- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 4 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(1)

உவமைகள் சிறு பிள்ளைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க நல்ல கதைகள் எனக் கருதுவது தவறாகும். உவமைகள் நல்ல கதைகள் தான் ஆனாலும் அதற்குச் சரியான ஆவிக்குரிய விளக்கம் கூறுவது எளிதன்று. 

உவமை என்பது தெரிந்த ஒன்றைக் காட்டி தெரியாத ஒன்றை விளக்குவதாம். அதாவது ஒன்றைப் போல் மற்றொன்று அமைந்திருகின்றது என்று கூறுவதாம். 

இயேசு கிறிஸ்து உவமைகள் பயன்படுத்தியக் காரணத்தைக் கவனிக்கவும். (மத். 13:11-17) விண்ணுலக அரசின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.அவர்களுக்கோ அருளப்படவில்லை. 

1. ஓர் உவமை முக்கியமான உண்மை ஒன்றையே கற்பிக்கும். ஒரு சில உவமைகள்(விதைக்கின்றவன், களைகள்) மட்டும் ஒன்றுக்கும் அதிகமான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் பெரும்பாலும்  உவமைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய கருத்துத்தான் உண்டு.
இந்த ஒரே கருத்து என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?


(அ) உவமையின் துவக்கத்தில்
லூக்கா 18:1-8; சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பது (18:1) இவ் உவமையின் நோக்கம்

லூக்கா 18:9-14 தங்களை நீதிமான்கள் என்று நம்புவோரைக் (18:9) கடிந்து கொள்வதே இந்த உவமையின் நோக்கம்.
(ஆனால் இவ்வுவமையின் இறுதி (14ஆம்) வசனத்திலும் போதனையுண்டு.

லூக்கா 19:11-27 தேவனுடைய ராஜ்யம் உடனே வராது (வச 11) என்பதுதான் இவ் உவமையின் முக்கியமான கருத்து 


(ஆ) உவமையின் இறுதியில்
மத்தேயு 22:1-14 கடைசி வசனத்தில் இந்த உவமையின் முக்கியமான ஆவிக்குரிய கருத்தைக் காணலாம். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்” ஆகையால் “உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2 பேதுரு 1:110) என்பதே பொருள்

மத்தேயு 25:11-13 கடைசி (13ம் ) வசனத்தைப் பார்க்கவும். ….“விழித்திருங்கள்

லூக்கா 16:1-9 மற்றெல்லா உவமைகளைக் காட்டிலும் விளங்கிக் கொள்வதற்கு சற்று கடினமான இந்த உவமையின் முக்கிய கருத்தைக் கடைசி வசனத்தில்(9ம் வசனத்தில்) காணலாம். “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.“ 
ஆண்டவருடைய சீடர்களில் சிலர் சகேயு, மத்தேயு என்பவர்களைக் போன்று அநியாயமான முறையில் செல்வதைத்த் திரட்டியிருந்தனர். (15:1) தங்கள் ஊழலின் பயனாகத் திரட்டிய செல்வதை எவ்வாறு செலவிடுவது என்ற கேள்வி எழுந்தபோது ஆண்டவர் இவ் உவமைமையைக் கூறினார். 

(i) கூடுமானால் யாரை வஞ்சித்தோமோ அவர்களுக்குத் திரும்ப செலுத்தவும். (நாலாந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்- 19:8)

(ii) அவ்விதம் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் ஏழைகளுக்குக் கொடுக்கவும். (லூக். 1:22; 19:18) அதாவது அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு நண்பரைச் சம்பாதியுங்கள். என்று ஆண்டவர் கூறியிருக்கின்றார். நீதியற்ற கண்காணிப்பாளன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வாருவனாக அழைத்துக் கடன் பத்திரத்தைக் குறைத்து எழுதும்படி சொல்லியபோது தன் முதலாளியை வஞ்சிக்கவில்லை. தான் ஏற்கனவே அநியாயமாய்த் திரட்டிய செல்வத்தைப் பயன்படுத்திக் கடன்பட்டவர்கள் ஒவ்வாருவனுக்கும் தன் சொந்த செலவில் தயவு பாராட்டி இவ்விதம் அவர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டான். முதலாளியின் பணத்தை மீண்டும் அபகரித்துக் கடன் பத்திரங்களைக் மாற்றியிருப்பானேயானால் முதலாளி அவனை மெச்சிப் பேசியிருப்பானோ? 

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் குணப்பாடாதற்கு முன் பரிசு சீட்டுக்களை வாங்கி ஒரு பெரிய இலட்சாதிபதியாகிறான் என்று வைத்துக் கொள்வோம். குணபட்டபின் தான் அந்த முறையில் பரிசு பெறது தவறு என்று உணர்கின்றான். என்ன செய்வது? ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை அரசுக்கு திருப்பிக் கொடுக்கலாம். அல்லது பொதுநலத்திற்கென நிறுவப்பட்ட ஏதாவது சில கல்வி நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ மனைகளுகக்கோ கொடுக்கலாம். கர்த்தருடைய பணிக்கென திருச்சபை அநீதியான உலகப் பொருட்களை வாங்கலாமா? வாங்கலாகாதா? என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

சென்ற நூற்றாண்டின் எப். என். சரிங்டன் (F.N. Charringdon) என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் மதுபானங்கள் மூலமாய் ஏராளமான செல்வத்தைத் திரட்டியவர்கள். சரிங்கடன் குணப்பட்ட பின்னும் தான் அனுபவித்து வருகின்ற செல்வங்கள் அநீதியான முறையில் வந்தவை என்பதை உணரவில்லை. ஒருநாள் இரவு லண்டன் மாநகரின் கீழ்ப்பகுதியில் (பரம ஏழைகள் வசித்த பகுதி) சென்ற போது சாராயக் கடைக்கு முன் நடந்த பயங்கரமான சண்டையையும் குடித்து வெறித்தவர்கள் தங்கள் மனைவிகளைத் துன்புறுத்தும் காட்சியையும் கண்டு மனவேதனை யடைந்தார். அப்போது அந்த சாராயக்கடையின் உரிமையாளரின் பெயர் தம் குடும்பப் பெயர் சரிங்டன் என அறிந்து அதிர்ச்சியுற்றார். அந்நாளே சரிங்கடன் அக்கம்பனியில் தனக்கருந்த பங்கை விற்றுவிட்டு தான் சம்பாதித்த ஏராளமான பணத்தை லண்டன் நகரின் கீழ்ப் பகுதி ஏழை மக்களின் நலத்திற்கெனச் செலவிட்டார். 

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் மூலம் முதலில் ஆண்டவருடைய சித்தத்தை அறியாதவர்கள் அறிந்தபின் நன்மையான செயல்கள் செய்தனர் என்பதை அறிகிறோம். ஆனால் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் அதன்படி செய்யாமல் திருச்சபையின் பணத்தையோ, சொதுக்களையோ அநியாயமான முறையில் செலவிடுகின்ற ஊழியக்காரன் அநேக அடிக்கள் அடிக்கப்படுவான். (லூக். 12:47)


(இ) சில வேளைகளில் உவமையின் முக்கிய கருத்து உவமையின் துவக்கத்திலும் இறுதியிலுமாக இருமுறை கூறப்பட்டிருக்கும். 
(i)  மத். 18:21,22,35 ‘அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் உன் சகோதரனுக்கு மன்னிக்க வேண்டும்” என்று சொல்கிறேன். 
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (18:35)

(ii)  பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்;(12:15) தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (12:21)


(ஈ) சிலவேளைகளில் உவமை கூறப்பட்ட சூழ்நிலையைக் கொண்டு அதற்கு முன்னுள்ள வரலாறுகளைக் கொண்டு உவமையின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்
(i) லூக் 13:6-9 உவமைக்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கவும். மனமாற்றமடையாத யூத மக்கள் அழிதல் நிச்சியம் என்று வலியுறுத்திப் போதித்தபின் கனி கொடாத அத்திமரத்தின் உவமையைக் கூறினார். 

அத்திமரம் – யூத இனம்
முதலாளி – கடவுளின் நீதி (வெட்டுவதற்கு எத்தனித்தல்)
தோட்டக்காரன் – கடவுளின் நீடிய சாந்தம்

இப்பொழுது அத்தி மரத்தைச் சில சபைகளுக்கோ தனிப்பட்ட சில நபர்களுக்கோ ஒப்பிட்டு இந்த உவமையைப் பயன்படுத்தலாம். 

அடிக்கடி சுற்றிலும் கொத்தி எரு போடப்படும் கனி கொடாத அத்தி மரம் இரக்கமின்றிப் பிடுங்கப்படும. (நீதி. 29:1)

கவனிக்க. முதலாளியைக் கடவுள் என்றும் தோட்டக்காரனைக் கிறிஸ்து என்றும் கூறலாகாது. அவ்வாறு விளக்கஞ் செய்வது தவறான கருத்துக்களுக்கேதுவாகும். 

(ii)  லூக்கா 15:12-32 உவமைக்கு முன்னுள்ள 15:1,2 வசனங்களைப் பார்க்கவும். ஆயக்கார், பாவிகள்” ஆகிய எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்க அவரிடம் வந்த வண்ணமிருந்தனர். அதனால் பரிசேயரும், வேத அறிஞரும், இவன் பாவிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களோடு சாப்பிடவுஞ் செய்கிறானே என்று சொல்லி முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் இந்த உவமையை (அல்லது மூன்று உவமைகளை) அவர்களுக்குச் சொன்னார்.

இளைய மகன் – ஆயக்காரர், பாவிகள்
மூத்த மகன் – பரிசேயர், தேவ அறிஞர். 

(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment