- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 9 July 2014

வேதமும் விளக்கமும் - மத்.27:5, அப். 1:18 யூதாஸ் எப்படி மரித்தான்? நான்றுகொண்டா? குடல்சரிந்தா?


50. மத்தேயு 27:5 இல் யூதாஸ் நான்றுகொண்டு சொத்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போஸ்தலர் 1:18 இல் அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.” என்று கூறப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டிற்கான காரணம் யாது? (எஸ். சரோஜா, கண்டி)





இவ்விரு வசனங்களிலும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. யூதாசின் மரணத்தைப் பற்றியே இவ்விரு வசனங்களும் கூறுகின்றன. மத்தேயு பாலஸ்தீனாவில் வாழ்ந்த யூதர்களுக்கே தன் சுவிஷேசத்தை எழுதியமையால், அப்பிரதேச மக்கள் அறிந்திருந்த யூதாசின் மரண சம்பவத்தை விபரமாக எழுதாமல், ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கே லூக்கா அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை எழுதியமையால், அவர் யூதாஸின் மரணம் பற்றி பேதுரு கூறியவற்றை விபரமாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் யூதாஸ் தற்கொலை செய்வதற்காகக தூக்குப் போட்டுக் கொண்ட இடம் குத்துப்பாறைகளுடனான இடமாகும். அவன் தூக்குப் போட்டுக் கொண்ட சமயம், தூக்குக் கயிறு கட்டப்பட்டிருந்த மரத்தின் கிளை முறிந்தமையால் அவன் தலைகீழாக கீழே விழுந்தான். இதனால் அவனது வயிறு வெடித்து குடல்களெல்லாம் சரிந்து போயிற்று. அப்போஸ்தலர் லூக்காவைப் போல மத்தேயு விபரமாக எழுதாமல் சுருக்கமாக ஒரே வரியில் அவன் நான்று கொண்டு செத்தான் எக் குறிப்பிட்டுள்ளார்.  

  மத்தேயு 27:5- அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
அப்போஸ்தலர் 1:18  - அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment