- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 27 October 2013

திருமறையை விளக்கும் முறை. அத்தியாயம் 6- உருவக மொழி


கடந்த ஐந்து அத்தியாயங்களில் வேதத்தை விளக்கஞ் செய்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப்பற்றி ஆராய்ந்தோம். அவை திருமறை முழுவதற்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதிகளே. ஆனால் திருமறையின் சில பகுதிகள் சாதாரண மொழியில் அமையாமல் உருவகங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற சிறப்பு வடிவில் அமைந்துள்ளன. இப்பகுதிகளை விளக்கஞ் செய்யும்போது நாம் சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்நூலின் எஞ்சிய பகுதியில் இவ்வுண்மைகளைக் குறித்து சிந்திப்போம்.

1. உருவகச் சொற்கள் (Metaphors)
உருவகம் என்பதைவிட உவமை (simile) என்பதே பொருளுக்கும் விளக்கத்திற்கும் பொருத்தமாயுள்ளது ஆனால் ஏழாம் அத்தியாயத்தில் உவமை வேறுவகையில் விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைப்போல ஒன்று இருக்கின்றது என்பது உவமை. ஆனால் ஒன்றை ஒன்றாகச் சொல்வது உருவகம். கர்த்தர் சூரியனைப் போல இருக்கிறார் என்பது உவமை. சூரியனாயிருக்கிறார் என்பது உருவகம்.

(அ) தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; (சங். 84:11) கர்த்தர் சூரியனைப் போன்று நமக்கு ஒளியாயிருக்கின்றார். வேறு வகையில்  அவர் கேடகத்தைப் போன்று நம்மைக் காப்பாற்றுகிறார்.

(ஆ) கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.(சங். 18:2)

(இ) அவர் சிங்கக் குட்டியைப் போன்றவர். – வெளி. 5:5

(ஈ) இயேசு தம்மை அப்பத்திற்கும் ஒளிக்கும் வாசலுக்கும் மேய்ப்பனுக்கும் திராட்சைச் செடிக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

(உ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். லூக். 9:60 நிலைபேறு வாழ்வைப் பெறாதவர். –மரித்தோர். (எபே.2:1)

(ஊ) முள்ளில் (தாற்றுக் கோலுக்கு எதிர்த்து) உதைப்பது கடினம். என்றும் பொருள்படும். அப். 26:14. முள்போன்ற மனசாட்சியை எதிர்த்து உதைப்பது கடினம் என்றும் பொருள்படும்.

(எ) இது என் சரீரம். இது என் இரத்தம் (மாற்கு 14:2,24) அவர் இந்த வார்த்தைகளை சொல்லிய போது அவருடைய சரீரம் பிட்கப்படவுமில்லை. அவருடைய இரத்தம் சிந்தப்படவுமில்லை. ஆகவே இந்த வசனங்கள் உருவகச் சொற்களாகும். அவற்றை சொல்லுக்குச் சொல் சரியாய் விளக்கஞ் செய்வது தவறு. இந்த அப்பம் என் உடலைப் போன்றது. இந்த ரசம் என் இரத்த்த்தைப் போன்றது என்பது அர்த்தமாகும்

அடையாளச் சொற்கள்
கருத்து
வசனங்கள்
நிலடுக்கம், புயல், கிரகணம் அரசியல் புரட்சிகள் யோவேல் 3:15 ஏசா. 13:10-13; எரே. 4:23,28; மத். 24:29
பனி, தூறல், நீர்க்கால்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், ஏசா.25:6; எரே. 4:23,28; ஓசி. 14:5
கோல் தண்டனை ஏசா 10:5, 14:29
விவாகம் தேவன் தன் மக்களோடு செய்யும் உடன்படிக்கை ஓசி. 2:19,20
விபச்சாரம், சோரம் சிலைவணக்கம், உடன்டிக்கையை மீறுதல் ஓசி. 2:2,5
காட்டு விலங்குகள் அல்லது பறவைகள் வல்லரசுக்கள் தானி. 7; சகரியா 1:18,19

சில அடையாளச் சொற்களுக்கு இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைக் கவனித்து சரியான கருத்தை அறிய வேண்டும்.


(அ) அறுப்பு – விசுவாசிகளைப் பரம களஞ்சியத்தில் சேர்ப்பதைக் குறிக்கும். மத். 13 அல்லது
அக்கிரமக்கார்ரை விசாரித்து நியாந் தீர்ப்பதைக் குறிக்கும். வெளி. 14:14,20

(ஆ) அக்கினி - தீமைகளைப் பட்சித்து எரிப்பதைக் குறிக்கும். நியாயத்தீர்ப்பு நரகம், இவைகளைக் குறிக்கும். (அல்லது
விசுவாசிகளைப் புடமிட்டுச் சுத்திகரிப்பதைக் குறிக்கும். 1 பேதுரு 1:7
(அல்லது)
பரிசுத்த ஆவியையும், ஆவியின் செயலையும் குறிக்கும். அப். 2:3

(இ) புளித்தமா – மறைமுகமாய்ப் பரவும் தீமையைக் குறிக்கலாம். மாற்கு 8:15, 1 கொரி. 5:8
மறைமுகமாகப் பரவும் நன்மையைக் குறிக்கலாம். மத். 13:33
ஆனால் புளித்தமா வேதமெங்கும் தீமையைத்தான் குறிக்கின்றது என சிலர் சாதிக்கின்றனர்.


3.    மனிதப் பண்பிலும் கடவுளை வர்ணித்தல்(Anthropomorphism)
கடவுளுக்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு எளிதில் விளங்கத்தக்கதாக கடவுளுக்கு மனிதப் பண்புகளும் இருக்கிறதுபோல அடிக்டிப் பேசுவதுண்டு
(அ)  இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை ஏசா. 59:1
(ஆ) உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங். 32:8
(இ) இவர்கள் என் நாசிக்கு அரோசகமான புகை (பு.தி)
(ஈ) உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. (சங். 89:13)


(உ) மனிதப் பண்புகள்
அ) தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதி 6:6)

ஆ) என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; (யாத். 32.10)

இ) அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். யாத். 32.14)

உ) சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். (1 சாமு 15.35)
ஆனால் இவ்வசனங்களைக் கீழ்காணும் வசனத்தோடு ஒப்பிட்டு வேதத்தின் மொத்த கருத்துக்கேற்ப விளக்கஞ் செய்யவும்.

ஊ) இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல 1 சாமு 15:23 (எண். 23.19 ஐயும் பார்க்க)
(அத்தியாயம 6 முற்றிற்று)
(வளரும்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment