“பிரசங்கிகளின் பிரபு“ எனப் புகழப்பட்ட சார்ள்ஸ் ஸ்பேர்ஜன் என்பார் (1834-1892) ஒரு தடவை “பூரணமான பரிசுத்தவான்“ எனத் தன்னை அழைத்துக் கொண்ட ஒரு மனிதனை சந்தி்த்தார். . “தன்னில் ஒரு பாவமும் இல்லை“ எனக் கூறிக் கொண்ட அம்மனிதனின் வார்த்தையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ஸ்பேர்ஜன் அவரைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
பூரண பரிசுத்த மனிதனான அவருக்கு ஸ்பேர்ஜன் தன் வீட்டில் அருமையான விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். விருந்துண்ணும்போதும் அம் மனிதன் தன் பூரண பரிசுத்த வாழ்வுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அம்மனிதன் சொல்பவைகள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்பேர்ஜன் கடைசியில், மேசையிலிருந்த தண்ணீர் கோப்பையை எடுத்து அம்மனிதன்னின் முகத்தில் வீசினார். உடனே அம்மனிதன் கோபங் கொண்டு ஸ்பேர்ஜனைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினான்.
அப்போது ஸ்பேர்ஜன் அம்மனிதனிடம் “உன்னுடைய பழைய மனிதன் மரணமடையவில்லை. அவன் மயங்கியே இருந்திருக்கின்றான். இதனால் கொஞ்சம் தண்ணீர்பட்டதும் அவன் மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டான்“ என்று கூறினார்.
பூரண பரிசுத்த வாழ்வு பரலோகத்திலேயே நமக்கு கிடைக்கும். இவ்வுலகில் வாழும் நாட்களில் நாம் பாவ சரீரத்திலேயே வாழ்கிறோம். இதனால் கிறிஸ்தவர்களது வாழ்வில் ஆவிக்கும் மாம்சத்திற்குமிடையிலான போராட்டம் எப்போதும் ஏற்படுகின்றது. (கலா. 5:17) பல சந்தர்ப்பங்களில் நாம் செய்ய விரும்பாதவைகளைச் செய்துவிடுகிறோம். (ரோமர் 7:14-20)
நம்மில் பாவமே இல்லை - நாம் பூரணமான பரிசுத்தவான்கள் எனக் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அது சுய புகழ்ச்சிக்காகவும் வீண் பெருமைக்காக மட்டுமே இருக்கும். தேவனோடு நெருங்கி வாழ்பவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் பாவத்தில் விழுந்துள்ளதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இதனால்தான் வேதாகமம் “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:10) என்று கூறுகிறது. எனவே நாம் பூரணமானவர்கள் என நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
(நன்றி : சில சம்பங்களில் சில சத்தியங்கள்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
சேனைகளின் கர்த்தர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மி்க்க நன்றி சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
ReplyDelete