- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 6 August 2014

வேதமும் விளக்கமும்-உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே ... சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்?

54.  உபாகமம் 33ஆம் அதிகாரத்தில் மோசே எல்லாக் கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கும்போது சிமியோன் கோத்திரத்தை ஆசீர்வதிக்கவில்லை ஏன்? (நவமணி ஆபேல்,நெய்வேலி, இந்தியா)

அக்காலத்தில் சிமியோன் கோத்திரத்தினர் தனியானதொரு கோத்திரமாக கருதப்படவில்லை. யோசுவா 19:1-19 இல் இக்கோத்திரத்தார் யூதா கோத்திரத்தோடு சேர்க்கப்பட்டுள்ளதை அறியத் தருகின்றது. அதேசமயம் யோசேப்பின் இருகுமாரரான எப்பிராயும் மனாசே என்போருடைய வம்சத்தினரும் தனிக்கோத்திரங்களாக கருதப்படாமையினால், மொத்தம் 12 கோத்திரங்கள் எனும் கணிப்பீட்டில் பிற்காலத்தில் யூதா கோத்திரத்தோடு இணையப்போகும் சிமியோன் கோத்திரம் அக்காலத்தில் தனியான கோத்திரமாகக் கருதப்படவில்லை. எனவே மோசே அக்கோத்திரத்தை தனியாக ஆசீர்வதிக்கவில்லை. எனினும் அவர்கள் யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment