- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 12 November 2012

தழும்புள்ள கை


விவிலியம், அவனுக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது.

ஈராண்டுகள் மனைவியுடன் வாழ்ந்தான். அதற்குள் தன் அருமை மனைவியை இழந்தான்;  அவனது அருமைப் புதல்வனும் மரித்துப் போனான்; துயரத்தில் மூழ்கினான்; கடவுளை இகழ்ந்தான்; கடந்த பத்து ஆண்டுகளாக அவன் ஆலயம் போனதே கிடையாது.

பெக்கிப் பாட்டியின் வீடு ஓரிரவு தீப்பிடித்து எரிந்தது. மிகவும் சிரமப்பட்டு பெக்கியைக் காப்பாற்றினர். திடீரென மாடியில் ஒரு அழுகுரல் யாவரையும் கலங்க வைத்தது. ஆம். அது குழந்தை டிக்கி. பெக்கின் பேரன்; தாய் தந்தையற்ற அநாதை. தீயை அணைக்கும் சந்தடியில், தூங்கிக் கொண்டிருந்த டிக்கியை யாவரும் மறந்து விட்டனர். சூழும் நெருப்பு டிக்கியை எழுப்பியது. அவன் கதறினான்.

எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை, மாடிக்குச் செல்லும் படிக்கட்டு எரிந்துவிட்டது. டிக்கி கைவிடப்பட்டான்.

கூட்டத்தின் மத்தியில் வில்லியமும் நின்று கொண்டிருந்தான். குழந்தைக்காக பரிதவித்தான். எப்படியாவது டிக்கிக்கு விரைவில் உதவத் தீர்மானித்தான்.

மாடியில் இருந்து கீழே இறங்கும் இரும்புக் குழாய் ஒன்று அவன் கண்ணில் பட, ஒரே தாவில் தாவி குழாயைப் பிடித்து ஏறினான்.. வாரியெடுத்தான் டிக்கியை; வலது கரம் டிக்கையை அரவணைக்க, இடது கையால் குழாயைப் பிடித்து வழுவி கீழே வந்து சேர்ந்தான். சேர்ந்த சில நிமிடங்களில் குழாயும் மாடியும் சரிந்தன.

டிக்கிக்கு எவ்வித காயமும் சேதமும் இல்லை. ஆனாலும் வில்லியத்திற்கோ, இரும்புக் குழாய் மிகவும் சூடேறியிருந்தால் இடது கை ஆழமாக வெந்துப் போய் இருந்தது.நாளடைவில் காயம் ஆறியபோதிலும், ஆழமான தழும்பு நிலைத்து விட்டது.

இந்த அதிர்ச்சியில் பெக்கிப் பாட்டி சீக்கிரத்தில் மரித்துப் போனாள். டிக்கியைக் கவனிக்க எவருமில்லை. அது குறித்து மூப்பர்கள் கூடி ஆலோசித்தனர்.

டிக்கியை வளர்க்கும் பொறுப்பை ஏற்க இருவர் முன்வந்தனர். கண்ணியமுள்ள ஜேம்ஸ் ஆறுதலளிப்பான் என்று முன்வந்தனர்.

இருவரையும் மூப்பர்கள் பாராட்டினர். உயிரைக் காத்த வில்லியத்துக்கே அதிக உரிமை என்பதை யாவரும் உணர்ந்த போதிலும் வில்லியத்தின் நாத்திகக் கொள்கையால் டிக்கியின் ஆன்மா நட்டமடையுமே என்று வருந்தினர்.

அவர்களால் ஒரு முடிவுக்குக் வரக்கூட முடியவில்லை. இறுதியாக, “நீங்கள் ஏன் இக்குழந்தையை வளர்க்க விரும்புகிறீர்கள்?“ என்று அவர்களாலேயே விளக்கம் கேட்கத் தீர்மானித்தனர்.

ஜேம்ஸ் எழும்பி, “ஒரே மகனை இழந்தோம். வெற்றிடத்தை நிரப்ப டிக்கியை விரும்புகின்றோம். குழந்தையை வளர்க்க ஒரு தாய் வேண்டுமே! வில்லியம் தனியாள் தானே! என் மனைவி குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பாள். கர்த்தருக்கு பயப்படுகின்ற பயத்திலும் அவனை வளர்ப்பாள்.“ என்றார்.

அவருக்குப் பிறகு வில்லியம் முன்னால் வந்தான். ஆனால் அவன் ஏதும் பேசவில்லை. தன் இடது கையின் கட்டுகளை அகற்றினான். ஆழமான தழும்புகளை யாவரும் காணத்தக்கதாக கையை உயர்த்திக் காட்டினான். அமையாய் நின்றான்.

ஒரே அமைதி. கண்கள் கலங்கின. முடிவில் வோட்டு எடுக்கப்பட்டது. வில்லியத்திற்கே அதிக வாக்குகள். அதுவே நீதியான முடிவு என்று யாவரும் மகிழ்ந்தனர். தழும்புள்ள கைகளை விட சிறந்த தகுதியில்லை என்பதை யாவரும் உணர்ந்தனர்.

வில்லியத்தின் வாழ்வில் ஒரு புதுத் திருப்பம், மறுமலர்ச்சி, ஆர்வத்தோடும் கரிசனையோடும் டிக்கியை வளர்ந்தான். தாயும் தந்தையுமாக விளங்கினான்.

டிக்கியும் வில்லியத்தை மிகவும் நேசித்தான். சிறந்த பாலனாக வளர்த்தான். வில்லியத்தின் கதைகளை ஆவலோடும் உணர்ச்சியோடும் கேட்பான். தழும்புள்ள கையை மீண்டும் மீண்டும் முத்தம் செய்வான். “என்னைக் காப்பாற்றிய கை“ என்று அன்பு வார்த்தைகளைப் பொழிவான்.

“அப்பா, ஜேம்ஸ் என்னைக் கொண்டுபோக வருவாரோ“ என்று பயத்துடன் கேட்பான். “வரமாட்டார் மகனே நீ என்னுடையவன்“ என்பான் வில்லியம்.

ஒருநாள் டிக்கியை ஒரு பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றான் வில்லியம். அறையொன்றில் அழகான அநேகப் படங்கள், ஒவ்வொன்றையும் டிக்கிக்கு விளக்கிக் காட்டினான் வில்லியம்.

கடைசியில் ஒரு படம். கீழ் “உன் விரலை இங்கே நீட்டி, என் கைககளைப் பார்.“ என்று எழுதியிருந்தது. டிக்கி அதனை வாசித்தான். மேலும் அறிய விரும்பினான்.

டிக்கி : இந்த கதையை விளங்குங்கள் அப்பா

வில்லி : இந்தக் கதை வேண்டாம் மகனே

டிக்கி : ஏனப்பா வேண்டாம்.

வில்லி : அந்தக் கதையை நான் நம்பவில்லை

டிக்கி : அந்த ஜேக்கதையும்தான் நீங்கள் நம்பவில்லை என்று கூறுகின்றீர்கள். ஆனாலும் சொன்னீர்களே! இதையும் சொல்லுங்கள் அப்பா.

வேறு சாக்குப் போக்குச் சொல்ல முடியாததால், வில்லியம் அந்தக் கதையைச் சொன்னான். தோமாவின் கதையில் தன்னையும், இயேசுவின் இடத்தில் தன் தந்தையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தான் டிக்கி. மிகவும் பொருத்தம் என்று உணர்ந்தான்.    

டிக்கி : உங்களையும் என்னையும் போலவே இருக்கிறதே அப்பா

வில்லி :.இருக்கலாம்
 

டிக்கி : இயேசு துக்கத்தோடு சொல்வது போல் தோன்றுகின்றதே! தோமா நம்பாததால் அப்படியோ!
 

வில்லி : மௌனமாய் இருந்தான்

டிக்கி : நாமும் நம்பாது இருந்திருந்தால் உங்களுக்கு கவலையாக இருந்திருக்கும் அல்லவா?

வில்லி :ஆம் மகனே.

டிக்கி : நானும் தோமாவைப் போல் இருந்திருந்தால், ஜேம்ஸ் என்னைக் கொண்டு போயிருப்பாரோ

வில்லி :இல்லை மகனே! நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் உன்னைக் காப்பாற்றியது நான் தானே!

டிக்கி : அப்பா நான் உங்களை நம்புகிறேன்; உங்களைத் துக்கப்படுத்தவே மாட்டேன்.

மீண்டும் அந்த கதையை சொல்ல வைத்தான் டிக்கி. வில்லியத்தின் சிந்தனைகள் அவனையே குற்றப்படுத்தின. நிம்மதியற்ற நிலையில் நித்திரைக்குச் சென்றான்.  

இரவில் ஓர் கனவு : ஒரு தழும்புள்ள கரத்தை ஒருவர் வில்லியத்திடம் நீட்டுகிறார். “உன் விரலை நீட்டி, என் கைகளைப் பார்“ என்று சொல்கிறார்.

காலையில் டிக்கியின் அன்பான முத்தங்கள் டிக்கியை எழுப்பின. இரவின் கனவுகளும் முந்தின பகலின் உரையாடல்களும் அவனது கடின உள்ளதைக் கலைத்துவிட்டன.

தாமதமின்றி, தனக்காக காயப்பட்ட இயேசுவின் கரங்களில் தன்னை ஒப்புவித்தான். உலகம் தரக்கூடாத சமாதானத்தைப் பெற்றான்.

“அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா. 535)

நன்றி  நல்ல சமாரியன்

 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment