- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 17 December 2010

பாடல்!

சாயங்கால நேரம். ஜாரி தான் காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த அந்த அழகான கிறிஸ்துமஸ் தொழுவத்திற்கு முடிவு வடிவத்தை செய்து கொண்டிருந்தான். 

திடீரென்று எங்கிருந்தோ ஒரு சுண்டெலி பாய்ந்து வந்து தொழுவத்தின் கூரையில் போய் ஒரு துளையை தோண்டியவாறு நின்றது.

மிகவும் கோபமடைந்த ஜாரி, ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்துக்கொண்டு , அந்த சுண்டெலியை அடித்து நொறுக்க கட்டையை ஓங்கினான். அந்த வேளையில் அங்கு வந்த போதகர் பீட்டர் பெர்ணான்டஸ், ஜாரியின் தோளின் மேல் கையை வைத்து தடுத்தவராக அவனுக்கு ஒரு சிறுகதையை சொன்னார்.

""""ஓபன்டார்ஃப்"" என்று ஆஸ்திரியா நாட்டில் புனித நிக்கோலஸ் என்னும் ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. 1818- ஆம் ஆண்டு, போதகர் யோசேப்பு மேஹர், நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைக்காக பாடல் குழுவினரை தயார் செய்துகொண்டிருந்தார். ஆனால், இந்த நேரத்தில்தான், ஆலயத்திலுள்ள இசைக்கருவி, சத்தமே எழுப்பாமல், அமைதியையே வெளியிட்டது.

உடனடியாக ஏதோ ஒன்று செய்தாக வேண்டுமே என்று அவர் எண்ணியபோது, போதகர் மேஹருக்கு, பெத்லஹேமில் அன்று இரவு பிறந்த குழந்தை இயேசுவின் ஞாபகம் வந்தது. பாதிரியின் ஆன்மாவிலிருந்து ஒரு பாட்டு தோன்றியது. எந்தவித இசைக்கருவியுமின்றி, இன்றியமையாத ஒரு பாடலை உருவாக்கினார் பாதிரி மேஹர். அந்த பாட்டைத்தான் இன்றும் உலகெங்கிலும் உள்ள எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்துமஸ் இரவில் பாடுகிறோம். அதுதான் "சைலன்ட் நைட்" என்ற பாடல் . ""இத்தனை மகத்துவமான பாட்டிற்கு காரணம் யார் தெரியுமா?"" 

"அதோ அந்த எலிக்கூட்டத்தை சேர்ந்த ஒரு சுண்டெலிதான். கிறிஸ்துமஸ்ஸூக்கு சில நாட்களுக்குமுன் ஒரு சுண்டெலி ஆலயத்திற்குள் புகுந்து அந்த இசைக்கருவியின் காற்றழுத்த இடத்தில் ஒரு துளை போட்டுவிட்டது. ஆகவே தான் இசைக்கருவியில் நிசப்தம் உருவானது, இந்த மகத்துவமான பாடலும் உருவாக வழிவகுக்கப்பட்டது. ""

தொடர்ந்தார் போதகர், "நாமும் அந்த உபபோயகமற்ற எலியைப்போல்தான் இருந்தோம். இயேசு நம்மைதான் தம்மைபோல் மாற்றும்பொருட்டு, நம்மீது இரக்கம்கொண்டு நமக்காக ஒரு மனிதனாக பிறந்தார் .""

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments: