- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 8 February 2014

வேதமும் விளக்கமும் -சிமியோன் மரியாளிடம் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று சொல்வதற்கான காரணம் என்ன?

19. இயேசுகிறிஸ்து குழந்தையாயிருந்தபோது அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவருக்காக தேவனைத் ஸ்தோத்தரிக்கும் சிமியோன் மரியாளிடம் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று சொல்வதற்கான காரணம் என்ன? 
 
லூக்கா 2ஆம் அதிகாரம் 33முதல் 35 வரையிலான வசனங்களில் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றி சிமியோன் கூறிய தீர்க்கதரிசனத்தை நாம் வாசிக்கலாம். அதில், இயேசுகிறிஸ்துவுக்கு வரும் எதிர்ப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இயேசுகிறிஸ்துவின் ஊழியம் அவரது சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியதொன்றாகும். இயேசுகிறிஸ்துவின் மரணம் அவரைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாளுக்கு அதிக வேதனையளிப்பதாய் இருக்கும். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக மரியாளுக்கு வரும் கடுமையான வேதனையே சிமியோன். உன் ஆத்துமாவையும் ஒருபட்டயம் உருவிப் போகும் என முன்னறிவித்தார். 
 
லூக்கா 2 :33- 35  
 
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment