51. தாலி கட்டி விவாகம் பண்ணுவதற்கு வேதாகமத்தில் ஆதாரங்கள் உள்ளதா? (எம்.பி. டேவிட், திருவேலூர், இந்தியா)
தாலிகட்டி விவாகம் பண்ணுவது இந்து மதத்தரது பழக்கவழக்கமாகும். திருமண வைபவங்களில் மணமகனும் மணமகளும் ஒன்றாக இணைந்ததிற்கு அடையாளமாக ஏதாவது ஒரு அடையாளச் செயல் இருக்கும். இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மணமகன் மகளுக்கு தாலிகட்டும் முறையும் சிங்களவர் மத்தியில் இருவரது சுண்டுவிலல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அவற்றுக்கு நீர் வார்ப்பதும் பறங்கியர் மத்தியில் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்தலும் உள்ளது. வேதாகம காலத்தில் மணமகன் தன் மேலாடையால் மணமகளைப் போர்த்தும் செயலே திருமணத்தில் தம்பதியினர் இணைவதற்கான அடையாளச் செயலாக இருந்தது. இது மணமகன் மணமகளைத் தன் பாதுகாப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அடையாளச் செயலாகும். வேதாகமக்கால மக்களது இம்முறையை நாம் கைக்கொள்வதில்லை. மாறாக நாம் வாழும் பிரதேசத்துக் கலாச்சார முறையின்படி திருமண வைபவங்களை நடத்துகிறோம். இத்தகைய விடயங்களில் கிறிஸ்தவர்களளாகிய நாம் பிறமததெய்வங்கள் மற்றும் பிறமத நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட வைபவ முறைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment