- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 23 May 2013

வல்லமையுள்ளோருக்கு சாட்சி



மெதடிஸ்த எழுதப்புதலின் தலைசிறந்த தலைவரான ஜோன் வெஸ்லி அவர்கள் (1703-1791) ஓக்ஸ் சர்வகலாசாலை மாணவராக இருந்தபோது அங்கிருந்த ஒரு வேலையாள் ஒருவரோடு உரையாடினார். அதன் மூலம் தான் உள்வாங்காத ஒன்று சமயத்தில் உண்டு என்று கண்டு கொண்டார். அந்த நபருக்கு சொந்தமாக ஒரே ஒரு மேல் ஆடை மாத்திரமே இருந்தது. அன்றைய தினம் உண்பதுக்குக் கூட உணவில்லை. சாப்பிட ஏதுமில்லா நிலையிலும் வெறும் நீரை மட்டுமே பருகிவிட்டு, முழுமனதோடு ஆண்டவருக்கு நன்றி சொல்லும் மனதோடு இருந்தான். அவனைப் பார்த்து வெஸ்லி கூறினார், 'உனக்கு உடுத்த ஏதுமில்லாத நிலையிலும் உண்ண எதுவுமற்ற நிலையிலும் நீ ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறாய்.! நீ எதன் நிமித்தம் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறாய்? அந்த வேலைக்காரன் பதிலளித்தான், அவர் எனக்கு ஜீவன் அளித்தார். ஜீவனோடு வைத்திருக்கிறார். அவர் மீது அன்பு செலுத்தும் இதயத்தை தந்திருக்கிறார். அவருக்கு ஊழியம் செய்யும் தீர்மானத்தை எனக்குத் தந்துள்ளார்இந்த வார்த்தைகள் வெஸ்லியை சிரமப்படுத்திற்று. இத்தனைக்கும் அவர் இறையியல் கற்கும் மாணவனாக இருந்தும் அப்படி ஒரு சாட்சியை சொல்லக் கூடிய தேவ அனுபவம் அற்றவராக இருந்தார். ஆயினும் ஆண்டவரை அநேக வருடங்களின் பின் அனுவமாகக் கண்டு ஏற்றுக்கொண்ட பின் பிரித்தானியாவை சுவிசேஷத்தால் பற்றிய எரியச் செய்தார்.

எப்படி இத்தகைய பிரபல மனிதர் வாழ்வில், மிகவும் சாமான்யமானவர்கள் செல்வாக்குச் செலுத்திட முடியும் என சிலர் அதிசயப்படலாம். ஆயினும் வரலாறு, மிகப் பிரபல்யமான கிறிஸ்தவர்களைக் கிறிஸ்துவண்டைக்கு வழி நடத்த முன்பின் தெரியாத கிறிஸ்தவர்களைப் பல தடவைகள் ஆண்டவர் பயன்படுத்தியுள்ளமையைக் காட்டுகின்றது
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment