முறையில் தேவாவியினால் ஆயத்தமாக்கப்பட்டான். 

ஆகவே தனியாள் ஊழியம் செய்யும்போது அவருடைய நிலையை அறிந்து ஏற்றமுறையில் நாம் அருட் செய்தியைக் கூறுவது நல்லது. கடவுள் யார் என்றும், கடவுளின் பண்புகள் எவை என்றும் கடவுளின் கற்பனை இன்னதென்றும் சிறிதும் அறியாத மக்களிடம் “இயேசுவை விசுவாசி” எனக் கூறுவது பொருந்துமா? அது விசுவாசத்தை உண்டாக்குமா? 


(ஈ) லூக்கா 13ஆம் அதிகாரத்தில் தோன்றுகின்ற மூத்த மகன் யாரைக் குறிக்கின்றான்.? அவ்வதிகாரத்தின் நோக்கத்தைக் கவனித்துப் பார்த்தால் இயேசுவைக் குறித்து முறுமுறுத்த தேவ பாரகர்களே அந்த மூத்த மகன் என்று சொல்லலாம்.

(உ) எபிரேயர் 4:35 இல் சுறப்பட்டள்ள இளைப்பாறுதல் எதைக் குறிக்கின்றது முடிவில்லத வீடுபேற்றைக் குறிக்காமல் இப்பொழுதே விசுவாசிகள் அடையக் கூடிய மன நிம்மதியைக் குறிக்கின்றது என்று ஒரு சிலர் கருதுவர். ஆனால் நிருபத்தின் நோக்கம் என்ன? கேட்ட நற்செய்தி அந்தக் காலத்தில் அநேகருக்கு பயனில்லாமலிருந்த்து போல ( 1கொரி. 10:5 ஐப் பார்க்க) இந்தக் காலத்தில் உங்களுக்கும் பயனற்றுப் போகாதிருக்கும்படி பயந்திருக்க கடவீர்கள். (எபி. 4:12) நீங்கள் ஓரளவில ஏற்றுக் கொண்டீர்கள். மறுதலிக்க வேண்டாம். கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்த வேண்டாம். அவ்விதம் நீங்கள் பின்வாங்கிப் போவீர்களேயானால் நீஙகள் நித்திய இளைப்பாறுதலாகிய பரமகானானை இழக்க நேரிடும். எனவே இது வீடு பேற்றைக் குறிகினறது என்பது பொருத்தமான விளக்கமாக இருக்கும. 


மூன்றாவது விதி நமக்குக் கற்றுத் தருவது
நூலின் ஆக்கியோன் நூலை எழுதிய சூழ்நிலை, நோக்கம் இவற்றை ஆராய்ந்து அதற்கிசைந்த விளக்கம் அளிப்பதே நன்று


 (அத்தியாயம் 4 முற்றிற்று)
வளரும்