- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 3 March 2014

வேதமும் விளக்கமும் - 1 சாமுவேல் 28:6 - ஊரீம் தும்மீம் என்பது என்ன?


1 சாமுவேல் 28:6 இல் சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது கர்த்தர் அவனுக்கு சொப்பனங்களினாலாவது ஊரீமினாலாவது தீர்க்கதரிசனங்களிலாவது மறு உத்தரவு அருளவில்லை என்று வாசிக்கிறோம். இங்கு ஊரிம் என்று சொல்லப்பட்டிருப்பது யாது? (அ.ராயப்பன், திருவரம்பூர், இந்தியா)
பழைய ஏற்பாட்டுக்காலத்தி்ல் பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும்போது அணியும் நியாயவிதி மார்பகத்தில் ஊரீம் தும்மீம் என்பவைகள் இருந்தன. இதைப்பற்றி யாத்திராகமம் 28:30 நாம் வாசிக்கலாம். ஊரீம் தும்மீம் என்பவைகள் தேவனுடைய சித்தத்தை அறிந்து சொள்வதற்காக உபயோகிக்கப்படட புனித பொருள்களாகும்.மனிதனின் கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளிப்பது இவற்றின் பணியாகும். 1 சாமுவேல்23:9-12, 28:6, 30:7-8, 14:36-37 போன்ற வசனங்களில் ஊரீம் தும்மீம் என்பவை உபயோகி்ப்பட்டுள்ளதை நாம் காணலாம். அக்காலத்தில் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புபவர்களுக்கு தேவன் இவற்றின் மூலம் தனது சிதததத்தை அறிவித்தார். எனினும், தாவீதினுடைய காலத்திற்குப் பிறகு இவை உபயோகிக்கப்பட்டது பற்றி வேதாகமத்தில் எவ்வித குறிப்பும் இல்லை. இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகளின் பணி வளர்சியுற்ற காலத்தில் இவற்றின் உபயோகம் இல்லாமல் போய் விட்டது. 
யாத்திராகமம் 28:30  
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். 
 1 சாமுவேல் 23:9-12,
9. தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

10. அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.

11. கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.

12. கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். 
 1 சாமுவேல் 14:36-37 
36. அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37. அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை. 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment