- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 21 December 2010

உலகை சிருஷ்டித்த தேவன்


புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சேர். ஐசக் நியூட்டன் எனும் விஞ்ஞானி ஒரு சமயம், சூரினைச் சுற்றி பல்வேறு கிரகங்கள் சுற்றுவது போன்ற ஒரு மாதிரி உருவம் ஒன்றைத் தன் மேசையின் மீது செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்த ஐசக் நியூட்டனின் உதவியாளர் ஒருவர் அவரிடம் “இதைச் செய்தது யார்? என்று கேட்டார். 

நாத்திகரான அவ்வுதவியாளருக்குச் சரியான பதிலொன்றைக் கொடுக்க்க்கூடிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஐசக் நியூட்டன் “அந்த மாதிரி உருவத்தை யாரும் உருவாக்கவில்லை. அது தானாகவே வந்த்து“ என்று கூறினார். 
நியூட்டனின் வார்த்தைகளை நம்ப மறுத்த அவ்வுதவியாளர் “இவ்வளவு அழகான உருவம் எப்படி தானாகவே வந்திருக்க முடியும்?” என்று கேட்டார் 

“சாதாரண ஒரு மாதிரி உருவத்தை உருவாக்குவதற்கே ஒருவர் தேவை என்றால் சூரியனையும் கிரகங்களையும் உருவாக்கத் தேவன் என்றொருவர் இருந்திருக்க வேண்டும் அல்லவா?” என்று தன் நாத்தீக உதவியாளருக்கு பதில் அளித்தார் சேர் ஐசக் நியூட்டன்.

நாம் வாழும்உலகம் தானாக உருவானதொன்றல்ல. அது நம் தேவனால் சிருஷடிக்கப்பட்டது. இதைப்பற்றி வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது. 

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதி 1:1) சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:3) 

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் (மூலமொழியில் பிரபஞ்சம்) தேவனுடைய வார்த்தையினாலே உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபி. 11:3)

இவ்வாக்கமானது சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment