- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 5 June 2014

வேதமும் விளக்கமும்நெகேமியா 9:3 - 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்?

நெகேமியா 9:3 இல் கூறப்பட்டுள்ள 1 ஜாமம் தற்போதைய மணியில் கிட்டத்தட்ட எவ்வளவு மணித்தியாலம்? (ஜோசப், சுவிட்சர்லாந்து)

அக்காலத்தைய நேரக்கணிப்பீட்டில் ஒரு ஜாமம் 3 மணித்தியாலங்களைக் கொண்டிருந்தது. அக்கால மக்கள் பகலை 4 ஜாமங்களாகவும் இரவை 4 ஜாமங்களாகவும் பிரித்திருந்தனர். எனவே, ஒரு ஜாமம் என்பது ஒரு பகலின் அல்லது இரவின் நான்கின் ஒரு பகுதியாகும். இதனால் புதிய வேதாகம மொழி பெயர்ப்புகளில் இவ்வசனத்தில் ஜாமம் என்பது, பகலில் நான்கில் ஒரு பங்கு நேரமளவும் என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நெகேமியா 9:3 (பழைய மொழிபெயர்ப்பு)
3. அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

நெகேமியா 9:3 (திருவிவிலியம்)
3 ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment