- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 22 December 2013

இயேசுவின் பிறப்பைக் குறித்துக் கேள்விபட்டு வந்த வானசாஸ்திரிகளைப் பற்றி விளக்குவீர்களா?



இவர்கள் பாலஸ்தீனாவுக்கு கிழக்குப் பகுதியிலிருந்த பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என நம்பப்படுகின்றது. சாஸ்திரிகள் என்பதறகு மூலமொழியில் உள்ள பதம் ஆரம்பகாலத்தில் மேதியாவிலிருந்து ஆசாரியர்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டது. கனவுகளுக்கு விளக்கமளிக்கும் ஆற்றல் மிக்க இத்தகைய சாஸ்திரிகள் பாபிலோனிலும் இருந்துள்ளதை தானியேல் 1:202:24:75:7 வசனங்களின் மூலமாக அறிந்திடலாம்.
 
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஜோதிடர், மந்திரவாதிகள், வான சாஸ்திரிகள் என்போரும் இப்பதத்தின் மூலமாக அழைக்கப்பட்டனர். இயேசுகிறிஸ்துவை பார்க்க வந்த சாஸ்திரிகள் கிழக்கிலே அவருடைய நட்சத்ரத்தைக் கண்டு வந்தமையினால், அவர்கள் வானசாஸ்திரிகளாகவே இருந்திருக்க வேண்டும். இவர்கள்இயேசுகிறிஸ்துவிற்கு மூன்று பரிசில்களைக் கொண்டு வந்தமையால் (மத். 2:11) சாஸ்திரிகள் மூவர் வந்திருக்க வேண்டும் என பாரம்பரியம் கூறுகின்றது. அத்தோடு சங்கீதம் 68:29,31 ; 72:10-1, ஏசா 49:7; 60:1-6 என்னும் வசனங்கள் ராஜாக்கள் வந்து மேசியாவை வழிபடுவாடுவார்கள் என அறியத் தருவதால் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் ராஜாக்களாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. இந்த சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தின் மூலமே யூதருக்கு ராஜா பிறந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டனர். (மத். 2:2)
 
வேதாகமம் வானசாஸ்திரம் உட்பட சகல விதமான ஜோதிட சாஸ்திரங்களையும் வன்மையாக கண்டிப்பதனால் (ஏசா. 47:13-15, தானி. 1:20; 2:37; 5:7, எரே. 10:1-2) தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் இயேசுவின் பிறப்பினை அறிவித்திருக்க  மாட்டார். தான் தடைசெய்த சாஸ்திரத்தினூடாக தேவன் செயல்பட்டால் அவர் முரண்பாடுடையவராகி விடுவார். இயேசுவின் பிறப்பை முன்னிட்டு வானத்தில் ஒரு சிறப்பான நட்சத்திரத்தைத் தோன்றப் பண்ணியதுமட்டுமே தேவனுடைய செயலாகும். அந்நட்சத்திரத்தைக் கண்ட சாஸ்திரிகள் தமது ஆராய்ச்சியின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டுள்ளனர். “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்” (மத். 2:2) இதையே அறியத் தருகின்றது. தேவன் வானசாஸ்திரத்தின் மூலம் செயல்படவில்லையாயின் வானில் தாம் கண்ட நட்சரத்தித்தின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை சாஸ்திரிகள் எப்படி அறிந்துகொண்டனர் ன நாம் வினவலாம். அக்காலத்தில் பாரசீகப் பகுதிகளில் யூதர்களும் குடியிருந்தமையினால் அவர்களுடைய மார்க்க நூலின் மூலம் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை சாஸ்திரிகள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக எண்ணாகமம் 24:17இலுள்ள தீர்க்கதரிசனப் பகுதியின் மூலமே சாஸ்திரிகள் யூதருக்கு ராஜா பிறந்திருப்பதை அறிந்திருப்பர். அத்தீர்க்கதரிசனத்தில் ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தாம் கண்ட நட்சத்திரத்தைப் பற்றி ஆராய்ந்த சாஸ்திரிகள், இத்தீர்க்த்தரிசனப் வார்த்தைகளை அடிப்படையாக்க் கொண்டே யூதரின் ராஜாவைத் தேடி எருசலேமுக்கு வந்திருக்க வேண்டும். 
 
தானியேல் 1:20
20. ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 
 
தானியேல் 2:2 
2. அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டு சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
 
தானியேல் 4:7 
7. அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள். 
 
 தானியேல் 5:7 
7. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். 
 
 மத்தேயு. 2:11
 11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
 
சங்கீதம் 68:29,31
29. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.

31. பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
 
 சங்கீதம் 72
10. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

11. சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
 
 
மத்தேயு. 2:2
2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். 
 
 
 ஏசா. 47:13-15
 13. உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.

14. இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

15. உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
 
 எண்ணாகமம் 24:17 
17. அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்.
 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment