- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 10 March 2014

வேதமும் விளக்கமும் - அந்நிய பாஷையில் பேசுவது என்பது என்ன?

அந்நிய பாஷையில் பேசுவது என்பது என்ன? அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள் அது சாத்தானுக்கு விளங்காது. தேவனுக்கும் பேசுகிறவர்களுக்கும் மட்டும்தான் புரியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் மேல் வீட்டில் ஜெபித்துக் கொண்டிருந்த 120 பேர் பேசிய அந்நிய பாஷை மற்றவர்களுக்கு விளங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (7 முதல் 1 வரையிலான வசனங்கள்) எனவே இது பற்றி விளக்கம் தாருங்கள் (திருமதி. பி.நடரைாஜா, மாத்தளை)
 
அந்நிய பாஷையில் பேசுவதைப் பற்றி நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து வேதப் பகுதிகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதேசமயம் அந்நிய பாஷை பற்றி பலவிதமான கருத்து முரண்பாடுகள் இன்று கிறிஸ்தவர்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது. சிலர் அந்நிய பாஷை மானிட மொழி என கருதுகின்றனர். அதாவது இவ்வுலக மனிதர் பேசும் மொழி. ஆனால் பேசுபவர் அம்மொழியை அறியாதவர். அவர் ஆவியானவரின் அருளினால் தான் அதுவரையில் அறிந்திராத வேறு ஒரு மொழியில் பேசுகிறார். அதுவே அந்நிய பாஷை என்பதே இவர்களது கருத்தாகும். இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதாரமாக அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தையே சுட்டிக்காட்டுவர். இதற்குக் காரணம் பெந்தகோஸ்தே தினத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்படப்டவர்கள் ஆவியானவர் தங்களுக்குத்கு தந்தருளின வெவ்வேறு பாஷைகளிலே பேசினபோது அவ்விடத்திற்கு வந்திருந்த வெவ்வேறு பாஷைக்காரர்கள் தங்கள் பாஷைகளிலியேயே அவர்கள் பேசுகிறதைக் கேட்டார்கள். இதிலிருந்து அந்நிய பாஷை உலகில் பேசப்படும் மானிட மொழி என்பதை அறிந்துக் கொண்டாலும் இந்த சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுக்க முடியாது. 
 
1 கொரிந்தியர் 14:2இல் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். என்று அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்நிய பாஷை மனிதர்களுக்கு விளங்காத பாஷை என்பது தெளிவாகின்றது. அப்போஸ்தலர் 2இன் அந்நியபாஷை மற்றவர்களுக்கு விளங்கிக்கூடிய ஒரு மொழியாக இருக்கையில் 1 கொரிந்தியர் 14இல் அந்நிய பாஷை தேவனைத் தவிர வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாத அந்நிய பாஷையாக உள்ளது. மேலும் 1 கொரிந்தியர் 13:1 இல் பவுல் தேவர்களின் பாஷைகளைப் பேசுவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது அந்நியபாஷை வரம் என்பது மானிட மொழிகளையும் மனிதர்களுக்கு எவ்விதத்திலும் புரியாத ஆவியின் ஏவுதலால் பேசப்படும் வார்த்தைகளையும் உள்ளடக்கியதொன்றாகவே உள்ளது என்பதை அறிந்திடலாம் அந்நியபாஷையில் பேசும் சிலர் இன்னுமாரு மானிட மொழியில் பேசுகின்றனர். வேறுசிலர் எவருக்கும் புரியாத மொழிகளைப் பேசுகின்றனர். இவ்விருவதும் பேசுவது ஆவியானவர் அருளும் அந்நிய பாஷையின் வரமாகவே இருக்கின்றது. இதனால்தான் 1 கொரிந்தியர் 12:10 இல் அந்நியப்பாஷை வரத்தைப் பற்றி குறிப்பிடும்போது “பற்பல பாஷைகளைப் பேசுதல்” என்று என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். 
 
1 கொரிந்தியர் 13:1  
 1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 
 
 
1 கொரிந்தியர் 12:10  
10. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment