- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 29 April 2011

ஏரியஸ் vs அத்தானாசியஸ் - திரித்துவ வரலாறு (3)

திரித்துவ வரலாறு முன்னைய பகுதிகளை வாசிக்க இங்கு அழுத்துங்கள்.

திரித்துவ வரலாறு பகுதி 1
திரித்துவ வரலாறு பகுதி 2

இனி பகுதி 3.........

இக்காலக்கட்டத்தில் ஒரிகன் உடைய கல்லூரியின் மாணவரினால் உருவாக்கப்பட்ட பதியதோர் நிசேயக் குழு தோன்றியது. உண்மையில் இவர்கள் தேவார்த்தையை சரியான விதத்தில் வியாக்கியானம் செய்யத் கற்றதற்கு அத்தனாசியசின் இற்கும் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கும் (Nicene Creed) கடன்பட்டவர்கள். இவர்களுள் Basil the great, Gregory of Nyssa , Gregory of Nazianz  எனும் மூன்று Cappadocians முக்கியமானவர்கள். இவர்கள் மூவரும் OUSIA என்பதற்கு சாரம் – Essence)  PRESOPON என்பதற்கும் (நபர் – Person) hypostasis எனும் பதத்தை உபயோகிப்பதால் ஏற்படும் தவறை / புரிந்து கொள்ளுதலை கண்டு கொண்டனர். இதனால் இப்பத்த்தின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டனர். தங்களுடைய இறையியலை அத்தினாசினைப் போல் தேவனுடைய தெய்வீக சாரத்திலிருந்து ஆரம்பிக்காமல் தேவனில் மூன்று நபர்கள்(Hypostasis) இருப்பதில் தொடங்கி இம்முன்றையும் தெய்வீக சாரத்தின் கீழ் கொண்டுவர எத்தனித்தனர். தேவத்துவத்தின் நபர்களுக்கிடையேயுள்ள உறவை மூன்று நபர்கள் இருப்பதற்கு இவர்கள் கொடுத்த முக்கியத்துவம் நிசேய உபதேசம் வலிமை பெறவும், கள்ளப்போதனைகளின் பிழைகள் புலப்படவும் காரணமாய் அமைந்தது மட்டுமல்ல வார்த்தையின் (Logos) ஆள்தத்துவமும் பேணப்பட்டது. அதே சமயத்தில் இவர்கள் வேதத்துவத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தினர். 
இக்காலக்கட்டம் வரை தூயஆவியைப் பற்றிய கருத்துக்கள் இறையியல் வட்டங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குமாரனால் சிருஷ்டிக்க்ப்பட்ட முதல் வஸ்துவே (Being) பரிசுத்த ஆவி என ஏரியஸ் போதித்தார். ஒரிகனும் இதே கருத்துடையவராகவே இருந்தார். அத்தினாசிஸ் இவைகளை மறுத்து தூய ஆவியும் பிதாவினுடைய தன்மையுடையவர் என வலியுறுத்தினார். எனினும் நிசேய விசுவாசப் பிரமாணம் பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் எனும் பிரமாணத்தை மட்டுமே சேர்த்துக் கொண்டது.  Cappadocians உம் அத்தனாசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தூயஆவியின் Homoousios (Same Essence) (பிதாவினுடைய அதே தன்மையுடையவர்) வலியுறுத்தினார். . மேலைத்தேய Poitiers ஐச் சேர்ந்த Hilary தூய ஆவியானவர் தேவனுடைய ஆழங்களை ஆராய்கின்றபடியால் தெய்வீக தன்மைக்கு அந்நியராய் இருக்க முடியாது என வாதிட்டார். கொனஸ்தந்திநோபிளின் சபைத் தலைவரான Nacedoniue  தூயாவியானவர் குமாரனை விடவும் தாழ்வான சிருஷ்டி என கருதினார். எனினும் இவருடைய உபதேசம் பிழையானது என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இவரது கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் தூயாவியைப் பற்றி தீமையானவைகளைப் பேசுபவர்கள் என அழைக்கப்பட்டனர்.

கி.பி. 381 கொனஸ்தந்திநோபிளில் பொதுவான சங்கம் கூடியபோது Gregory of Nazianz இன் வழிநடத்துதலின் கீழ் நிசேய விசுவாசப் பிரமாணத்திற்கு அனுமதியளித்தது. பரிசுத்த ஆவியைப் பற்றி பின்வருமாறு விசுவாசப் பிரமாணத்தில் எழுதப்பட்டது. கர்த்தரும் ஜீவனைக் கொடுக்கிற வரும், பிதாவினின்று புறப்பட்டவரும் பிதாவுடன் குமாரனோடும் கூடத் தொழுது ஸ்தோத்தரிக்கப்பட்ட வேண்டியவரும் தீர்க்கதரிசிகளினூடாகப் பேசுகின்றவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன்.

இரு காரணங்களின் நிமித்தமாக கொனஸ்தந்திபோபிள் சங்கத்தின் பிரமாணம் திருப்பதியற்றதாயிருந்து. (1) Homoousios சஙகத்தின் எனும் வார்த்தை உபயோகிக்கப்படாதமையால் தூய ஆவியானவர் பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர் என்பது வலியுறுத்தப்படவில்லை. (2) தூய ஆவிக்கும் மற்ற இருவருக்குமிடையேயுள்ள உறவுமுறை விளக்கப்படவில்லை. தூய ஆவியானவரை பிதாவிலிருந்து புறப்படுகிறவர் என குறிப்பிடப்பட்டிருப்பினும் அவர் குமாரனிலிருந்து  புறப்படுவதைப் பற்றி வலியுறுத்தவோ அன்றி மறுத்துரைக்கவோ இல்லை. அவ்விடயம் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறியமுடியாமலுள்ளது. தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டும் புறப்படுகின்றவர் என்று கூறுவதானது குமாரனுக்கும் பிதாவுக்கும் இடையேயுள்ள ஒருமைத் தன்மையை மறுதலிப்பதாகவுள்ளது. தூய ஆவி குமாரனிலிருந்து வந்தவர் என கூறும்போது சார்ந்திருக்கும் நிலையை அவருக்கு கொடுப்பதைப் போன்றும் அவருடைய தேவத்துவத்திற்கு களங்கம் விளைவிப்பதாயும் உள்ளது. Athanasius, Basil, Gregory of Nyssa  என்போர் தூய ஆவியானவர் குமாரனிலிருந்து புறப்பட்டவர் என்பதை எவ்வித்த்திலும் எதிர்க்காத முறையில் அவர் பிதாவிலிருந்து புறப்பட்டவர் என வலியுறுத்தினர். 

மேலைத்தேய இறையியலாளர்கள் பிதாவிலும் குமாரனிலுமிருந்து புறப்பட்டவரே தூயஆவியானவர் என்பதை ஏற்றுக் கொண்டனர். கி.பி 589 இல் கூடிய Toled சங்கம் இவ்வுபதேசத்திற்கு முக்கியமானது கீழைத்தேய சபைகளைப் பொறுத்தவரை திரித்துவ உபதேசத்தின் இறுதியான கருத்தமைப்பு தமஸ்குவிலிருந்த John என்பரால் கொடுக்க்ப்பட்டது. இவருடைய கருத்துப்படி ஒரு தெய்வீக சாரமே உள்ளது. ஆனால் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். இவை தெய்வீக வஸ்துவில் உள்ள நிஜங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் மூன்று மனிதர்களுக்கிடையேயான உறவு முறையின் சம்பந்த முறையைப் போன்றதாகக் கருதப்படக் கூடாது. அவர்கள் சகலவற்றிலும் ஒன்றானவர்களாக இருக்கும் நிலையில் மட்டுமே வேறுபட்டவர்கள். மூவரும் ஒருவரை விட மற்றவர் தாழ்வானவர்கள் அல்ல என வாதிட்டாலும் பிதாவினால் குமரன் மூலமாக புறப்பட்டவரே தூய ஆவியானவரே என கருதினர். இக்கருத்து இன்றும் கூட ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர் எனும் எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதாகவுள்ளது.

Augustine இனுடைய பிரமாண்டபமான படைப்பான De Tunicate  இலேயே மேலைத்தேய திரித்துவ உபதேசம் தனது பூரணத்துவத்தை பெற்றது. அவர் தெய்வீகச் சாரம் தன்மை என்பவைகளின் ஒருமைத் தன்மையும் நபர்களின் பன்மைத் தன்மையையும் வலியுறுத்தினர். மூன்று மானிட நபர்களைப் போன்றவர்கள் அல்ல (அதாவது பொதுவான மானிட தன்மையின் பகுதிகளைக் கொண்டிருத்தல்) மாறாக தெய்வீக நபர்களுக்கிடையேயான உறவுமுறை ஒருவரில்லாமல் மற்றவர் இருக்கமுடியாத நிலையாகும். அவர்களுக்கிடையேயான சம்பந்தம் அந்நியோன்யமானது. Augustine ஐப் பொறுத்தவரையில் தூய ஆவியானவர் பிதாவிலிருந்து மட்டுமல்ல குமாரனிலிருந்தும் புறப்படுகின்றவர். ஆனால் மூவரும் சம்மானவர்கள், ஒருவரை விட மற்றவர் எந்தவிதத்திலும் தாழ்வானவர் அல்ல என்பதை வலியுறுத்தினார்.

இதன்பின் திரித்துவ உபதேசத்திற்கு மேலதிகமாக எதுவும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனினும் இந்நிலையில் இருந்து பிழையான உபதேசத்திற்கு இறையிலாளர் செல்வதும் மற்றவர்கள் சரியான சத்தியத்தை அறியவும் உதவியாயிருந்தது.. சிலர் மூன்று கடவுள்கள் இருப்பதாக கருதினர். சிலர் தேவனின் மூவகைக் குணவியல்புகளாக நபர்களாகக் கருதினர். இன்னும் சிலர் தேவனின் மூவகை நிலைகளைக் குறிப்பதாக எண்ணினர். Thomas Acquaints   இன் எழுத்துக்களில் நாம் திரித்துவ உபதேசத்தின் வழமையான விளக்கத்தைக் காணலாம். சபை சீர்த்திருத்தக் காலத்தில் John Calvin திருமறையில் அடிப்படையில் திரித்துவ உபதேசத்தை நெறிப்படுத்தினார்.

சீர்த்திருத்த காலத்தில் திரித்துவ உபதேசத்தின் மேலதிகமான அபிவிருத்தியொன்றையும் நம்மால் காணமுடியாது. எனினும் பழைய கள்ளப் போதகங்கள் மறுபடியும் புதிய போர்வைகளின் கீழ் வந்தமையும் அவற்றை எதிர்த்து சரியான உபதேசத்தை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளையும் சபை சரித்திரத்தில் காணலாம். 

Reference 
J.N.D. Kelly, Early Christian Doctrines (London: Adams & Charles Black, 1968, 1972)
G. Bray,  Creeds, Councils and Christ (Leicester:  Inter Varsity Press, 1984)
H. Bateson, Documents of the Christian Church (London : Open university press, 1963)
எம்.எஸ். வசந்தகுமார், இறையியல், (இலங்கை வேதாகமக் கல்லூரி, 2003) 
கிறிஸ்தவம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, தரம் 13 (இலங்கை கல்விநிறுவகம், 2010)





தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment