- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 25 August 2011

ஒரு பென்சிலின் கதையிலிருந்து வேதபாடம்



பென்சில் தயாரிப்பாளர் தான் உருவாக்கிய பென்சிலிடம் இவ்வாறு கூறத் தொ்டங்கினார். “இவவுலகத்திற்குள் நீ செல்வதற்கு முன் உன்னைக் குறித்து முக்கியமான ஐந்து காரியங்களை நீ தெரிந்து கொள்ள வேண்டும். அதனை எப்பொழுதும் நீ ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நீ மிக சிறப்பான பென்சிலாக திகழ முடியும். 


முதலாவது 
உன் வாழ்வில் நீ மிகப் பெரிய சாதனைகளை செய்ய வேண்டுமானால் அதற்கு முதலாவதாக நீ உன்னை இன்னொருவடைய கைகளுக்குள் அடங்கியிருக்க உன்னை அர்ப்பணிக்க வேண்டும். 

இரண்டாவது
காலத்துக்குக் காலம் உன் வாழ்வில் சீவப்படும் பல வேதனையான அனுபவங்களை நீ முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இது உன்னை தரமிக்க பென்சிலாக மிளிரச் செய்யும். 

மூன்றாவது
சில சமயங்களில் நீ பிழைவிடலாம். ஆனாலும் அதனை சரி செய்ய முடியும் என்பதை நினைவில் கொள். 

நான்காவது 
கர்ச்சிகரமான உன் வெளித்தோற்றத்தின் அழகல்ல. உனக்குள் என்ன இருக்கிறது என்பதே முக்கியமானது. 

ஐந்தாவது 
எந்த பாதமான சூழ்நிலையானாலும் நீ தொடர்ந்து எழுதப்பட வேண்டியது அவசியம். அதில் உனது தனித்துவமான அடையாளத்தை நீ எப்பொழுதும் விட்டுச் செல்ல வேண்டும். 

இவ்வாறு, தன்னை உருவாக்கியவரின் திட்டத்தினையும் நோக்கத்தினையும் புரிந்து கொண்ட பென்சில், தான் அதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுவேன் என உறுதியளித்தது.



மனிதா! இப்பொழுது பென்சில் இடத்தில் சற்றே உன்னை வைத்துப்பார். அதற்கு சொல்லப்பட்டதை எப்பொழுதும் உன் நினைவில் கொண்டு செயல்படுவாயானால், நீயும் ஒரு சிறந்த நபராக மாறுவாய் என்பது நிச்சியம். 

ஒன்று
நீ உன்னை ஆண்டவருடைய கரங்களில் முற்றுமாய் ஒப்பக்கொடுத்தால் மட்டுமே, உன்னால் மிகப் பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். அப்பொழுது நீ மற்ற மனிதர்களுக்கு பயனுள்ள ஒரு மனிதனாக வாழ முடியும். 

இரண்டு
காலத்துக்கு காலம் நீ பலவிதமான வேதனைகளுக்கூடாகத் தீட்டப்படுவாய்! அது உன்னை ஒரு உறுதியுள்ள மனிதனாக்குவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

மூன்று
தற்செயலாய் நீ தவறுசெய்ய நேரிட்டால் அப்பிழைகளை திருத்திக்கொள்வதோடு, அவற்றினூடாக கற்றுக் கொள்ளவும் வளரவும் கூடும் என்பதை நினைவில்கொள்.


நான்கு
உனக்குள் இருப்பதுதான் உஉஉன்னிலுள்ள சிறப்பு


ஐந்து 
நீ கடந்த செல்லும் உன் வாழ்க்கைப் பாதையில் எப்பொழுதும் அடையாளத்தினை வி்ட்டுச் செல். உன்னுடைய சூழ்நிலை எப்படிப்பட்தாயிருந்தாலும் எப்பொழுதும் உன் ஆண்டவரையே சேவி. 

நாம் ஒவ்வொருவரும் ஒரு பென்சிலே.......
நாம் சிறப்பானதும் தனித்துவமானதுமான ஒரு நோக்கத்திற்காக நம்முடைய சிருஷ்டிகரால் உருவாக்கப்பட்டுள்ளோம். எனவே இதை நாம் எப்பொழுதும் நினைவில் கொண்டவர்களாக, அனுதினமும் ஆண்டவருடன் நல்லுறவு மிக்கவர்களாக நமது வாழ்க்கையைத் தொடர்வோமாக. 

நீ மேலான காரியங்களை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளாய். 

நன்றி - சத்தியவசனம் (ஜூலை-செப் 2009)


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment