- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 26 April 2011

Arius vs Athanasius திரித்துவ வரலாறு (2)


பகுதி 1 ஐ இங்கு வாசிக்க 

இக்குழு ஏரியசின் கொள்கைச் சார்புடையதாய் இருந்தமையால் குமாரனும் பிதாவினுடைய சாரத்தையும் தன்மையையும் உடையவர் என்ற கருத்தை (Homoousios) எதிர்த்தது. எனினும் இக்குழு Eusebiue  இனால் முன்பு எழுதப்பட்ட பிரமாணத்தை இச்சங்கத்தில் சமர்ப்பித்த்து. இப்பிரமாணம் அத்தனாசினுடைய மற்றெல்லா கருத்துக்களையும் ஏற்றுக்கொண்ட போதிலும் மேற்சொன்ன Homoousios (same Essence) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக Homoiousios (Similar Essence) எனும் பதத்தை உபயோகித்தது. அதாவது பிதாவும் குமாரனும் ஒரு தன்மையுடையவர்கள் அல்ல. மாறாக பிதாவைப் போன்ற தன்மையுடையவரே (Similar Essence) குமாரன் என கூறினார். வாக்குவாதங்கள் முடிவின்றி தொடர்ந்தமையால் அரசன் இவ்விவதகாரத்தில் தலையிட்டு தனக்கிருந்த அதிகாரத்தைக் கொண்டு சமத்துவத்தை உருவாக்க எத்தனித்தான். எனினும் அரசனுடைய முடிவு அத்தினாசின் பக்கத்திற்கு வெற்றியாக அமைந்த்து. இதனால் இச்சங்கம் “குமாரன் உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர். பிதாவோடே ஒரே தன்மை பொருந்தியவர்“ எனும் முடிவுரையைக் கொடுத்த்து. நிசேய சங்கத்தின் முடிவு அரசனின் தலையீட்டினாலும் அவனுடைய வல்லமையினாலும் ஏற்பட்டமையால் அது சபையினரிடையே பூரண திருப்தியைப் பெற்றுக் கொள்ளவில்லை. இம்முடிவு அரசனால் பலவந்தமாக திணிக்கப்பட்டதென்று கருதினர். அத்தனாசிஸ் கூட தான் வெற்றியடைந்தாலும் சபையின் விவகாரங்கள் அரசாங்கத்தின் தலையீட்டினால் தீர்க்கப்படுவதை விரும்பவில்லை. தன்னுடைய வாக்குவத்தினாலும் வேதாகம சத்தியத்தினடிப்பைடையிலும் ஏரியசினுடைய குழுவினருக்கு தன் நிலையை உறுதிப்படுத்தியிருக்கலாம் என எண்ணினார். பிற்காலத்தில் இத்தகு நிலைமை ஏற்பட்டதையும் நாம் சரித்திரத்தில் அவதானிக்கலாம்.

பிற்காலத்தில் சபை ஏரியசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. எனினும் ஏரியசின் முழுக்கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் Semi-Arians என அழைக்கப்பட்டனர். அரசர்களும் பெரும்பான்மையினர் பக்கமே சார்ந்தனர். இதனால் அத்தனாசியஸ் உலகத்திற்கு எதிரானவராகவே கருதப்பட்டார். ஐந்து முறை நாடுகடத்தப்பட்ட இவர் சுயபுகழுக்காக பதவியிலிருப்பவர்களால் பதவியை இழந்துவிட்டார். 


நிசேய சங்கத்தினது முடிவுரையின் எதிர்ப்பு இருவகைப்பட்டது. ஏரியஸ் குழுவில் துணிகரமிக்கவர்கள் குமாரன் பிதவைவிட வேறானத் தன்மை உடையவர் (Heteroousios) என கூறினர். இன்னும் சிலர் அதாவது Semi-Arians என அழைக்கப்படுவோர் பிதாவைப் போன்ற தன்மையுடையவர். ஆனால் அதே தன்மையல்ல (Homoiousios) என வாதிட்டனர். எனினும் அனைவருமே நிசேய சங்கத்தினது முடிவான ஒரே தன்மையுடையவர் (Homoousios – Same Essence ) என்பதை ஏகமனதாக எதிர்த்தனர். குமாரனுடைய முழுமையானதும் உண்மையானதுமான தேவத்துவத்தை இவர்கள் எதிர்த்தமையால் நிசேய சங்கமுடிவை எதிர்த்தனர். 

இப்பொதுச்சங்கங்களின் ஒழுங்குகள் சட்டங்கள் பற்றி எடுத்த தீர்மானங்கள்

1. ஏரியசையும் அவரது முக்கிய சீடர்களையும் சபையிலிருந்து வெளியேற்றல்.

2. மனம்வருந்திய பகிரங்கப் பாவிகளை திருச்சபை மீண்டும் ஏற்றுக்கொள்ளல்.

3. வேதபோத கருத்துடையவர்களை மீண்டும் திருச்சபையில் சேர்க்கும்போது மீண்டும் திருமுழுக்கு அளிப்பது தேவையற்றதென்பதாகும்.

4. பாஸ்கு விழா பற்றி உரிய திகதியொன்றை உறுதி செய்தல்.

5. குருக்களுக்கான ஒழுக்க சட்டங்களை விதித்தல்.

6. வழிபாடுகள், திருப்பலி நடாத்துதல் பற்றி தேவையான சட்டதிட்ட விதிகளை முன்வைத்தல்.

7. உரோமை, அந்தியோக்கியோ, அலெக்சாந்திரியா போன்ற மூன்று நகரங்களினதும் ஆயர்களுக்கு விசேட ஆட்சி அதிகாரங்களை ஒப்படைத்தல்.

8. எருசலேம் ஆயருக்கு விசேட கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்தல். 

எனினும், ஆரிய வாதம் முடிவுறவில்லை. ஆரியசுக்கு உதவியளித்த அவரின் சீடர்கள் திருச்சபையில் பேதகங்களை ஏற்படுத்தி பேரரசினுள் பல சிக்கல்களை ஏற்படுத்தினர்  அதனால், இந்த பேதகங்களை அடித்தளமாகக் கொண்டு மீண்டும் ஒருமுறை பொதுச்சங்கமொன்று கி.பி. 381ஆம் ஆண்டு நடைபெற்றது.

Semi-Arians  கீழைத்தேய சபைகளிலேயே வெற்றியாளர்களாக இருந்தனர். மேலைத்தேய சபை நிசேய சங்க முடிவிற்கு விசவாசமாயிருந்தது, இதற்க்கு காரணம் கீழைத்தேய சபைகள் Origen சபைகள் Tertullian இன் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தமையினாலாகும். 

எனவே மேலைத்தேய சபைகள் Tertullian உடைய உபதேசத்தின் அடிப்படையில் அமைந்த இறையியலைக் கொண்டிருந்தது. இது அத்தனாசிஸ் இறையியல் போலவே அமைந்திருந்தது. மேலும் ரோமுக்கும் கொனஸ்தந்தினோபிலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்று. கீழைத்தேய சபைகளில் இருந்து அந்தனேசிஸ் துரத்தப்பட்ட பின் மேலைத்தேய சபைகள் அவரை ஏற்றுக் கொண்டது, கி.பி 341 இல் கூடிய ரோம சங்கமும் 334 இல் கூடிய  சன்டிகா (Sandica) சங்கமும் அத்தனாசிஸின் உபதேசத்தை முழுமனதாக ஏற்றுக் கொண்டது.  



எனினும் நிசேய இறையியலில் வெற்றியளராக கருதப்பட்ட Ancyra  ஐச் சேர்ந்த Marcellus அதிகாரத்திற்கு வந்தமை அத்தனாசிஸின் இறையியல் நிலையை பலவீனமடையச் செய்தது. இவன் தேவனோடிருந்த வார்த்தையின் நித்தியம் ஆள்த்ததுவமற்ற தன்மை எனும் வேறுபடுத்தப்பட்ட பழைய இறையியலாளர்களின் கருத்தைத் தழுவினான். இதனால் வார்த்தை மாம்சமாகிய போதே ஆள்த்த்துவமுடையதாக மாறியது எனும் கருத்தைக் கொண்டிருந்தான். வார்த்தை மாம்சமாவதற்கும் முன் இருந்தது என்பதைக் குறிப்பதை மறுதலித்து மாம்சமாகிய வாரத்தைக்கு தேவனுடைய குமாரன் எனும் நாமத்தைக் கொடுப்பதை மட்டுப்படுத்தி மானிட வாழ்வின் முடிவிலேயே வார்த்தையானது, உலகிற்கு முன்பான பிதாவுடனான உறவுக்கு திருப்பியது. இவ்வுபதேசம் உடைய கொள்கையை நியாயப்படுத்துவதற்காக அமைந்த்தோடு கீழைத்தேய மேலைத்தேய சபைகளுக்கு கிடையேயிருந்த இடைவெளியை மேலும் பெரிதுபடுத்தும் காரணியாயும் அமைந்த்து.



கீழைத்தேய மேலைத்தேய சபை இடைவெளியை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தியோக்கியாவில் கூடிய சங்கம் நிசேய முடிவை அங்கீகரித்தாலும் இரண்டு முக்கிய அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குமாரன் பிதாவைப் போன்ற தன்மையுடையவர் (Homoiouios) என்பதையும் அவருடைய ஜெனிப்பிக்கப்படுதலையும் (Generation) பிதாவினடைய சிதத்த்திற்கான செயல் எனக் கூறினர். இது மேலைத்தேய சபைகளை திருத்திப்படுத்துவதாய் அமையவில்லை. இதனைத் தொடர்ந்து பல சங்கங்கள் கூடின. இவைகளின் கொள்கையை பின்பற்றியவர்கள் அந்தனாசிஸின் இடத்தை மேலைத்தேய சபைகளிலிருந்து அகற்றுவதன் மூலமாக தம் கொள்கைளை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகள் யாவும் வியர்தமாகின. எனினும் கொன்ஸ்டன்டைன் சக்கரவத்தியாகும்வரை இவர்களுடைய முயற்சிகள் யாவும் வெற்றியளிக்கவில்லை. ஆனால் கொன்ஸ்டன்டைன் சர்வ்வல்லைமை பொருந்திய சக்கரவர்தியாகிய பின் மேலைத்தேய சபைத் தலைவர்கள் அனைவரையும் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வைத்தான். இம்முயற்சி கி.பி 355 இல் கூடிய Arles சங்கத்திலும் Milan சங்கத்திலும் நடைபெற்றது. 

பிழையான காரணத்திற்காக ஏற்பட்ட இணைவு அபாயகரமானது என்பது மறுபடியும் நிருபணமாகியது. உண்மையில் நிசேய குழுவின் எதிர்ப்புக்குழு பிரிவடையும் நிலைக்கான அறிவிப்பாகவே அது அமைந்தது. காரணம் நிசேய குழுவை எதிர்ப்பதற்காக மட்டுமே வேறுப்பட்ட கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் யாவும் ஒன்றிணைந்தன. வெளிப்புற அழுத்தங்கள் (Eternal pressure) குறைவடைந்த பின உள்ளக ஒன்றுமையின்மை வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. Arius க்கும் Semi-Arius  சில விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. 

கி.பி. 357 இல் கூடிய Sirmium சங்கம் சகல குழுவினரையும் இணைக்க முற்பட்ட Ousia, Homoousios, Homoiousios போன்ற பதங்கள் மானிட அறிவுக்கு அப்பாற்பட்டவைகள் என கூறி அவைகளை இறையியல் கலந்துரையாடல்களில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

எனினும் இத்தகு முறையில் ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் குழுக்கள் இருக்கவில்லை. உண்மையான ஏரியசும் தான் யார் என்பதைக் காட்டத் தொடங்கியதோடு, பழைமை Semi-Arians அனைவரயும் நிசேய குழுவின் பக்கம் துரத்தி விட்டார்

                                                                        (அடுத்த பதிப்பில் நிறைவுபெறும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment