- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 12 March 2014

வேதமும் விளக்கமும்-1 சாமுவேல் 16:14தேவன் பொல்லாத ஆவிகளை அனுப்பி மனிதனை கலங்கப் பண்ணுவாரா?

25. 1 சாமுவேல் 16:14 இன்படி கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் பொல்லாத ஆவிகளை அனுப்பி மனிதனை கலங்கப் பண்ணுவாரா? (ஜோன் டிக்சன், கெங்கல்ல, இலங்கை)
 
பொல்லாத ஆவியை அனுப்பி தேவன் எவரையும் கலங்கப் பண்ணுபவரல்ல. வேதாகம ஆசிரியர்கள், அனைத்தும் தேவனுடைய ஆளுகையின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் இருப்பதை அநிந்திருந்தமையில், அவர் அனுமதிப்பவைகளையும் அவரால் செய்யப்பட்டவைகளாகவே குறிப்பிட்டுள்ளனர். மத்தேயு 8ஆம் அதிகாரத்தில் மனிதனுக்குள் இருந்த பிசாசுக்கள் பன்றிகளுக்குள்ள செல்ல இயேசுவிடம் அனுமதி கேட்டபோது இயேசு கிறிஸ்து போங்கள் என்று கட்டளையிட்டார். (மத். 8:31-32) இதனால் இயேசுவே பிசாசுக்களைப் பன்றிக்குள் அனுப்பினார் என நாம் எண்ணலாம். எனினும் பிசாசுக்கள் பன்றிக்குள் செல்வதற்கு இயேசு கிறிஸ்து நேரடியாக் காரணமாக இருக்கவில்லை. பிசாசுக்கள் என்ன செய்ய விரும்பினவோ அதைச் செய்வதற்கே இயேசு கிறிஸ்து அனுமதி கொடுத்துள்ளார. இதேவிதமாகத்தான் சவுலைக் கலங்கப் பண்ணிய பொல்லாத ஆவியும் தேவனால் அனுமதிக்கப்பட்டதொன்றாக இருக்கின்றதே தவிர அவரால் நேரடியாக அனுப்பப்பட்டதொன்றாக இல்லை தேவனுடைய ஆவி சவுலில் இருக்கும்வரை பொல்லாத ஆவியால் அனை அணுகமுடியவில்லை. ஆனால் சவுல் பல தடவைகள் கர்த்தருடைய வார்த்தையை மீறி நடந்தமையால் தேவதண்டனை அவன் மீது வந்தது. கடைசியில் கர்த்தருடைய ஆவியினவர் அவனை விட்டுச் சென்றபின் அவன் தேவனடைய ஆளுகையின் கீழ் இராதமையால் பிசாசினால் அவனை இலகுவாகத் தாக்கக் கூடியதாக இருந்தது. சவுலைத் தாக்க கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட பொல்லாத ஆவியையே 1 சாமுவேல் புத்தக ஆசிரியர் கர்த்தரால் வரவிடப்படட ஆவி எனக் குறிப்பிட்டுள்ளது. 
 
இதை நாம் முழுமையாக விளங்கிக் கொள்ள யோபுவின் சரிதை பெரிதும் உதவுகின்றது. பிசாசு தேவனின் அனுமதியுடன் யோபுவைத் தாக்கினான். யோபுவின் துயர நிலைக்குக் காரணம் பிசாசே. யோபைத் தாக்கத் தேவன் பிசாசுக்கு அனுமதி மட்டுமே கொடுத்திருந்தார். அப்படியிருந்தும் யோபு தன் துயர நிலையைப் பற்றிக் கூறும்போது கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் என்று தனது துயரத்திற்கு காரணம் தேவனே என கூறினான். ஆனால் யோபினுடைய செல்வங்கள் அனைத்தையும்அவனிடமிருந்து எடுத்தது கர்த்தரல்ல பிசாசே அனைத்தையும் எடுத்தான். இதேவிதமாகத்தான் கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட சவுலைக் கலங்கப் பண்ணிய பொல்லாத ஆவி கர்த்தரால் விரட்டப்பட்ட ஆவி என சொல்லபபட்டுள்ளதை தவிர தேவன் பொல்லாத செயல்களைச் செய்பவர் என்பது இவ்வசனத்தின் அர்த்தம் அல்ல. யாக்கோபு முதல் அதிகாரம் 13ம் வசனத்தில் 13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. என்ற உண்மையை அறிந்திடலாம்
 
 
1 சாமுவேல் 16:14 
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. 
 
மத். 8:31-32
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின. 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment