- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 16 March 2014

வேதமும் விளக்கமும்-ஆதியாகமம் 30:14-16 தூதாயீம் எத்தகைய கனி


26. ஆதியாகமம் 30:14-16 தூதாயீம் என்றொரு கனி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது எத்தகைய கனி? (ஆர். ரேவதி. கொழும்பு-10)
 
இது மத்தியத்தரைக் கடற்கரைப் பகுதிகளில் வளரும் ஒரு வகையான செடியின் கனியாகும். இச்செடித் தண்டுகள் அற்றதும் நீள்வட்ட இலைகளை உடையதுமான தாவரமாகும். இச்செடியின் மலர்கள் ஊதா நிறமுடையதாகவும், பழுத்த கனிகள் செம்மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும். அதிக வாசனையுடைய இப்பழங்கள் (உன். 7:13) பாலுணர்வைத் தூண்டுபவையாகவும் கருத்தரிப்பதற்கு உதபவுபவையாகவும் இருப்பதாக மத்தியதரைக் கடல் பிரதேசங்களிலுள்ள நாடுகளில நம்பப்பட்டு வந்துள்ளது. இதனால் இக்கனிகள் பாலுணர்வுக் கனிகள் என்றும் காதற் கனிகள் என்றும் அழைக்கப்பட்டலாயிற்று. ஆதியாகமம் 30 ஆம் அதிகாரத்தில் பிள்ளையில்லாது மலடியாயிருந்த ராகேல் இக்கனிகளை விரும்பியதற்கு காரணம் அவை கருத்தரிப்பதற்கு உதவுபவை எனும் அக்கால மக்களது நம்பிக்கையாகும். எனினும் இன்றைய மருத்துவத்துறை இக்கனிகளுககு கருத்தரிக்க வைக்கும் சக்தி எதுவும் இல்லை என்பதைக் கண்டுபிடித்துள்ளது. இக்கனியை அதிகமாகச் சாப்பிட்டால் ஒருவித மயக்க நிலை சரீரத்திற்கு ஏற்படும் என்பதையும் அறியத் தந்துள்ளது. அத்தகைய மக்கநிலையே பாலுணர்வுத் துண்டுதலுக்கான காரணமாக கருதப்பட்டிருக்கலாம்.
 
 
 
 
 ஆதியாகமம் 30:14-16 
14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான். 
 
உன்னதப்பாடு. 7:13
13. தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment