- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 3 October 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(2)


3. முரண்பாடாய் தோன்றும் பகுதிகள்

நூலின் நோக்கத்தை அல்லது ஒரு பகுதியின் நோக்கத்தை அறிந்தால், ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் வசனங்களைப் பற்றிய முரண் தீரும்.

உதாரணமாக
(அ) ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். (ரோமர் 3:28)

ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. (யாக்கோபு 2:24)

இவ்விரண்டையும் ஒத்துப் பார்க்கையில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றது. ஆனால் இண்டு நிருபங்களின் வெவ்வேறான நோக்கங்களைக் கவனிக்குங்கால் பொருத்தமில்லாத முரண்பாடு நீங்கும். நியாயப்பிரணமானத்திற்கேற்ற கிரியைகளினால் எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லை.விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப் படுகின்றான் என்பது ரோமர் நிருபத்தின் கருத்து. 

நற்கிரியைகளை விளைவிக்காத, பரிசுத்தத்திற்கும் ஏதுவாயிராத வெற்று விசுவாசத்தால் எந்த மனிதனும் நீதிமானக்கப்படுவதில்லை. இப்பேர்ப்பட்ட விசுவாசம் உண்மையானதுமன்று. இரட்சிப்புக்கேதுவானதுமன்று என்பது என்பது யாக்கோபு நிருபத்தின் கருத்து. 

(ஆ) நாளைக் கவனிக்கின்றவன் ஆண்டவருக்கென்று கவனிக்கின்றான். (ரோமர் 14:6)
நாட்களைப் பார்க்கிறீர்களே.. கலா. 4:10

ரோமர் நிருபத்தின் கருத்துப்படி யூத இனத்தில் வளரக்கப்பட்ட சில கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழாம் நாளைக் கொண்டு மோசேயின் மூலம் விலக்கப்ட்ட சில உணவுகளை உண்ணாதிருந்தனர். மன ஐயங்களைப் பற்றி வாதாடாமல் ஒருவரையொருவர் சேர்த்துக்கொள்ள (சபையின் ஐக்கியத்தில் சேர்த்துக்கொள்ள) இந்நிருபம் அனுமதிக்கின்றது. 

கலாத்தியர் நிருபம் இரட்சிக்கப்படுவதற்கு ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சில உணவு பொருட்களை விலக்கி வைக்க வேண்டுமென்றும் அல்லது சைவமாயிருக்க வேண்டும் என்றும் போதிக்கும் கள்ள போதகர்களை இடித்துரைத்த்து. (கொலோ. 2:21; 1 தீமோ 4:3 ஐயும் பார்க்க) மறுபடியும் அடிமைத் தனத்தின் நுகத்துக்குட்படாதிருக்க ஏவுகின்றது. 

ஆகவே, உண்மையான விசுவாசிகள் சிலர் சைவமாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் மரக்கறிகளை மட்டும் சாப்பிடவேண்டும் என்று அவர்கள் போதிக்கலாகாது. ஏழாம் நாள் சபையார் (Seventh Day Adventists) நாட்களைப் பார்ப்பதிலும் உணவை விலக்குவதிலும் பழைய அடிமைத்தனத்தின் நுகத்தில் நம் அனைவரையும் பிணைத்து விடப் பார்க்கின்றனர். 

எச்சரிக்கை ரோமர். 14:6 இந்து திருநாட்களையும் திருமணத்திற்கேற்ற நாட்களையும் பார்க்கிறதற்கு வேதத்தில் எந்த ஒரு வசனமும் அனுமதி அளிப்பதில்லை. நாளைக் கவனக்கிறவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்றே கவனிக்கிறான் என்பதையே வலியுறுத்துவதைக் கவனிக்கவும். 


(இ) நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் (மத். 19:16-17) 'அப்படியே செய். அப்பொழுது பிழைப்பாய்..” (லூக். 10:25,28)

'இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்(அப். 16:30,31)

நம்மிடையே கேள்வி கேட்கின்ற ஒரு சிலருக்கு நாம் நியாயப்பிரமாணத்தையும் கற்பனையையும் எடுத்துக் கூறவேண்டும் வேறு சிலருக்கு நாம் கிறிஸ்துவையும் விசுவாச வழியையும் காட்ட வேண்டும் பணக்கார வாலிபனும்(மத். 19:16) சட்ட வல்லுநனாகிய வேதபாரகனும் (லூக். 10:25) நொறுங்குண்ட இருதயளமுள்ளவர்களாய் வராமல் தாங்கள் ’புண்ணியவான்கள் என்றும் (மத். 19:20, லூக். 10:29) தாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள என்றும்…. (மத். 19:16,20) நினைத்தவர்காய் வந்தனர். 

இப்படிப்பட்டவர்களுடன் பேசும்போது ஆயத்தமின்றி உடனுக்குடன் இயேசுகிறிஸ்துவை விசுவாசி எனக் கூறுவதில் பயனில்லை. அவ்வாறு செய்வது பன்றிகள் முன் முத்துக்களைப் போடுவதைப் போன்றது. நியாயப்பிரணமாணத்தைக் கடைப்பிடிக்கத் தன்னால் முடியவே முடியாது என்றும் தான் பரிதாபத்திற்குரியவன் என்றும் உணரும் மனிதனே ஆண்டவராகிய இயேசுவை நோக்கி… “ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கதறிக் கூப்பிடுவான்” எனக் கதறி கூப்பிடுவான். அஞ்சி கடலில் மூழ்கப் போகிறவனோ இயேசுவை நோக்கி இரு கைகளையும் நீட்டி “இயேசுவே என்னைக் காப்பாற்றும்” என்று அலறுவான். (மத். 14:30) நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொள்ளச் சென்ற சிறைச்சாலைக்காரன் இயேசுவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள ஆயத்தாயிருந்தான். அவன் அற்புதமான முறையில் தேவாவியினால் ஆயத்தமாக்கப்பட்டான். 

ஆகவே தனியாள் ஊழியம் செய்யும்போது அவருடைய நிலையை அறிந்து ஏற்றமுறையில் நாம் அருட் செய்தியைக் கூறுவது நல்லது. கடவுள் யார் என்றும், கடவுளின் பண்புகள் எவை என்றும் கடவுளின் கற்பனை இன்னதென்றும் சிறிதும் அறியாத மக்களிடம் “இயேசுவை விசுவாசி” எனக் கூறுவது பொருந்துமா? அது விசுவாசத்தை உண்டாக்குமா? 


(ஈ) லூக்கா 13ஆம் அதிகாரத்தில் தோன்றுகின்ற மூத்த மகன் யாரைக் குறிக்கின்றான்.? அவ்வதிகாரத்தின் நோக்கத்தைக் கவனித்துப் பார்த்தால் இயேசுவைக் குறித்து முறுமுறுத்த தேவ பாரகர்களே அந்த மூத்த மகன் என்று சொல்லலாம்.

(உ) எபிரேயர் 4:35 இல் சுறப்பட்டள்ள இளைப்பாறுதல் எதைக் குறிக்கின்றது முடிவில்லத வீடுபேற்றைக் குறிக்காமல் இப்பொழுதே விசுவாசிகள் அடையக் கூடிய மன நிம்மதியைக் குறிக்கின்றது என்று ஒரு சிலர் கருதுவர். ஆனால் நிருபத்தின் நோக்கம் என்ன? கேட்ட நற்செய்தி அந்தக் காலத்தில் அநேகருக்கு பயனில்லாமலிருந்த்து போல ( 1கொரி. 10:5 ஐப் பார்க்க) இந்தக் காலத்தில் உங்களுக்கும் பயனற்றுப் போகாதிருக்கும்படி பயந்திருக்க கடவீர்கள். (எபி. 4:12) நீங்கள் ஓரளவில ஏற்றுக் கொண்டீர்கள். மறுதலிக்க வேண்டாம். கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்த வேண்டாம். அவ்விதம் நீங்கள் பின்வாங்கிப் போவீர்களேயானால் நீஙகள் நித்திய இளைப்பாறுதலாகிய பரமகானானை இழக்க நேரிடும். எனவே இது வீடு பேற்றைக் குறிகினறது என்பது பொருத்தமான விளக்கமாக இருக்கும. 


மூன்றாவது விதி நமக்குக் கற்றுத் தருவது
நூலின் ஆக்கியோன் நூலை எழுதிய சூழ்நிலை, நோக்கம் இவற்றை ஆராய்ந்து அதற்கிசைந்த விளக்கம் அளிப்பதே நன்று


 (அத்தியாயம் 4 முற்றிற்று)
வளரும்

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment