- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 4 May 2014

வேதமும் விளக்கமும்- மாற்கு 4:30-32 கடுகு செடி எப்படி பெரிய கிளை கொண்ட மரம் ஆகும்?

38. மாற்கு 4:30-32 இல் கடுகு விதை பெரிய மரமாகி ஆகாயத்துப் பறவைகளும் அதன் கீழ் வந்து தங்கும் என்று சொல்லப்படுகின்றது ஆனால் கடுகு செடி பெரிதாக வருவதில்லை. அத்தோடு குறிப்பிட்ட நாட்களுக்குப் மரி்த்துவிடும் ஆகாயத்துப் பறவைகள் தங்கக் கூடிய கிளைகளை விடுவதில்லை. சிறிய கிளைகளே கடுகு செடியில் இருக்கும். ஆனால் வேதத்தில் கடுகு செடி பெரிய மரம் என்றும் ஆகாயத்துப் பறவைகள் தங்கக்கூடிய மரம் என்றும் சொல்லப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? (எம்.ஜே.ஜோசப், ஹெந்தலை, இலங்கை)

கடுகு செடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலஸ்தீன பகுதிகளில் வளரும் கடுகுச் செடிகள் நம் நாட்டில் வளரும் கடுகுச் செடிகள் போன்று வளர்பவை அல்ல. அவை 10 முதல் 15 வரைகள் உயரமாக வளரக் கூடியவை. எனவே, இயேசுகிறிஸ்து கடுகுச் செடியைப் பற்றி கூறியவை அனைத்தும் உண்மையானவையே. 
மாற்கு 4:30-3230. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?

31. அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது;

32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment