- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 22 June 2014

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன?

யோவான் 14:2 இன் விளக்கம் என்ன? (எஸ். ஜோர்ஜ் விக்டர், ஜம்முகாஷ்மீர், இந்தியா)

'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்'. என்று இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தன் சீடர்களி்டம் கூறினார். பரலோகத்தையே இயேசுகிறிஸ்து பிதாவின் வீடு என்று குறிப்பிட்டுள்ளார். வாசஸ்தலங்கள் என்பதற்கு மூலமொழியில உபயோகிக்ப்பட்டுள்ள கிரேக்கப் பதத்தின் அர்த்தம் நிரந்தரமான இருப்பிடங்கள் என்பதாகும். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும்  தேவனோடு இருக்கக்கூடிய அளவு பரலோகத்தில் இடமிருப்பதையே இயேசுகிறிஸ்து நமக்கு அறியத் தருகிறார். எனினும், கிறிஸ்தவ்களுக்கான இருப்பிடத்தை பற்றி ஆயத்தம் செய்யும் செயல் எத்தகையது என்பது பற்றி இயேசுகிறிஸ்து எதுவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்து தனது சிலுவை மரணத்திற்குச் சற்று முன்பே இவ்வாறு கூறியமையால், அவரது மரணம் உயிர்தெழுதல் என்பன மீட்கப்பட்ட ஜனங்களுக்குப் பரலோகத்தில் இருப்பிடத்தை ஆயத்தம் செய்யும் செயலாகக் கருதப்படுகின்றது. இயேசுகிறிஸ்து சிலுவையில் செய்த செயலே ஒருவன் பரலோகத்திற்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியமையால் பரலோகத்தில் நமக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணும் செயலாக அவருடைய மரணம் உயிர்தெழுதல் என்பவைகள் உள்ளன.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment