அப்போஸ்தலானாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில்
அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்ததாக கூறுகிறார்கள். இது உண்மையா?
அப்படியாயின் இதுபற்றி ஏன் வேதாகமத்தில் குறிப்பிடப்பிடப்படவில்லை? (கென்னடி, சார்ள்ஸ் டேவிட், பூனா-19, இந்தியா)
வேதாகமத்தில்
சீடர்களுடைய வாழ்வில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களும்
குறிப்பிடப்பட்டவில்லை. இதனால் பேதுருவின் மரணம் பற்றி வேதாகமத்தில் நாம்
வாசிப்பதில்லை. ஆயினும், முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திர மற்றும்
பாரம்பரியக் குறிப்புகள் மூலம் பேதுருவின் மரணம் பற்றி நம்மால் அறிந்து
கொள்ளக் கூடியதாயுள்ளது. அதன்படி பேதுரு கி.பி. 64ஆண்டு இரத்த சாட்சியாக
மரித்தார். இயேசுகிறிஸ்துப் போல மரிக்கத் தான் தகுதியற்றவர் என்பதை
உணர்ந்தவராக பேதுரு தன்னைத் தலைகீழாக சிலுவையில் அறையும்படி கேட்டுக்
கொண்டமையால் அவரை அவ்விதமாக சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:
Post a Comment