- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 17 December 2013

உள்ளான மாற்றத்தின் அவசியம்


இந்தியாவில் பணியாற்றிய ஒரு மிஷனரி இஸ்லாமிய மனிதனொருவனைத் தன் சமையற்காரனாக வைத்திருந்தார். ஒருநாள் அவன் மிஷனரியிடம் “நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன். எனவே எனக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.” என்றான். எனவே, மிஷனரியும் ஒருநாள் அவனது தலையில் சிறிது தண்ணீரை ஊற்றி, “இனிமேல் நீ அப்துல்லா அல்ல, இன்றிலிருந்து நீ தாவீது” என்றார். 

ஞானஸ்நானம் முடிவடைந்த பின்னர் மிஷனரி தன் சயைற்காரனிடம் ”நீ ஒரு காரணத்தை மறந்துவிடக்கூடாது. கிறிஸ்தவனான நீ வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்ச்சி சாப்பிடக்கூடாது. மீன் மட்டுமே சாப்பிட வேண்டும்.” என்று கூறினார்.

சில வாரங்களின் பின்னர் ஒருநாள், சமையற்காரின் உறவினர்கள் அவனைப் பார்க்க வந்தனர். அத்தினம் ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. எனினும், தன் உறினர்களைச் சிறப்பான முறையில் உபசரிக்க விரும்பிய அம்மனிதன், மிஷனரியின் அறிவுறுத்தலையும் மீற ஆட்டிறைச்சிக் கறி சமைக்கத் தொடங்கினான்.

ஆட்டிறைச்சிக் கறி மணப்பதை அறிந்து கொண்ட மிஷனரி, சமையற்காரனைக் கூப்பிட்டு, “தாவீது வெள்ளிக்கிழமையில் ஆட்டிறைச்சி சமையக்கூடாது. மீன் மட்டுமே சமைக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன தானே” என்று கேட்டார். சமையற்காரனும், “நான் ஆட்டிறைச்சியல்ல மீன் தான் சமைக்கிறேன்” என்றான். 

மிஷனரியோ “தாவீது, உன்னால் என்னை ஏமாற்ற முடியாது. நீ ஆட்டிறைச்சிதான் சமைக்கிறாய்” என்றார். ஆனால் சமையற்காரனோ மறுபடியுமாக, “நான் ஆட்டிறைச்சி சமைக்கவில்லை மீன் கறியே சமைக்கிறேன்” என்றான். 

இருவருக்கும் இதுபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று. கடைசியாக சமையற்காரன் “நீங்கள் மட்டுமே ஞானி என நினைக்கவேண்டாம். சில வாரங்களுக்கு முன்னர் நீங்கள் என் தலையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு, நீ இனி மேல் அப்துல்லா அல்ல தாவீது என்று கூறினீர்கள். அதே விதமாக, நானும் ஆட்டிறைச்சியின் மீது சிறிது தண்ணீரை ஊற்றிவிட்டு நீ இனிமேல் ஆட்டிறைச்சியல்ல, மீன்” என்று கூறினேன் எனத் தெரிவித்தான்.

வெளிப்படையான பெயர் மாற்றம் வெறும் சடங்காச்சார செயல் என்பன மனிதனில் உண்மையான மாற்றத்தினை ஏற்பாடுத்தாது. மனிதன் தன் பாங்களிலிருந்து மனந்திரும்பி, தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். உள்ளான மாற்றமே ஒருவனை உண்மையான கிறிஸ்தவனாக்கும என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 


நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள். 




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment