- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 25 February 2014

வேதமும் விளக்கமும் -ஆதி.37:9 -10 ஆம் வசனங்களில் யோசேப்பை எப்படி அவரது தாயும் வந்து வணங்கியிருப்பார்?

ஆதியாகமம் 37:9 ஆம் 10 ஆம் வசனங்களில் யோசேப்பின் சொப்பனத்தில் தனது தகப்பனும் தாயும் தனது சகோதர்களும் தன்னை பணிந்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில், யோசேப்பு இந்த சொப்பனத்தைக் காணும் போது, அவருடைய தகப்பனும், சகோதர்களுமே தன்னை பணிந்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது இதில் யோசேப்பு இந்த சொப்பனத்தைக் கா’ணும்போது அவருடைய தகப்பனும், சகோதர்களுமே உயிரோடு இருந்தனர். அவரது தாய் ராகேல் முன்பே இறந்து விட்டார். இதனைப் பார்க்கும்போது அவரது சகோதர்கள் மற்றும் தகப்பன் மட்டுமே எகிப்து தேசத்தில் யோசேப்பு அதிபதியாய் இருக்கும்போது அவனை வணங்கினர். எப்படி அவரது தாயும் வந்து வணங்கியிருப்பார். இதற்கு விளக்கம் தாருங்கள்.
 
யோசேப்பு கண்ட இச்சொப்பனத்தில் சந்திரன் அவனது தாயாராகவே குறிப்பிட்டப்பட்டுள்ளது எனினும் அச்சமயம் அவள் உயிரோடிராதமையால், ராகேலின் சகோதரியும் யாக்கோபின் முதல் மனைவியுமான லேயாளே இவ்விடத்தில் யோசேப்பின் தாயாக குறிப்பிட்டுள்ளார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
 
 
ஆதியாகமம் - 37 அதிகாரம்
9. அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.

10. இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment