- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 30 March 2014

வேதமும் விளக்கமும் அப்சலோமிற்கு 2 சாமு18:18 -குமாரன் இல்லை- 2 சாமு. 14:27- மூன்று குமாரர்கள் எது சரி?

29. 2 சாமுவேல் 18:18   அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2 சாமுவேல் 14:27 இல் அப்சலோமிற்கு மூன்று குமாரர்கள் பிறந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளதே? (டி. நவமணி ஆபேல். நெய்வேலி, இந்தியா)
 
இதற்கு இருவகையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் அபச்லோமின் மூன்று பிள்ளைகளும் இளவயதிலேயே மரணமடைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களில் எவரும் அப்சலோமின் பெயரை நினைக்கப்பண்ணும்படியாக அவனுடைய பிள்ளைகளாக இருக்க விருப்பமற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். இவ்விரு விளக்கங்களில் முதலாவது விளக்கமே இன்று பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  
 
 2 சாமுவேல் 14:27 
27. அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment