- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 8 August 2011

கள்ளப் போதகர்களின் செயலும் செய்தியும்


1. பக்தியில்லாதவர்கள் 
தேவனைப் பற்றிய பயமோ விசுவாசமோ, அவரது நாமத்திற்குக் கீழ்படிய மனமோ விசுவாசமோ அவரது நாமத்துக்குக் கீழ்படிய மனமோ இல்லாதவர்கள். தங்கள் இருதயத்தில் சிறிதேனும் கர்த்தருக்கு முன் பக்தியுள்ள பரிசு்த்தமுள்ள மனிதராய் வாழ வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்கள். தேவ பக்திக்குரிய இரகசியம் யாவரும் ஒப்புக்கொள்ளும்படி மகா மேன்மையுள்ளது. ஆனால் இவர்களுடைய பக்தி யாவராலும் ஒப்புக் கொள்ள முடியாது. தேவ பக்தியை மகா மேன்மையுள்ளதாய் இவர்கள் நினையாதவர்கள். (யூதா 4)

2. இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பவர்கள்
இயேசு, கிறிஸ்து அல்ல என்றும் தேவ குமாரன் இல்லை என்றும் மறுதலிப்பவர்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பு, அவரின் மரணம், உயிர்தெழுதல், பரமேற்றுதல் இவைகளை முழுவதுமாக மறுக்கிறவர்கள். இயேசுவை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்பதை ஒத்துக் கொள்ளாதவர்கள். (1 யோவான் 2:22) 

3. இயேசுவை அறிக்கை பண்ணாதவர்கள் 
மாம்சத்தில் வந்த இயேசுவை ஒருபோதும் அறிக்கை பண்ணாதவர்கள். இயேசுவின் நாமத்தில் எதையும் பிதாவினிடத்தில் கேட்கமாட்டார்கள். பேசும்போதும், பிரசிங்கிக்கும்போதும். ஜெபிக்கும்போதும் இயேசு கிறிஸ்துவே என்று தங்கள் வாயினால் அறிக்கை செய்ய மாட்டார்கள். இயேசு ஒருவரே வழி என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவரை அறிக்கை பண்ண மாட்டார்கள். மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவர்கள் அந்திக்கிறிஸ்துவும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களுமாய் இருக்கின்றனர் என்று வேதம் கூறுகின்றது. (1 யோவான் 4:2,3; யோவான் 7) 

4. கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுகிறவர்கள் 
தேவன் ஒருவரே மெய்தேவனாவார். அவர் மூன்று நிலைகளில் கிரியை செய்கிறார். பிதா, குமாரன். பரிசுத்தஆவி என்னும் மூன்று பேரும் ஒருவரே என்ற திரித்துவக் கோட்பாட்டை இவர்க்ள் அசட்டை செய்வார்கள். திரித்துவத்தின் மகிமையை விசரமாய்ப் பேசுவார்கள். இயேசுவையும் ஆவியானவரையும் இகழ்வார்கள். தேவத்துவத்தை அவமதித்து பரிகசிப்பார்கள். (2 பேதுரு 2 :10)

5. சுவிஷேசத்தைக் களங்கப்படுத்துகிறவர்கள். 
இயேசு பாவிகளுக்காய் இந்த உலகத்தில் வந்தார். பாவத்திற்காய் இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். அவர் திரும்பவும் வருவார் எனும் நற்செய்தியின் முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் மறுத்து மாற்றி திரித்துக் கூறுவார்கள். சுவிசேஷத்தைத் தவறாயப் பிரசங்கித்து, இரட்சிப்பின் வசனத்தைத் தவறாய்ப் போதிப்பார்கள். சரியான உண்மையான செய்திகளை அப்படியே மறுத்து மாற்றிக் கூறுவார்கள். (கலா. 2:7)

6. வேறே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவர்கள். 
வேறே சுவிசேஷம் என்பது பிசாசின் செய்தியாகவும், அவர்களது தலைவர்களின் அறிவுப்பூர்வமான செய்தியாகவும், மனித மூளையிலிருந்து பெற்ற செய்தியாகவும் இருக்கும். ஆனால் அவைகள் தேவ வசன அடிப்படையில் இருக்காது. நல்ல பிரசங்கிமார்களைப் போல நல்ல செய்திகளை அவர்கள் பிரசங்கிப்பார்கள். முடிவு அது இயேசுவின் நற்செய்தியாயிராமல் சாத்தானின் துர்உபதேசமாகவே இருக்கும்.  (கலாத்தியர் 1:8,9) 

7. நானே கிறிஸ்து என்பவர்கள் : 
இப்படிப்பட்ட இயக்கங்களின் தலைவர்களை அந்த கூட்டத்தின் மக்களிடம் தாங்களே வரப்போகும் மேசியா என்றும், கிறிஸ்து என்றும் அறிவிப்பார்கள். அவைகளைக் குறித்து எழுதுவார்கள். சில தலைவர்கள் தங்கள் வார்த்தைகளாலே, தாங்கள் கிறிஸ்து என்றும் அறிவிப்பார்கள். இவர்களை நம்பும் மக்களுக்கும் அப்படியே சொல்லுவார்கள். அதற்காகவே உழைப்பார்கள். (மாற். 13:6)

8. நல்ல ஆடுகளைப் போல் நடிப்பவர்கள். 
இவர்கள் ஓநாய்கள். ஆனால் ஆடுகளைப் போல வேடமிட்டு வருபவர்கள். ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி அவர்களைத் தங்கள் துர்உபதேச வலையில் விழத்தள்ளுவார்கள். வெளியில் இவர்களை மக்கள் விசுவாசிகள் என்று நினைப்பார்கள். உள்ளத்திலோ இவர்கள் விசுவாசத் துரோகிகள். (மத். 7:15)

9. மக்களைக் குழப்புகிறவர்கள். 
இவர்களுக்கும் வேதாகமம் நன்றாய் தெரியும். வேதத்தை வைத்துக் கொண்டே இவர்களின் சொந்தக் கருத்துக்களை சொல்லித் திரிவார்கள். இவர்கள் வேதத்தைப் படிப்பது ஆத்துமாவின் வளர்ச்சிக்கல்ல. மக்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு இவர்களுடைய “தவறான பதில்களை“ செல்லுவதற்காகவும், வாக்குவாதங்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவுமே வசனத்தைப் படிப்பார்கள். இந்த துர்உபதேசக் கூட்டத்தார் தெளிந்த தண்ணீராய் இருக்கும். ஆத்துமாக்களின் மனதைக் குழப்பும் குழப்பவாதிகள்

10. மனசாட்சியில்லாத பொய்யர்கள். 
மனசாட்சியின்றி எல்லாக் காரியங்களிலும் பொய்யாய் நடந்கொள்ளும் எத்தர்களாயிருப்பார்கள். தாங்கள் பேசவதும் செயல்படுவதும் வேதத்தின்படி சரியானதாவென்று நிதானிக்க மாட்டார்கள். பொய்யைப் போதகத்தோடு போலி வாழ்க்கையும் வாழ்வார்கள். உள்ளதை உள்ளபடி சொன்னால் அதற்கு சத்தியம் என்று பெயர். இவர்களோ இருக்கிறதை இல்லாத்தாகவும் இல்லாததை இருக்கிறதாயும் சொல்லுவதால் இவர்களுக்கு பொய்யர் என்று பெயர் ( 1தீமோ 4:13)

11. வஞ்சம் நிறைந்தவர்கள். 
பேசுவதும் பழகுவதும் உண்மையான அன்பைப் போலவும் அல்லது அதைவிட அதிகமாகவும் இருக்கும். உதவி செய்தவற்குத் தயங்கமாட்டார்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய முன்வருவார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலின் பின்னாலும் வஞ்சம் இருக்கும். பிறரை எப்படியாவது அவர்களின் கூட்டத்தில் சேர்த்துவிட எதையும் செய்யும் நண்பர்களாய் பழகுவார்கள். (மாற். 13:5)

12. பக்கவழியாய் வருபவர்கள் 
மேய்ப்பனில்லாதபோது ஆடுகளைக் கொள்ளையடிக்கும் பழக்கமுள்ளவர்கள். ஆவிக்குரிய நல்ல திருச்சபைகளுக்குச் செல்ல மாட்டார்கள். விசுவாசிகளின் ஐக்கியத்தில் பங்கு வைத்துக் கொள்வது அந்நியோந்நியத்திலும் அப்பம் பிட்குதலிலும் கலவாது இருப்பார்கள். இவர்கள் எங்கேயிருந்து எப்படி செயல்படுகிறார்கள என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் குறுக்கு வழியே வந்து சபையின் ஆத்துமாக்களை கெடுத்துப் போடுவார்கள். வாசல் வழியே வராது வேறு வழியே ஏறிவருவதால் இவர்கள் கள்ளர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் (யூதா 4 ; யோவான் 10:1)

13. இழிவான ஆதாயத்தை இச்சிக்கின்றவர்கள்
தங்களுக்கு ஏதாகிலும் இலாபம் வருமென்றால் எதையும் செய்யத் துணிபவர்கள். எல்லாவற்றிலும் உதவி செய்து தாங்குபவர்கள்; நமது தேவைகளை சந்திப்பவர்கள் என்ற எண்ணத்தை போலியாக உண்டு பண்ணுபவர்கள். பணமும் வெளிநாட்டு உறவும் கிடைக்கமென்பதற்காக என்ன சொன்னாலும் செய்யக்கூடிய இழிவான ஆதாயத்தை இச்சிப்பவர்கள். (தீத்து 1:11)

14. உல்லாசமாய் வாழ்பவர்கள்
தானும் தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் நன்றாய் வாழந்தால் போதும் என்ற எண்ணமுடையவர்கள். வசதியற்ற ஏழைகளை நாடிப் போக மாட்டார்கள். ஏழ்மையில் அவதிப்படுவோரைக் கண்டு மனம் பதறுவதுபோல் காண்பிப்பார்கள். கிறிஸ்தவர்களையே சுற்றி சுற்றி வருபவர்கள். இதர மதமக்களோடு அதிக உறவு கொள்ளார்கள். இவர்கள் சுயநலமாய் வாழும் உல்லாசப் பயணிகள் (2பேதுரு 2:13; தீத்து 1:11) 

15. விபசாரம் செய்பவர்கள் 
இவ்வித மக்கள் மத்தியல் பொதுவாகக் காணப்படுவது விபச்சாரமே. இவர்களுக்கு விபச்சாரம் பாவமாகத் தோன்றாது. இவர்களுடைய கொள்கையி்ல இதுவு்ம் ஒன்றாய் இருக்கும். ஒரு புருஷன் ஒரு மனைவி என்ற வேதநியமனத்தை ஏற்றுக் கொள்ளாது பலருடனும் வாழ்க்கை நடத்துவார்கள். அதைப் பாவமாகப் போதியாதவர்கள். ஆணும் பெண்ணும் இதற்கு இணங்கி வாழ்வார்கள். விபர்சசார மயக்கத்தால் நிறைந்தவர்கள். அசுத்த இச்சைகளோடு மாம்சத்திற்கேற்றப்படி நடந்த சுய்ககட்டுப்பாடின்றி வாழ்பவர்கள். வேதம் விபச்சாரத்தையும் வேசித்தனத்தையும் கண்டிப்பதால் வேதத்தையும் பரிசுத்தமுள்ள புத்தகமாக இவர்கள் அங்கீகரிப்பதில்லை. (2 பேதுரு 2:14, 10; யூதா 4)

16. இவர்களும் ஊழியம் செய்வார்கள்
நல்ல ஊழியர்களைப் போலவே இவர்களும் பிரசங்கிப்பார்கள். இவர்களின் பிரசங்கங்களும் போதனைகளும் நலமாயிராது. சாத்தானின் உபதேசமாய் இருக்கும். இவர்களுடைய கனிகளைக் கொண்டே இவர்கள் எப்படிப்பட்டவர்களென நாம் அறிந்து கொள்ளலாம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்க வேண்டியது வேத கட்டளை மனந்திரும்பாத இவர்கள் எப்படி நல்ல கனிகளைக் கொடுக்க முடியும்.? எனவே இவர்களின் ஊழியம் கனியற்ற ஊழியமாய் இருக்கும் வேதபுரட்டர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ( கலா. 1:9; 2 பேதுரு 3:16)

மேலே சொல்லப்பட்ட அத்தனை செயல்களும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த செய்திகளல்ல. துர்உபதேசத்தைப் போதிக்கும் பல இயக்கங்களின் செயல்களும் செய்திகளும் இதில் அடங்கும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இப்படிப்படட மக்களோடு கிறிஸ்தவர்கள் எவ்வளவு கவனமாய் இருக்க வேண்டுமோ அவ்வளவு கவனமாயும் எச்சரிப்போடும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜாக்கிரதையாயில்லையென்றால் இவ்வித ஓநாய்களிடம் அகப்படுவது நிச்சயம். 

(இவ்வாக்கமானது சகோ. அன்ரூ பிரபுக்குமார் அவர்கள் எழுதிய “துர்உபதேசங்கள்” எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment