- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 24 October 2013

கர்த்தருக்குப் பரிசுத்தம்



உலக நாடுகள் முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ்கொண்டு வர வேண்டும் என்ற பெரும் வைராக்கியத்துடன் செயல்பட்டு ஒவ்வொரு நாடாக பிடித்து வெற்றி வாகை சூடியவர் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மகா அலெக்சாண்டர். மத்திய கிழக்குக்குள் படையுடன் சென்று பல நாடுகளை தம் வசமாக்கினான். காசா நகரைப்பிடித்து விட்டு எருசலேமைப் பிடிக்கும் நோக்குடன் எருசலேம் நோக்கி தன்னுடைய படையுடன முன்னேறினான். மகா அலெக்சாண்டர் எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான் என்ற தகவல் எருசலேமுக்கு எட்டியது. ஆனால் மகா அலெக்சாண்டரை எதிர்கொள்ளும் திறன் எருசலேமுக்கு இல்லை. எங்கும் அச்சமும் பீதியுமே நிலவியது.

ஆனால் இந்த சூழ்நிலைகளுக்கும் மத்தியில் அப்போது பிரதான ஆசாரியனாயிருந்த ஹெட்குவா எந்தவித அச்சமோ பதற்றமோ இன்றி எருசலேம் நகரிலும் சுற்றுவட்டாரத்திலிருந்த எல்லா ஆசாரியர்களையும் குறுகிய கால அவகாசத்திற்குள் ஆசாரிய உடையில் வரும்படி கூறி ஒன்று திரட்டினான். பிரதான ஆசாரியன் தலைமையின் கீழ் எல்லா ஆசாரியர்களும் மகா அலெக்சாண்டரை எதிர்கொண்டு சென்றனர். எவ்வித ஆயுதமுமின்றி வெள்ளங்கியில் ஆசாரிய உடையில் இராணுவத்தினரைப் போலவே சீராக நடந்து வருவதை தூரத்தில் வரும்போதே மகா அலெக்சாண்டர் கண்டான். அவர்கள் மார்ப்பிலிருநது 12 வகையான விலையேற்றப் பெற்ற வெவ்வேறு நிறத்தினால் கற்கள் சூரிய ஒளியில் பளிச்சிடுவதைக் கண்டான். இப்போது அருகில் வந்துவி்ட்டான். இருதரத்தாரும் நெருங்கிவிட்டனர். ஆயுதமின்றி வரும் ஆசாரியர்களைத் தாக்கும் எண்ணம் மகா அலெக்சாண்டருக்குத் தோன்றவில்லை. மகா அலெக்சாண்டரும் பிரதான ஆசாரியனும் நேருக்கு நேர் நின்றனர். குதிரைகள் குளம்பொலிகளோ இராணுவத்தினரின் சப்தமோ, போர்வாள்களின் குலுங்கல் சம்பமோயில்லை. எங்கும் நிசப்பதம் நிலவியது. 

மகா அலெக்சாண்டர் அவர்களை உற்று நோக்கினான். ஆசாரியர்கள் யாவரும் தங்கள் நெற்றியில் பசும்பொன்னினாலான ஒரு பட்டத்தை அணிந்திருந்தனர். அதில் முத்திரை வெட்டாக வெட்டி எழுதப்பட்டிப்பதை கூர்ந்து கவனித்தான். கர்த்தருக்குப் பரிசுத்தம். (Holiness to the Lord) என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டான். (யாத். 28:36) அந்த வார்த்தை அவனது இருதயத்தை வெகுவாய் அசைத்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் கர்த்தக்குப் பரிசுத்தமானால் அவர்கள் சார்த்திருக்கும் எருசலேம் நகரமும் கர்த்தருக்குப் பரிசுத்த நகரமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே அந்த பரிசுத்த நகரத்தை நான் பரிசுத்த குலைச்சலாக்க விரும்பவில்லை என்று அவன் நினைத்திருக்க வேண்டும். ஆசாரியர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு எருசலேம் நகருக்கு நான் வரவில்லை. நான் என் படையுடன் திரும்புகிறேன். நீங்கன் சமாதானத்தோடு நகருக்குச் செல்லுங்கள் எனக் கூறி வந்த வழியே திரும்பிப் போனான். ஆசாரியர்கள் கரங்களை உயர்த்தி தேவனை துதித்து மகிமைப்படுத்தினார்கள். 

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். (யாத். 14 

நன்றி: தேவனுடைய வார்த்தை, 2002 டிசம்பர்

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment