- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 19 May 2014

வேதமும் விளக்கமும்-இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன?

42. இயேசு யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணம் என்ன? (ஆர். டேவிட். கண்டி, இலங்கை)
 
 
 
யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தையே கொடுத்தான். இயேசுகிறிஸ்து பாவமற்றவராக இருந்தமையால், மற்றவர்களைப் போல அவர் பாவங்களிலிருந்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கவில்லை. இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மற்றவர்களைப் போல பாவஅறிக்கை செய்யவில்லை. இதனால், பாவங்களிலிருந்து மனந்திருப்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை இயேசுகிறிஸ்து பெற்றமைக்கான காரணம் என்ன என நாம் வினவலாம். இயேசுகிறிஸ்து  மக்களுடைய பாவங்களை சுமந்து தீர்ப்பதற்காக வந்தார். இப்பணி அவருடைய ஞானஸ்நானத்தின்போதே ஆரம்பமானது. இயேசுகிறிஸ்து யாருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காண்பிப்பதற்காக அவதாவது பாவிகளை பிரதிநிதிப்படுத்துவதற்காக, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். எந்தப் பாவத்திலிருந்தும் மனந்திரும்பவேண்டியிராத இயேசுகிறிஸ்து, தான் யாருடைய பாவங்களை சுமந்து தீரக்க் வந்தாரோ அவர்களோடு தன்னை அடையாளங் காணப்பதற்காகவே ஞானஸ்நானம் பெற்றார். 
 
இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறவந்தபோது ஆரம்பத்தில் அவருக்கு ’ஞானஸ்நானம் கொடுக்க யோவான் மறுத்தான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ “இப்பொழுது இடம் கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கின்றது என்று சொன்ன பின்பே யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். எல்லா நீதியையும் என இயேசுகிறிஸ்து கூறுவது அவரது பூலோக ஊழியத்துக்கான முழுமையான திட்டமாகும். தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகுக்கு வந்தார். இதனால் அவர் தேவனுடைய நியமங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியவராக இருந்தார். இதில் ஒரு அம்சம் அவர் பாவிகளோடு தன்னை அடையாளங்காணுதலாகும். இதை அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் செய்துள்ளார். பாவிகள் பெற வேண்டிய ஞானஸ்நானத்தைப் பெற்று தன்னை அவர்களோடு இயேசுகிறிஸ்து அடையாளங் கண்டார். ஞானஸ்நானத்தில் ஆரம்பமான இந்த அடையாளங் காணுதல் சிலுவை மரணத்தில் அதன் உச்ச நிலையை அடைந்தது. 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment