- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 3 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 9–தீர்க்கதரிசனம் - I

 

1. தீர்க்கதரிசனத்தின் தன்மை

தீர்க்கதரிசனம் என்ற சொல் தீர்க்கதரிசியின் முழு ஊழியத்தையும் குறிக்கின்ற ஒரு சொல்லன்று. தீர்க்கதரிசனமாய் தரிசிக்கின்றவன் அல்லது வருவதை உணரும் ஞானி ஒரு தீர்க்கதரியாவான். ஆயினும் இச்சொல் எபிரேய மூலமொழியில் “நபி” என்பதற்கோ கிரேக்க மொழி மூலமொழியில் Prophet என்பதற்கோ சனமான சொல்லுமன்று. தேவனிடமிருந்து செய்திகளைக் கேட்டு அறிந்து மக்களுக்குத் தூது கொடுப்பவன் என்பதுதான் மூலமொழியின் சரியான பொருளாகும். எனவே, தீர்க்கதரிசியின் ஊழியம் இருவகைப்படும்.

 

(அ) இறைவாக்குறைத்தல் (forth-telling)

தீர்க்கதரிசிகள் இறைவனின் தூதுவராக அவரிடமிருந்து செய்திகளை மக்களுக்கு அறிவிப்பவர்கள். ஆரோன் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டான். (யாத். 7:1) எப்படி? அவன் மோசேயின் சார்பில் மக்களுக்கு தேவதூதை அறிவித்தவன். மோசே திக்கித் திக்கி பேசுகிறவாயிருந்தபடியால் கடவுள் அவன் சகோதரனாகிய ஆரோனை அவனுக்குத் தீர்க்கதரியாகக் கொடுத்தார். ஆரோன் தன் சொந்த வார்த்தைகளைக் கூறாமல் மோசேயின் மூலம் தனக்குக் கற்பிக்கப்பட்ட தேவ தூதுகளை மட்டும் உரைக்க வேண்டும். உண்மையான இறைவாக்கினர் இறைவன் கூறுவதைக் கேட்டு அப்படியே மக்களுக்கு அறிவிப்பார்கள்.

சாமுவேலின் காலம் முதற்கொண்டு இறைவாக்கினர் பலர் எழும்பலாயினர். இளம் வயதிலேயே சாமுவேலை இப்பணிக்கு அழைத்த இறைவன் அவரை ஏலிக்கும் தனது வாக்கை அறிவிக்கப் பயன்படுத்தினார். (1 சாமு. 3:11-14) பின்பு சாமுவேல் இறைவாக்கினர் குழு ஒன்றை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக இருந்தார். (1 சாமு. 19:20) தீர்க்கதரிசியின் புத்திரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் மறைநூற் பள்ளி போன்ற ஒரு கூட்டமைப்பை நிறுவி, தங்கள் ஆசிரியருடன் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர் என்று தெரிகின்றது. (2 இராஜா 4:1,38; 6:12)

இறைபயமுடைய அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் இறைவாக்கினர் பெரிதும் மதிக்கப்பட்டனர். தேவ சித்தம் இன்னதென்று அறிந்து தங்களுக்கு அறிவிக்கும்படி அரசர்கள் இறைவாக்கினர்களிடம் கேட்டு வந்தார்கள். இதற்கு மாறாக இறைபயமற்ற தீய அரசகர்கள், மெய்யான இறைவாக்கினரைச் சற்றும் பொருட்டபடுத்தாமல் பொய்த் தீர்க்கதரிசிகளை அழைத்து அவர்களுடைய பொய் வாக்குகளால் தங்களைத் தேற்றிக் கொண்டிருந்தனர். (1 இரா. 22:8; எரே. 14:14; 23:21) இறைவாக்கினருள் சிலர் இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்தனர். அவை பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிலவேளைகளில் தேவன் தமது செய்தியை இறைவாக்கினருக்கு நேராக வெளிப்ப்டுதுவார் வேறு சில வேளைகளில் கனவுகளின் மூலமாயும் காட்சிகளின் மூலமாயும் வெளிப்படுத்துவார். உண்மையான இறைவாக்கினர் தெய்வீக அதிகாரம் பெற்றவர்களாய் “கர்த்தர் சொல்கிறார்” எனத் தூதுரைப்பார்கள். ஆசாரியர் அரசர் மட்டுமல்ல. இறைவாக்கினரும் தைலத்தால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள். (1 இரா. 19:16) கடவுள் பணிக்கெனப் பிரித்தெடுக்கப்பட்டதற்கு இந்த அபிஷேகம் அடையாளமாகும்.

(ஆ) வரும் பொருளுரைத்தல்

இறைவாக்கினருடைய பணி இரு வகைப்படும். தேவ தூதுரைப்பது அல்லது இறைவாக்கைக் கூறுவது ஒன்றாகும். இந்த இரண்டாவது பணிக்கு மட்டுமே தீரக்கதரிசி என்ற சொல் பொருந்தும் இறைவாக்கினர் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைக் கடிந்துரைத்து, மக்கள் மனந்திரும்பி கடவுளுக்குக் கீழ்ப்படிய அறைகூவி அழைப்பர். மிகத் துணிவோடு இப்பணிகளை ஆற்றியதன் காரணமாகச் சில வேளைகளில் இன்னல்களையும் அவர்கள் அனுபவித்தனர். (எரே. 38:4-6) வருவன உரைக்கும்போது இறைமக்கள் நாடு கடத்தப்படுதல், சிறையிருப்புக்குத் தப்பித் தாயகம் திரும்புதல், யூதமக்கள் உலகெங்கும் சிதறியிருத்தல், மீண்டும் தாயகம் திரும்புதல், கிறிஸ்துவின் பாடுகள், மரணம், முடிவில்லா அரசு ஆகிய இவைகளைப்பற்றி முக்கியமாகத் தூதுரைத்தார்கள்.

 

2. தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்

ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திற்கும் ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்றோ அல்லது அது ஒரே ஒருமுறை தான் நிறைவேறும் என்றோ நாம் எண்ண வேண்டியதில்லை. பல தீர்க்கதரிசனப் பகுதிகளில் இரண்டு உட்கருத்துக்களும் உண்டு. அவையாவன

(1) உடனடி நிகழ்ச்சி (Immediate Referece)

(2) வெகுகாலத்திற்குப் பின் நடக்கும் நிகழ்ச்சி (Ultimate Reference)

ஆகியவையாகும்.

எனவே இத்தகைய தீர்க்கதரிசனங்கள் பகுதி பகுதியாகவோ (Partial Fulfilmet) முழுவதுமாகவோ (Complete fulfillment) ஆகிய இரு நிலைகளில் நிறைவேறும்.

எடுத்துக்காட்டுகள்

(அ) “உன் சந்ததி இவ்வண்ணமாயிருக்கும்” (ஆதி. 15:5)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல் யாதெனில் யூத ஜாதி பெருகினது (யாத். 32:13; உபா. 1:10,1)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல் விசுவாசிகளின் கூட்டம்.

நம்மெல்லோருக்கும் தகப்பனானான். (ரொமர். 4:16-17)

“தேவனுடைய இஸ்ரவேலருக்கும்” (உண்மையான இஸ்ரவேலராகிய இறை மக்கள் மேலும் ((R.C.V) கலா. 6:16; 3:8-9

(ஆ) “ சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. (ஆதி. 49:9-12)

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். தாவீதரசன் முதல் சிகேத்திய அரசன் முடிய “ ராஜாதிபத்தியம் அவன் சந்ததியிலுண்டானது;” (1 நாளா. 5:2)

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல் யாதெனில் “அவர் (இயேசு கிறிஸ்து) யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; (லூக். 1:32, 33)

(இ) “அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். (2 சாமு. 7:13-15)

(i) உடனடியாக நிகழ்ந்த பகுதி நிறைவேறுதல். – சாலமோனும் அவன் வழிவந்த அரசரும்

(ii) இனிமேல் நிகழவிருக்கும் நிறைவான நிறைவேறுதல். ; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் … அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக். 1:32,33)

‘நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். (2 சாமு. 7:14) இது ஓரளவுக்கு மட்டுமே சாலமோனுக்குப் பொருந்தும் ஆனால் இயேசுவுக்கோ பொருந்தாது.

 

(ஈ) மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வசனங்கள் சில எருசலேம் நகரின் அழிவையும் (கி.பி. 70ஆம் ஆண்டு) சில உலகின் முடிவையும் காட்டுகின்றன. சில வார்த்தைகள் இரண்டையும் குறிப்பிக்கலாம்

(i) அண்மையில் நிகழ்ந்த பகுதிகள் நிறைவேறுதல். கி.பி. 70 ஆம் ஆண்டின் நிகழ்ச்சி

(ii) இனிமேல் நிகழவிருக்கும் முழுநிறைவேறுதல். உலகத்தின் முடிவு. மத். 24:34 அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தும் மத். 24:28 பிணம் எங்கேயோ…”

உயிரற்று பிணம் போன்ற யூத மதம் கிடந்த எருசலேமைச் சுற்றி கழுகுகள் போன்ற ரோமப் படைகள் கூடின. (ரோமப் படையின் அடையாளச் சின்னம் ஒரு குழுகுதான்)

இப்போது உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் கிறிஸ்தவ சபைகளை விழுங்கக் கழுகுகள் (உலக ஆசை கொண்ட பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்துவை எதிர்க்கும் அரசுக்கள்) வரக்கூடும்

முடிவில் உயிரற்றுப் பிணம்போன்று கிடக்கும் அரசுகளையும் சமுதாயப் பண்பாடுகளையும் மதங்களையும் விழுங்க்க் கழுகுகள் (சங்கார் தூதர்கள்) வரக்கூடும்.

3. தீர்க்கதரிசன உருவகச் சொற்கள்

(6 ஆம் அதிகாரம் “அடையாளச் சொற்கள்” என்ற 2ஆம் பிரிவைப் பார்க்க)

 

உருவகச் சொற்கள்

கருத்து

சூரியன் (யோவான் 2:10,31) சந்திரன் நட்சத்திரங்கள் லீபனோன் கேதுருக்கள் (ஏசா 2:13, எசேக். 3:13)

 

வல்லரசுக்கள்

தர்ஷீன் கப்பல்கள் (ஏசா. 2:16)

செல்வம் மிக்க வணிகர்கள்

 

நில நடுக்கம், சூரியன், சந்திரன், இருளடைதல், நட்சத்திரம் விழுதல்

 

அரசியல் புரட்சி, உலக முடிவு

பனி, தூறல், மழை, தண்ணீர், ஆறுகள் (ஏசா. 44:3, ஓசியா 14:5, யோவான் 4:10, 7:38)

 

தூய ஆவியினால் வரும் ஆசீர்வாதங்கள்

மோவாப், அம்மோன் ஏதோம், பாபிலோன்

 

இறைமக்களை (திருச்சபையைச் சூழ்ந்திருக்கும் பகைவர்கள்)

தாவீதின் கொம்பு(சங். 135:17, லூக். 1:75)

நற்செய்தியினால் வரும் இரட்சிப்பு அல்லது கர்த்தராகிய இயேசு

 

தாவீதரசன் (எரே. 30:9; எசே. 34:24; ஓசே. 3:35; அப். 13:34)

 

மேசியா இயேசு கிறிஸ்து

எருசலேம் (சீயோன் (ஏசா 52:1-9); 60:1-14;கலா. 4:26; எபி. 12:22

 

திருச்சபை அல்லது கடவுளின் அருள் நிறை ஆட்சி

தாவீது சாலொமோன் வளமிக்க ஆட்சி (1 இரா. 4:25; மீகா. 4:4; சகரியா 3:10

 

மேசியாவின் ஆட்சி (ஆயிரமாண்டு அரசாட்சி எனப் பலர் கூறுவர்)

 

தீர்க்கதரிசிகளின் மொழிநடை:

(அ) வெகு கலாத்திற்குப் பின் நிகழவிருப்பனவற்றை தங்கள் காலத்தில் ஏற்கனவே நிகழந்திருப்பதாக நினைத்து எழுதுகிறார்கள்
உதாரணமாக “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (ஏசா. 9:6) ‘அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், … பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்’ (ஏசா. 53:3,4) முதலியன இந்த இறந்தகால வினைச் சொற்கள் எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருப்பனவற்றைக் குறிக்கின்றன.


(ஆ) காலத்தால்  ஒன்றுக்கொன்று வெகு தொலைவிலிருக்கும் ஒரே நிகழ்ச்சிகள் ஒரே வசனத்தில் அல்லது ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
உதாரணமாக “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் ..” (ஏசா. 61:2)
அனுகிரக ஆண்டின் துவத்கத்திற்கும் நீதியைச் சரிக்கட்டும் நாளுக்குமிடையில் ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் தீர்க்தரிசியோ இண்டையும் ஒரே வசனத்தில் கூறியிருக்கிறார். இயேசு நாசரேத்து ஜெபாலயத்தில் இந்தப் பகுதியை மேற்கோளாகப் பயன்படுத்தியபோது நாம் அனுக்கரக ஆண்டை வெளிப்படுத்த அனுப்பப்பட்டதாக மட்டும் கூறிவிட்டு நீதியைச் சரிகட்டும் நாளைக் கூறாமல் விட்டுவிட்டார். ஏனெனில் அது பின்னால் நடக்கப் போகிற ஒரு செயலாக இருந்ததினால்தான்

(இ) சில இடங்களில் வருங்கால நிகழ்ச்சிகளை தீர்க்கதரிசனமாக ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.
நான் மனுமக்கள் யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:30,31) இந்த வசனங்கள் 2,000 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறவில்லை.
தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சக. 9:9) என்பது கிறிஸ்துவின் தாழ்மையும் “யுத்தவில்லும் இல்லாமற் போகும்”. என்பது அவருடைய அளுகையும் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்” (சக. 9:10) என்பது கிறிஸ்துவின் உயர்வையும் குறிக்கின்றது. கிறிஸ்துவின் தாழ்வும் உயர்வும் மரணப்பாடுகளும் இரண்டாம் வருகையும் முடிவில்லா ஆட்சியும் ஒரே பகுதியில் சேர்த்துக் கூறப்பட்டுள்ளன.

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment