- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 9 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 10–தீர்க்கதரிசனம் - II(இறுதிப்பகுதி)


1. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்க சில விதிகள்

(அ) இறைவாக்கினர் தங்கள் தீரக்கதரிசன தூதுகளை அறிவித்த சூழ்நிலைகளை ஆராய்ந்தறிய வேண்டும்

(ஆ) பொதுவாக தீர்க்கதரிகள் பயன்படுத்துகின்ற உருவகங்ள் ஒப்பனைகள் ஆகிய இவைகளின் கருத்து விளக்கம் ஆகியவை என்னதென்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

(இ) ஒரு தீர்க்கதரிசி கூறும் செய்தியை அதற்கு ஒத்த தீர்க்கதரிசன பகுதிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உதாரணம்
கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையாயுமாயிருக்கும். (ஏசா. 4:2)
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை (ஏசா. 11:1)
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளை (எரே. 23:6; 33:15,16)
இதோ கிளை எனப்பட்ட என் தாசன் (சக. 3:8)
இதோ ஒரு புருஷன், அவருடைய நாம்ம் (சக. 6:12)

(ஈ) புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவேறிய சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும்.

(உ) புதிய ஏற்பாட்டுப் பணியாளர்கள் (இயேசு கிறிஸ்து, பேதுரு, யாக்கோபு, பவுல்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளைக் கவனிக்க் வேண்டும். 

இக்கடைசி விதி மிகவும் முக்கியமானது. புதிய ஏற்பாட்டு அடியாளர்கள் (தேவாவியின் ஏவுதலால் பேசியவர்கள் என்பதை மறவாதீர்கள்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் பகுதிகளை மேற்கோளாகப் பயன்படுத்யபோது அந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவச் திருச்சபையிலும் அந்தத் திருச்சபையின் வரலாற்றிலும் அனுபவத்திலும் நிறைவேறி வருகின்றதாகக் கூறினர் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். 

உதாரணமாக
யோவேல் 2:28-29 பெந்தகோஸ்தே நாளில் நிறைவேறியதாகப் பேதுரு கூறுகின்றார். (அப். 2:16-17)
ஆமோஸ் 8:11,12 விழுந்துபோன தாவீதின் கூடாரம் எங்கும் நிறுவப்பட்டு வருகின்ற திருச்சபையின் மூலம் மறுபடியும்…. செவ்வாயாக நிறுத்தப்பட்டு வருகிறதாக யாக்கோபு கூறினார். (அப். 15:16,17)
யாத். 19:5,6) இறைமக்களாகிய “இஸ்ரவேலரைப் பற்றிக் கூறப்பட்டதெல்லாம் பேதுரு 2:9 இறைமக்களாகிய திருச்பைக்கு பொருத்தமானது என்று பேதுரு கூறப்பட்டுள்ளன. (ரோமர் 9:25)


2. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்கும் முறைகள்

(அ) ஆன்மீகப் பொருள் காணும்முறை (Spiritualizing Method)
(i) சொல்லுக்கு சொல் அப்படியே பொருள் படுத்துவது சரியான முறையன்று என்பர் சிலர். மேலே நாம் கண்ட இக்கருத்தை உறுதிப்படுத்துகின்ற சில எடுத்துக்காட்டுக்களை முன்பே பார்த்தோம் யாக்கோபு, பேதுரு, பவுல் முதலிய அருளுரைத் தொண்டர்கள் தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. 

(ii) யூத இனத்தைப் பொறுத்தவரை நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இனி எதுவும் கிடையாதாம். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டதாம்.! எனவே இஸ்ரவேலரைக் குறித்த தீர்க்கதரிசனங்களுக்கு ஆன்மீக விளக்கம் அளிப்பதே சரி என்று சிலர் எண்ணுகின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் புத்துயர் பெற்றுப் பகைவரின் நடுவில் செழித்து ஓங்கியிருப்பது இக்கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. 

(iii) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வளம் நிறைந்த ஆட்சியைப் பற்றிய தீர்க்கதரிசனப்ப பகுதிகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியையும் அப்பொழுது திருச்சபை அனுபவிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே குறிக்கின்றன. என்று சிலர் கருதுகின்றனர். 


(ஆ) சொல்லுக்குச் சொல் பொருள்காணும் முறை (Literalist Method) 

(i) கூடுமானவரை எங்குமே சொல்லுக்குச் சொல் சரியாய் அல்லது எழுத்துப்படி விளக்கஞ் செய்வதே சரி என்பர் சிலர். 
தேவாலாயம் மீண்டும் எருசலேம் நகரத்தில் (எசேக்கியேலின் சிற்பத் திட்டப்படி 40-49 அதிகாரங்கள்) கட்டப்படுமாம். மீண்டும் அவ்வாலயத்தில் பலிகள் செலுத்தப்படுமாம். (எசே. 45-46 அதி) ஆனால் பலிகள் மீண்டும் செலுத்தப்படுவது எபிரேயர் நிருபத்தின் கருத்துரைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. எனவே இவ்வதிகங்களைச் சொல்லுக்குச் சொல் விளங்கஞ் செய்யக்கூடாது. 

(ii) திருச்சபை உயர எடுத்துக் கொள்ளப்பட்டபின் ஆண்டவர் மீண்டும் யூத இனத்தை மேலும் மேலும் ஆசீர்வதித்து இந்த இனத்தைக் கொண்டு முழு உலகையும் ஆயிரம் ஆண்டுகளாக அரசாள்வாராம்
ஆயிரம் ஆண்டு ஆண்டவர் அரசாட்சி இல்லை என்று சாதிக்கும் சிலர். உலகத்தின் முடிவு காலத்தில் ஏராளமான யூதர்கள் குணப்படுவார்கள் என்றும் (ரோமர் 11:26) நற்செய்தியின் பயனாக உலகெங்கும் ஒரு பெரிய அசைவு ஏற்படும் என்றும், திருச்சபை மிகவும் வளரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மத். 24:12; 2 தீமோ. 3:1 ஆகிய வசனங்கள்  இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு அளக்கின்றனவா?

மேற்கொண்ட விளக்கங்களை நாம் முன்னரே கற்றுக் கொண்ட திருமுறை விளக்க விதிமுறைகளைக் கொண்டு ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டும். 

ஒன்றுமட்டும் திண்ணம்: தந்தை தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கின்ற காலங்களையும் வேளைகளையும் அறிக்கிற உங்களுக்கு அடுத்தல்ல (அப். 1:7) ஆகவே கிறிஸ்து வரும் நாளையோ காலத்தையோ குறிப்பிட்டுத் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற எல்லாக் கள்ளப் போதகர்களிடமும் எச்சரிக்கையாயிரப்பார்களாக. 


3. தீர்க்கதரிசனத்தின் முடிவு கிறிஸ்துவே

கிறிஸ்து நியாயப்பிரமாணங்களை எல்லாம் தமக்குள் நிறைவேற்றி முடித்த்துபோலவே தீர்க்க தரிசனங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்துவிட்டார். 
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியே தீர்க்தரிசனத்தின் ஆவியாயிருக்கின்றது. (வெளி. 19:10) அதாவது தீர்க்கதரசனத்தின் மையப்பொருள்கிறிஸ்துவை முன்னறிவிப்பதாயாகும். “ மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.(லூக். 24:25-27) தீர்க்கதரிசிகள் … தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். (1பேதுரு 1:10,11) என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிளஷறவைகளும் அவைகளே (யோவான். 5:39, அப். 3:18,24; 10:43; ரோமர் 1:4; ரோமர் 3:2) 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத். 5:17)

ஆமென்

(முற்றிற்று)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment