- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 18 April 2011

நாமறியாத வழிகளில் வரும் பதில்


பர்மிய நாட்டில் மிஷனரியாக பணியாற்றிய அடோனிராம் ஜட்சன் மரிக்கும் தருவாயில் இருக்கும்போது, பர்மிய நாட்டில் தனக்கேற்பட்ட பாடுகளையும் உபத்திரங்களையும் பற்றிய சரிதையை வாசித்த துருக்கி நாட்டில் இருந்த சில யூதர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

“இது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது“ என தன் தன் மனைவியிடம் கூறிய அடோனிராம் “இது ஒரு நல்ல செய்தி. நான் இளைஞனாயிருந்தபோது எருசலேமிலிருக்கும் யூதர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் மிஷனரியாக என்னை அனுப்பும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் என்னை பர்மாவுக்கே அனுப்பினார். அங்கு நான் கடுமையான உபத்திரங்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளுக்கும் உட்பட்ட போதிலும், இப்போது எனது சித்திரவதைகளினதும் சிறையிருப்புகளினதும் மூலம் தேவன் துருக்கியிலுள்ள சில யூதர்களை இரட்சித்துள்ளார்“ என்றார்.


நம் ஜெபங்கள் நாம் அறியாத அற்புதமான முறைகளில் பதிலளிக்கப்படுவதற்கு இச்சம்பவம் சிறந்த விபரணமாக உள்ளது. யூதர்களின் இரட்சிப்புக்காக ஜெபித்த அடோனிராம் ஜட்சனின் ஜெபம், அவரது வேண்டுதலின்படி அவரை யூதர்களிடம் அனுப்பியதன் மூலமாக அல்ல. மாறாக, பர்மிய நாட்டில் அவருக்கேற்பட்ட உபத்திரங்களைப் பற்றிய சரிதையின் மூலம் யூதர்களைத் தேவன் இரட்சித்துள்ளதன் மூலம் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பலான சந்தர்ப்பங்களில் தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் முறை நமது எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதாகவே உள்ளது. அதாவது நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாக அற்புதமான முறையில் அவர் பதிலளிக்கிறவராக இருக்கிறார்.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரே. 33:3) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாய் உள்ளது.

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment