- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 10 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(2)

2. ஓர் உவமை பெரும்பாலும் முக்கியமான உண்மை ஒன்றையே போதிக்கும் என்று முன்பு பார்த்தோம். அந்த முக்கியமான கருத்தைக் கூறுவதே போதும். உவமையின் விபரங்கள் ஒவ்வொன்றிற்கும் பொருள் காண முயற்சிப்பது தவறாகும். 
உதாரணமாக கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கூறப்பட்டுள்ள மோதிரத்திற்கும் மதியடிகளுக்கும், கொழுத்த கன்றுக்கும் கருத்துக்கூறுவது அவசியமில்லை. உவமைகள் சொல்வதில் நம் ஆண்டவராகிய இயேசு திறமைவாய்ந்தவர். உவமைகளைக் கூறும்போது சுருக்கமாகவோ அல்லது வர்ணித்தோ பொதுமக்களுடைய கவனத்தைக் கவருவார். ஆகவே வர்ணித்துக் கூறப்ப்ட்டகைளுக்கு கருத்துக் கூறதேவையில்லை. 

ஆனால் உயர்ந்த ஆடைக்கு ஆவிக்குரிய கருத்து கூறுவது பொருந்தும் என்பதே என் எண்ணம் இந்த உயர்ந்த ஆடை திருமண ஆடைக்கும் (மத் 22: 1-14) நீதியின் சால்வைக்கும் (ஏசா 61:10) ஒப்பாயிருக்கலாம். 

நல்ல சமாரியனைப் பற்றிய உவமையைக் எடுத்துக் கொள்வோம். இனம், மதம், நிறம் ஆகிய வேற்றுமைகளைப் பாராமல் அவதிப்படுபவர் யாருக்கும் உதவி செய்தல் வேண்டும் என்பது இந்த உவமையின் குறிக்கோள். “நீயும் அப்படியே செய்”(லூக். 10:37) இந்த அறைகூவலுக்கு தப்பும்படி சிலர் இதை நற்செய்திப் பகுதியாகப் பயன்படுத்துவர். சிலர் இவ்வுவமையின் ஒவ்வொரு அங்கத்தையும் எடுத்து கருதுக் கூறுவர். சத்திரத்தைத் திருச்சபை என்றும் இரண்டு பணத்தை இரண்டு சாக்கிரமந்துக்கள் என்றும் மிகைப்படுத்திக் கூறுவர். இது போன்ற முறையைக் கையாளுவது வேதத்தை திரித்துக் கூறுவதாகும். 


3. உதாரணமாக மொத்த கருத்திற்கு மாறான உபதேசங்களை நாம் உவமைகளின் மூலம் நிலைநாட்ட முயல்வது தவறு. 
உதாரணமாக லூக்கா 10:24 ஐசுவரியான் ஆபிரகாமை நோக்கித் தனக்கு ஓரரு உதவிசெய்யும்படி கேட்டுக் கொண்டதினால் நாம் இறந்த புனிதர்களை நோக்கி மன்றாடலாம் எனப் போதிப்பது வேதத்தின் மொத்தக் கருத்திற்கு மாறானது. 

லூக்கா. 15:11-32 கெட்ட குமாரன் மனந்திருந்தி வந்ததும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். இங்கு பாவத்தைப் போக்கும் பலியாய் மரிக்கவில்லை என்றும் நமக்கு நல்ல மாதிரியைக் காண்பிக்கும் தியாகியாய் இருந்தார் என்றும் நாம் புத்தி தெளிந்து தந்தையிடம் திரும்பிச் சென்றால் மன்னிப்பைப் பெறுவோம் என்றும், பாவப் பலியைப் பற்றிய பேச்சே கிடையாது என்றும், பாவத்தைப் போக்க கிறிஸ்து இயேசு இரத்தத்தை சிந்தினார் என்று நாம் கருதவும் கூறவும் தேவையில்லை என்றும் சிலர் கூறுவர். இந்தத் தவறான போதனை வேதாகமத்தின் முழுக் கருத்திற்கும் எதிரானதாகும். இப்பேர்ப்பட்ட போதனை கண்டிக்கத்தக்கது. ஓர் உவமை இரட்சிப்பின் முறையில் அடங்கியிருக்கும் சில முறைகளை மட்டுமே விளக்கும். இரட்சிப்பின் வழி முழுவதையும் ஒரே சுருக்கமான உவமையில் விளக்கக கூடிய உவமை எதுவும் கிடையாது. 


4. உவமையில் ஏதாவதொரு அங்கத்தை மட்டும் முக்கியமான போதனைக்கு தோரமாகக் கூறுவதும் தவறு.
உதாரணமாக பத்து கன்னிகைகளுள் பாதிபேர் இரட்சிக்கப்பட்டனர். பாதிபேர் இரட்சிக்கபடவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களில் பாதிபேர் சேர்க்கப்படுவர். பாதிபேர் புறம்பே தள்ளப்படுவர் என்பது அர்த்தமாகுமா?
அல்லது நான்கு வகையான நிலங்களில் விதைக்கப்பட்ட விதை உவமையில் ஒரு நிலத்தின் விதை மட்டுமே நல்ல பலனைத் தந்தபடியால் கூறப்பட்டு வரும் நற்செய்தி தூதுகளில் நான்கில் ஒரு பாகம்தான் பயன்பெறும் என்பது பொருளாகுமா?
அல்லது நூற்றில் ஒன்பது மட்ட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:1-7)
அல்லது பத்துக்கு ஒன்றுமட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:8-10)


5. உவமையில்லாதிருந்தும் ஓரளவு வமைகளைப் போன்ற ஒப்பனைகள் யோவான் நற்செய் நூலில் உள்ளன. (யோவான் நற்செய்தி நூலில் உவமைகள் இல்லை என்பதையும் அடையாள அற்புதங்கள் எட்டு மட்டுமே உள்ளன என்பதையும் மனதில் கொள்க)

இந்த ஒப்பனைகள்(Alleaories) 10ஆம், 15ஆம் அதிகாரங்களில் காணப்படுகின்றன.

10ஆம் அதிகாரம்

1. நல்ல மேயப்பன் – இயேசு “நானே“ என்றார். 10:11,14

2. ஆடுகள் 3. வாசைலைக் காக்கிறவன்

4. தொழுவம் – இயேசு 10:7,9

5. வாசல் – “எனக்கு முன் வந்தவர்” 10:8

6. திருடர். 

7. அந்நியர். 

8. ஓநாய். 

9. கூலிக்காரன்

மேற்கூறிய ஒன்பது குறிப்புகளில் வாசல், மேய்ப்பன், ஆகிய இரண்டிற்கும் மட்டுமே தம்மை உவமித்து இயேசு கூறியுள்ளார். 

15ம் அதிகாரம்

திராட்சைச் செடி – நானே 15:1 (இயேசு)

பயிடுகிறவர் – தந்தை

கொடிகள் – நீங்கள் 15:5

உவமையில்லாத ஒப்பனைத் தொடர்கள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளன. (உதாரணமாக சங். 80:8-15. நீதி. 5:15, பிர. 12:3-7)

(அத்தியாயம் 7 முற்றிற்று)
(வளரும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment