- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 5 September 2012

எதிரியையும் நேசிக்கும் அன்பு



1883ம் ஆண்டு இரட்சண்ய சேனையின் மிஷனரியாக இலங்கைக்கு வந்த “வில்லியம் கிலாட்வின் “கொழும்பில் பல இடங்களில் திறந்தவெளிக் கூட்டங்களை நடத்தி வந்தார். இரட்சணிய சேனையின் ஆரம்பகாலக் கூட்டங்களுக்கு மக்கள் கல்லெறிவதன் மூலமே தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். 

ஒரு தடவை தன் மீது கல்லெறிந்தவன் யார் என்பதைக் கண்டு கொண்ட வில்லியம் கிலாட்வின், அவனது கையைப் பற்றிப் பிடித்து “சகோதரனே இந்தக் கைகளினால்தானே நீ என் மீது கற்களை வீசினாய்?“ எனக் கூறி அக்கரத்தை முத்தமிட்டார். பிற்காலத்தில் அவன் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சணயசேனை சபையின் அங்கத்தவனாகினான். 

எதிரிகளை நேசிப்பதே கிறிஸ்தவ அன்பின் தன்மையாகும். கிலாட்வின் அத்தகைய அன்புள்ளம் கொண்டவராக இருந்தார். கிறிஸ்தவர்களாகிய நாமும், நமக்கு எதிராய் செயற்படுபவர்களையும் நேசிக்க கடமைப் பட்டுள்ளோம். 

இயேசுகிறிஸ்து இதைப்பற்றி நமக்கு அறிவுறுத்தும்போது 'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; (மத். 5:44-45)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment