- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 7 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(1)


விதி 4 திருமறையின் முழுக்கருத்திற்கு இசைவந்தவாறு வசனத்தை விளக்கஞ் செய்தல் வேண்டும். வேதமே வேதத்திற்கு விளக்கவுரையாகும். 

1. புதிய ஏற்பாட்டு வசனங்கள் பலவற்றைப் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கம் செய்யதல் வேண்டும்

(அ) “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
பழைய ஏற்பாட்டுக் காலத்து பலிகளுக்கும் தேவாட்டுக் குட்டிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்க எபிரேயர் நிருபத்தைப் பயன்படுத்தவும், தேவாட்டுக் குட்டி என்றால் என்ன? யார்? ஏன்? என்று விளங்கிக் கொள்ள முடியாது. 

(ஆ) “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்” 1 பேதுரு 1:19
தேவாட்டுக்குட்டி பற்றிய குறிப்புகளை முந்திய பகுதியில் காண்க. மீட்பு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? என்பதை அறிய பழைய ஏற்பாட்டைப் பார்க்க வேண்டும். 
I. இழந்துபோன காணியாட்சிகளை மீட்கலாம். – லேவி. 25:25-27
II. விற்ற வீட்டை மீட்கலாம். லேவி. 25:29
III. விலைப்பட்டுப்போன அடிமையை மீட்கலாம்
ரூத் என்ற பெண்ணிற்கு நெருங்கிய உறவுக்காரனான போவாஸ் அவளுக்கு செய்த பெரிய உதவியை எடுத்துக்கூறி ஆத்தும மீட்டபின் அருமையை விளக்கிக் காட்டலாம். 

(இ) நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு…” 1 பேதுரு 1:13
யாத். 12:11 யைப் பார்க்கவும் 'நீங்கள் உங்கள் அரைவாசிகளில் கச்சை கட்டிக் கொண்டு…” மீட்கப்பட்ட இஸ்ரவேலர் கச்சை கட்டிக் கொண்டு கானானுகுச் செல்லப் புறப்பட்டபோதுபோல மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மனதைக் கட்டிக்கொண்டு பரம கானானுக்குச் செல்ல புறப்பட்டுப் போகவேண்டும். 
பழைய ஏற்பாடு நமக்குத் தேவையில்லை என்று வாதிடுவர். ஏமாந்து போகாதீர்கள். பழைய ஏற்பாட்டைக் கருத்தாய்ப் படிக்காதவர்கள் புதிய ஏற்பாட்டின் சிறந்த கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாது. 


2. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் ஒருசில வசங்களை ஆங்காங்கு பொறுக்கி எடுத்துப் போதிப்பவர்கள் தவறான கருத்துக்களையும் கூறநேரிடும். எல்லா வசனங்களையும் ஆராய்ந்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து வேதத்தின் மொத்தக் கருத்து யாது என்று அறிதல் இன்றியமையாததாகும்.

(அ) அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்(யோவான். 12:34) 
கிறிஸ்து என்றென்றைக்கும் நிலைத்திருப்பார் என்ற வசனங்களை (ஏசா. 9:7; தானி. 7:14) அறிந்து கொண்டார்கள். ஆனால் மனித குமாரன் உயர்த்தப்பட வேண்டும்(அதாவது சிலுவை மரத்தில் அறையப்பட வேண்டும்) என்று கூறுகிற வசனங்களை (ஏசா. 53:4-6:12, தானி. 9:26) அவர்கள் கவனிக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இந்தக் கருத்துக்கள் இயேசுகிறிஸ்துவில் நிறைவேறின. இயேசுவின் விரோதிகள் மாத்திரமல்ல. அவருடைய அன்பான சீடர்களும் இவ்வசங்களைப் புரிந்து கொள்ளாமல் தத்தளித்தனர் 

(ஆ) கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வருவார் (யோவான் 7:41, 7:52 ஐயும் பார்க்க)
மீகா. 5:2 ஐப் படித்தவர்கள் ஏசா 9:1 ஐ (மத். 4:15,16) கவனிக்கவில்லை போலும் அவர் பெத்தலேகேமிலிருந்துதான் வந்தார். இது சரியே. ஆனால் அவர் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார். (ஏசா. 9:1) என்று வேதம் கூறுகின்றது. 


3. ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)

(அ) சொல் ஒற்றுமை
(i) கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.

(ii) “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)

(iii) என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்த்து” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவோ மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ. 

(ஆ) பொருள் ஒற்றுமை
 (I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள். 

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

 (ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும். 

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை

(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment